இலக்கிய வானில் நீங்களும் ஒரு தாரகையாய் ----- கலா சிறிரஞ்சனின் நினைவாக ----- - வாசன்-

கலா சிறிரஞ்சனின் மரணச்செய்தி காதை வந்து எட்டியது. மனம் துணுக்குற்றது. ஒரு சிறிய காலப் பகுதியில் மட்டுமே பழகியிருந்தாலும் மனதில் ஏதோ ஒரு துயரம் அப்பிக் கொண்டது. 'வாழ்க்கை என்பதே மரணத்தை நோக்கிய ஒரு பயணமே! ' என்பது ஒரு நிரந்தரமான உண்மையாயினும் எல்லா மரணங்களையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
முதன் முறையாக அவரை மறுநிர்மாணம் அமைப்பினர் நடத்திய கௌரிகாந்தனின் 'அறமும் போராட்டமும்' நூல் வெளியீட்டு நிகழ்விலேயே பார்த்திருந்தேன். அன்று அந்நிகழ்வினை அவரே நெறிப்படுத்தியிருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதினையும் கல்விப்புலமையில் தேர்ச்சி பெற்றவராக இருப்பார் என்பதினையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் அன்று எனக்கு அவரிடம் எந்தவித அறிமுகமும் ஏற்பட்டிருக்கவில்லை.
பின்பொருநாள் விம்பம் அமைப்பினர் ஒரு கவிதை விமர்சன நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தனர். அதற்கு பா.அகிலனின் 'அம்மை ' நூல் குறித்து உரையாற்ற என்னை அழைத்திருந்த படியால் போயிருந்தேன். அங்கு அவரும் வருகை தந்திருந்தார். நெற்கொழுதசனின் 'வெளிச்சம் என் மரணகாலம்' நூல் குறித்து உரையாற்ற வந்திருந்தார். தானாக அறிமுகப்படுத்திக் கொண்டார். தனக்கு இந்தக் கவிதைத்தொகுப்பு மிக நெருடலாக இருந்ததாகவும் ஒரே புலம்பல் என்றும் முறைப்பாடு செய்தார். நெற்கொழுதாசன் படைப்புக்கள் மீது எனக்கு ஏற்கனவே நல்ல பரிச்சயம் இருந்ததினால் அது குறித்து அவருடன் சிலாகித்தேன். தொடர்ச்சியான உரையாடலில் இருந்து அவர் தற்கால நவீன இலக்கியங்களில் இருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கின்றார் என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதனை அவரும் என்னிடம் தெரிவித்தார். தான் தொண்ணூறுகளில் 'ஈழபூமி' பத்திரிகையில் தொடர்ந்து எழுதியதாகவும் பின்பு தனது பட்டப்படிப்பு, குடும்பம், வேலைப்பளு போன்ற காரணங்களினால் இலக்கிய உலகுடன் ஒரு இடைவெளி ஏற்பட்டிருந்ததாகவும் ஆனால் சில வருடங்களுக்கு முன்பு தமயந்தியின் 'ஏழு கடற்கன்ன்னிகள்' நூல் வெளியீட்டின் மூலம் மீண்டும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையே அவர் அன்றைய தனது உரையிலும் வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டார். பாரதியார், பாரதி தாசன் கவிதைகளில் இருந்து ஹைக்கூ கவிதைகள் வரையே தனக்கு பரிச்சயம் உள்ளதாகவும் இந்தக் கவிதைகள் தனக்கு கொஞ்சம் புதிராக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டார். அவர் தனது உரையில் 'தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா!' என்ற பாடலை பாரதியாரின் பாடல்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் 'மன்னிக்கவும் அதனை பாரதி எழுதவில்லை. அது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடல் ' என்றதும் ஒரு முறை முறைத்தார். பின் சிரித்துக் கொண்டே "நீங்கள் எல்லாம் கொஞ்சம் வில்லங்கமான ஆட்கள்தான் " என்று சொல்லிப் போனார்.







தமிழ் இலக்கிய மரபில் நூல் விமர்சனம் என்பது ஒரு தனித்துவமான அறிவுச் செயல்பாடாகக் கருதப்படுகிறது. அது வெறும் தனிநபரின் விருப்பு–வெறுப்புகளை வெளிப்படுத்தும் முயற்சியாக அல்ல; வாசக சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ள பணியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு நூலைப் பற்றி சொல்லப்படுகின்ற கருத்துகள், அந்த நூலின் மதிப்பை மட்டுமல்லாது, இலக்கியச் சூழலையும் சமூகச் சிந்தனையையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியவை என்பதால், விமர்சனத்திற்கு தெளிவான வரையறைகளும் ஒழுங்குகளும் தேவைப்படுகின்றன.
23-24 வயதே நிரம்பியிருக்கக்கூடிய இவ்விளைஞனின், சாதியம் பற்றிய உணர்வும், பெண்களின் அடிமைத்தனம் பற்றிய எண்ணமும், இதைவிட மேலாக எலும்பும் தோலுமாய் அன்று தோற்றமளித்திருக்கக்கூடிய தன் மக்கள் பொறுத்த சிந்தனையும், நாடு காலனித்துவ ஆங்கிலேயரிடம் இப்படி அடிமைப்பட்டு போயிருக்கின்றதே என்ற ஆதங்கமும் மேலோங்கி வீசுவதாய் இருந்தது. ஆனால், இவற்றை விட, தம் இன்னுயிரை தியாகம் செய்து வெஞ்சிறையினுள்ளும் தம்மை இருத்திக் கொள்ள துடிக்கும் தன்னிகரற்ற சிங்கங்களையும் அவன் தன் வாழ்நாளில் தரிசிக்க வேண்டி வருகின்றது. இருப்பினும் இவ்விளைஞனின் உணர்வலைகளுக்கு கடிவாளம் போட்ட இரு பெரும் அலைகளும் அன்று வீசாமல் இல்லை.
ஏற்கனவே போதிய பராமரிப்பற்ற நிலையில் இருந்த யாழ் மந்திரிமனைக் கட்டடம் அண்மைக்காலப் பெருமழையினால் மேலும் சிதைவுகளுக்கு உள்ளாகியுள்ளது.. அதன் நிலையினை வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. மந்திரிமனைக்கு இந்நிலை ஏற்படாமல் தடுத்திருக்கும் வல்லமை எமக்கிருந்தது. ஆனால் அதனை நாம் செய்யவில்லை. இது வருந்தத்தக்கது.

பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது.
பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் சாலை சேவ்அலுவலக அரங்கில் சுசீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமூக ஆய்வாளர் வியாகுல மேரி அவர்கள் விருதுகளை வழங்கினார். அவர் உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார் :





தலைப்பிற்கேற்ப கடலும்,கடல் சார் நிலமும் - கடற்கரையுமாய் - மங்கிய மாலையில்,மஞ்சள் நிறப் பின்னணியில், மங்கலகரமான அட்டைப் படத்துடன் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் 'நெய்தல் நடை' எனும் அவரின் முதற் படைப்பான இச் சிறுகதைத் தொகுப்புப் பற்றிய எனது பார்வையை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்ய விழைகின்றேன்.


தமிழர் கண்ட நகர்வில் தொடங்கி புலம் பெயர் வாழ்வின் புதிய தேவைகள் வரை எட்டுத் தலைப்புக்களில், நூற்றியொன்பது பக்ககங்களில் புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளையும் , அவர்தம் வாழ்க்கையையும் மிகச்சிறப்பாக உணர்வுபூர்வமாக நூலாசிரியர் இந்நூலில் சித்திரித்துக் காட்டியுள்ளார் .

புதைந்திருக்கும் ஒலி ஒன்று,