ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள்- பரமார்த்த குருவும் சீடர்களும் கதை! - என்.கே.மகாலிங்கம் -

ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள் பற்றிய விவாதமொன்று பதிவுகள் இணைய இதழில் 2005-2006 காலப்பகுதியில் நடந்தது. அதில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'காலம்'செல்வம்' , கவிஞர் செழியன் ஆகியோர் பங்கு பற்றினர். அதில் வெளியான கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:
1. ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள்- பரமார்த்த குருவும் சீடர்களும் கதை! - என்.கே.மகாலிங்கம் -
2. டொராண்டோ பத்திரிகைக் கட்டுரைகளுக்கான எதிர்வினை! நன்னூலாரின் ‘ஓட்டைக் குடங்களும், எருமை மாடுகளும், பன்னாடைகளும்’ - என்.கே.மகாலிங்கம் -
3. சீத்தலைச் சாத்தனாரின் சில மாணக்கர்கள்! - என்.கே.மகாலிங்கம் -
4. ரொறொன்ரோ கல்விச்சபைத் தமிழ்பாட நூல்கள்! ‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே’- செல்வம் அருளானந்தம் ('காலம்' சஞ்சிகை ஆசிரியர்) -
5. ரொறொன்ரோ கல்விச்சபைத் தமிழ்பாட நூல்கள்! தமிழையும், தமிழ் தேசியத்தையும் அழிப்பதற்கு திட்டமா? - செழியன் -
6. Report on Tamil Workbooks That were Intended to be Used for International Languages: Tamil Programme under TDSB! - Flaws, Weaknesses, Errors, and Ideology in Them - - N.K.Mahalingam - (Tamil Language Instructor & Steward, CUPE 4400 Unit B)
இவை திஸ்கி எழுத்துருவில் வெளியாகியிருந்தன. இவற்றின் முக்கியத்துவம் கருதி 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றன.
பதிவுகள், மார்கழி 2005 இதழ் 72
ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள்- பரமார்த்த குருவும் சீடர்களும் கதை! - என்.கே.மகாலிங்கம் -
தமிழ் மொழி கற்பிக்கும் தமிழ் (ஆரம்ப நிலை) ஆசிரியர்களுக்கு ரொறொன்ரோ கல்விச் சபை சமீபத்தில் தமிழில் அனுப்பப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கை இப்படிச் சொல்கிறது: “பிள்ளைகள் தமிழ் மொழியைச் ‘சரியான’ முறையில் கற்க வேண்டும்... மொழித் திறனை ‘செம்மையான’ முறையில் பெற வேண்டும் என்ற நோக்கோடு தமிழ்ப் பயிற்சி நூல்களை ஆக்கியுள்ளோம்...இது ஒரு வரைவு (Draft) ஆகும்... இந்த நூல் பற்றிய தங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம். தமிழில் ‘தவறாக’ வழங்கி வரும் சில தமிழ்ச் சொற்களுக்குச் ‘சரியான’ தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளோம். ‘தொடக்கத்தில் இருந்தே பிள்ளைகளுக்குச் சரியானதைக் கற்பிக்க வேண்டும். சரியான ‘தமிழ்ச் சொற்கள்’ அழிந்து போகாமல் ‘பாதுகாக்கப்படல்’ வேண்டும் என்ற ‘நோக்குடனேயே’ இவ்வாறு செய்துள்ளோம். தவறான ‘பழக்கத்தில்’ உள்ள சொற்களுக்கு மிகச் சரியான ‘வழக்குகளும்’ கீழே தரப்பட்டுள்ளன.”
என்று சொல் பட்டியல் ஒன்றையும் யாரோ அனுப்பியிருக்கிறார்கள். (மேலேயுள்ள இரட்டை மேற்கோட்குறிக்குள் உள்ள ஒற்றை மேற்கோள் குறிகள் என்னால் இடப்பட்டவை)


“இலக்கியப்போக்குகள் ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றங்களைப்பெற்றே வளர்ந்துள்ளன. நமது சங்க இலக்கியங்களிலிருந்து இன்றைய இலக்கியப் போக்கின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் இது விளங்கும். இலக்கிய வரலாறு ஒவ்வொரு மொழிக்கும் மிக முக்கியமானது. ஆனால், தமிழைப்பொறுத்தவரையில் ‘ வரலாறு ‘ என்பது கண்டுகொள்ளப்படவேயில்லை. தமிழ் இலக்கியத்தை நமது இலக்கணத்தில் கூறப்படுவது போல் ஐந்திணைகளில் இப்பொழுது அடக்கிவிடமுடியாது. தென்குமரி, வடவேங்கடம் வரையிருந்த தமிழ் வேறு, இன்றுள்ள தமிழின் பரப்பு வேறு. ஐந்திணைகளில் பனிகொட்டும் நாடுகளில் வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத்தை நாம் அடக்கிவிடமுடியாது. வடவேங்கடம் தென்குமரிக்கு அப்பால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது, உலகின் ஐந்து கண்டங்களிலும் தமிழ் இலக்கியம் அதனதன் போக்கில் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. “ என்று மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் நூலகர் என். செல்வராஜாவின் மலேசியாவில் தமிழ்: பார்வையும் பதிவும் என்ற நூலில் ( 2016 ) தனது கருத்தை எழுதியிருக்கும் எமது இலக்கியக்குடும்பத்தினைச் சேர்ந்த எழுத்தாளர் மலேசியா சை. பீர்முகம்மது இன்று அதிகாலை ( செப்டெம்பர் 26 ) மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.
மலேசியத் தலைநகரான குவாலலம்பூரில் 1942ல் பிறந்த சை.பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவர் ஏதோவொரு விதத்தில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார். 12 வயதுமுதலே தன் எழுத்தார்வம் தொடங்கியதாகச் சொல்லும் இவர் மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட வெடிச் சத்தத்துடன் பிறந்ததாக வேடிக்கையாகச் சொல்வார். தனது கட்டுமானத்துறை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவர் தனது குடும்ப உணவகங்களையும் கவனித்துக் கொள்பவராக இருந்து வருகிறார்.
அடுத்த நாள், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, சேற்று நிறத்தில் ஓடும் யாரா ஆற்றையும், வழியெங்கும் நீண்டுயர்ந்திருந்த மரங்களையும் பார்த்தபடி நடந்தும், Tramஇல் ஏறியும் இறங்கியும், வேறுபட்ட கட்டிட அமைப்புக்கள் நிறைந்த மெல்பேர்ன் நகரைச் சுற்றிப்பார்த்தபோது மூன்று விடயங்கள் எனக்கு அதிசயத்தைத் தந்தன. நகரின் மத்தியில் காரை நிறுத்துவதற்குப் பணம்செலுத்த வேண்டியிருக்கவில்லை, நகரின் மத்திக்குள் Tramஇல் இலவசமாகப் போக்குவரத்துச் செய்யமுடிந்தது, அத்துடன் இலவசமான இணையவசதிகள் சாலையோரத்தில் அங்கங்கேயிருந்தன. பின்னர் மதியவுணவுக்காக அருகிலிருந்த சரவணபவனுக்குப் போனோம். வட இந்திய உணவுகளை மட்டுமே அங்குண்ணலாம் என்றானபோது, சரவணபவன் என அவர்கள் பெயரிடாமலிருந்திருந்தால், நாங்கள் ஏமாந்திருக்க மாட்டோமே எனச் சலித்துக்கொள்ள மட்டுமே எங்களால் முடிந்தது.
"படிப்பைக் கொண்ட வேலையில் நாட்டம் அதிகமாக , அரசவேலையில் வசதிகள் எனஂற மானுக்குப் பினஂனால் ஓட கடல் தொழிலைச் செய்கிறவர்கள் அருகி விட்டது" என்று சங்கர் குறிப்பிடுறது அனஂனருக்கு நினைவுக்கு வருகிறது . அப்ப தான் இவரும் ' சேர் , இங்கே சாதியம் என்பவை பொய் ' என விளக்க முற்பட்டார் . " நாடார்களின் போராட்டங்களும் ,விடுதலையும் " என்ற நூலை வாசிக்கும் வரையில் அவருக்கும் கூட பல விசயங்கள் தெரிந்திருக்கவில்லை . பனம்தொழிலைச் செய்கிறவர்களும் , கடல்தொழில் செய்கிறவர்களும் உண்மையில் சாதியப் பிரிவினரே இல்லை . அவர்கள் பாண்டியகுலத்தையும் , சோழர் குலத்தையும் சேர்ந்த , மக்கள் பிரிவினர் எனஂற உண்மை அவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது . ஒருகாலத்தில் , லெமூரியா , இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பைக் கொண்ட ... நாடாக இருந்திருக்கிறது . அது , இனஂறு இந்து சமுத்திரத்தினுள் நீரினுள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது . பாண்டியரின் பொற்காலம் அந்த நிலப்பரப்பிலே எழுந்து புதைந்து போய் இருக்கிறது .அந்த காலத்திலேயே பாண்டியருக்கும் , சோழர்களுக்கும் இடையில் பகைமை கொடிவிட்டு படர்ந்திருக்கிறது . சேரர்கள் இருதரப்பிலும் மணத் தொடர்புகளை கொண்டு பகையை வளராது வைத்திருக்கிறார்கள். வெற்றி ,தோல்விகள் சகஜம் . பகை குலங்களை நசிபட வைத்து தீண்டாச்சாதியாகவும் , ஒருபடி இறங்கிய( குறைந்த) சாதியாகவும் ஆக்க வல்லவை . அந்த வரலாறையே அந்நூல் விபரிக்கிறது . கத்தியில் நினஂறு கூறுகிறது போல கூறுகிறது .










சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தமிழில் காப்பியங்கள் தோன்றலாயின. தமிழில் முதன்முதலில் தோன்றியனவும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கு வந்தனவும், சமயம் தழுவி எழுந்தனவும், தலபுராணங்களும் எனக் காப்பிய வரிசை தொடர்ந்து வருகின்றது. இக்காப்பியங்களில் பிற சமயங்களின் கருத்துகள் உள்ளன என்றும் பிற சமயங்களின் தாக்கத்தினால் உருவானவை என்றும் அறிஞர்கள் கூறுவர். எனவே, தமிழ்மொழியில் உள்ள காப்பியங்களை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு. அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும். இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும் படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது. அவர் சொல்கிறார்:







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









