கணேஷின் கவிச்சரம்!
காலம் கீறும் கோலம்இங்கு எல்லாமே காலம் போடும்
கோலம் தான்.
உலகத்தை நீ இயக்குவதாய்
உணர்ந்தால் அது இளமை துள்ளும்
காலம்.
எல்லாத் திசைகளிலும் சுத்தி
வருவாய் .
உலகம் இயங்கிறது நீயும்
இயங்குவதாய் உணர்ந்தால் -அது
நடுநிலைக் காலம் ,
திசையை தேர்வு
செய்து போய் வருவாய் .
உலகம் உன்னை விட்டு
இயங்குவதாய்
உணார்ந்தால் முதுமை முடக்கும்
காலம்
அறைகளுக்கு
அடைப்பட்டுக் கிடப்பாய்
அவஸ்தைகளும்
ஆனந்தங்களையும்
அசை போட்டபடியே !