நனவிடை தோய்தல் (2) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: சீனிக்குட்டி- மணியம் பேக்கரி.சண்முகநாதன் கடை. ஐயாத்துரை கடை. சங்கக்கடை. - இந்து லிங்கேஷ் -

- இந்து லிங்கேஷ் நினைவு கூரும் இந்த நனவிடை தோய்தல் முக்கியமானது. இதில் அவர் நினைவு கூரும் சீனி என்னும் சீனிக்குட்டி யாழ் இந்துவைப் பற்றி நினைத்தால் நினைவில் சிறகடிக்கும் முக்கியமானதோர் ஆளுமை. -
சங்கக்கடையின்ர இடது பக்கமா, ஒதுக்குப்புறமா,ஒரு மூலையில குமாரம்மானின்ர இருப்பிடம். நறுக்குப் புகையிலைத்துண்டு, வெத்திலை பாக்கு,பல்லி முட்டாய்,அரி நெல்லி,தோடம்பழ இனிப்பு என்றபடி சின்ன வியாபார மூலையது.குமாரம்மான் சேட்டுப்போட்டு நான் பார்த்ததில்லை.எப்போதும் சாரமும்,அவரது வண்டியும் அவர் கைகளில் பாக்கு வெட்டியுமாக வாங்கிலில் இருந்துகொண்டு பாக்குச்சீவிய காட்சிதான் இன்றும் அவர் நினைவாக! சின்னதாய் ஒரு மேசையில சப்பட்டைப்போத்தல்களுக்குள்ளே அரி நெல்லி,பல்லி முட்டை, தோடம்பழ இனிப்பென கண்ணைக்கவருகிறமாதிரி இவையெல்லாம் வெயிலுக்கு மின்னிக்கொண்டிருக்கும்.எங்கட கையில 10 சதம்,ஆக மிஞ்சிப்பார்த்தா 5 சதம்தான் வீட்டில தருவீனம். அதுக்கு குமாரம்மான் சரியா எண்ணி எதாவது தருவார்.பல்லி முட்டை தந்தால் அது வாயில கடிபட சீரகமும் சேர்ந்து அது வேற லெவல்.
அடுத்தநாள் உப்புத்தண்ணிக்குள்ள போட்ட அரி நெல்லி வாங்குவம்.ஒரு கடி கடிக்க அதுவும் வரண்ட தொண்டைக்கு ஊறிக்கிடந்த உப்பும் சுள்ளாப்பா இறங்கி வாய்க்குள்ள பாத்திகட்டி நெல்லிச்சாறாய் ஓடும்.தேகம் சிலுசிலுக்கும். அந்த அரிவரிபடிச்ச இளங்கன்று வயசில சுவைக்க குமாரம்மானின் தோடம்பழ இனிப்பு வாய்க்குள்ள சேர்ந்து கரைஞ்சு தித்தித்த அந்த ருசியும் இன்னும் மனசுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே யிருக்கின்றது. ஒருபக்கம் பாண்,பணிஸ் வாசம்.பேக்கரி மூலையில கொட்டிக்குவிஞ்சுகிடக்கும் உமி, மாக்கழிவுகளைக்கூட மாடுகள் வந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதும்கூட அதிலிருந்து நீராவிபோல காத்தில 'மா' பறக்குமே அந்தக்காட்சிதான் இந்தப்பெயர்போன சந்தியின் அன்றைய மெய்யழகு!





முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனை என்பது அண்ணாவியார் நாகலிங்கம் நெல்லிநாதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஊராகும். இக்கிராமம் வன்னியின் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட கிராமமாகும். சோழராட்சிக்காலத்தில் திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வளந்தொட்டுக் குளம் பெருக்கிய மன்னான குளக்கோட்ட மன்னனின் ஆட்சிக்கும் இக்கிராமம் உட்பட்டிருந்தது. தண்ணிமுறிப்புக் குளம் இவன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு. இக்கிராமத்தில் ‘வன்னியன் வளவு’ ‘வன்னியன் கிணறு’ ‘யானை கட்டிய புளி’ என்னபன வன்னியர் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளாகக் காணப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் இக்கிராமத்தவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கோலாட்டம், கும்மி, கூத்துப் போன்ற கலைகளில் செலவு செய்துள்ளனர். வெளியிடங்களிலிருந்து அண்ணாவிமாரை அழைத்துவந்து கூத்துக்களைப் பழகி மேடையேற்றி ஆடி வருவது வழமையாக இருந்துவந்துள்ளது.


தமிழின் முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவரான தேவகாந்தன் தனித்துவமான மொழியாலும், தேர்வுசெய்யும் வித்தியாசமான களங்களாலும், தனது புனைவுகளூடாக சம்பவங்களையும் கருத்தியலையும் ஊடுநூலும் பாவுநூலுமாய்க் கலந்துபின்னும் ஆற்றலாலும் அறியப்பட்டவர். காவியங்கள் மீதான அவரது தாடனத்தையும் அவற்றை ஈடுபாட்டோடு கற்றுத் தெளிவதற்கான அவரது முனைப்புகளையும் அவருடனான உரையாடல்களின் வழியே அறிந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் தேவகாந்தன், மிகுந்த தேடலுடன் தொடர்ச்சியாக தத்துவங்களையும், கோட்பாடுகளையும், அபுனைவு நூல்களையும் தொடர்ந்து தேடித்தேடி வாசித்தும் வருபவர். 



ஈழக்கவி என்னும் புனைபெயரில் எழுதிவரும் ஏ. எச். எம். நவாஷ் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்; சிறிதுகாலம் மெய்யியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.




(ரஷ்ய இலக்கிய சிருஷ்டி, பெருங்கவி அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜூன் 06, 1799 இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது)
எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருந்த ஸ்ரான்லி கல்லூரி ( பின்னாளில் இக்கல்லூரி கனகரத்தினம் மத்திய கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றது ) ஆண்கள் விடுதியிலிருந்து ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். நவராத்திரி காலத்தில் நடந்த கலைமகள் விழாவில் ஒரு பெரியவர் கல்வி, செல்வம், வீரம் பற்றி பேசினார். அவர்தான் வித்துவான் வேந்தனார் என்று கல்லூரி அதிபர் மண்டலேஸ்வரன் அறிமுகப்படுத்தினார்.


குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும்.எழுதுவதற்கு மிகவும் சிரமாமன இலக்கியம் எது என்றால் அது " குழந்தை இலக்கியமே " குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டால்த்தான் அது சாத்தியமாகும்.குழந்தைகளின் இலக்கியம் இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்த்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் "குழந்தை இலக்கியம் " என்பதுதான் மனமிருத்த வேண்டிய உண்மையெனலாம். அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களேஈடுபடுகிறார்கள்.குழந்தைகளுக்கான படைப்புக்களை படைப்பதை ஒரு முக்கிய பணியாக நினைத்தே அவர்கள் தங்களது படைப்புக்களை படைக்கின்றார்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.
துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பார் மார்ட்டின் லூதர்கிங். புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின், புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் என்பார் எங்கள் பாரதிதாசன்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









