கவிதை: தினமுமே பொங்கலாய் ஆக்கிடுவோம் வாரீர் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

கவிதை: என்னுயிர்! - நா. சுகுமார் M.A., M.Ed., உதவிப் பேராசிரியர், ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்.

அவள் ஓர் உயிர்!
அவளே எனதுயிர்!
எங்கு இருக்கிறாள்?
எங்கும் இருக்கிறாளா?
இல்லை என்னுள் இருக்கிறாளா?
அவளால் நான் இருக்கிறேன்
என அறிந்த அவள் மனம்,
அவளுள் நான் இருக்கிறேன் என்பதை அறிய
மறுப்பதேனோ?
பிரிந்து சென்றாள், ஆனால்
நினைவுகளைப் பிரிக்க மறந்தாள்! எங்கோ கேட்கிறது அவள் குரல்,
என்னுள் கேட்கிறது ஓர் அழுகுரல்,
அது மனதின் குரலோ
இல்லை என் மனக்குமுறலோ!
ஏன் இந்த மாற்றம்?
எதனால் இந்தத் தடுமாற்றம்? – என்னவளே!
கவிதை: நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்! - மூலம்: கமலா பாசின் | தமிழில்: முனைவர் பாரதி ஹரிசங்கர்

- அமரர் கமலா பாசின் (Kamla Bhasin, 24 ஏப்ரல் 1946 – 25 செப்டம்பர் 2021) இந்தியாவின் முக்கிய ஆளுமைகளிலொருவர். பெண்ணியவாதி, கவிஞர், எழுத்தாளர், சமூக அறிவியலாளர் எனப் பன்முக ஆளுமைகள் மிக்கவராக விளங்கியவர். பாலினம், கல்வி, மனித வளர்ச்சி, ஊடகங்கள் பற்றிய துறைகளில் கவனத்தைச் செலுத்தியவர். சங்கத் என்ற தெற்காசியப் பெண்ணிய வலை அமைப்பை நிறுவியவர். பெண்ணியம் என்பது மேலைத்தேசக் கோட்பாடு என்பதை நிராகரித்தவர் கமலா பாசின். இந்தியப் பெண்ணியமானது தனது போராட்டங்களாலும், இன்னல்களாலும் உருவானதென்று கருதியவர். பெண்ணியம் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான யுத்தம் அல்ல என்பது இவரது எண்ணம். பெண்ணியமானது ஆணை உயர்த்தி அவனுக்கு அதிகாரம் கொடுக்கும் கருதுகோளுக்கும், சம உரிமையை வலியுறுத்தும் கருதுகோளுக்குமிடையிலான , இரு கருதுகோள்களுக்குமிடையிலான போராட்டமே பெண்ணியம் என்றிவர் கருதினார். - பதிவுகள்.காம் -
படிப்பா, நீ ஏன் படிக்க வேண்டும்?
தந்தை மகளிடம் கேட்டார்.
என் மகன்கள் பலர் படிப்பார்கள்.
பெண்ணே! நீ ஏன் படிக்க வேண்டும்?
நான் ஏன் படிக்க வேண்டும்?
நீங்கள் கேட்பதால் பதிலளிக்கின்றேன்.
நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்.
பல நாள் மறுக்கப்பட்ட உரிமையென்பதால், நான் படிக்க வேண்டும்.
என் கனவுகள் சிறகடிக்க, நான் படிக்க வேண்டும்.
அறிவு புதிய வெளிச்சம் பாய்ச்சுமென்பதால், நான் படிக்க வேண்டும்.
போர்கள் பல புரிய வேண்டுமென்பதால், நான் படிக்க வேண்டும்.
நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்.
செவிநுகரக் கவிதந்த கவியரசன் நீயன்றோ! - கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , ஆஸ்திரேலியா -
கண்ணதாசன் கவிதைக்கு கற்கண்டே தோற்றுவிடும்
அவ்வளவு சுவையினையும் அவனளித்து நின்றானே
காதலினைப் பாடிவிடின் காமனுமே வந்திடுவான்
தேமமதுரத் தமிழாலே திசைநுகரக் கவிதந்தான்
பாவாணர் மத்தியிலே பக்குவமாய்க் கவிதந்தான்
பாரதிரக் கவிதந்த பாரதிக்கு மகனானான்
ஓவியமாய்க் கவிதந்தான் உயிர்ப்புடனும் கவிதந்தான்
சேமமுற வாழ்வதற்கும் சீராகக் கவிதந்தான்
சிறுவர் மனங்களை வென்ற செந்தமிழறிஞர் த. துரைசிங்கம்..! - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -

வண்ண மொழி பேசும் வாடாமலர்கள்
சிங்காரப் பாட்டிசைக்கும் சுந்தர மழலைகள்
சிரித்தே மகிழ்ந்திட சின்னச்சின்னப் பாடல்கள்
சித்திரமாய்ப் புனைந் தெடுத்த அழகுதமிழ்க்
கவிஞனே உன் பணிக்கு எம்வணக்கம்..!
துள்ளி வரும் புள்ளி மானை
தோகை விரிக்கும் கோல மயிலை
இன்னிசை பாடும் இளங் குயிலை
எழிலாய் மிதந்திடும் உதய நிலவை
மெல்லத் தழுவிடும் இளந் தென்றலை
பாடும் கவிஞர் கூட்டத்தின் நடுவே
பாடிடத் தேடினாய் குழந்தை மனங்களை..
ஞானக்கவியே.. உன் பணிக்கு எம்வணக்கம்..!
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
நீலகண்டக் கவி பாரதி
சொன்னதெல்லாம் சொல்லாததையும் சுமந்ததாக
சொல்லாத எதையெல்லாம் சுமந்து போனாயோ
சுப்ரமண்ய பாரதீ…
சொப்பனவாழ்க்கையின் சூட்சுமத்தை இப்பவும்
பாடிக்கொண்டிருப்பாயோ?
செத்து முடித்த பின்னான இத்தனை வருடங்களில்
இன்னொரு சொர்க்கம் சமைத்திருப்பாயோ ?
தனியொருவனுக்குணவிலாதுபோவதறியா
பிரபஞ்சமதில் உனக்கு முன்னும் பின்னுமான
வரகவிகளோடு
இறக்கை விரித்துப் பறந்தவாறே
இலக்கியம் பேசிக்கொண்டிருப்பாயோ?
இயற்றிக்கொண்டிருப்பாயோ நந்தமிழில்
சுந்தரக்கவிதைகளை?
அந்திப்பொழுது அங்கு நீலார்ப்பணமாயிருக்குமோ?
பட்டுக்கருநீலப் புடவை பதித்த நல்வயிரமாய
நட்சத்திரங்களைத் தொட்டுணர முடியுமோ?
நாலுமே பலித்திட வரமருள இயலுமானால்
நல்குவா யதை நாங்கள் கேட்கத் தயங்கினாலும்.
நினைவுநாளில் மறுபடியும் பிறந்துகொண்டிருக்கும்
நீயாகி நானாகி அவராகி அதுவாகி வானாகி
மண்ணாகி _
வாழ்வாங்கு வாழட்டும் வாழ்வு.
வெந்துமடியட்டும் ஏற்றத்தாழ்வு..
அமரத்துவம்
”அவரைத் தெரியுமா உங்களுக்கு?”
நன்றாகவே தெரியும்”
”அவரை நேரில் பார்த்திருக்கிறீர்களா?”
”பலமுறை பார்த்திருக்கிறேன்”.
”அவரோடு பேசியிருக்கிறீர்களா?"
"நிறையவே பேசியிருக்கிறேன்".
எப்போதுவேண்டுமானாலும் அழுதுவிடுவதாய்
கவிதை: மதில் மேல் பூனைகள்! - வ.ந.கிரிதரன் -

மதில் மேல் பூனைகளை நான் வெறுப்பவன்.
முதுகெலும்பற்றவை அவை.
சந்தர்ப்பங்களுக்கேற்ப அவை நடப்பவை.
சீற வேண்டிய நேரத்தில் சீறாதவை அவை.
சீற வேண்டிய தருணங்களில் மதில்களில்
உறங்கிக் கிடப்பவை அவை.
அதனால் அவற்றை எனக்குப் பிடிப்பதில்லை.
சீற வேண்டாத தருணங்களில் சீறி அவை
சிம்ம கர்ச்சனை செய்பவை.
அதனால் அவற்றை எனக்குப் பிடிப்பதில்லை.
மதில் மேல் பூனைகள்
முதுகெலும்பற்றவை.
மதில் மேல் பூனைகள்
சூடு சொரணையற்றவை.
கவிதை: காலச்சுழல்! - துவாரகன் -

முன்னோர்
புண்ணியத்தை அறுவடை செய்யக்
கற்றுத் தந்தனர்.
நேர்மையைக் கற்றுத் தந்தனர்.
நாங்களோ,
பாவத்தை அறுவடை
செய்து கொண்டிருக்கிறோம்.
கவிதை: எனதான கவிதைத் தேடலில்…… - குறிஞ்சி மைந்தன், புது தில்லி --

இரவுகளின் வெளிச்சத்தைத் திருடிய
ஒரு பகலவனைத்தேடி எனது கவிதைகளுடன்
என் இருப்பிடத்தை விட்டுப் புலம்பெயர,
என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன்.
போகும் இடமானது நெருப்பைப் பருகும்
இடமாக இருக்கக் கூடும் என்பதற்காக,
ஒரு பெண்ணிடம் உடற்சுகத்தைச் சிலகாலம்
கடனாகப்பெற்று வரலாம் என்கிற முனைப்புடன்
அவளது இருப்பிடத்தை அடைய எனது கால்களோடு
நான் எண்ணிருந்த குறிக்கோளுடனும் சென்றேன்.
வ.ந.கிரிதரனின் 'கண்ணம்மா'க் கவிதைகள் (1): காலவெளிக் கைதிகள்!

காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா
சிந்திக்க விரும்புகின்றேனடி.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையடி கண்ணம்மா.
கவிதை: கரையான்கள் நுகர்ந்துவிட்டுச் சென்ற என் நாட்குறிப்பில்... - குறிஞ்சி மைந்தன் -

எனக்கு நீ எழுதிக்கொடுத்த
நம்மைப் பற்றிய நாட்குறிப்பை
நேற்றுதான் எடுத்து வாசித்தேன்.
உனது எழுத்துகள் அழகாக இருந்தன.
உனது எண்ணங்கள் மிக அழகாக இருந்தன.
என்னைப்பற்றிய உனதுக்கவிதை
எனதான கர்வத்தினை விசாரிக்கும்படியும் இருந்தது.
எப்போதும் அதைப் படித்துப் படித்து
பூரித்துப்போக நான் உற்சாகம் கொள்வேன்
ஒவ்வொருமுறையும்.
கவிதை: ஏங்கித் தவிக்கும் மனம்! - முனைவர் ம இராமச்சந்திரன் -

அரசமரத்தின் காற்றுத் தாக்கிய இலையாக
மனம் ஓய்வில்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பறவையின் வருகைக்காக!
வந்து பழகிய உனது குரலும்
வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனமும்
ஏமாற்றத்தின் உச்சம் இன்று
வாழை மரத்தின் இலைகளைத் துழாவி
தூரத்து மின் கம்பிகள் பழக்கப்பட்டு விட்டன கண்களுக்கு
உன்னைத் தேடி!
உணர்வுச்சித்திரம்: அப்பா! - முனைவர்.கோ.புஷ்பவள்ளி, புதுச்சேரி -

பொறையாரில் பிறந்து
வறுமையில் நெடிந்து
வலிகளைச் சுமந்து
உழைப்பை நம்பி உறுதியுடன்
பொதுகை (புதுவை) வந்தார்…
பல போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கை
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை.
அடைக்கலம் தந்தார் மாமனிதர்
அன்போடு அடிமையாய் உழைத்தார்
அவர் நலன் கருதி.
ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 12 கவிதைகள்!

1. அடையாளமும் அங்கீகாரமும்
இத்தனையத்தனை யெனச் சொல்லவியலா
எத்தனையெத்தனையோ காக்கைகளில்
தனித்தொரு காக்கையாகத் தன்னை யாரும் பார்க்கவில்லையே
என்ற ஏக்கம்
எந்தக் காக்கையையும் தாக்கியிருக்காது
என்றே தோன்றுகிறது.
சக பறவைகள் இரைதேடப்
பறக்கவேண்டும்.
தூண்டில்களுக்கும் துப்பாக்கிகளுக்கும்
இரையாகாமல் தப்பிக்கவேண்டும்.
நிழல் தேடி நிறைய தூரம் செல்லவேண்டும்...
தன் கூடிருக்கும் மரம் தொலையாதிருக்கிறதா
என்று தொடர்ந்து கண்காணித்துவரவேண்டும்...
தானியமென்று சிறுகல்லை முழுங்கியதில்
ஏற்பட்ட உபாதைகளை
யாரிடம் பகிர்ந்துகொள்வது?
இதில் யாரை யார் புகழ்ந்துபோற்றுவது.....
கவிதை: நானோர் தமிழன்! - தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

நானோர் தமிழன் நாடெலாம் அலைந்தும்
வானத் தமிழை மறந்திடா மனிதன்
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
பற்றிப் படர்ந்த பழந்தமிழ்; இலக்கியம்
முற்றும் துறந்த முனிவர் மறையெலாம்
சித்தர் இறையைச் சொன்னதிப் பூமி
காலக் கோட்டில் காவுறும் மலையில்
ஞாலம் தோன்றி நயந்தஇப் பாதை
ஆதி மொழியாய் அட்ட திக்கெலாம்
சேதி உரைத்த செந்தமிழ் வழியாய்
நீதியும் போதனை நெறியும் மிக்கோர்
சாதனை கண்டதோர் சரித்திரம் ஆனதே !
கவிதை: வழித்தடங்கள்! - முனைவர் ம இராமச்சந்திரன் -

வலசைப் போகும் ஒற்றைப் பறவையின்
சுதந்திரப் பெருவெளியில் இலக்கற்றுப்
பெருமரத்தில் இளைப்பாறுகிறேன்
புதுப்பெருக்கில் கால் நனைக்கும் சிறுமியின்
துள்ளல் மிகுந்த உற்சாக மகிழ்ச்சியில்
நழுவிப் போனது தண்ணீர் மட்டுமல்ல
எனது வாழ்க்கையும்
நடந்து செல்லும் எருமையின்
தியான பவனியில் கரைந்துபோக
மறுக்கும் சிறுவனின் பயணம்
வாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -
இன்று பழைய புத்தகங்களைத் தேடியபோது கவிதைப்புத்தகமொன்று அகப்பட்டது. நெடுங்கவிதையது. பெயர் " சாம்பல் வார்த்தைகள்:. கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்களின் நெடுங்கவிதை நூல். யாளி பதிவு வெளியீடு. வெளியிட்ட ஆண்டு ஜனவரி 1994. அட்டைப்பட வடிவமைப்பு ஏ.கோபாலன். நூல் வடிவமைப்பை இந்திரனே செய்திருக்கின்றார்.
வாழ்க்கைக்கடலின் அலைகளால் நம்பிக்கைக்கரைகள் அரிக்கப்பட்ட நிலையில் நம்பிக்கை இழந்திருக்கின்ற கவிஞரின் வலியினை மொழி கொண்டு வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர். ஆனால் அதனை அவர் நேரடியாக யதார்த்தரீதியில் தன்னை , தன் நம்பிக்கையின்மையை , தானடைந்த வலியினை உங்களுக்குக்கூறவில்லை. மாறாக கனவுகளையும், கற்பனைகளையும் பற்றிக்கொண்டு அவற்றினூடு அதனை வெளிப்படுத்துகின்றார். இரக்கத்தை யாசிக்கின்றார். ஆனால் அதே சமயம் அவ்விரக்கத்தை யாசிப்பது யாரிடமிருந்து என்பதில் கவிஞர் குழம்பியிருக்கின்றார்.
இக்கவிதையின் மொழி எத்தகையது? கனவுகளையும் கற்பனைகளையும் பற்றிக்கொண்டு ஆழ்மனபடிவுகளை யதார்த்தத்துக்குக் கொண்டு வருவதால் 'மிகையதார்த்த' மொழியாகவே எனக்குப் படுகின்றது. மிகையதார்த்த மொழி மானுடரின் யதார்த்த இருப்பை, இருப்பின் முரண்களை, அநீதிகளை , இவற்றின் காரணமாகக் கவிஞர் அடைந்த வலியினை உங்களுக்குப் புரிய வைக்கின்றதா என்பதைக் கவிதையை படிக்கும் நீங்கள்தாம் கூறவேண்டும்.
ஆனால் கவிஞரை வேதனை அடைய வைப்பவை எவை? கவிஞரின் வலிக்குக் காரணமானவை எவை? அவர் வாழும் யதார்த்த உலகின் அவர் மீதான தாக்கம், அத்தாக்கத்தின் விளைவாக அவரைடைந்த வேதனை, வலி , இவற்றையே மிகையதார்த்த மொழியில் நெடுங்கவிதையாக்கியிருக்கின்றார் கவிஞர் இந்திரன். உண்மையில் நவீன இந்தியா , மநு தர்மம் இவற்றை இந்நெடுங்கவிதை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றது.
கவிதை: பார்போற்றும் பாரதி! - முனைவர் கோ. புஷ்பவள்ளி -

பாரதத்தாய் பெற்றெடுத்த மைந்தன்!
பார்போற்றும் கவி; அவன் தான் எங்கள் பாரதி!
அச்சமில்லை! அச்சமில்லை! என அச்சம் தவித்தவன்!
ஆண்மையின் அடையாளமாகத் திகழ்ந்து!
ஏறுபோல் நடந்து! கொடுமையை எதிர்த்து போராடி!
சரித்திரம் பல படைத்து!
சாவதற்கு அஞ்சாமல் சாத்திரம் கலைந்து!
பல சாக்கடைகளை அகற்றி!
சமூகப் புரட்சி செய்த சாதனையாளன்!
கவிதை: உனக்காய் என்ன செய்தோம்..? - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -

வண்ண வண்ண நிறங்களிலே
வகை வகையாய்ச் சட்டை தைத்து
எங்களைத் தான் அலங்கரித்து
சித்திரமாய்ப் பார்த்திருந்த
எம் தாயே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?
நீராட்டிச் சோறூட்டி
நெற்றியிலே பொட்டிட்டு
சின்ன அடியெடுத்து
சித்திரத் தேர் அசைகையிலே..
உள்ளம் குளிர
உச்சி முகர்ந்தவளே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?
கவிதை: விதியொன்று செய்! - முனைவர் பீ. பெரியசாமி -

கொரோனா கொடும் நோய்த்தொற்று
ஆட்டிப்படைக்கிறது அகிலத்தை.
விட்டு விலகவில்லை நவயுக கர்ணன்கள்
எப்போதும் உதவிக்கரம் நீட்டி காக்கிறார்கள்.
மரணித்துக் கொண்டே இருக்கிறார்கள்
நவயுக மீட்பர்கள்.







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









