ரிஷி’யின் ஐந்து கவிதைகள்:
(1) 24 x 7 + மையங்கள்
இரவு பகல் எந்நேரமும் திறந்திருக்கின்றன.
மும்முரமாய் கூவிக்கூவி வியாபாரம் நடந்தவாறு.
டாஸ்மாக் கடைகள் கூட நள்ளிரவைத் தாண்டி ஏதோவொரு சமயம்
மூடிவிடுவதாகக் கேள்வி.
ஆனால், இந்த விற்பனை மையங்களோ
ஒரு நாளின் 60,000 மணிநேரமும் ஓய்வின்றி இயங்கியபடியே….
வகைவகையாய்க் கொட்டிக்கிடக்கின்றன அதிகார மையங்கள்.
வகைக்கிரண்டாய் பொறுக்கிப்போட்டு
கூறுகட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்
கொள் பொருள் அளவுகள்.
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் _
சனாதனம், இனமானம், இந்துமதம் _
பௌத்தம், கிறித்துவம், கவித்துவம் _
முற்போக்கு, பண்பாடு, கலாச்சாரம் _
விளையாட்டு, வீரம், தீரம் _
காரம் சாரம் வாரம் சோரம் பேரம்……..
அமோகமாய் நடக்கிறது வியாபாரம்.
அள்ள அள்ளக் குறையா லாபம்.