அயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்!
"சத்தியத்தை நாடிச் செல்பவர் தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின்கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால் சத்தியத்தை நாடுகிறவரே அத்தூசியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் - அதற்குமுன் அல்ல- ஒளியைக் கணப்பொழுதாவது காணமுடியும். கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூட இதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன" என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் கூறியுள்ளார். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் சத்தியத்தேடலே சமயங்களாக வளர்ச்சிப் பெற்றன. ஒரு மனிதன் பிறக்கும் இடத்தின் காரணமாக ஒரு சமயத்தைச் சார்ந்தவனாக ஆகிறான். அவனது சத்தியத் தேடல் அச்சமயத்தோடு தொடர்புடைய நம்பிக்கைகள் சடங்குகள் சார்ந்து செயல்படுவதைக் காணலாம். காலப்போக்கில் நம்பிக்கைகள், சடங்குகள் பொருளற்றதாக மாறும் போது பகுத்தறிவு புதிய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் தருகிறது என்றாலும் இதன் அடிப்படை நோக்கம் சத்திய ஒளியை அடைவதேயாகும். இயற்கை வழிபாடு, உருவ வழிபாடு, சமய வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்று மனிதனின் சத்தியத் தேடலில் கண்டடைந்த வழிமுறைகள் ஏராளம் . இடைக்காலத்தில் ஏற்பட்ட சமயக் காழ்ப்புணர்ச்சி மனிதனைச் சற்று விலங்கு நிலைக்குத் தள்ளியது. சமயப் பற்று சமய வெறியாக உலகம் முழுவதும் அரசியலும் அதிகாரமும் செலுத்தத் தழைப்பட்டது. தற்காலத்தில் ஜனநாயகத்தின் மலர்ச்சியும் நவீன சிந்தனைகளும் தோற்றம் பெற்றப் பிறகும் இடைக்கால சிந்தனை மரபு ஆதிக்கம் செலுத்தி வருவதை எல்லா சமயங்களிலும் காணமுடி கிறது. என்றாலும் ஜனநாயகத்தின் சுதந்திர ஒளியில் சத்தியத்தைத் தேடும் நவீன சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் அயோத்தி ராமர் கோயில் சிந்தனையின் அடிப்படைகளை எண்ணி பார்க்க வேண்டும்.

தேர்தலொன்றின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அத்தேர்தலில் பங்கு பற்றும் அரசியல் தலைவர்கள் எவருமே அம்முடிவுகள் பற்றிய கருத்துகளைக் கூறக் கூடாது.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட மாணவனாக நான் அறியவந்த விமலதாசன்(1954-1983) சமூக விடுதலையினை, தனிமனித அறத்தைப்பேணிய பெருமகன்.இயேசுவின் விசுவாசம் மிகுந்த ஊழியன்.மெல்லிய உடல்.சாதாரணமாக ஷேர்ட்டை வெளியில் விட்டிருப்பார். தோளில் எப்போதும் தொங்கும் ஜோல்னாப்பை.அதில் பல்வேறுபட்ட பிரசுரங்கள், அறிக்கைகள், 'மனிதன்' இதழ்கள், ஆங்கில சஞ்சிகைகள் இத்தியாதி .
"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
23.07.2020
கடந்த சில நாட்களாக முகநூலில் , இணையத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த துன்பம் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் பெயர் எழில்வேந்தன் கோணேஸ்வரி . முன்னாள் விடுதலைப்புலிப் போராளி. இவரது சகோதரர்களும் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி மரணித்தவர்கள்., இவரது கணவரும் முன்னாள் புலிகள் இயக்கத்துப் போராளி. அவர் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களிலொருவர். புலிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் இவரது சகோதரர் ஒருவர் அழகரட்ணம் என்பவருக்கு ரூபா 28 இலட்சம் பணம் கொடுத்து வாங்கிய காணியில் இவர் வாழ்ந்து வருகின்றார். ஆனால் அக்காணி அக்காலத்தில் முறையாக அரச காணிப்பதிவேட்டில் பதியப்படவில்லை. இவ்விதமான சூழலில் வாழ்ந்துவரும் இவர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். செஞ்சோலையில் வாழ்ந்து வந்தவர். வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விட்டது இவருக்கு.
ஜூலை 13 இலங்கைத்தமிழ் மக்கள் அரசியலில் ஒரு காலத்தில் கோலோச்சிய தலைவர்களிலொருவரான , முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம். அவருடன் கூடவே முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனின் நினைவு தினமும் கூட. மே மாதம் போல் யூலை மாதமும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் பல மாற்றங்களை , அழிவுகளை ஏற்படுத்திய மாதம். அமிர்தலிங்கம் அவர்களைப்பொறுத்தவரையில் என்னால் அவரை ஒரு போதுமே மறந்துவிட முடியாது.
இவர் இலங்கைத்தமிழர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்புகளின் தலைவர்களில் வித்தியாசமானவர். இவர் ஆயுதப்போராட்டத்தில் குதிப்பதற்கு முன்னர் இவருக்கு வயது முப்பதைத்தாண்டி விட்டிருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் இளைஞர் அணியில் நீண்ட காலம் இயங்கியிருக்கின்றார்.அதன் காரணமாகத் தமிழ் அரசியல்வாதிகளுடன் நன்கு பழகியிருந்தார். அரசியல் பற்றிய புரிதல் நிறைய இவருக்கிருந்தது. பொதுவாக அடக்குமுறைகளுக்கு எதிராக உணர்ச்சி வசப்பட்டு இளம் வயதில் ஆயுதம் தூக்கியவர் என்பதற்கு மாறாக, நடுத்தர வயதினை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், நல்லதொரு உத்தியோகம் உள்ள நிலையில் அதனை உதறிவிட்டுப் போராட்டத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டவர். இவரது வயது, அறிவு இவைதாம் இவரை ஆரம்பத்தில் போராட்ட அமைப்பின் தலைவராக்கியது.
"நீண்ட தர்க்கங்கள், பிணக்குகள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளின் பின்னர் இலங்கையின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. அதே வேளை, எண்ணற்ற பொய்யான வாக்குறுதிகளாலும் தவறான ஊடகப் பிரச்சார மேலீட்டாலும் குழம்பிப்போயுள்ள பலர், தமது அரசியல் எதிர்காலத்தை வேறு யாரேனும் தீர்மானிக்கட்டும் என்று பேசாமல் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு சோர்ந்துபோய் அக்கறையின்றி இருப்போரிடமிருந்தே இத்தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உண்மையில் இவர்களால்தான் இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். “
அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சனுக்கு அளித்த நேர்காணலில் முன்னாள் யாழ் மாநகரசபையின் முதல்வராகவிருந்த செல்லன் கந்தையன் அவர்கள் குறிப்பிட்ட ஒருவிடயம் என் கவனத்தை ஈர்த்தது.
அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சன் அவர்கள் யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயரான செல்லன் கந்தையா அவர்களுடன் நடாத்திய நேர்காணலிது. இது பற்றி முகநூலில் காரசாரமாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் வெளிவந்திருப்பதால் இதற்கொரு முக்கியத்துவமுண்டு. இந்த நேர்காணல் பல விடயங்களை வெளிக்காட்டியுள்ளது. அவை:
இன்று அமெரிக்காவெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் போர்க் குரல் இது.
எதிரி மிகப் பெரியவன்.. பலம் வாய்ந்தவன்.. உலகின் பெரு ராணுவங்களில் ஒன்று.. அரசாங்கமே இராணுவ ஆட்சி.. உலகெங்கும் நண்பர்கள்.. அமெரிக்காவுடன் இராணுவ உதவி ஒப்பந்தம்.. இயற்கை வளங்களுக்காய் மேற்குலகம் நெருக்கமாய்...
“ பொருத்தமான தெரிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், கொரோனா நெருக்கடிக்குள்ளிருந்து சில நன்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது. வேலை, நுகர்வு என்பவற்றால் தீர்மானிக்கப்படும் வாழ்வைத் தாண்டிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதானமான வாழ்வைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பினை இந்த நெருக்கடி வழங்கக்கூடும்” என நோர்வேஜிய சமூக மானிடவியல் பேராசிரியர் Thomas Hylland Eriksen, அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கெளரவ. தலைவர் மு. க. ஸ்டாலின் MLA
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிப் பீடத்தில் படிக்கும் முதலாம் வருட மாணவியைப் 'பகிடிவதை' என்ற பெயரில் பாலியல் வகையிற் கொடுமை செய்து அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் பல்கலைக்கழகத்துள் வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைவிதித்திருப்பதாக இன்று வெளியான இலங்கைப் பத்திரிகையிற் படித்தேன். இந்த முடிவு கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் 'பகிடிவதைக்'கெதிராகப் பதிவிடப்பட்ட பல ஆத்திரமான கண்டனங்களின் பிரதிபலிபு என்று நினைக்கிறேன்.


இன்று (ஜனவரி 27) யூத நாடான இஸ்ரேலிய தலைநகரமான ஜெருசலம் நகரில் நடக்கும் 'ஹிட்லரின் யூத இனஅழிப்பு' ஞாபகார்த்தநாள் தினத்தில் பிரித்தானிய பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 27.1.1945ம் ஆண்டு சோவியத் யூனியப் படையினர் போலந்து நாட்டிலுள்ள ஆஷ்விட்ஷ் என்ற இடத்தில் ஜேர்மனியரால் நடத்தப்பட்ட கொலைக்கூடத்தையடைந்து அங்கிருந்த யூதக் கைதிகளைக் காப்பாற்றிய நாளை நினைவு கூரும் முகமாக இந்த ஒன்று கூடல் நடக்கிறது.
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இலங்கையின் தேசிய கீதத்தை அந்நாட்டில் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எழுத்தாளரும், சமூக அரசிய செயற்பாட்டாளருமான அருளர் (அருட்பிரகாசம்) மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் கருணாகரனின் பதிவொன்றின் மூலம் அறிந்துகொண்டேன். அருளர் இலங்கைத் தமிழர்களின் விடுதலை அமைப்புகளிலொன்றான ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர். அத்துடன் அவர் ஓர் எழுத்தாளரும் கூட. 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









