' வ.ந.கிரிதரனின் பாடல்களும் & பார்வைகளும் ' 'யு டியூப் சானல்': மகாகவி பாரதியார் பாடல்கள் நான்கு!
' வ.ந.கிரிதரனின் பாடல்களும் & பார்வைகளும் ' (V.N.Giritharan Songs & Views) என்னும் 'யு டியூப் சான'லில் செயற்கை அறிவின் (AI) துணை மூலம் இசையமைக்கப்பட்ட , குரல் கொடுக்கப்பட்ட என் பாடல்களைக் கேட்டு மகிழலாம். பல்வேறு விடயங்களைப் பற்றிய என் பார்வைகளையும் கேட்டறிந்து கொள்ளலாம். அவ்வப்போது காப்புரிமைப் பிரச்சனை அற்ற , எனக்குப் பிடித்த மகாகவி பாரதியார் போன்றோரின் கவிதைகளையும் செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்து, பாட வைத்துப் பகிர்ந்து கொள்வேன். பாடல்களும், பார்வைகளும் பிடித்திருந்தால் என்னுடன் தொடர்ந்துவர மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி Bell பட்டனையும் தேர்வு செய்யுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. எனது மின்னஞ்சல் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


வரலாறு தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளும் தருணங்களில், மொழி தனது வழக்கமான அழகியலை இழந்து ஒரு 'சாட்சியமாக' (Witness) மாறுகிறது. "பள்ளிமணி வான்வெளியிலிருந்து விழுந்த போது” (When the School Bell Fell from the Sky) என்பது வெறும் கவிதை அல்ல; அது ஒரு மீ-கவித்துவப் புலம்பல் (Meta-Poetic Lament). இங்கே 'பள்ளி மணி' என்பது காலத்தின் அறிவிப்பு. அது வானத்திலிருந்து விழும்போது, ஒரு தலைமுறையின் எதிர்காலம் புவிமட்டமாக்கப்படுகிறது. இந்தக் கவிதைகளில் தாய்மார்களின் துயரம் ஒரு தனிநபர் உணர்வல்ல; அது மனித நாகரிகத்தின் தோல்வியைக் காட்டும் ஒரு கண்ணாடி. நவீனத்துவக் கவிதையின் சுருக்கமும், மௌனத்தின் அடர்த்தியும் இதில் இழையோடுகின்றன. ஒரு பள்ளி அழிக்கப்படும்போது, அங்கே ஒரு கட்டிடம் வீழ்வதில்லை; மனிதகுலம் தன்னைக் குறித்து வைத்திருந்த 'நம்பிக்கை' எனும் விதை கருகிப் போகிறது. இநப் பிரதி அந்த இழப்பின் உண்மையை மறதிக்கு எதிராகப் பாதுகாக்கும் ஒரு தார்மீகச் செயல்.
கட்டுரையாளர்: முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317,
முருகு எனும் சொல் முருகனைக் குறிக்கின்றது. இந்த முருகனைப் பற்றி பல்வேறு தொன்மக் கதைகள் புனைந்துள்ளனர். அந்த வகையில் மிகவும் கவனிக்கத்தக்கது முருகன் சிவசக்தி மகனானது. ஆரம்ப கால முருக வழிபாட்டில் முருகன் யாருடைய மகனாகவும் (பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர்த்து..) பேசப்படவில்லை. மாறாக அவன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும், போருக்கு உரியவனாகவும், நோய் தீர்ப்பவனாகவுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். அவ்வாறான முருகன் இடைக்காலத்தில் சைவனாகவும் சிவசக்தி மைந்தனாகவும் திருமால் மருகனாகவும் புனைந்தது இந்து மத பரப்பும் நோக்கிலும் பிற வட இந்திய கடவுளோடு முருகனை இணைக்க வேண்டும் என்ற வலிய நோக்கத்தோடும் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கு முருகன் வெறியாட்டு உரியவன் செம்மறி ஆடு பலி பெற்றவன். சைவ கடவுளரகளோடு வலிய இணைத்ததன் காரணமாக அவன் சைவ படையலுக்கு உரியவனாக மாற்றம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் வழிவழியாக இருந்து வந்த தமிழர்களின் வழிபாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் இந்த கடவுள் இணைப்பு என்பது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இன்று அனைவரும் முருகனை சைவனாக ஏற்று சைவ படையலிட்டு வழிபடுவதை நாம் காண்கின்றோம். இது நம் பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு மரபு ஆகியவற்றின் மீதான மிகப்பெரிய சவாலான தாக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வேலனின் வெறியாட்டு நிலையும் கேரள தெய்யமும் எவ்வாறு ஒன்று என்கிறோம் என்பதை இவ்வாய்வு விரிவாக பேசவுள்ளது.
சட்டத்தரணியும், எழுத்தாளரும், தமிழ் இலக்கியத் தோட்ட இயக்குநர்களில் ஒருவருமான மனுவல் ஜேசுதாசன் அவர்கள் மறைந்த செய்தியினை அறிந்தேன். பதினாறு ( சிறுகதைத்தொகுதி), 90 நாட்களுள் (நாவல்) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவர்தம் புனைகதைகள் புகலிடத் தமிழர்களின் பல்வகை வாழ்க்கைச் சவால்களை வெளிப்படுத்துபவை. 
அமெரிக்காவின் போர்களை ஈரான் கடந்த இருபது ஆண்டுகளாக உன்னிப்பாகக் கவனித்து, ஆய்வு செய்து வந்துள்ளது என்பதே அதன் வெற்றிக்கான முதல் காரணம். ஈரான் வெறுமனே பார்வையாளராக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு மாணவனைப் போல, அமெரிக்க இராணுவ வியூகங்களின் பலம் மற்றும் பலவீனங்களை நுட்பமாகப் பகுப்பாய்வு செய்தது.
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
பெரும்பாலும் கவிஞனாகவே அறியப்பட்ட பாரதி, பெருமளவு எழுதியது என்னவோ கட்டுரைகளே. அதிலும் 1905-1907 காலப்பகுதியில் அவனது கட்டுரைகளில் பெரும்பாலானவை அரசியல் கட்டுரைகள் என வரையறுக்கப்படலாம். இன்னும் சில சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்றும் கூறப்படலாம்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை. 
நந்தா, போரின் சாம்பல் மேடுகளிலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு பீனிக்ஸ் பறவை. குண்டுச் சத்தங்கள் காதுகளில் ரீங்காரமிட, இரத்த வாடை நாசியில் ஒட்டிக்கொண்டிருக்க, அந்த தேசத்தை விட்டு வெளியேறினாள். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கணவனையும், நினைவுகள் உறங்கும் வீட்டையும் விட்டுவிட்டு, நான்கு பிள்ளைகளைத் தன் சிறகுகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு ஒரு ஐரோப்பிய தேசத்தில் வந்திறங்கினாள்.
மகாகவி பாரதியார் பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மகாகவி பாரதியார் பாடல் - ஜய பேரிகை கொட்டடா
வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
பாரதியாரின் 'நிற்பதுவே,நடப்பதுவே' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.
பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.


கட்டுரையாளர்: அருணாசலம் லெட்சுமணன், அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம், அதிபர்- ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம்.
தென்னிந்தியாவில் இருந்து வருகைத்தந்து இலங்கையின் பெருந்தோட்ட பொறிமுறையினை விருத்தி செய்வதில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்கேற்பு மிக முக்கியத்திற்குரியதாக விளங்குகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பூர்வீகத் தொடர்பு நிலைகள் குறித்த ஆதாரங்கள் பல உள்ளன. அவ் ஆதாரங்களை முன்வைப்பதில் இராமாயண சித்திரிப்புக்கள் குறித்த பார்வை மிகுந்த கவனத்தை பெறுகின்றன. இவ்வாறான தொடர்பு நிலைகள் பல இருந்த போதிலும் 1823ம் வருடத்தை பிரதானப்படுத்திய நகர்வு 'மலையக சமூக' உருவாக்கத்தில மிக முக்கிய கட்டமாக அமைகிறது. அப் பிரயத்தனத்தில் 'மலையகம் - 200' என்ற கோசத்தின் பின்னணியில் இடம்பெற்ற நிகழ்வுகள் அவதானத்திற்குரியதாக அமைந்தன. இவ் இருநூறு வருடகால அவதானிப்பில் மலையக மக்களின் வரவு, வாழ்வு, புலம்பெயர்வு, இருப்பின் ஆர்வம், புலம்பெயர்வின் நிர்ப்பந்தம், பிரயோக அரசியலின் பலம் பலவீனம், கலை பண்பாட்டு அம்சங்கள், கல்வி நிலைகள், பொருளாதார நகர்வுகள் போன்றவை பற்றிய அவதானங்களும் கவனத்தை பெறுகின்றன. மலையக மக்களின் இருப்பை தக்க வைப்பதிலும் அவர்களின் அடையாளத்தை பிரதிபலிப்பதிலும் கலைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அக் கலைகளுள் முத்தாய்ப்பாகவும், மலையகத்தின் முக்கூத்துக்களில் மூலமாகவும் அமையும் காமன்கூத்து மலையக மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய வகிபங்கை பெறுகிறது எனலாம்.
வ.ந.கிரிதரனின் பாடல் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
- எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் மறைந்தார் என்னும் தகவலை அறிந்தோம், துயர் அடைந்தோம், அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரிலும் பதிவுகளும் பங்கு கொள்கின்றது. அவர் நினைவாக , கலைம், இலக்கியத்திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் மாத்தளை வடிவேலனின் சிறுகதைத்தொகுப்பு பற்றி எழுதிப் பதிவுகளில் வெளியான கட்டுரையை மீள் பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
நீர் வார்த்த அய்யனார்! - சுருளி காந்திதுரை (மதுரை) -
திரு முருகபூபதி அவர்கள் சமூகத்திற்கு செய்த பங்களிப்புகளை மூன்று முக்கியப் பிரிவுகளாகக் கூறலாம். எழுத்தாளர், சமூகப் பணியாளர், மற்றும் சமூகப் பதிவாளர். மெல்போர்ன் தமிழ்ச் சமூகத்தில் இம்மூன்று துறைகளிலும் ஒரே நேரத்தில் பணியாற்றியவர்களை காண்பது மிகவும் அரிது. முதலில் நான் பேச விரும்புவது எழுத்தாளர் என்ற அவருடைய பங்களிப்பைப் பற்றியே.
ஊழின்வலி பெறுஒரே உயிரினம் யான் மட்டுமே
முகத்தில்
தாகூரின் செல்வாக்கில் இருந்து, கழன்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் வந்த எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது எனலாம். ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை இவர் தம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி மீண்டும் கவிதைக்குள் செல்லலாம்:

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









