மகாகவி பாரதியார்  பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்            

இசை & குரல்: SUNO AI  ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 

பாடலைக் கேட்டு மகிழ

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை                                                          
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்                                            
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்                                               
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து                                                         
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்                                
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா                                                          
அழகெனும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன் 

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை   


யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ? என்றேன்.                     
யோகமே தவம் தவமே யோக மென உரைத்தாள்                            
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ? என்றேன்                           
இரண்டுமாம், ஒன்றுமாம்,யாவுமாம் என்றாள்                              
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?                            
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ ? என்றேன்.                  
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்             
விருப்புடனே பெய்குவது வேறாமோ? என்றாள். 

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை   

காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்                                                          
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்                                                       
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்                                                            
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்                                                   
ஏலத்திலே விடுவதுண்டோ எண்ணத்தை? என்றேன்                    
எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண், என்றாள்                   
மூலத்தைச் சொல்லவோ. வேண்டாமோ? என்றேன்,
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.                   

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை   



மகாகவி பாரதியார்  பாடல் - ஜய பேரிகை கொட்டடா 

இசை & குரல்: SUNO AI  ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 

பாடலைக் கேட்டு மகிழ

ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா! 
           
பயமெனும் பேய்தனை யடித்தோம் -- பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.

ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா! 

இரவியி னொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.     

ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா! 

காக்கை, குருவி எங்கள் ஜாதி -- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.     

ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா! 


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்