கவிதை: சண்டைக்கு அழைக்கும் சமாதானத் தூதுவர்கள்

கையில் கிடைத்த கற்கள் சில;
கவனமாய் கூர்தீட்டிவைத்துக்கொண்ட கற்கள் சில;
உடைந்த கண்ணாடிச்சில்லுகள்,
காலாவதியாகிவிட்ட அம்மிக்குழவிகள்,
அறுந்த சங்கிலிகள்
அம்புகள் விஷம்தோய்ந்த முனைகளோடு....
அத்தனையும் சொற்களாய்
உருமாறி வெளியே தெறிக்கும் வேகத்தில்
அப்பாவி மண்டை பிளந்து
ரத்தம் பெருக்கெடுக்க,
அநியாயமா யொருவரின் விழி சிதைய,
அவனை மனைவி பறிகொடுக்க
இவளைக் கணவன் இழந்தழிய,
கொள்ளைபோகும் மனிதநேயம்.


1. இருப்பில் இல்லாத கடன்.





’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”
சாவே வாழ்வான போதினிலும் 















பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









