2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகள்! - குரு அரவிந்தன் -
கோவிட்- 19 பேரிடர் 2020 – 1921 ஆம் ஆண்டுகளில் ஒரு பக்கம் உலக மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்க, மறுபக்கம் முன்னேறிய நாடுகள் விண்வெளி சார்ந்த தமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறன. கோவிட் பேரிடரைக் காரணம் காட்டி அவற்றைத் தள்ளிப் போடவோ அல்லது நிறுத்திவைக்கவோ முடியாத ஒரு நிலையில் விண்வெளி சார்ந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பல நூறு விண்கலங்களும், ரோபோக்களும் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருப்பதால், அவற்றின் நடவடிக்கைகள் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்துதான் கண்காணிக்கப்படுகின்றன. அதனால் பூமியில் இயங்கும் கட்டுப்பாட்டுத் தளங்கள் தொடர்ந்தும் இயங்கத்தான் வேண்டும். கோவிட் காரணமாக சில விண்வெளித் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், தேவை காரணமாக அவை இப்போது மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டன.
அரசியலை ஓரம் தள்ளிவிட்டு இந்த நாடுகள் அறிவியல் நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதற்குக் காரணம் எதிர்காலம் விண்வெளி நிகழ்வுகளில்தான் தங்கி இருக்கப் போகின்றது என்பது தெளிவாகப் புலனாகின்றது. 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் நாடுகளைப் பிடிப்பதில் ஈடுபட்டது போல, இப்போ கிரகங்களைப் பிடிப்பதில் நாடுகளிடையே போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. எனவே 2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகளை இங்கே தருகின்றேன்.