ஆய்வு: குடும்ப சூழலில் பெண் அடையாளங்கள்! - பா. தாரா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம் – 605 602 -
முன்னுரை
தொடக்க காலத்தில் மனித இனம் குழுவாக வாழும் இனக்குழு வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தது. இவ்வாறு வாழ்ந்த மனித இனம் நாகரிகம் பெற்ற நிலை மனித இனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாகும். இவ்வின வரலாற்றின் முக்கிய நிகழ்வு இதுவென்று மானிடவியலார் குறிப்பிடுகின்றனர்.
தந்தை ஆதிக்கச் சமூகம்
உடைமைச் சமூகம் பாலியல் வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்ட உயர்வு, தாழ்வு என்பதான கருத்தாக்கத்தினை உருவாக்கியது. இதன் காரணமாக இனக்குழுச் சமூக உட்கட்டமைப்பான தாய்வழிச் சமூக முறை முற்றிலும் அற்று தந்தையாதிக்கச் சமூகம் உருவாகியது. இதன் தொடர்ச்சியாகக் குடும்ப அமைப்பு பெண்ணை இரண்டாம் பாலினமாகவும், ஆணை அதிகார மையமாகவும் நிறுவியது.
இரண்டாம் பாலினமாகப் பார்க்கப்படுதல்
இரண்டாம் பாலினமாகப் பார்க்கப்படும் பெண் இனம் உலக அளவிலான பல்வேறு அறிவுசார் மாற்றங்களின் ஊடாக விழிப்படைந்த நிலையில் கல்வியறிவைப்பெறும் வாய்ப்பினைப் பெற்றது. அதன் விளைவாகத் தன்னைக் குறித்தும் தன்னோடு இணைத்துப் புறச் சூழலையும் உள்ளார்ந்து நோக்கும் விழிப்புநிலையை அடைந்தது.
குடும்ப அமைப்பு
அடுத்தகட்ட வளர்ச்சியாக அறிவார்ந்த சூழலில் பெண்கள் இயங்கத் தொடங்கினர். படைப்புச் சூழலைக் கைக்கொண்டு தன் உணர்வை இயல்புத் தன்மையோடு பதிவு செய்ய முன்வந்தனர். அதன் வெளிப்பாடே குடும்பம்.

” என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க .. ”
இன்று, ஏப்ரில் 27, எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள். எழுத்தால் வாழ்ந்தவர் இவரென்று கூறலாம். அதன் காரணமாக இவர் அடைந்த வாழ்க்கை அனுபவங்களையெல்லாம், உணர்வுகளையெல்லாம் தன் எழுத்துகளில் பதிவு செய்திருக்கின்றார். குறிப்பாகச் சென்னை நகரத்து வாழ்க்கையைப்பற்றிய இவரது குறிப்புகள் முக்கியமானவை. தமிழ் நாவல்களில் இவரது 'வானம் வசப்படும்' மற்றும் 'மானுடம் வெல்லும்' ஆகியவை முக்கியமானவை. பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாண்டிச்சேரி மக்கள்தம் வரலாற்றை, சமூக அமைப்பினை, அங்கு நிலவிய முரண்களை இவரது இந்நாவல்களூடு கண்டு கொள்ளலாம்.
எழுத்தாளர் நீலபத்மநாபனின் பிறந்தநாள் ஏப்ரில் 26. அதனையொட்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள். -



கார்க்கியே ஒரு கட்டத்தில் கூறுவார்: அடிமைகளின் ஒழுக்கமுறை போலவே எசமானர்களின் ஒழுக்கமுறையும் எனக்கு அந்நியமானதுதான். கலகம் செய்ய நிமிர்ந்தவனுக்கு உதவி செய் என்ற ஒழுக்கமுறை எனக்குள் வளர்ந்திருந்தது, என. ஒரு புறம் பைபிள் போன்றவை ஏற்படுத்தியிருந்த அல்லது நியாயப்படுத்தியிருந்த ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் வசதியாக ஏந்திக் கொடு என்பது போன்ற அடிமைகளின் கலாச்சாரம். மறுபுறம், நீட்சே போன்றோர் நியாயப்படுத்தியிருந்த – ‘மக்கள் என்போர், ஒரு சிலரால் அடக்கி ஆளப்பட பிறந்தவர்களே’ என்று போதித்த முதலாளிகளின் அறம். இவ்அறங்களிடையேத்தான், தான் தனது மூன்றாவது ஒழுக்கமுறையை கைக்கொண்டதாக கார்க்கி கூறுவார்.
எழுத்தாளர் கோமகனின் எதிர்பாராத மறைவு பலரையும் நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். அவர் அவ்வப்போது உட்பெட்டியில் வந்து தொடர்பு கொள்வார். அவருடனான உட்பெட்டி உரையாடல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது ஆளுமையினை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை என்பதால் இவற்றைப்பகிர்ந்து கொள்வதும் அவசியமென்று நான் கருதுகின்றேன். இவற்றிலிருந்து அவர் தனது 'நடு' இணைய இதழைத் தனது சுய முயற்சியினால் இணையத்தில் கிடைத்த தகவல்களின் உதவியுடன் வடிவமைத்தார் என்பதை அறிய முடிகின்றது. அது அவரது சுய முயற்சியின் மூலம் கற்கும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அந் 'நடு' இதழைச் சிறப்பாக வடிவமைத்து, காத்திரமான இதழாகக் கொண்டு வந்தது அவரது ஆற்றலின் வெளிப்பாடே.


பத்திரிகைகளோ அல்லது சஞ்சிகைகளோ சிறுவர்களுக்கான பகுதிகளுக்கும் இடம் கொடுப்பது மிகவும் அவசியமானதொன்று. சினிமா நடிகைகளின் உடலழகைக் காட்டும் கவர்ச்சிப்படங்களை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை விட அதிக ஆர்வத்தைக் குழந்தைகளுக்கான (அல்லது சிறுவர்களுக்கான) பகுதிகளை நடத்துவதில் காட்ட வேண்டும்.


ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று வரும்போது, யாரும் இத்தனை சொற்களுக்குள் சிறுகதை இருக்க வேண்டும் என்று வரையறை செய்வதில்லை. இப்பொழுது வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகி வருகின்றது. பத்திரிகைகள் சஞ்சிகைகள் கூட சிறுகதைகளின் அளவை மட்டுப்படுத்துகின்றன. நீண்ட கதைகளை விரும்புவதில்லை.
எழுத்தாளரும் ‘ நடு ‘ இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் பாரிஸிலிருந்து விடுமுறைக்கு இலங்கைக்கு வந்து திரும்புகையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மாரடைப்பு வந்து மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது. அற்பாயுளில் மறைந்திருக்கும் கோமகனின் இயற்பெயர் இராஜராஜன். சுறுக்கர் என்ற புனைபெயரையும் கொண்டிருந்தவர். சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதிவந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட குரலற்றவரின் குரல் நேர்காணல் தொகுப்பு இலக்கியப்பரப்பில் கவனத்தை பெற்றிருந்தது. கோமகனின் தனிக்கதை, முரண் முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர்.
“ ஏலி ஏலி லாமா சபக்தானி “ என் தேவனே என் தேவனே… ஏன் என்னை கைவிட்டீர்…? “ யேசு சிலுவையில் அறையப்பட்ட போது உதிர்த்த வார்த்தைகள் . 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக அன்றைய நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதிலும் இழுபறிகள் நிகழ்ந்தன.

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களில் ஒருவர் என மதிக்கப்பட்ட விற்கன்ஸ்ரைன் பற்றிப் பல்வேறு மொழிகளில் கட்டுரைகளும், ஆய்வுகளும், புனராய்வுகளும் வெளிவந்துகொண்டிருந்த போதிலும் தமிழ் மொழியில் ஆய்வாளர் செ.வே.காசிநாதனின் இத்தகைய ஒரு நூலைப் படிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றது. அவரின் இத்தகைய முயற்;சி மிகுந்த வரவேற்புக்கும், பாராட்டுக்குமுரியதாகும். ஆஸ்திரியாவில் பிறந்த பேராசிரியர் விற்கன்ஸ்ரைன் இங்கிலாந்தில் கேம்ரிஜ் பல்கலைக்கழகத்தில் 1930 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டுவரை மெய்யியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். அளவையியல், கணித அடிப்படைகள் போன்ற கருத்துக்களை சிந்தனை வழிகளில் நின்று அர்த்தம், மொழி, மனம் என்ற ஆய்வு நூலை எழுதியிருந்தார். இருந்தும் அவர் எழுதியவற்றை அவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அதாவது 1953 ஆம் ஆண்டே இரண்டு பாகங்களாக வெளிவந்திருந்தமையை அறியமுடிகிறது.
ஆய்வுச் சுருக்கம்
அவனுடைய மனம் குழப்பமாகவே கிடக்கிறது .எழுத்து வேலையில் , ' மனசு இறங்க மாட்டேன் ' என முரண்டு பிடிக்கிறது .தேத்தண்ணீர் ஆற்றுறவன் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும் . , மரதன் ஓடுறவன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் . எழுதுறவனும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் . முகமூடியைப் போட்டு விட்ட நடிகன் பிறகு அதை கழற்றி வைக்க முடியாதல்லவா . அவன் நிறுத்தி விட்டால் , யார் கோகுலனா , அப்படி ஒரு பிறவி இருந்ததா ? புறநாடாக இராது சொந்த நாட்டில் இருந்திருந்தால் , அங்கேயும் சொந்தமாக காணி நிலமும் வேண்டுமய்யா , ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவி நினைவு கூர்ந்து வருவார்கள் .ஒரு மாமரக்கன்றை அல்லது ஒரு முருங்கையை நட்டு விட்டு அது பலன் தருகிற போதெல்லாம் அரூபமாகவும் அவனும் வலம் வந்து கொண்டிருப்பான் . இது கண்டம் விட்டு கண்டம் மாறி பனி விழும் மண்ணிலே இங்குள்ள சிறிதுபனிபிடித்த மக்களிற்கு மத்தியில் ...அடையாளமே இல்லை . தன் இருப்பை மறக்கடிக்கக் கூடாது என்று நம்மாள் , வீட்டிலே அடிக்கடி முறைக்கிறார், திட்டுறார் ....சிந்தித்துப் பாருங்கள்.என்ன செய்வது உலகம் இப்படி தான் இயங்கிறது .எமக்கெல்லாம் ஒரு நல்ல குரு ,வழி நடத்த ஒரு அமைப்பு வந்து அமைவதில்லை . வெளியிலும் அதே தான் நிலமை .


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









