துவாரகன் கவிதைகள்
அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்
நேற்றும்கூட
என் அம்மா
எனக்காக ஒருபிடி திரளைச்சோறு
குழைத்து வைத்திருந்தாள்
நான் வருவேனென்று.
அவளிடம் சேகரமாயிருக்கும்
எண்ணங்களுக்கு வார்த்தைகளேயில்லை.
எல்லாப் பாரத்துக்கும்
அவளே சுமைதாங்கி

அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்
நேற்றும்கூட
என் அம்மா
எனக்காக ஒருபிடி திரளைச்சோறு
குழைத்து வைத்திருந்தாள்
நான் வருவேனென்று.
அவளிடம் சேகரமாயிருக்கும்
எண்ணங்களுக்கு வார்த்தைகளேயில்லை.
எல்லாப் பாரத்துக்கும்
அவளே சுமைதாங்கி

சில்லறைக்கு
விலைபோகும்
ஓட்டு எந்திரங்களல்ல – நாம்
நாளைய விதியை இன்றெழுதும்
தேர்தல் பிரம்மாக்கள்;
இலவசத்தில் மதிமயங்கி
எடுத்து வீசிய ஊழல் பணத்தில்
வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம்
தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும்
மண்ணின் – உரிமை குடிகள்;
காற்றின் வேகத்திற்கும்
கனவுப் பொழுதுக்கும் இடையில்
எப்போதும் நான் குறுக்கிடுவதில்லை
இரண்டுமே இயல்பாய்
இருப்பதுதான் மகிழ்ச்சி.
உங்களுக்குப் புரியாததைச்
சொன்னால்
பைத்தியம் என்பீர்கள்
உங்கள் பேச்சுக்கு
தலையாட்டாமல் நின்றால்
கோட்டி பிடித்து விட்டதென
ஊருக்குள் வதந்தி பரப்பி
விடுவீர்கள்
உங்களை அனுசரித்து
போகவில்லையென்றால்
முதுகுக்குப் பின்னால்
முணுமுணுப்பீர்கள்
எழுதிய ஆக்கத் திறமை உணர்ந்து
தன் கருத்திடுதல் பெரும் ஊக்குவிப்பு.
வியப்பு, மகிழ்வு, விசனம், ஆச்சரியமாய்
கருத்திடும் வரிகளை உள் வாங்குதல் கலை.
தன்னுணர்வைத் துணிந்து வெளிப்படையாய்
விமரிசனமாய் வடித்தல் இலகு செயலன்று.
புகழ்ந்து வரைவோர் நவரசம் பொங்க
ஆகா ஓகோவென அருமையாய் வடிக்கிறார்.
அவளின்
இடையினைப் பிடித்து
குடையினுள் இழுத்தான்
இடை விடாத மழை....
*முற்றத்தில் போட்ட
கோலங்களையெல்லாம்
மழை அழித்து விட்டது..
அடுத்த நாள்
மழை விட்ட பின்
மழையின் கோலம்
தெருவெங்கும்

எமக்குக் கைகளிருந்தால்
ஒருவரைக் கன்னத்தில் அறையலாம்
தடியால் அடிக்கலாம்
சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம்
இன்னும் எதுவும் செய்யலாம்
எமக்குக் கைகளிருந்தால்
ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம்
வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம்
நட்புடன் பற்றிக்கொள்ளலாம்
நாலுபேருக்கு உதவலாம்
நாட்டைக் கட்டியெழுப்பலாம்
1. மிச்சப்பட்ட இரவுகள்
நிலவின் கிரணத்தினூடே
இருள் கசிந்தது
பேச்சரவம் கேட்டு
மரத்தின் நிழல்
திரும்பிப் பார்த்தது
கன்னக்கோல் வைத்து
களவாடும் கூட்டம்
ஊரைச் சுற்றி வந்தது
கறுப்புப் பூனை
உதிர சுவைக்காக
அலைந்தது
மயானத்தில் ஒரு
பிணம் எரிந்தது
துஷ்டி நிகழப்போகும்
வீட்டை
ஆந்தைகள் உணர்ந்தது
பொம்மை கேட்டு
அழுத குழந்தை
இரவுகளை மிச்சப்படுத்தாமல்
உறங்கிக் கொண்டிருந்தது.
அம்மா..
உன் கடைசிப்பயணத்தில்
என் கண்ணீர் வாக்குமூலம்.
என்னை மன்னித்துவிடு.
நான் விரும்பினாலும்
நான் விரும்பாவிட்டாலும்
என்மீது சுமத்தப்பட்டிருக்கும்
இந்தியன் என்ற அடையாளத்தினை
கிழித்து எறியும்
எந்த ஆயுதங்களும் இல்லாமல்
நிராயுதப்பாணியாக
களத்தில் நிற்கும்
என்னை..
அம்மா மன்னித்துவிடு.

முன்னொரு காலத்தில்
எனக்கோர் கனவு இருந்தது.
உழைத்துப் பயன் பெறுதல்
உன்னத வாழ்வாய்த் தோன்றியது.
கிடைக்கப் போகும் கனிக்காகப்
பூக்களையும் பிஞ்சுகளையும் பார்த்துப்
பெருமை கொண்டது மரம்.
0
1. மரணத்தின் தேதி!
இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!

1. புதிய சட்டங்கள்!
வன்னி நகரில் நடந்த
வன்செயல்களின் கொடூரத்தில்...
இடம்பெயர்ந்தலைந்தேன்
தாங்காத சோகத்தில்!

என்னை
ஆரத்தழுவி
அரவணைத்த அன்புத் தாயே!
நீ பிரிந்து
யாருமற்ற அநாதையாய் என்னை
அழ வைத்தாயே!
துடுப்பிழந்த படகாய்
துயரக் கடலில்
தத்தளிக்கும் என்னை
கரைசேர்ப்பார் யாருண்டு?
தாயன்புக்கு ஈடாக
தரணியிலே ஏதுண்டு?
கல்லுங் கத்தியாய் வாளும் வான்குண்டாய்
மனிதன் கண்டது மாற்றம்
நடையாய் நடந்தின்று நாடு கடந்து
படையாய் தொடர்வது பறக்கும் மாற்றம்
மாற்றங்கள் தொடர்கிறது உலகில் - மனிதன்
மனமாற்றம் அடையத் துடித்தாலும்
அழியவில்லை ஆரம்ப ஆச்சாரம்
துடிப்புடன் சொல்பவரும் சொந்தத்தில் மாற்றமில்லை

1. நியூட்டனின் மூன்றாம் விதி
*இருவர் சந்தித்தார்கள்
*அவன் சிரித்தான்.
கண்கள் சிரித்தன.
உதடுகள் சிரிக்கவில்லை.

தோழி
உன்னைத் தொட்டிலிலே போட்டுத்
தாலாட்டுப் பாடி தூக்கத்திலே
வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்
உன் விழிப்பு அவசியமானதொன்றே !

1. சிக்கலில் சிக்கிய வினாக்கள்
மனசெனும் படகில்
வினாக்களின் பயணம்
துடுப்படிப்பாரின்றி
தளும்பி... ததும்பி..
நகர்கிறது
தொலைவில் புலப்படும்
சஞ்சல சுழலில்
சிக்கி தவித்தல்
உறுதி செய்யப்பட்ட நிமிஷங்கள்
நெஞ்சக் கரைகளில்
தொங்கும் மரங்கள்
கிளைகள் பட்டுவாடா செய்த
புயல் காற்றால்
தள்ளப்படுகிற படகு
தற்காலிகமாய்
வேற்றுப் பாதையேற்று
தொடர்கிறது..
பொருளடக்க விளக்கங்களின்
விவரணம் தேடும்
பயணத்தை
அணை சேர்ந்த தருவாய்
தவறி முறிந்த படகு
அள்ளி வீசப்பட்ட வினாக்கள்
தப்பியனவை மட்டும்
மதகு மோதி ஒட்டிக்கொள்ளும்
மீண்டும் விடைகள் தேடி
எட்டிப்பார்த்த தருணம்
அணையில்
நீர் வரத்து அதிகரிப்பின்
எச்சரிக்கை கொடி
********************
2. கிராமங்கள் கற்பிக்கும்
விரிந்த நெஞ்சு
துரித தேடல்
தெளிந்த பார்வை
தற்காப்பு கணிதம்
பகைவெல்லும் பயிற்சி
பொது உயிர் காப்பு
தியாக பொறுப்பு
வேண்டிய அளவைகளில்
வெற்றி கண்டு
பொறுக்கப்பட்ட பூனைகள்
வித்தை மறந்த வேளை
இல்லவேயில்லை...
வீரம் விட்டொழித்த காலம்
வேட்டையாடப்படுகிறது
தலைவர்களின் உயிரும்
ஆட்சியர் மனைவியின் கண்ணீரும்
வியூகம் அழிக்க தவறியதன்
விளக்கம் அளிக்குமுன்
நினைவிருத்திக்கொள்ளலாம்
வந்த பாதை பின்னோக்கி போகையில்
வழி மறிக்கும் ஆலமரம்
வடக்குப்பக்கம் காணியில்
வாளெடுத்து குதிரையேறி நிற்கும்
ஊர்க்காவல் மாசனக்காளை
கற்காத ஓலை
கடமை தவறாத சிலை
மொத்த கிராமத்து மூச்சும்
மாரி கொத்தனார் வடித்த மீசையில்
காத்தலின் குறள் கேட்க
கள்புட்டி படைத்தல் போதும்
மாசனக்காளை
கிராமத்து பூனையல்ல
கரிசல் வாழ்வின் சேனை !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இப்பொழுதெல்லாம்
புனிதம் பற்றிப் பேசுகிறாய்
தூசுகளால் ஆன இந்த உலகு
தூ(ய்)மை நிறைந்ததுதான்
பட்டுப்போன மரக்கொட்டுக்கூட
உனக்குப் புனிதமென்றால்
எனக்கென்ன
இருந்து விட்டுப்போகட்டுமே!
குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல்
என் வாழ்வழித்து
புதிதுபுதிதாய் வரைகிறாயே
இதை என்னவென்பது?
முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும்
நாற்றத்தை மறைக்க
வாசனைத் திரவியம் பூசுவதும்
பூச்செண்டு தந்து முறுவலிப்பதும்கூட
இருந்து விட்டுப்போகட்டும்.
தெப்புள்கொடிப் பிறப்பும்
மரணவீட்டுப் பிணமும்
ஒருவேளை தீட்டாக இருக்கலாம்
உன் வீட்டுப் பூச்சாடியும்
நாய்க்குட்டியும்
உனக்குப் புனிதமென்றால்
என் பூர்வீகமும் நாமமும்
என்ன தூமைச் சீலையா?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வாழ்வுப் புத்தகத்தில் மரணத்தின் வரிகள்
சூன்ய வெளியில் அக்னி ஜுவாலை
காற்றின் தேசமெங்கும் காந்தல் வாசம்
வீட்டின் விட்டத்தில் விண்மீன்கள்
குழந்தையின் கைகளில் தவளும் வெண்ணிலா
யானைக் கூட்டத்தில் சிக்கி
பயந்தோடும் சிறுத்தை
வனத்தில் மீதமிருக்கும்
மான் இறைச்சியை ருசிக்க
வட்டமிடும் கழுகுகள்
பசியோடு அலையும் பிச்சைக்காரன்
நினைப்பான்
கடந்து செல்லும் எல்லோரும்
உணவருந்திவிட்டதாக
தேசாந்திரியாக திரிபவன்
கிழக்கு எதுவென்று தேடிக்கொண்டே
மேற்கு நோக்கி நடந்தான்
அந்தி நேரத்துச் சூரியன்
பொன்ணொளிப் பாய்ச்சியது
விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டதையுணர்த்த
மேஜையின் மீது விஷம் இருந்தது
போத்தல்களில் தண்ணீர்
நிரம்பியிருந்தது
விஷம் கசக்குமா, துவர்க்குமா
முன்பின் அருந்தியதில்லை
யார் மீது கோபம்
அவனுக்கு தன் மீது
தீராக் கோபம்
ஏமாற்றம், துரதிஷ்டம்
இவைகளால்
நிரம்பியது அவன் வாழ்க்கை
எதிர்கொண்ட செயல்களனைத்தும்
தோல்வியில் முடிந்தது
இந்த நிலையில் நீங்கள்
என்ன செய்வீர்கள்
அவனுக்கு இருக்கத்தான் ஆசை
ஆனால் நாளையே
வாழ்க்கையின் கோர முகத்தை
அவன் மீண்டுமொருமுறை
எதிர்கொள்ள நேர்ந்தால்
கையிலெடுத்தான் விஷ பாட்டிலை
விழுங்கிய வேளையில்
இன்றோடு அவனுக்கான உலகம்
அழிந்துவிட்டிருந்தது.
சுமார் நாற்பது வயது இருக்கலாம்
கல்யாணமானவர் போல் தான் தெரிகிறது
இருசக்கர வாகனமும் புதுசு தான்
இன்னும் பதிவு எண் கூட
வாங்கவில்லை
என்ன காரியமாய்
வீட்டிலிருந்து கிளம்பினாரோ
எப்பவும் போல் குழந்தைகள்
டாடா சொல்லியிருக்கும்
மனைவி கொடுத்த
மளிகை லிஸ்ட் கூட
பையில் இருந்திருக்கும்
கைபேசி அருகில் கிடந்தது
பேசிக் கொண்டே வாகனத்தை
அஜாக்கிரதையாக செலுத்தியிருக்கலாம்
டேங்கர் லாரி மோதி
தூக்கிவீசப்பட்டவுடன்
அவரது வாய்
தண்ணீர் தண்ணீர் என்று
முனகிக் கொண்டே இருந்தது
எனக்கும் சோடா வாங்கிக்
கொடுக்க விருப்பம் தான்
அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது
உயிர் உடலிலிருந்து பிரிந்துவிட்டிருந்தது.
ப.மதியழகன்,
115, வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி-614001,
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு.
cell:9597332952
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.