தீபாவளிக் கவிதை: வாடும் நிலை போயகல வந்து நிற்பாய் தீபாளி !

வண்ண வண்ண மத்தாப்பு
வகை வகையாய் பட்டாசு
எண்ண வெண்ண நாவூறும்
இனிப்பு நிறை பட்சணங்கள்
கண் எதிரே உறவினர்கள்
கல கலப்பைக் கொண்டுவர
மண்மகிழ மனம் மகிழ
மலர்ந்து வா தீபாவளி !


வண்ண வண்ண மத்தாப்பு
வகை வகையாய் பட்டாசு
எண்ண வெண்ண நாவூறும்
இனிப்பு நிறை பட்சணங்கள்
கண் எதிரே உறவினர்கள்
கல கலப்பைக் கொண்டுவர
மண்மகிழ மனம் மகிழ
மலர்ந்து வா தீபாவளி !
1. சுயநலம்
பிறந்தது முதலே ஒட்டிப்பிறந்ததாய்
அந்த அழுக்கு அரைப்பாண்ட்டை அணிந்திருக்கும் மனிதனுக்கு இருநூறுக்கு
மேல் வயதிருக்குமோ என்னவோ.
அந்த வயிறு இதற்குமேல் உள்ளொடுங்கியிருக்கவியலாது.
’பணம் வேண்டாம், டீ வாங்கித்தா’ என்ற குரல் வானத்தின்
எந்த உயரத்திலிருந்து என்னை வந்தடைந்தது?
நான் வாங்கித்தந்த முழுக்கோப்பை என்ற பெயரிலான காலே
அரைக்கோப்பை தண்ணித்தேனீர்
அந்த நடுங்கும் கைகளில் குலுங்கும் நெகிழிக்கோப்பையிலிருந்து
அந்த மனிதனின் உதடுகளுக்குள் நுழையும்
எத்தனத்தில்
என் கண்களில் நீராகிக் குத்துகிறது,
நிறையவே வலிக்கிறது…..
பிச்சையெடுக்கும் தாயுடன் நடந்துவரும் சிறுவன்
என்னைப் பொறுத்தருளட்டும்.
’அவனுடைய அவல எதிர்காலத்திற்கு நானும்தான் பொறுப்பேற்கவேண்டும்’
என்று திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டும் இந்த மனசாட்சியை எந்த
முதுமக்கட்தாழியிலடைத்து எங்குபுதைக்க?
பத்து குடும்பங்கள் மேஸ்திரியால் கைவிடப்பட்டு பட்டினி கிடப்பதாய்
பேரோலத்தை முணுமுணுப்பாய் வெளியிடும் அந்தத் தாயிடம்
முதலில் என்னிடமிருந்த நூறு ரூபாயைத் தருகிறேன்.
பின், மனசாட்சி வறுத்தெடுக்க ஒரு ஐந்நூறு ரூபாயைத் தருகிறேன்,
கூனிக்குறுகிக் கும்பிட்டு தளர்ந்த நடையுடன் அப்பால் செல்லும் அந்தச்
சகோதரியின் முதுகு என் கண்களிலிருந்து மறைய மறைய வேகமாய் என்
கால்கள் தன்னிச்சையாகப் பின்தொடர்ந்து செல்ல, எஞ்சியிருந்த இன்னொரு
ஐந்நூறு ரூபாய்த்தாளையும் அவர் கைகளில் தருகிறேன்,
பத்து குடும்பங்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்காவது போதுமானதாகட்டும்
என்ற பிரார்த்தனையோடு….

நன்றி ஒருவர்க்கு நாமியற்றிப் போகுங்கால்
அன்பில் இறுகும் அதுவுமொரு பண்பாமே !
சென்ற நிலையைச் சிதறவைத்தல் போலாகி
ஒன்றை இழத்தல் உறவில்லைக் காணீரோ !
என்றும் இனிமை இதயமொடு நேசித்தல்
மன்றில் இதுவே மகத்துவமே தானாகும் !
தன்னை நிகர்த்த தரத்தினொடு ஒப்பிட்;டுக்
கன்னைக் கெனவே கணக்கிடுதல் வேண்டாமே !

1. வாழ்த்தும் மனமே வாழும் !
இறைத்த கிணறு ஊறும்
இறையாக் கிணறு நாறும்
செமித்த உணவு சிறக்கும்
செமியா உணவு நொதிக்கும்
நடக்கும் கால்கள் வலுக்கும்
நடவா கால்கள் முடக்கும்
படிக்கும் காலம் சிறக்கும்
படியாக் காலம் இழக்கும் !

ஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது
பாலுவே நீயும் பாட வருவாயா
தாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு
நீயெழுந்து வாராயோ நெஞ்சலாம் அழுகிறதே !
மூச்சுவிடா பாடியே சாதனையைக் காட்டினாய்
மூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே
காற்றுக்கூட கலங்கியே அழுகிறதே பாலுவே
கட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது !

தன்னைப் புகழ்ந்தாலே தாம்முன்னே யாகுவராம்
என்னைப் புகழ்ந்தீரே *ஏமுறவே – சொன்னவண்ணம்
எண்ணித் தமிழ்நூலின் ஏர்க்காலில் நான்பிடித்த
வண்ணம் இதுவே வனம் !
எல்லைக் கவிக்கடலே இப்பார் திலகமெனச்
சொல்லால் எனக்குரைத்த செந்தமிழீர் – முல்லையென
முத்தன்ன பட்டுடுத்தி மெல்லச் சிரிப்பெழுதி
வித்தென்று நன்றுரைத்தீர் மேவி !

தீங்காற்றுப் பொன்வண்டே சிறகு எங்கே
தென்னாட்டுப் பூந்தமிழின் தெப்பம் எங்கே
பூங்காட்டுக் குயிலதுதான் பெயர்ந்து போச்சோ
புறமுதுகு பாடாதான் பிரிந்து போச்சோ
ரீங்காரத் தேன்வண்டு திரும்பிற் றாமோ
தென்றல்வான் வருங்கீதம் தீர்ந்த தாமோ
தாங்காது துடிக்கின்றோம் தமிழின் ஆறே
தங்கமகன் போனதெங்கே தவிக்கின் றோமே!

கார்மேகம் கம்பன் என்கக்
கட்டியம் கூறி மண்ணில்;
ஓர்கவி உண்டோ இல்லை
ஒடிசியும் ஷெல்லி இன்னும்
பார்கவி சேக்ஸ்பி யர்க்கும்
படைத்ததோர் ராமா யணத்தின்
நேர்கவி யோடு வைத்து
நிறுத்திட முடியா தையா !

எனக்கு பிடித்த என்
இள அழகு முகம்
முகச்சவரம் செய்ய செய்ய
எனக்கே பிடிக்காமல்
நானாகவும் இல்லாமல்
என் சாயலிலுமில்லாமல்
ஒரே மாதிரி இருக்கும்
ஏழுபேரிலும் அடங்காமல்
எவனோ ஒருவன்
என்னுடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்ததுபோல் ஒரு
அன்னிய ரேகை
ஓடுவதையறிகிறேன்

தானியம் தூவும்
வேடனின் கைகள்
வலை விரிக்கும்
ஆற்றில் மூழ்கியபடி
அடையாளத்தை இழக்கிறது
உடைந்த பாலம்
பிஞ்சுக் கரங்களின்
தொடுதலின்றி வாடுகின்றன
உடைந்த பொம்மைகள்

ஆதிக்க சதிவலையின்
முருக்குநூலில் சிக்கி
எத்தனை உயிர்கள் பலியாகுமோ?!
நீட் எமனால்..
கேட்டுக்கு வெளியே நிறுத்தும்
நீட் தேர்வை சாமானியர்கள்
எத்தனைமுறை எழுதினாலும்
வாழ்க்கையில் தேரமுடிவதில்லை.

அரக்க பறக்க ஓடும்
உலோகாய யுகத்தில்
பாலைவன ஓடையில் தூண்டிலுடன்
மீனுக்காக காத்திருப்பவன் போல்
ஓய்வுக்கான நேரத்தை கைப்பற்ற
காத்துக் கிடக்கும் மனிதனுக்கு
இடி மின்னல் இன்றி
மடைதிறவா வந்த
lockdown காட்டாறு வெள்ளத்துள்
மூழ்கி திக்குமுக்காடுகிறான்.
![]()
அனுமதியில்லாமல் வீட்டின் வரவேற்பறையில்
வந்தமர்ந்த குருவி ஒன்று,
உற்று நோக்கலில் மனிதனின் ஆதிகுரூரம் தொடங்கி
அத்தனையும் அதன் கண்களில்,
உணவிட்டு உறவைப் பேணலாமென்று
எண்ணிய எண்ணத்தில் உண்மையில்லை,
கவட்டையோடு அலைந்த காலத்தில்
என் கல்லிற்கு அடிபட்டு உணவான
குருவியின் நினைவொன்று
தீய கனவாக வந்து சென்றது.

சொந்த வீட்டுக் கதை
"உங்க அப்பாருக்கிட்ட மூனு வீடு இருந்துது
அதுல ஒன்னு என் பேர்ல எழுதி வச்சிருந்தாரு
உங்க அத்தைய கட்டிக்கொடுக்க ஒன்னு
தொழில்ல நஷ்டம்னு ஒன்னு
பஞ்சம் பொழைக்க இந்த ஊருக்கே வந்துட
முடிவெடுத்ததால
கடைசியா என் பேர்ல இருந்த வீடுன்னு
மூனுத்தயும் வித்துட்டாரு
இப்ப அந்த இடமெல்லாம்
லட்சக்கணக்குல போகுதாம்
பாசமா பழகிய மூனாவது வீட்டு பத்மினியம்மா
பழகனத மறந்து
வாடகைவீட்டுக்காரி அவ என்று
தன் புருஷனிடம் காதில் முணுமுணுத்தபடி
பத்திரிகை வைக்காமல் அடுத்த வீட்டுக்கு
தாண்டிக்காலிட்ட வாதையில்
தூங்கிக்கொண்டிருக்கும் நாளாவதாக பிறந்த ஒருவயது குழந்தை என்னிடம்
விசனப்பட்டுக்கொண்டிருந்த
வழக்கமான அதே சொந்த வீட்டுக்கதைதான் என்றாலும்
இப்போது கண்ணீர் வராமல்
சொல்லப்பழகியிருந்தாள் அம்மா
என் மகளிடம்."

மாநகர் துஞ்சும் நள்ளிரவில்
வெளியே வந்தேன்.
நுண்கிருமியின் தாக்கம்.
சுருண்டு கிடந்தது மாநகர்
உந்துருளியில் நகர்வலம்
வந்தாலென்ன? வந்தேன்.
வாகனவெள்ளம் பாயும் நதிகள்
வற்றாதவை வற்றிக்கிடந்தன.
கட்டடக்காட்டில் இருள்
கவிந்து கிடந்தது.
நிசப்தம் நிலவியது நகரெங்கும்.

முண்டாசுக் கவியே!
முத்தமிழின் சுவையே!
முத்தாப்பாய் உன்னைப்பாட
முடியவில்லை என்னால்
மூச்சறுக்கும் முகமூடி
முனகுகிறேன் மனம்வாடி
பொய்மையின் புகலிடமோ
புண்ணிய தேசமிங்கு

அன்பே...
சுடர் தரும் சூரியனும் சுகமாய் துயிலிட
அலைகொண்ட மனம் மட்டும் இடைவிடா ஒலித்திட
நீ நான் நாம் மட்டும் காதல் சிறையில் கைதானோம்
ஓர் இரவில்....
உன் முகம் பார்த்து வெட்கிப்போனேன்..
ஆயிரம் ஒளி தீபம் எற்றிய வெளிச்சம் கண்டேன்
கண்கூசீப் போனேன்...
உன் குற்றமற்ற அன்பில் குறுகிப்போனேன்...
குயிலாகிப் போனேன் -உன் பெயரை மட்டும்
கூவும் குயிலாகி போனேன்....

இயல்புநிலை மாறியது
செயற்கையதில் ஏறியது
மனமதிலே நவநினைப்பு
குடியேற்றம் ஆகியது
மனிதரது நடவடிக்கை
இயற்கைக் கெதிராகியது
வாழ்வினிலே பலதுன்பம்
வந்தபடி இருக்கிறது !
நாகரிக மெனும்மாயை
நாளுமே மறைப்பதனால்
ஆகாயம் பூமியெலாம்
அடிமையென எண்ணிவிட்டார்
வேண்டாத பலவற்றை
விரும்பியே நாடியதால்
வேதனையின் பிடியினிலே
மாளுகிறார் மனிதரிப்போ !
விஞ்ஞானம் கண்டறிந்தார்
விந்தைகளும் விளைந்தனவே
மேலுலகை கீழுலகை
விட்டுமவர் வைக்கவில்லை
உடல்பிரித்தார் உருக்கொடுத்தார்
உணர்வுதனை அழித்திட்டார்
மனிதரிப்போ உலகினிலே
அமைதியற்றே உலவுகிறார் !

பாளையின் சிரிப்புச் சிந்தும்
பாற்கடற் சிரிப்பா கட்டும்
வாழையின் இலையைப் போலும்
வாழ்க்கையே அழகா கட்டும்
காளையின் வலிமை போலும்
கற்பனை வசமா கட்டும்
நாளைய பொழுதே வெல்லும்
நற்தமிழ்ப் பொழுதே வாழ்க !

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர் களே
கூடிப்பனங் கட்டி கூழும் குடிக்கலாம்
கொழுக் கட்டை தின்னலாம் தோழர்களே
எனக்களிப்போடு கூடி நின்று மகிழ்ந்தோமே
கொழுக் கட்டை அவிப்பாரும் இல்லை
கூழ்தன்னை நினைப் பாரும் இல்லை
அக்கால மிப்போ அடிமனதில் எழுகிறதே !
படித்தோம் படித்தோம் பட்டமும் பெற்றோம்
நாகரிக மெம்மை நன்றாகக் கெளவியது
நம்முடைய நற்பழக்கம் நாடோடி யாகியது
அன்னியரின் வாழ்க்கை யெமை அபகரிக்கலாயிற்று
வருடமெலாம் வளமாக்க வந்தமைந்த வெல்லாம்
வரலாற்றில் மட்டுமே பதிவாக வாயிருக்கு
அடிவேரும் இப்போது வலிவிழக்க லாயிற்று
நினைவழியா நாட்கள்தான் நிற்கிறதே யிப்போது !

வாழ்க்கை… வாழ….
முயற்சி என்னும் சுவாசம் வேண்டும்
வாழ்க்கை பெரும் கதை… அது
மண்ணில் புதைந்த விதை
மெல்ல காற்று உன்னை கைதூக்கும்
சூரியன் நித்தம் புதுப்பிக்கும்
சிறு நம்பிக்கை என்னும் இலை
உன்னில் துளிர் விடும்.

அறம்பொருள் இன்பம் வீடு
அகத்தொடும் வாழ்வுங் கூடல்
சிறந்திடும் காதற் பூக்கள்
சிந்திடும் மழலைத் தொட்டில்
நிறைந்திடும் உலக முற்றும்
நீந்துதல் அமுத மாகும் !
மறந்திடும் துன்ப வாழ்வே
மானிடம் வகுப்ப தாமே !
எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினம் ஜூன 27!

தமிழினை முதலாய்க் கொண்டு
தரணியைப் பார்க்க வைத்த
உரமுடை டொமினிக் ஜீவா
உவப்புடன் என்றும் வாழ்க
அளவிலா ஆசை கொண்டு
அனைவரும் விரும்பும் வண்ணம்
தெளிவுடன் எழுத்தை ஆண்ட
தீரனே வாழ்க வாழ்க !
சொல்லிலே சுவையை ஏற்றி
சுந்தரத் தமிழைக் கொண்டு
மல்லிகை இதழைத் தந்த
மாதவன் ஜீவா வாழ்க
தொல்லைகள் பலவும் கண்டும்
துவண்டு நீ இருந்திடாமல்
மல்லிகை இதழை நாளும்
மலர்ந்திடச் செய்தாய் நன்றாய் !

- வாய்ப்பாடு: இரண்டு விளம் சக ஒருகாய் -
மானிடம் தேனகம் வளம்பெருக
வையகம் வானகம் மறைபெருக
ஞானமும் மந்திரம் நறைபெருக
நற்றமிழ் புத்தகம் நலம்பெருக
பானிதம் பூத்திடும் பரம்பெருக
பைஞ்;ஞிலம் பஞ்சமில் லாதுயர
கானிடும் மாமழைக் கார்பெருக
கனடியப் பொன்மகள் பிறந்தனளே!

1-செப்பும்; பூமி சிறந்ததுவே
(அறுசீர் விருத்தம்-4 விளம் சக 2 தேமா சக ஒருகாய்)
நீதியின் பாலொரு நித்தியத் துள்வரும்
நேர்மைத் தேர்தல் ஈதுஎன்றார்
ஆதியில் இருந்துமே ஆகிடும்; கலவரம்
அற்றம் ஆக்கும் சரித்திரமே
சாதியாய் வெந்;திடும் சருகென வானதோர்
சாக்கும் போக்கும் சாற்றிவிடப்
பாதியாய் ஆனது பதைக்கவெ ரிந்தது
பற்றும் வாழ்க்கை போனதுவே!