(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள் (6) - புதுக்காடு! - எல்.ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
புதுக்காடு
கால் கடுக்க நிற்க தொடங்கினேன். பக்கத்தில் ஒரு மீன் வியாபாரி. மீன் வெட்டும் அகன்ற பலகை தரையில் கிடக்க அதன் மீது மீன் வெட்டும் பெரிய கத்தியும் மீன் செதில்கள் அங்குமிங்குமாயும் ஒட்டிக் கிடக்க - அதனருகே மீன் கொணரும் தனது வட்ட வடிவான வாயகன்ற கூடையை போன்ற அலுமினியத்திலான ஓர் பெரிய பாத்திரம் - இரண்டொரு ஈக்களும் அங்கே ஒன்றாய் மொய்க்க தொடங்கியிருந்தன. அவர் மீன் மீன் என்று கூவியும் அழைக்கவில்லை. தரையில் அமர்ந்து வருவோர் போவோரை என்னைப்போல பராக்கு பார்த்தவாறே இருந்தார். ஒரு வேளை மீன் அவ்வளவையும் விற்று முடித்து விட்டாரோ என்னவோ. நடந்தோரை விட அந்த ஒடுங்கிய பாதையில் விடுமுறை கழிக்க வந்தோரின் வாகனங்கள் அதிகமாக இருந்தது. அவை, அந்த சந்தியில் புழுதியை கிளப்பி பெரும் அசௌகரியத்தை வேறு தந்தது.
நான் ஒருவன் மாத்திரமே அந்த பஸ் தரிப்பிடத்தில் தனியனாக நின்றிருந்தேன், தோளில் தொங்கும் எனது பையோடு. என்னை பார்த்த வாகனங்கள், என்னருகே நிறுத்தி “பாதை விசாரிக்க” முற்பட்டன. முதலில், இரண்டொன்றை கூறத்தொடங்கினேன் - தெரிந்த மட்டும். பிறகு, இந்த தொழில் சரிபடாது என்ற எண்ணம் தோன்ற பாதை ஓரத்தில் இருந்து அகன்று பாதையின் சற்று உட்புறமாய் வந்து ஒளிந்திருந்தாற் போல் நின்று கொண்டேன் - வாகனங்களுக்கு எளிதில் தென்படாதவாறு.
ஓர் அரை மணி நேரம் பஸ்ஸ{க்காக அல்லது ஏதேனும் ஒரு வண்டிக்காக காத்திருந்தப்பின் கேட்டபோது கூறினார்கள். வழமையாக வரும் இன்று வராது. பாதை செப்பனிடப்படுவதால் மாற்று பாதையில் சென்று விடுவார்கள். இறுதியில் அந்த ‘மாற்று பாதையை’ அடைந்த போது, ஓர் இறக்கத்தில், ஒடுங்கிய ஒரு பாதை ஓரமாக சின்னஞ்சிறு வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டிருந்தன.

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.
நேக்கு பூனையை பிடிக்காது. தப்பு, தப்பு...... பூனைகளைன்னு மாத்தி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதென்ன..... நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை...
அண்மையில் நண்பர் எல்லாளன் தந்திருந்த நூல்களிலொன்று 'சமாதானத்திற்கான ஶ்ரீலங்கா சார்புக் கனேடியர்கள்' அமைப்பு வெளியிட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், முன்னாட் விடுதலைப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய 'வெந்து தணியாத பூமி' என்னும் சிறு நூல். இந் நூலை வாசித்தபோது ஒன்று புரிந்தது. இது தொட்டிருக்கும் விடயம் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானதொன்று. இது ஆற்றியிருக்கும் பணியும் முக்கியமானது. காலத்தின் தேவை.

திருமணமாகி மதுரை வந்த நாள்முதல் அடிக்கடி இரவு ஒன்பதுமணிக்கு, எங்கள் பெட்ரூமிலிருந்து அம்மாவிடம், வீடியோ காலில்தான் பேசுவேன். அம்மா தனது பெட்ரூமிலயிருந்து பேசுவாங்க. சிலநாட்களில் சமையல்காரப் பையன் எடுத்துப் பேசுவான். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தானும் பேசத் தவறுவதில்லை.
2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.




திரு.கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ் நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத்தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக் கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம்.
- தமிழ்புக்ஸ்.காம் தளத்தில் வெளியான அஞ்சலிக் கட்டுரை. அனுப்பியவர் நண்பர் ஸ்நேகா பாலாஜி -

எனது ஐந்து வயதுப்பேரனுக்கு பீட்டர் என்ற முயலின் கதையை (Tale of Peter the Rabbit) சமீபத்தில் வாசித்தேன் . அந்த கதை பலருக்குத் தெரிந்திருக்கும். தாய் முயல் தனது பிள்ளைகளான புளுப்சி, மெர்சி, கொட்டன் ரயில் மற்றும் பீட்டரிடம் , “நீங்கள் போய் விளையாடுங்கள். ஆனால் மிஸ்டர் மக்கிரகரின் தோட்டத்திற்கு போகவேண்டாம் . ஏற்கனவே அங்கு போனதால் திருமதி மக்கிரகர், சில காலத்தின் முன்பு உங்களது தந்தையை தங்களது உணவாக சமைத்து உண்டுவிட்டார்கள். ஆகவே கவனம் ” என எச்சரிப்பார்



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









