கண்ணம்மா (மலேசியா) கவிதைகள் -

1. உறவுமலர்!
ஒவ்வோர் உறவும்
பூந்தோட்டத்தில் பூத்த
விதவிதமலர்கள் போலும்.
அவ்வளவும் அற்புத
அழகு.


1. உறவுமலர்!
ஒவ்வோர் உறவும்
பூந்தோட்டத்தில் பூத்த
விதவிதமலர்கள் போலும்.
அவ்வளவும் அற்புத
அழகு.
1. அனாதையாகி விடுவேன்......
நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ....
அப்படியில்லை இதுதான்.....
உண்மை காதலின் ......
அடையாளம்....!!!
வாழ்க்கையில் ....
எல்லாம் இழந்துவிட்டேன்.....
உன் நினைவையும் இழந்தால்......
அனாதையாகி விடுவேன்......
1. அஞ்சலி: அனலில் நடந்தாள்…(மறைந்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா நினைவாக)
அனலில் நடந்த அங்கயற்கண்ணியவள்
அகண்ட அறிவு, அழகுடையாள்.
அதிகார ஆட்சியில் அமர்ந்தாள்
இதிகாசமானாள் சந்தனப் பேழையுள்.
திருமதி ஆகாமலே ஜெயலலிதா
பெறுமதி அம்மாவென ஆகியவள்.
வருமதியாம் பாத வணக்கத்தால்
சிறுமதியோவெனும் இகழ்வைப் பெற்றாள்.
மாளிகைச் செல்வியிறுதி நகர்வு
மாபெரும் மக்கள் திரளோடு.
மாதுரியமான மொழி அறிவோடு
மாணிக்கப் பரலானாள் இந்தியாவிற்கு.
வறியோருக்கு இரங்கி உதவினாள்.
செறிவான புகழும் பெற்றாள்.
குறியான போராளி அவள்.
அறிவாய் உன்னையெவரும் மறக்கார்.
1. மழுங்கிய முனைகள்
அது ஏனோ தெரியவில்லை
உண்மையான அறிவையும் உயர்வான உழைப்பையும்
உப்பளமாய் மண்டியுள்ள செல்வாதிகாரச்செல்வாக்குகளின் முன்
மண்டியிட்டுக் குழையத் தெரியாத ஆளுமையையும்
கண்டாலே
உதறலெடுக்க ஆரம்பித்துவிடுகிறது சிலருக்கு….
உளறத் தொடங்குவதோடு நில்லாமல்
உருட்டுக்கட்டைகளையும் தூக்கிக்கொண்டு துரத்திவருகிறார்கள்.
ஊரும் பேரும் சீரும் சிறப்பும்
யாருடைய பரம்பரைச் சொத்தும் அல்ல.
வெள்ளத்தால் போகாது வெந்தணலில் வேகாது என்று
பன்னிப்பன்னிச் சொன்னாலும்
புரிந்துகொள்ளவியலாப் பேதைகள்
போதாததற்கு பதவுரை பொழிப்புரையெல்லாம்
தயாரிக்கத்தொடங்கிவிடுகிறார்கள்.
‘எதற்கு?” என்ற கேள்வி சிலரால்
‘எவ்வெவற்றுக்கு?’ என்று உள்வாங்கப்பட,
சிலரால் ‘என்ன கருமாந்திரத்துக்கு’ என்று கொள்ளப்படலாம்.
கவிதைக்குத் திறந்த முனை யிருக்கலாம் – எனில்
தவறைத் தவறெனச் சொல்வதிலும் சொல்லாதிருப்பதிலும்
சரிவருமோ, செய்யத் தகுமோ அது?
தேர்ந்தெடுத்த மீட்பரும் மீட்கும்
தொழில் நம்முடையதென மறந்து போனார்.
எந்திர எச்சில் பெற
எறும்புகள் வரிசையில் நகர்கின்றன.
எச்சிலை வாங்கியபடி வியர்வையைத் துடைத்தபடி
எறும்புகள் வீட்டுக்கு திரும்புகின்றன நிம்மதியாக.
தடாலடியாக தேசம் இமாலயத்தைக் கத்தியென சுருட்டித்
தன்னைத்தானே கழுத்தறுத்துக் கொண்டது.
தவறி விழுந்த தலையில் பறக்கும்
சின்ன மலைத் தொடர்கள் இரத்தத்தில் நனைகின்றன.
ஒரு முதலாளி நீதிமன்றத்தை நொறுக்கி வீசி விளையாடுகிறார்
மீட்பர் பாராட்டிப் பிழைத்திருந்தார்.
துண்டுதுண்டாய் தேசத்தை எடுத்து பெட்டியில்
மூடி வைத்துக் கொள்கிறார்கள் முதலாளிகள்.
அண்டை தேசத்தில் மீட்பருக்கு ஒரு சிலை வான் தொடுகிறது
மீட்பர் பிணந்தின்னி கழுகுகள் மீதேறியபடி அண்டை தேசமெங்கும்
சுற்றி திரிந்து முதலாளிகளின் கையொப்பங்களை வேட்டையாடுகிறார்.
வீட்டிலிருந்த எறும்புகள் உரிமைக்காக விடுதலையைப் பரிமாறிக் கொள்கின்றன.
புரட்சியென்றவுடன் எறும்புகள் தம் வயிறு குலுங்க நகைக்கின்றன.
எதிர்ப்பின் மியுசியம் மூங்கில் மரம் போல் துரித பிரம்மாண்டம் கொள்கிறது
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
1. வீதியின் நீதி
ஆயுதங்கள் நிறைத்து
தெருக்களை ஆட்சி செய்த காலங்களில்
வீதிகளில் கொல்லப்படுவதற்கு
ஆட்கள் இல்லாது போனது
குறையாகவே இருந்தது.
போரை அழித்த
சமாதானப் புறாக்கள்
புதைகுழிகள் மேல் மண்சோறு உண்டு
வீதிகளை புனிதப் படுத்தின.
சாதாரணனுக்கு
இனிப்பும் சல்யூட்டும் வழங்கி
முகஸ்துதி செய்தன.
நம்பி நிறைந்தன வீதிகள்.
தூதர்களை பூட்டி வைத்து
அலுகோசுகளை திறந்து வைத்தனர்.
தன்னியங்கி இயந்திரங்கள்
சாதாரணனனின் இதயத்துக்கு
துப்பாக்கி ரவைகள் பரிசாக வழங்கி
வாழ்ந்ததற்கு
வழக்குகள் பதிய வைக்கின்றன.
-
புகழ்பெற்ற சிங்களப் பாடகரும் இசைக்கலைஞருமான பண்டிதர் டபிள்யூ.டி. அமரதேவா அண்மையில் காலமானார். அவரது நினைவாக தேசபாரதியின் இக்கவிதை பிரசுரமாகின்றது. -
அமரதேவ!
ஒரு கவிஞன் காவியம் படைத்தான்!
சூரியக் கதிர்களால்
எழுதப்பெற்றது இந்தத்
தூரனின் பயணம்!
அவன்தான்...!
வன்னகுவத்த வடுகே
டொன் அல்பேர்ட் பெரேரா!
1. வாய்க்கும் நல்ல தீபாவளி


இருளகற்றி ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி
மருளகற்றி மனம்மகிழ வருமெமக்கு தீபாவளி
நிறைவான மனதுவர உதவிடட்டும் தீபாவளி
நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி !
புலனெல்லாம் தூய்மைபெற
புத்துணர்வு பொங்கிவர
அலைபாயும் எண்ணமெலாம்
நிலையாக நின்றுவிட
மனமெங்கும் மகிழ்ச்சியது
மத்தாப்பாய் மலர்ந்துவிட
வாசல்நின்று பார்க்கின்றோம்
வந்திடுவாய் தீபாவளி !
பட்டாசு வெடித்திடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம்
தித்திக்கும் பட்சணங்கள் அத்தனையும் செய்திடுவோம்
கஷ்டமான அத்தனையும் கழன்றோட வெண்டுமென்று
இஷ்டமுடன் யாவருமே இறைவனிடம் இறைஞ்சிநிற்போம் !
தீபாவளித் தினத்தில் தீயவற்றைக் தீயிடுவோம்
தீபாவளித் தினத்தில் திருப்பங்கள் வரநினைப்போம்
தீபாவளித் தினத்தில் சினம்சேரல் தவிர்த்திடுவோம்
தீபாவளி எமக்குச் சிறந்ததெல்லாம் தந்திடட்டும் !
1. தாந்தேவின் நரகத்தில் நான்
அப்போது வலியின் ஒளியொலிக்கீற்றுகள் நிறப்பிரிகை கண்டு
வானவில்லாகக் கதறல்களை அம்பாகத் தொடுத்து கொண்டிருந்தது எனக்குள்
தாந்தேவின் நரகத்திற்குள் பிணங்களை அரைத்து பொடியாக்கி
காலைக் காபியில் கலந்து அருந்துபவனை நான் சந்தித்தேன்
ரகசியங்களை கேட்கப் பல ஜோடிக் காதுகள்
ஊசியில் கோர்க்கப்பட்டு அவன் அலமாரியில் இருந்தன
நீயொரு பெண்ணாய் இருந்தாய்
நான் உன் ரகசியங்களை என்னுள்
ரகசியப்படுத்தி கொண்டிருந்தேன்
என் மூளையின் சதைமடிப்புகளுக்குள்
என்றொரு உரையாடல் கேட்கிறது நீ தானா அது என்கிறான்
என் முகத்தை கழற்றி எறிகையில்
தற்கொலையின் வாசனையைப் பின்பற்றி
என்னை உண்ணக் காத்திருந்தவர்கள் வந்திருந்தார்கள்
ஒப்பந்தத்திற்க்ச் சம்மதிக்கிறேன் என மொழிந்தேன்
என் தலையை அவர்களும் என் உடலை அவனும் உண்ணும்போது
தற்கொலையின் சீழ் காற்றில் பரவி காலத்தின் யோனிக்குள்
விந்தென கறுப்பு ரத்தம் பாய்கிறது
கூடவே எனக்காக சிரிக்கிறது
என் சொல்லும் என் முள்ளும் கடைசியாக
என் குடல்களை என் எலும்பால் உருவாக்கிய யாழில் நாணென போட்டு
என் நுரையீரல் அதிர இசைப்பார்கள்
என் பிறப்புறுப்புகளை புல்லாங்குழலென உருவாக்கி இசைப்பார்கள்
என் தோலை மிருதங்கத்தில் பொருத்தி இசைப்பார்கள்
என் மூளையின் சதைமடிப்புகளை விரித்து அதன்மேல் சயனம் கொள்வார்கள்
என்றெல்லாம் நினைத்து மகிழ்வுடன் உருவாகிறேன்
இல்லாமல் இருப்பவனாய்
அப்போது மரணத்தின் வானவில் தலைகீழாக மாறியிருந்தது என்னைத் தொடுத்தபடி
(நரகங்களின் வரைபடங்களை வைத்திருக்கும் தாந்தேவுக்கு )

தீபத் திரு நாளில்
தீயைப் போல் நிமிர்ந்து நிற்போம்.......
தீய எண்ணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய செயல்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய குணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீயவை அனைத்துக்கும் தீயை மூட்டுவோம்.
தீண்டாமைக்கும் தீயூட்டுவோம்.
தீபாவளி அன்று
தீனி இல்லாதோருக்குத்
தீனி இடுவோம்.
தீபத்தை ஏற்றும்போது
ஒளிரட்டும் அகம்.
இனிமையான
இன்பமான
இனிய தீபாவளி வாழ்த்துகள்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
1. தீக்குச்சிகளின் நடனம்.
மேற்கில் விதை தூவி
மத்திய கிழக்கில் உரம் போட்டு
வடக்கில் நீருற்றி
தெற்கில் அறுவடை செய்த
கழிவுப் பொருட்களை
பரவி கடை விரிக்க
காணி நிலம் வேண்டும்.
போரை ஒழித்த துண்டு நிலத்தில்
ஒரு பாரிய
சிலுவை யுத்தத்திற்கு காத்திரு.
இரத்தம் ஊறும் கிணறுகள்
இன்னமும் தூர்ந்து போகவில்லை.
கண்ணையும் காதையும் இழந்த பின்
மீதமாக இருப்பது
உனது மூச்சுக்கு காற்று மட்டும் தான்
என்பதையும் மறந்து விடு.
அந்த வெண்நீல நகரம் ஓவியவர்களுடையது
அங்குள்ள அனைவரும் கண்டதை புறக்கணித்து கண்டது மறைப்பதை தீட்டுபவர்கள்
இதனால் என்னவோ அவர்களுக்கும் அவர்கள் காணும் வஸ்துகளுக்கும் தீராத போர்
நிறக்கொலைகள், நிறப்படுகொலை, நிறவீக்கம், நிறப்பற்றாக்குறை என
நகரமே எப்போதும் பரபரப்போடு இருக்கும்
துப்பாக்கி குண்டுகள் விரையும் போது முத்தமிடும் காட்சியையும்
முத்தமிடும் போது ஆண்குறிகள் வெட்டுபடும் காட்சியையும் அவர்கள் தீட்டுவார்கள்
அந்த நகரத்தில் பெரேட் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவன்
பகலின் இரத்தத்தை கோப்பையில் ஊற்றி குடிப்பவன் பெரேட்
அவன் தான் அந்த நகரத்தை கேன்வாஸில் உருவாக்கினான்
ஒருகணம் அவன் யோசித்திருக்ககூடும் பெரேட் ஆகிய நான் இருப்பது ஓவியத்திற்குள்ளா
நீலப்பெண் பனிக்கால நாய் போல மஞ்சள் ஆணுடன் பிணைவதை அவன் தீட்டியிருக்கிறான்
சிவப்பு நிற பெருங்கடலின் மீது ஊறும் எறும்புக்கப்பலில்
அந்த எறும்புக் கப்பலில் இருக்கும் நீலப்பெண்னின் உதடுகளில்
புரோட்டான் நியுட்ரான் மேற்கொண்ட காதலை தீட்டியிருக்கிறான்
அந்த நியுட்ரானின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை பற்றித் துல்லியமாக தீட்டியிருக்கிறான்
எங்கோ அட்ரீனல் கற்பூரம் கொழுந்துவிட்டு எரிகிறது
காட்டுத்தீயைப் போல கற்பனையை வாளியில் அள்ளி அணைக்க முயற்சிக்கிறார்கள்
அது பெரேடின் வீடு தான்
ஓவியத்திற்குள் இருக்கிறது கற்பனையின் கனவுகளின் கையொப்பங்கள் பல
வெளியே என்ன இருக்கிறது என கேட்டால் பெரேட் சொல்லுவான்
ஒன்றுமே இல்லை என இரவின் மார்புகளில் தலையை புதைத்துக்கொண்டே
(சால்வடார் டாலிக்கு )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

--தனது மனைவியின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எழுத்தாளர் தீவகம் இராசலிங்கம் எழுதிய உரைநடைச்சித்திரம். -
மருமகள் அல்ல... மகள்!
எனக்காக வாழவேண்டும் என்ற
எந்தப் பிரார்த்தனையும்
இல்லாது நின்ற எனது கணப்பொழுதுகளில்
நானும் அவளும் இணைபிரியாதவர்களாக...!
இன்று...அவளுக்கு அகவை அறுபத்தியெட்டு!
கடந்த ஆவணி 31இல், திருமணநாள் நாற்பத்தியெட்டு!
எனக்கான கடமைகள் எதுவோ?
அவற்றை அவள்...
தனக்கானதாக எடுத்துக் கொண்டவைதான்
இன்றைய பொழுதின் எனது வெற்றிகள்!
1. மண்ணாந்தை மன்னர்கள்'
யாரோ கையில் கோலைக் கொடுத்துவிட்டு
காலணாக் கிரீடத்தையும் சூட்டிவிட்டார்கள்.
கேட்கவேண்டுமா கர்வத்துக்கு?
ஆசானாகத் தன்னைக் கற்பிதம் செய்துகொண்டுவிட்ட மண்ணாந்தையொன்று
பேசலாகாப் பேச்செல்லாம் பேசிமுடித்து
நீசத்தின் உச்சத்தில் நின்றபடி
கெக்கலித்துக்கொண்டிருந்தது.
கொக்கரக்கோவென்று கூவியா
பொழுது விடிகிறது?
கடி துடி அடி மடி
படி இடி குடி முடி
யொவ்வொன்றுக்கும் உன் அகராதியில்
அதிகபட்சம் பத்து அர்த்தங்களென்றால்
அவர் அகராதியில் நூறுபோல்…
இவர் அகராதியில் ஆயிரத்திற்கு மேல்!
கவிதையின் அரிச்சுவடி தெரிந்திருந்தால்
கவியின் மனப்பிறழ்வுக்காய் முதலைக்கண்ணீர்
வடித்திருக்க மாட்டாய்.
கவிதையெழுதும்போதெல்லாம் கவிஞர் காதலனாய்
கிறுக்கனாய்
மாறுவது உனக்குத் தெரியுமா?
- பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய பதிவுகள் இணைய இதழாளர்களுக்கு எனது இனிய வணக்கங்களும் வாழ்த்துகளும் .....தமிழ்நாட்டின் மாவட்டங்களுள் ஒன்றான நீலகிரியில் வசிப்பவன் நான். எங்களது குடும்பத்தார் இலங்கையின் மலையகத்தில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் ......அதன் நினைவாக இந்தக் கவிதை..... -
களிமண்ணால் சுவரேற்றி
கல்மூங்கிலால் கூரை அமைத்து
செம்மண் ஓடால்
கூரை வேய்ந்தது
எங்கள் வீடு .....
கடுங்குளிர் கனமழை
சுடுவெயில் அடர்பனியிலிருந்து
பாதுகாத்தது
எங்கள் வீடு ....
ஆந்தை அலற நரி ஊளையிட
யானை பிளிறி நிற்க புலியோ உறும
கரடியின் கத்தலில் இருந்தும்
முப்பதாண்டுகள் முழுமையாய் காத்த வீட்டை
முற்றாக மறந்து
கான்கிரீட் வீட்டுக்கு காலடிவைத்த போதும்
கலங்காமல்
வாழ்த்தி வழியனுப்பியது
எங்கள் வீடு .....

எதோ ஒரு பயங்கரக் கனவு.
வாய்விட்டுக் கத்த
முயற்சிப்பதும் ,
முடியாமல்
திணறுவதும் புரிகிறது.
ஆனாலும்
எதுவுமே செய்ய முடியாத
இயலாமை.
பக்கத்தில்
அன்புக் கணவர்
அணைத்துக் கொள்ள,
குழந்தையானேன்.
கடுமையாய்
உழைத்து வீடு திரும்பும் முன்
உணவு தயார் செய்கையில் ,
தாயானேன்.'
இன்று கவிஞர் திருமாவளவனின் நினைவு தினம். அவரது நினைவாக அவரது கவிதைகளிலொன்றான 'தமிழ்க்கனேடியனும் நானும்' என்னும் கவிதையினை இங்கு எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.- ப்திவுகள் -
இருப்பு நிரந்தரமானதல்ல. இருக்கும் மட்டும் பலர் இதனை உணர்வதில்லை. மனிதர் உருவாக்கிய அமைப்பானது பொருளுக்கு முதலிடம் தருகிறது. அதுதான் இருப்பின் பயன் என்பதாக இருப்பினைச் சித்திரிக்கிறது. விளைவு? பொருள் தேடுவதே வாழ்க்கையாகப் பலருக்குப் போய் விடுகிறது. அதிலும் பொருள்மயமான மேற்குலகு நாடுகளின் சமுதாய அமைப்பு மானுட இருப்பினை அந்த அமைப்பின் சிறைக்கைதியாகவே ஆக்கி விடுகிறது. உழைப்பது இருப்புக்கு என்பதாக மாறி விட்டது. அவ்விதம் இருக்க விரும்புவோர், அதுதான் இருப்பின் நோக்கம் என்போர், அதுவே இருப்பின் பயன் என்போர் அவ்விதமே இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்தம் உரிமை. ஆனால் உண்மைக்கலைஞர்கள், இலக்கியவாதிகள் இருப்பினை இவ்விதம் எண்ணுவதில்லை. இவர்களை பொருள்மயமான இருப்பு என்றுமே சிறைப்பிடிப்பதில்லை. இந்த இருப்பினை இவர்கள் தம் இருப்புக்கேற்றபடி மாற்றிவிடுவதில் வல்லவர்கள்.
இவர்களைச்சுற்றி இருப்பவர்களுக்கு இவர்களைப்பார்த்தால் பரிதாபம். இவர்களைப்பார்க்குபோதெல்லாம் 'இந்தக் கலை, இலக்கியமெல்லாம் சோறு போடுமா? இவற்றால் எவ்வளவு உழைக்கிறாய்?' என்பதாகவே அவர்களது கேள்விகள், அனுதாபங்கள் மற்றும் ஆலோசனைகளெல்லாமிருக்கும்.
எனக்குத்தெரிந்த பலர் இங்கு வந்து பொருளியல்ரீதியில் உயர்ந்து தொழிலதிபர்களாக விளங்குகின்றார்கள். இன்னும் பலர் சொத்துகளைச்சேர்ப்பதிலேயே குறியாகவிருக்கிறார்கள். அவ்விதமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியினைத்தருகிறது. மகிழ்ச்சி! ஆனால் அவ்விதம்தான் எல்லாரும் இருப்பார்களென்று அவர்களெண்ணுவதுதான் நகைப்புக்கிடமானது.
மிகுந்த வேடிக்கை என்னவென்றால் தாம் உண்மையான கலை, இலக்கியவாதிகளாகத்தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும்பலர் கூடத்தம் சொந்த வாழ்வில் இவ்விதம்தானிருக்கின்றார்கள். இவ்விதமான நகல் கலை, இலக்கியவாதிகள் அசல் கலை, இலக்கியவாதிகளைச்சந்திக்கும்போது கலை, இலக்கியம் பற்றி உரையாடுவதில்லை. பொருள் பெருக்குவது பற்றியதாகவே அவர்களும் உரையாடலைத்தொடங்குவார்கள்.
இவர்களில் பலர் என்னைச்சந்திக்கும்போதும் 'பதிவுகள்' இணைய இதழைப்பற்றி ஆர்வமாகக் கேட்பார்கள். அப்படி என்ன ஆர்வமாகக் கேட்கின்றார்கள் என்கின்றீர்களா? அவர்களது கேள்வி இதுதான்: "பதிவுகள் நடத்துவதால் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது?"
இந்நிலையினை வெளிப்படுத்தும் வகையில் அமரர் திருமாவளவன் தனது கவிதையொன்றில் விபரித்திருக்கின்றார். கவிதையின் பெயர்: 'தமிழ்க்கனேடியனும் நானும்'.
1) பதற்ற நிறுவனம்
பழைய பதற்றம் நாளையை நினைத்து தொற்றிக்கொண்டது வானத்தை மேகங்கள் தொற்றிக்கொள்வது போல
கடைசி நாள் எனக்கு கடிகார சுவாச நிறுத்த வைபவம் என்னில்
உறுதியாகிவிட்டது நாளை
'ழ' வை போல உருவாக்கம் அரிது
' அ ' வை போல அழிவு எளிது
உனக்கு தெரியும் கூடவே
புரியாது உனக்கு
2)சோளக்கொல்லை பொம்மைகள்
இளம்சிவப்பு செங்கல்களின் அடுக்குவரிசையால் ஆனதொரு தடுப்பு சுவர்
மணல் மேடை அச்சுவருக்கு அப்பால்
தன் ஒரு காலை சோளக்கொல்லை பொம்மையொன்று மண்ணில் ஊன்றி நீட்டுகிறது மறுகாலை தன் உயரத்திற்கு
மதுபானத்தை தாங்குகிறது அந்த கால்
அந்த சோளக்கொல்லை பொம்மையின் கைதாங்க மற்றுமொரு கால் போன்ற கம்பு
உயிர்பெற்று நிற்கிறது தன் உயரத்திற்கு தன் காலை நீட்டி மடக்கியதில் நனவிலி மனக்கிடங்கில் சோளக்கொல்லை பொம்மை

1. கவிதை எழுத ஆசை.
எதோ ஆர்வக் கோளாறு .
கவிதை இவளுக்கு வருமா?
வரும், நிச்சயம்
வரும்.
2. நட்பு -
மலருமோர்
அரிய நட்பு
எப்பொழுதும்
தூய்மையாக
மிளிரும்.
1. முத்தமிழ் வித்தகர் !
மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !
ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்து நின்றாரே !
விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
செல்லுமிட மெல்லாமே சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே !
1. குறுங்கவிதைகள்
1.
அவள்
ஒரே ஒருமுறை....
கண் அசைத்தாள்.....
ஆயிரம் முறை .....
கவிதை எழுதி விட்டேன்......
ஒரே ஒருமுறை .....
சிரித்தாள் நான் ....
சிதறிய தேங்காய்...
ஆகிவிட்டேன்.....!!!
2.
என் கவிதையை நீ
காதலிக்கவில்லை ....
அதனால் தான் உனக்கு .....
காதல் வரவில்லை .....!!!
ஜவுளிக்கடையில் கண்கவரும்
பெண்பிள்ளை ஆடைதனை காண்கையில்
அதைவாங்கி அணிவித்து அழகுபார்க்க
ஆசைப்பட்டுவிடும் மனது .
எவருடையதாயினும் பெண்குழந்தையை
தூக்கி எடுத்துக் கொஞ்சிவிட்டுத்
திருப்பிக் கொடுக்கையில் ஒட்டிக்கொள்ளும்
பிரியங்களின் நிறங்களை பிரிப்பது சிரமமாகிறது
அக்கா அக்கா என்று சற்றே வயதுள்ள
அடுத்தவீட்டுப் பெண்குழந்தையுடன்
விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து
ஏம்ப்பா எனக்குமட்டும் அக்கா இல்லை
என்று வருந்தும் மகனிடம் காரணமில்லாத
பொய்சொல்ல வேண்டி வந்துவிடுகிறது

எலேய்.... சாதி, அசிங்கம்டா....
பேருக்கு பின்னாடி சாதி போடுரது
பெரிய அசிங்கம்டான்னு சொன்னேன்...
இல்ல இல்ல... அதுதான் எங்க பாரம்பர்யம்...
அதுதான் எங்க குலவழக்கம்...
காலம் காலமாய் எங்களுக்கான
அடையாளம் பெயரோட
சாதி போடுறதுதான்னு
உணர்ச்சி வசப்பட்டு பேசுச்சு பயபுள்ள...
அட, இம்புட்டு டென்சன் ஆவுரானே...
நெசமாத்தான் இருக்கும் போலுக்கோன்னு நம்பீட்டேன்...
சரிடா தமிழ்க்காரந்தான நீயி?
உன் மூதாதையர் யாருன்னு பாப்போம்னு தேடினேன்....
சங்ககாலப்பெயரில் 473 பேர் கிடைத்தது.
ஒரு பய கூட தன் பெயருக்குப் பின்னால்
வன்னியர் - தேவர்- கவுண்டர் - நாடார் -
ஐயர்- ஐயங்கார் என்று போட்டிருக்கவில்லை.
சங்கம் மருவிய காலப்பெயர்களையும் பார்த்தேன்.
கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் - கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் - ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை
ஊகூம்.... இங்கும் சாதிப் பெயரைக் காணோம்.
- எனது சிறு பராயத்தில் கைதடி, தச்சன்தோப்பிற்கருகே உள்ள கோவிலாக்கண்டி என்ற சிற்றுரில் கிடைத்த அனுபவங்களின் வெளிப்பாடே இக்கவிதையின் தளம்.= குருஜி நித்தி கனகரத்தினம் -
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
வைக்கோல் பட்டடைக்குள் ஒளித்த நாட்கள்
வேர்வையில் கலந்த கூலத்துத் தினவகற்ற
வயற்கிணற்றினிற் குளித்த நாட்கள்
வரம்புகளில் தடுக்கி விழுந்த நாட்கள்
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
- எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனின் முகநூல் பக்கத்திலிருந்து -
1. நிஜமான சிறைச்சாலை
- கென் சரோ விவா -
ஒழுகும் கூரையல்ல
ஈரம் கசியும் அசுத்தமான சிறைச்சுவருமல்ல
பாடும் கொசுவின் ரீங்காரமும் அல்ல
சிறைக் கொட்டகையும் அல்ல
உன்னைத் தள்ளிக் கம்பிகளின் பின் அடைக்கும்
காவலாளியின் சாவிச் சத்தமும் அல்ல
மனித ஜீவராசிக்கோ மிருகத்துக்கோ
சகிக்க முடியாத நாற்றமடிக்கும்
ரேசன் சாப்பாடும் அல்ல
இரவின் வெறுமையில் மூழ்கும்
நாளின் சூன்யமும் அல்ல
இதுவல்ல
இதுவல்ல
இதுவல்ல