அஞ்சலி: சமூக, அரசியற் செயற்பாட்டாளர் போல் சத்தியநேசன் மறைவு! - வ.ந.கிரிதரன் -

ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபையின் முன்னாள் உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களின் மறைவுச் செய்தியை முகநூல் தாங்கி வந்தது. இவர் என் முகநூல் நண்பர்களில் ஒருவரும் கூட. எதிர்பாராத மறைவுச் செய்திகளைத் தாங்கி வருவது முகநூலின் இயல்புகளில் ஒன்று. இவரது மறைவுச் செய்தியும் அவற்றிலொன்று. இவரது திடீர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர் துயரிலும் பங்குகொள்கின்றோம். ஆழ்ந்த இரங்கல்.
இவரை நான் ஒரு தடவை, நவம்பர் 2018இல் 'டொராண்டோ'வில் சந்தித்துள்ளேன். நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா), எழுத்தாளர் கடல்புத்திரனுடன் சந்தித்து உரையாடிய தருணங்களைப் பதிவுகள் இணைய இதழிலும், முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அதனை இத்தருணத்தில் மீண்டுமொரு தடவை நினைவு கூர்கின்றேன்.
(பதிவுகள்.காம்) நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!
தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாகவும் பதவி வகித்திருக்கின்றார். கிழக்கு இலணடன் பல்கலைக்கழகம் இவரது சமூக சேவையினைப்பாராட்டி, இவருக்கு கெளரவ பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


மலையக தமிழ் மக்களின் வரலாறு மீண்டும் ஒரு முறை திரும்பிப்பார்க்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டில் சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசாரரீதியிலும் ஏனைய பல்வேறு வழிகளிலும் எந்தளவுக்கு ஆழக் கால் பதித்துள்ளனர் என்பதை சீர்தூக்கிப் பார்த்து அதனை இந்த நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் வெளிச்சம் போட்டு காட்டி அவர்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் உரிமைகளையும் கோரிக்கைகளையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்த வேண்டிய அவசியமும் தேவையும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது.



தலைப்பிறை கண்டார் அன்பர்;
'








நான்கு நாட்களுக்கு முன் அதிரடியாக ஒரு செய்தி மின்னஞ்சல் பெட்டிக்குள் விழுந்திருந்தது. வாசிப்பதற்கு முன்னரே படங்கள் உள்ளடக்கத்தின் பெரும்பாகத்தை வெளிப்படுத்தி விட்டன. தலைப்பு அசத்தலாக இருந்தாலும் தலைக் கதிரையில் இருந்தவரைக் கண்டதும் சப்பென்று போய்விட்டது. ஆனாலும் முயற்சிகளின் நோக்கம் நல்லதாயின் அவை ஆராயப்பட வேண்டும் என்பதில் சம்மதம் உண்டென்ற படியால் உள்ளே சென்றேன்.
Statement by the Prime Minister on the National Day of Remembrance and Action on Violence Against Women








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









