இனக்குழு மக்களின் வாழ்க்கைவட்டச் சடங்குகளுள் மரபு, பண்பாடு, நம்பிக்கை, சமூகம் மற்றும் குறியீட்டு நிலைக்கான பன்பரிமாணங்களை உட்செறித்ததாக இறப்புச்சடங்குத் திகழ்கின்றது. ஆன்மா மற்றும் உடல் எனும் இருநிலைகளை மையமிட்டு நிகழ்த்தப்படும் இறப்புச் சடங்கில் அவ்வினக்குழு மக்களின் நம்பிக்கையே முன்னிலை வகிப்பதோடு அச்சடங்கின் போக்கினையும் தீர்மானிக்கின்றது எனலாம். இறப்புச்சடங்கார்ந்த எல்லா சடங்கியல் வினைகளும், அச்சடங்கிற்குரிய புழங்குபொருட்களும் அச்சடங்கின் மரபு மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியின் நிலைக்களனாகவும், மரபு மற்றும் பண்பாட்டினைக் காக்கும் பெட்டகமாகவும் திகழ்கின்றன. அவ்வகையில் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட, தொன்மையான வாழ்வியலைக் கொண்டு விளங்கும் நீலகிரி, படகர் இன மக்களின் இறப்புச் சடங்கில் மரபு, பண்பாடு, மரபறிவு, சடங்கியல், குறியீடு, புனிதம், சமூகம், தொன்மை, வழிபடுபொருள் மற்றும் வாழ்முறை போன்ற பன்பரிமாண கூறுகளைத் தன்னுள் உட்செறித்துள்ள தொன்மையான புழங்குபொருளாக ‘ஆப்பி’ விளங்குவதை நிறுவுவதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.
1. கவிதை: நிலைப்புணருதல்! - அருணா நாராயணன் -
உண்மைக்கும் நம்பிக்கைக்கும்
நம்பிக்கைக்கும் உண்மைக்கும்
நடுவில் என்ன நிலை.
எடுகோள்கள் இன்றும்
மாறி மாறிக் கொண்டே
கடவுளையும் சாத்தானையும்
மோத விட்டுவிட்டு
பசிக்காய் அலைந்து கொண்டிருக்கின்றன.
இல்லாததை இருப்பதாய்
நம்பும் ஒருவர்
அந்த நம்பிக்கையிடம் கடவுச்சீட்டு வாங்கிக் கொண்டார்.
இருந்தும் இருப்பதை
உணராத அவரும்
அந்த அறிவிடம் அனுமதி
பெற்றுக் கொண்டார்.
அறிவும் நம்பிக்கையும்
எதிர் எதிர் திசையில் பயணித்து கொண்டு இருந்தது.
ஆனாலும் நடுவில் மனம் மட்டும்
ஒற்றைக் கோடாய் புறப்பட்ட இடத்தில் கோட்பாடுகளை
துவைத்து கொண்டு இருந்தது.
- கவிஞர் மின்னல் எழுதிய புகலிடப்பெண்ணொருத்தியின் அனுபவம். இக்கவிதை கூறும் பொருளையிட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு தளைகளுக்குள் சிக்கி , அவற்றிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் பெண்களை நோக்கி அவற்றிலிருந்து வெளியே வா என அறை கூவல் விடுக்கிறது இக்கவிதை. இக்கவிதைக்கு ஓவியம் வரைந்தவர்: ஓவியர் அருந்ததி. - பதிவுகள் -
உனக்குப் பணத்தின் பெறுமதி தெரியாதாம்.
"சாகும் போது நான் என்ன காசை
கொண்டா போகப்போகிறேன் - எல்லாம்
உனக்கும் பிள்ளைகளுக்கும் தானே" என்று
உணர்ச்சியுடன் சொல்லுவான்.
அதனால் தான் அவன் உன்னுடைய வங்கி கணக்கையும்
தானே கட்டுப்படுத்துவானாம்.
இப்ப நீ அவனிடம் கை நீட்டி நிற்கின்றாய்.
உன் சம்பளத்தை கூட செலவழிக்க
அவனுடைய அனுமதி வேண்டும்.
நீ கேட்பது எல்லாம் வீண் செலவாம்.
அவனுடைய குடி பழக்கம் பணத்தை
விழுங்குகிறது. யார் இதை கேட்க முடியும்?
அப்படித்தான் மெல்ல மெல்ல
உன் வாழ்வு அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
‘உங்கள் ஈரல் பல காலம் ஓவர்டைம் செய்த ஈரல்’என்று எஸ்.பொ. மரணிப்பதற்கு சில கிழமைகள் முன்பு அவர் ‘ஈரலில் பிரச்சினை’என்றபோது கூறினேன்.
‘அது சரிதான்’ என்று மெதுவான சிரிப்பு தொலைப்பேசியில் கேட்டது.
‘உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’
‘அதுதான் அநுரா பார்க்கிறான்’
‘அம்மாவாலும் அநுராவாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. எனது மனைவியின் தமையன். சமீபத்தில் சுவாசப் புற்றுநோயால் இறந்தவர் .வாழ்க்கையில் மனிதன் தண்ணியோ சிகரட்டோ வாயில் வைக்காதவர். நோய்கள் எவரையும் விட்டு வைப்பதில்லை’என்றேன்.
‘தமிழ் இலக்கிய தோட்டத்தில் எஸ்.பொ. என்ற பொன்னுத்துரை நீண்டு, பருத்து , அறுபது வருடங்கள் மேல் ஓங்கி வளர்ந்து கிளைவிட்ட வேப்பமரம் போன்றவர். அவரால் வெளிவந்த பிராணவாயுவைச் சுவாசித்து எழுதத் தொடங்கிய என் போன்றவர்களின் கையைப் பிடித்து இலக்கியத்தின் ஏடு தொடக்கியவர். இந்தப்பயணத்தில் பல வருடங்கள் மனதளவில் என்னுடன் துரோணராக வந்தவர். சிலவேளையில் சிலருக்கு வேப்பம் கசப்பாக இருந்தாலும் ஈழத்து இலக்கியத்தில் முக்கிய பாவனைப் பொருளாக அவர் இருந்தார். இப்படிப்பட்ட எஸ்.பொ. வை ஆரம்பக்காலத்தில் நான், எனது நண்பனின் தந்தையாகவே சந்தித்தேன். எனது மனைவியும் அநுராவும் அவுஸ்திரேலியாவில் மருத்துவ பரீட்சைக்கு படித்த காலத்தில் அவரைச் சந்தித்தேன். அதற்கு முன்பு எஸ்.பொ.வை சந்தித்ததில்லை.கேள்விப்பட்டதில்லை.
அவுஸ்திரேலியாவில் உதயம் நடத்திய காலத்தில் நான் எழுதிய வீட்டு மிருகங்கள் மருத்துவ அனுபவம் பற்றிய கதைகளை ‘தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத பகுதியை நீ எழுதி இருக்கிறாய்” எனச் சொல்லி அவற்றை புத்தகமாகப் பிரசுரிக்க என்னைத் தூண்டினார். அதன்பின் என்னால் மதவாச்சிக் குறிப்புகளாகப் பல காலத்தின் முன்பு, எழுதிக் கிடப்பிலிருந்த கை எழுத்துப்பிரதியை வண்ணாத்திக்குளமாக்கத் தூண்டினார். அதன்பின் எனது இரண்டு புத்தகங்களை பதிப்பித்தார்.
வணக்கம், திறனாய்வுப் போட்டி முடிவுகள் இத்துடன் இணைத்திருக்கின்றேன். 14 நாடுகளில் இருந்து பங்குபற்றி இருந்தார்கள். பல போட்டியாளர்கள் எனது சிறுகதைகளை தங்கள் இணையத்தளதில் படித்தாகக் குறிப்பிட்டிருந்தார்கள். தங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புடன்
குரு அரவிந்தன்
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய
திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்!
1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள்
நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை
2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள்
சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை
3வது பரிசு: 15,000 இலங்கை ரூபாய்கள்
முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு
4வது பரிசு: 10,000 இலங்கை ரூபாய்கள்
ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை
5வது பரிசு: 7,500 இலங்கை ரூபாய்கள்
சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
11
கிளிநொச்சி திருநகர் உறங்குவதுபோல் தெரிந்தது. சலனங்கள் முற்றாக அறுந்திருந்தன. உறக்கமற்ற நிலையில் பல மனங்கள் தப்புவதற்கான மார்க்கங்களைப் பின்னிக்கொண்டு இருந்தன. இரவின் தனிமைக்குள் சுழித்தெழும் நம்பிக்கையீனத்தை, மனத்தின் ஒரு படையில் பதிவாகியிருந்த பாடலின் வரியொன்று பகலில் மீட்டெடுத்துத் தந்துவிடும். அது சிலருக்கு ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற வரியாக, சிலருக்கு ‘அழகான தமிழீழம் நாளை வந்து சேரும்’ என்றதாக இருக்க முடியும். அது ஒரு விந்தைபோல தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. பகல் நம்பிக்கைகொண்ட முகங்களையே காட்டியது. ஏனெனில் தம் மனங்களை முகங்களில் காட்டாத மனிதர்கள் பகலில் உலவிக்கொண்டிருந்தார்கள். கணவன் மனைவியோடு, மனைவி கணவனோடு, பிள்ளைகள் பெற்றோரோடு, பெற்றோர் பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்ள விரும்பாத மனத்தின் கோலங்களாயிருந்தன அவை. அவநம்பிக்கைகளையும், பயங்களையும் உறவுகளுடன் எவ்வாறு பகிர்ந்துகொள்வது? அந்த வீட்டில் சுமையேறியிருந்தது பயமாகவும் நம்பிக்கையீனமாகவும். முன்கதவு திறந்திருந்தது. வாசலில் ஒரு பக்கம் கணவன் குணசீலனும், மறுபக்கத்தில் மனைவி ஆனந்தராணியும் அமர்ந்திருந்தனர். கால் நீட்டி அமர்ந்து மெல்லெனக் காய்ந்த நிலவொளியின் வெளியில் இருண்மையைக் கண்டுகொண்டிருந்தனர்.
அவர்களுக்குள் எண்ணங்கள் சுனைப்பெடுத்து இதயம் முழுக்க விரிந்துகொண்டிருந்தன.
பகிர்ந்தலின் சாத்தியமற்ற எண்ணங்களாய் இருந்தன அவை. உயிர் நெரித்த பயக்கெடுதி சொற்களாய்க் கிளம்பவிருந்த எண்ணங்களைத் தடுத்து தொண்டையின் வாசலில் நிற்கவைத்திருந்தது. மனிதர்கள் நீரிலும் உணவிலுமன்றி நம்பிக்கையிலேயே வாழ்தலைச் செய்துகொண்டிருந்த காலப் பகுதி அது. அதை உடைக்கும் ஒரு அபிப்பிராயம் அந்த வாழ்தலையே கேள்விக்குறி ஆக்கிவிடும். அவர்களது மௌனத்தின் காரணம் அதுவாக இருந்தது.
இருவருக்கும் இடையேயிருந்த வெளியில் இடைஞ்சல் படுத்தியபடி போய்வந்துகொண்டிருந்த பிள்ளைகள் படுத்துவிட்டிருந்தார்கள். அவர்கள் அவலங்களுக்குள்ளும், ஓடுதல்களுக்குள்ளும், குண்டு வெடிப்புகளுக்குள்ளும் பிறந்த பிள்ளைகள். அவர்கள் வெளியே வந்து வந்து போய்க்கொண்டிருந்தது எங்கேயாவது குண்டு வெடிக்கிறதா என்பதைப் பார்க்கத்தான்போலிருந்தது. அவர்களுக்கு அவை இல்லாததுதான் இயல்பு பிறழ்ந்த சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. விழுந்த குண்டு எல்லாவற்றையும் நொருக்கி இடித்துக்கொட்டுகிறபோது அவர்கள் திகைப்பார்கள், திடுக்கிடுவார்கள். பிறகு அவர்களுக்கு அது ஒரு விளையாட்டாகிவிடும். தாய் தந்தையரின் அவதிகூட அக்கணத்தில் அவர்களுக்குச் சிரிப்புவர வைத்ததுண்டு. ஆனால் பெரியவர்களுக்கு…? அவர்கள் சத்தங்களைக் கடந்து சேதங்களைப் பார்க்கத் தெரிந்தவர்கள். அவற்றிலிருந்து தொடரக்கூடிய உடல், மனம், மானம் ஆகிய எல்லா சேதங்களையும்கூட.
அத்தியாயம் இரண்டு!
அம்மாவின் இடதுபுறத்தே நின்று தாங்கிக்கொண்டவர் வேறு யாருமல்ல. அத்தான்தான்.
அம்மா கேட்டாக….,
“இம்புட்டு நேரமும் நீங்களும் இங்கைதான் இருந்தீங்களா மாப்பிள்ளை….”
சமையல்காரப் பையன் குறுக்கிட்டான்.
“வேற யாருண்ணு நெனைச்சீங்கம்மா….. சின்னம்மா நிக்கிறவரைக்கும் மூச்சே காட்டாம இருந்துபுட்டு, அவுங்க கீழ எறங்கிப் போனப்புறம் திடீர்ன்னு வர்ரதாயிருந்தா அது நம்ம சின்னையாவாகத்தானே இருக்க முடியும்….. நான் சொல்ரது கரட்தானே சின்னையா…..”
அத்தானைப் பார்த்துத்தான் கேட்கின்றான் என்பது புரிந்தது.
கவலையின் மத்தியிலும் சிரிப்பு வந்தது.
அத்தானோ எதுவுமே பேசாமல் தலையைக் குனிந்தபடி கீழே இறங்கினார்.
அக்கா இல்லாத நேரங்களில், சிலவேளை கலகலப்பாகப் பேசுவதைக்கூட அத்தானிடம் காணலாம். ஆனால் அவளுக்கு முன்னால் மட்டும்……. சரி சரி அதுபற்றிப் பேசுவது வீண்.
மும்தாஜுக்காக தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான், இறுதியிலே தன் மகன் அவுரங்கசீப்பினால் சிறை வைக்கப்பட்டபோது, சிறையின் யன்னல் கம்பிகளினூடே தாஜ்மஹாலின் ஒரு புறத்தை மட்டும் பார்த்துப் பெருமூச்சும், கண்ணீரும் விட்டுக்கொண்ட கதைபோல எனது நிலையும் இருந்தது.
வீட்டின் கொல்லைப்புறத்தில்தான், பின்புற மதிலின் கேற்றும், கார் ஷெட்டும் இருந்தன. தகரத்தால் மூடிமறைக்கப்பட்டிருந்த ஷெட் கூரைப்புறம் முழுமையாகத் தெரிந்தது.
தூரத்திலே தெரியும் பொதிகை மலையிலிருந்து, தமிழ்நதி தாமிரபரணியின் குளிரைக் கலந்துவரும் தென்றல்கூடத் தீயாகச் சுட்டது.
கண்களில் நீர்த் திவலைகள் திரண்டு, காட்சிகளெல்லாம் “அவுட்-ஆப்-போக்கஸ்” ஆக, உள்ளமோ எனது பால்யகால “பிளாஸ் பேக்” கை, “நெகடிவ் மூவி ஃபிகராக” பிளே பண்ணியது.
அறுபதுகளின் முற்பகுதி..
யாழ்ப்பாணத்தில், இன்றைய நவீன சந்தைக் கட்டிடம் அன்று இருக்கவில்லை. அந்த இடத்தில் பஸ் நிலையம் பரந்த பரப்பளவில் விசாலமாக அமைந்திருந்தது. அதன் மேற்குத் திசையில் கஸ்தூரியார் வீதித் தொடக்கத்தில் 'பூபாலசிங்கம் புத்தகசாலை.'
இங்குதான் அதிகமான இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் சந்தித்துக்கொள்வார்கள். தமிழகத்திலிருந்து வரும் மார்க்ஸிச நூல்கள், சஞ்சிகைகள், இலங்கையில் வெளியாகும் இலக்கிய நூல்கள், மார்க்ஸிச ஏடுகள் என்பன இங்கு கிடைக்கும். ஆஸ்பத்திரி வீதியில் 'தம்பித்துரை புத்தகசாலை.' இவர்கள் தான் குமுதம், ஆனந்த விகடன் சஞ்சிகைகளின் விநியோகஸ்தர்கள். கே. கே. எஸ். வீதியில் 'தமிழ்ப்பண்ணை' புத்தகசாலை இருந்தது. இங்கு தமிழகத்தில் வெளியாகும் திராவிடக் கழக, திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் நூல்கள், பத்திரிகைகள் கிடைக்கும். இந்தப் புத்தகசாலைகள் யாவற்றுக்கும் என் பாடசாலைக் காலத்திலேயே எனது மூத்த சகோதரர் நாவேந்தனுடன் சென்றுள்ளேன். அந்தக் காலத்தில், உயர்ந்த உருவத்தில், தூய வெள்ளை 'நாசனல்' உடையில், அங்கெல்லாம் வந்துபோன மனிதன் தான் இ. நாகராஜன் என அண்ணரிடம் கேட்டு அறிந்துள்ளேன்.
அண்ணரின் நண்பரான அவரைப், பின்னர் காணும்போதெல்லாம் ஒருசில நிமிடங்கள் அவருடன் பேசிக்கொள்வேன். இனிமையாகப் பேசும் நல்ல மனிதனாகக் காணப்பட்டார். அவர் மரபுக் கவிஞர். சிறுகதை, நாவல், குறுநாவல், காவியங்கள் பல படைத்தவர். மலையகத்தில் பார்த்துவந்த ஆசிரியர் வேலையைத் துறந்து சுதந்திரமான மனிதனாக யாழ்ப்பாணத்துக்கு வந்தார். 1948 - ம் ஆண்டளவில் எழுத்துத்துறையில் ஈடுபட்டார். அன்று வெளிவந்த 'ஈழகேசரி'ப் பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கினார். ஈழகேசரியில் சிறுவர் பகுதி, மாணவர் பகுதிக்கென பல்வேறு புனைபெயர்களில் சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் இதழ்கள் தோறும் எழுதி வந்தார். சிறுகதைகள், கவிதைகள் பலவும் தொடர்ந்து எழுதி வந்தார். அன்று ஈழகேசரி ஆசிரியராக விளங்கிய இராஜ அரியரத்தினம் இவரை ஊக்கப்படுத்தித் தொடர்ந்து எழுத வைத்தார். ஈழகேசரி வளர்த்துத் தந்த எழுத்தாளர், கவிஞர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டம், சமகால இடைவெளிபேணல் நடைமுறைக்கு அமைவாக அண்மையில் இணைய வழி காணொளியூடாக நடைபெற்றது.
நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதி வரவேற்புரை நிகழ்த்துகையில் கடந்த வருடமும் இந்த வருடமும் மறைந்த நிதியத்தின் உறுப்பினர்கள் கலைவளன் சிசு. நாகேந்திரன், மற்றும் திருமதி சுகந்தி சஞ்சீவன் ஆகியோர் குறித்து நினைவுபடுத்திப் பேசினார்.
மறைந்த இருவரும் கல்வி நிதியத்தின் ஊடாக பல வருடங்கள் இலங்கையில் சில மாணவர்களுக்கு உதவி வந்தவர்கள். அவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி அனுட்டிக்கப்பட்டது.
முகக்கவசம் களைந்து முறுவலுடன் சபை விளங்க அன்புச் சகோதரரின் மிருதங்க அரங்கேற்றம் மெல்பேண் மாநகரில் றோவில் பாடசாலை மண்டபத்தில் 17-04-2021 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. மேடை அலங்காரம் யாழ்மண்ணை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. மேடையின் முகப்பு கோவில்களின் மண்டபங்களில் காணப்படும் யாளியினைக் கொண்டதாய் வண்ணமாய் ஜொலித்தது. மேடையின் பின் அணியாகப் பெரியதாய் எம்பெருமான் சிவனின் உருவம் அழகான வண்ணத்தில் ஆசி வழங்குவதாய் மிளிர்ந்தது. பின்பக்கமாக அரங்கின் இரு மருங்கும் வாழவைக்கும் வாழைகள் வைக்கப்பட்டிருந்தன.வாழைகளின் நடுவில் பச்சையினைவெளிப்படுத்தும் பாங்கான செடிகள் பக்குவமாய் அழகினை மெருபடுத்தி நின்றன. மேடையின் முன்னே மங்கலாமாய் மஞ்சள் நிற மலர்கள் வட்டமாய் கோலமிட கோலத்தின் நடுவே - தேவ சபையில் சிவனினாரின் திருநடனத்துக்கு லயத்தைக் கொடுத்து மிருதங்கம் முழங்கும் நந்தியெம்பெருமானின் வெண்கல வடிவம் வைக்கப்பட்டிருந்தமையினப் பாராட்டியே ஆக வேண்டும்.விநாயகப் பெருமானும் , கல்வித் தெய்வமான கலைமகளும் மங்கல விளக்குகள் மத்தியில் மேடைக்குக் காவலாய் , அரங்கேற்றத்துக்கு அரணாக வைக்கப்படிருந்தமை பக்தியின் பரவசத்தை நல்கியது எனலாம்.
ஒட்டகங்கள் பாலைகளைக் கண்டு
துவண்டு விடுவதில்லை;
தளர்வதில்லை.
வீசும் மணற்காற்றுகளைக் கண்டு
அஞ்சுவதில்லை.
நீர் தேக்கி, நீண்ட தொலைவுகளை நாடிப்
பயணிப்பதில் அதிக பிரியம் கொண்டவை
அவை.
உளப்புயல்கள் வீசியடிக்கையிலெல்லாம்,
நினைவுச் சுழல்களுக்குள் சிக்கும்போதெல்லாம்,
அகக்கடலில் படகுகளையிழந்து
நீச்சலடிக்கையிலெல்லாம்
நான் ஒட்டகங்களை நினைப்பதுண்டு.
ஒட்டகங்களைப்போல் நானிருக்க வேண்டுமென்று
நினைப்பதுண்டு.
எவை கண்டும் தளராத
அவை பற்றி அவ்வேளைகளில் சிந்திப்பதுண்டு.
எழுத்தாளர் வண்ணநிலவன் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்குக் கிடைத்த தமிழக அரசின் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை சிறிது அதிகமென்று கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கி.ராஜநாராயணின் படைப்புகள் எவையும் ஞானப்பீட விருது பெறும் தகுதி உள்ளவை அல்ல என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
வண்ணநிலவனின் மேற்படி கூற்று சிறிது ஏமாற்றத்தினை அளிக்கின்றது. . அவ்விதம் அவர் கூறுவது அவரது உரிமை. ஆனால் அவ்விதம் அவர் கூறிய தருணம் உரிய தருணமல்ல. என்னைப்பொறுத்தவரையில் தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்குத்தான் இதுவரையில் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை கிடைத்துள்ளது. எழுத்தாளர் பிரபஞ்சனுக்குப் புதுவை அரசு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குக்களை நடத்தியது. தற்போது தமிழக அரசு எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதையினை நடாத்தியுள்ளது.
இருவருமே எழுத்தையே வாழ்வாகக்கொண்டவர்கள். இருவருமே தமிழக , இந்திய அரசுகளால் வழங்கப்படும் அனைத்து விருதுகளுக்கும் உரித்துடையவர்கள்.
தமிழ் எழுத்தாளர்களுக்கு இவ்விதமான உரிய மரியாதை கிடைக்கும்போது அது வரவேற்கப்பட வேண்டியதொன்று. காழ்ப்புணர்வுடன் எழுத்தாளர் வண்ணநிலவனைப்போல் கருத்துகளைக்கூறுவது நல்லதல்ல.
- எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பற்றி எழுதிய விரிவான கட்டுரையிது. நன்றியுடன் அவரது வலைப்பதிவிலிருந்து மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள். -
1
கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம் ‘ நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும் காலம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று வயது முதிர்ந்து பழுத்து உதிரும் நிலையில் இருக்கும் , இரு நூற்றாண்டுகளைக் கண்ட, தொட்டவ்வாவிடம் கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் பெண்களை பலாத்காரம் செய்கிறானா, கொள்ளையடிக்கிறானா என்று அவள் கேட்கிறாள். இல்லை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் அவர்களை நாம் வரவேற்போம், அவர்களுடன் சேர்ந்துகொள்வோம் என்று அவள் பதில் சொல்கிறாள்.
நமது சுதந்திர இந்தியாவில் எழுதப்பட்ட பெரும்பாலான கதைகளில் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக உருவான இலட்சியவேகம், வெள்ளைய ஆட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவற்றைக் காண்கிறோம். அதன் பிறகு வந்த ஆக்கங்களில் இலட்சியவாதத்தின் சரிவை , அதன் விளைவான சமூக வீழ்ச்சியின் சித்திரத்தைக் காணமுடிகிறது. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் ஆகியவை முதல் வகை. ‘பொய்த்தேவு ‘ [க நா சுப்ரமணியம்] முதல் ‘ ஒரு புளியமரத்தின் கதை வரை நாவல்கள் பெரும்பாலும் வீழ்ச்சியின் சித்திரத்தை அளிப்பவை. ஆனால் இரு போக்குகளிலும் இருந்து விலகி கோபல்ல கிராமம் ஒரு தனியான பார்வையை அளிக்கிறது .
1. நான்
அகக்கிண்ணம் நிறைந்து வழிவதால்
கனிந்த பார்வையின் கண்ணொளி வீச்சை
மனச்சுரங்கத்தில் சேமித்து வைக்கிறேன்
கடற்காற்றில் கன்னம் சிலிர்க்கிறது.
கப்பற் பாய்களை நினைவுபடுத்தும்
ஓப்பரா மண்டபக் கூரை. அதன் படிகளில் நான்.
கலை, இலக்கிய, சினிமா, அரசியல் துறைகளைச்சேர்ந்தவர்களாலும் வாசகர்கள், இலக்கிய மாணவர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட கி. ரா என்ற கி. ராஜநாராயணன் மறைந்தார் என்ற செய்தி கவலையை தந்தாலும், அவர் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, நூறாண்டுகளை அடைவதற்கு இன்னமும் ஒருவருடம் இருக்கும் நிலையில் தமது 99 வயதில் எம்மிடமிருந்து விடைபெற்றிருப்பது சற்று தேறுதலைத்தருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் அவரது பிறந்த தினத்தின்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்கூறியபோது, அவரது அருமை மனைவி கணவதி அம்மாவும் இருந்தார்கள். அந்த அம்மையாரும் கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். இருவரையும் முதல் முதலில் 1984 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் ஒரு கோடை காலத்தில்தான் அவர்களின் இடைசெவல் கிராமத்து இல்லத்தில் சந்தித்தேன்.
அவரது கிடை குறுநாவலை 1970 களில் ஶ்ரீமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தமது வாசகர் வட்டத்தின் வெளியீடாக வரவாக்கிய அறுசுவை நூலில் படித்திருந்தேன். அன்று முதல் எனது பிரியத்திற்குரிய படைப்பாளியானவர் கி.ரா. அவர்களைத் தேடிச்சென்ற அனுபவம் பசுமையானது. சிலவருடங்களுக்கு முன்னர் பிறந்ததின வாழ்த்துக்கூறியவாறு பேசியபோது, “ உங்கள் வயசு என்ன..? “ என்று கேட்டார். சொன்னேன். உடனே அவர், “ சரிதான் இன்னுமொரு திருமணம் செய்யிற வயசுதான் “ என்றார். இவ்வாறு கேலியும் கிண்டலுமாக பேசவல்லவர் அவர். திருநெல்வேலி பிராந்திய எழுத்தாளர்கள் அனைவருக்கும் மட்டுமல்ல பொதுவாக அனைத்து எழுத்தாளர்களுக்குமுரியது இந்த இயல்பு.
யுகமாய் எழுந்த பெருங்கனவொன்றை...
நீல மிடற்றில் செம்பட்டி சூடி,
நிகரில் சூதில் நிணக்கூழ் நயக்கும்,
ஆண்பாற் பேய்மகள் ஊழி விழுங்கிற்று!
யுகமே யுகமே எங்கெரியுற்றாய்!
வானிடை எகிறிப் பாய்ந்தெழு கொடியே,
வருபகை மடித்த மார்பெழு புகழே,
ஏனிடருற்றாய்! எங்கெரியுற்றாய்!
மூதின் முல்லைப் பெருங்கடல் அன்னாய்!
முள்ளிவாய்க்காற் சிறுமணற் கும்பிகாள்!
முடிவைக் கரைத்த நந்திக்கடலே!
மனத்துள் மண்ணை மகிழ்விற் சுமந்து,
களப்பெருஞ் சுரவழி நடைநின்றொழுகி,
நன்றென நின்றவர் நாடு பாடினர்.
காதம் நான்கின் வழிகளுந் தொலைய
கந்தகக் களிறால் எறிந்து வீழ்த்திக்
காடே ஆற்றாக் காடு பாடினை.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவாக..
முள்ளிவாய்க்கால்
ஒரு
நினைவுச்சின்னம்.
மானுட கோரத்தை
மானுடச் சோகத்தை
மானுடருக்குக் காட்டுமொரு
சின்னம்.
முள்ளிவாய்க்காலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?
வாழ்நாளில் பெரும்பகுதியை ஆராய்ச்சித் துறைக்கே அர்ப்பணித்துச் சமஸ்கிருதத்துறைக்கும், நுண்கலைத்துறைக்கும் சிறந்த பங்களிப்பு வழங்கியவர் பேராசிரியர் வி.சிவசாமி. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமஸ்கிருதத் துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் வி. சிவசாமி வெளியிட்டுள்ள ஆய்வு நூல்களிலும், வெளியிட்ட கட்டுரைகளிலும், அவரது ஆராய்ச்சித் திறமை நன்கு புலப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். தாம் விரும்பிய முறையில் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று பார்க்கின்ற சந்தர்ப்பங்களையும், பெரும் பொருட் செலவுகளோடு கூடியதாக உரிய வாய்ப்புகளையும் பயன்படுத்திப் பல நாடுகளைப் பார்க்கும் சந்தர்ப்பங்களையும் தியாகம் செய்து சமஸ்கிருதத் துறையையும், அதனோடு தொடர்பான கலைகள் குறிப்பாக நுண்கலைகள், வரலாறு ஆகிய துறைகளில் மட்டுமன்றி இசை, பரதநாட்டியம், சிற்பம் முதலிய துறைகளிலும் பெரிதும் அபிமானமுள்ள இவர் நூல்களையும், கட்டுரைகளையும் எழுதித் தமது ஈடுபாட்டினைப் புலப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டுகள் பெற்றவர்.
குட்டிக்கதைகள் அடங்கிய புனைவு ஒன்றை நீண்ட காலத்திற்குப் பின்பு வாசித்திருக்கிறேன். புனைவுகள், நாவல்களை நான் வாசிப்பது மிகவும் குறைந்து போயிற்று இப்போது. எல்லோரையும் போலவே நேரம் ஒரு அரும்பொருளாகிவிட்டிருந்தது எனக்கும். ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் புத்தகத் தெரிவு தற்செயலானதுதான்.
உண்மையில் நேரம் இருக்கிறதா, வரிசையாக அமர்ந்திருக்கும் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வாசிக்க பயனுள்ளதா என மனம் மிக நுண்ணிய செக்கன்களைக் கணக்கிட்டு முடிவு செய்து, தமிழ்தானே என்று ஆதரவுக்கரம் நீட்டி வாசித்து முடித்ததுதான் ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் புனைவுகளின் தொகுப்பு.
ஐம்பத்தியொரு நுண்கதைகளை உள்ளடக்கிய இந்தப்புனைவு கிண்டிலின் மூலம் எனக்கு வாசிக்க கிடைத்தது. முதற்பதிப்பு ஆவணி 2020 இல் மின்னூலாக வெளிவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த நூல் சென்னை, பெசனட் நகரிலுள்ள சஹானா பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளது.
இந்த புனைகதைக்களுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் பெருந்தேவி. அழகிய அட்டையும், வாசிப்பு ஆர்வத்தை நீடிக்க வைக்கும் எழுத்தின்( Font) தேர்வும் நன்றாக இருக்கின்றன. இடையிடையே வரையப்பட்டிருக்கும் கோட்டுச்சித்திரங்கள் கூட பொருத்தமாக இருக்கின்றன. இதனை பேப்பர் புத்தகமாக கையில் வைத்து வாசித்திருந்தால் நன்றாக இருக்கும் போலவும் தோன்றியது.