கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - 37! உரையாளர் எழுத்தாளர் அகணி சுரேஷ்!



எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு , மாவென்சி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் நேத்ரா றொட்ரிகோ. இம்மொழி பெயர்ப்பு நூலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று ஸ்கார்பரோ நகரில் நடைபெறவுள்ளது.இது பற்றிய அறிவிப்பினை Tamil Arts Collective விடுத்துள்ளனர். அவ்வழைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "The publication of the 'Prison of Dreams' quintet marks a historic moment in Canadian Tamil literature, as it is the first book length translations of a Tamil novelist published in Canada." அதாவது 'கனவுச்சிறை’ஐந்து பாகப் புதினத் தொகுப்பு கனடாவில் வெளிவருவது, கனடியத் தமிழ்ச் சமூக இலக்கிய வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஏனெனில், இது கனடாவில் வெளியிடப்பட்ட முதல் முழுநீளத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பு ஆகும்.' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவகாந்தனின் கனவுச்சிறை மகா நாவல். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் முக்கிய படைப்பு. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதுதான் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் முழுநீளக் கனடாத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பா? அப்படிக்கூறுவதற்கில்லை. எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'தமிழ் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்துக்கு எழுத்தாளர் லதா ராமகிருஷணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மின்னூற் பதிப்பு ஏறகனவே அமேசன் கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவல் முழுமையாக , ஐந்து பாகங்கள், ஆய்வாளரும், மொழிபெயர்ப்பாளருமான நேத்ரா றொட்ரிகோவால் ஆங்கிலமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது.
'மாவென்சி' பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று இலக்கம் 1265 Military Trail, Scarboroughஅமைந்துள்ள AC-223 at UTSC Academic Advising & Career Centre மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வெளியீட்டுக் குழுவினர் அழைக்கின்றனர். நிகழ்வுக்கு வருகை தர விரும்பினால் அழைத்து உங்கள் இருக்கையைப் பதிவு செய்யும்படியும் நிகழ்வுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர். பதிவு இலவசம்.
இந்நிகழ்வு பின்வரும் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது. Mawenzi House, Ontario Arts Council, Tam Fam Lit Jam, The Tamil Literary Garden, Toronto Arts Council & Tamil Studies at the University of Toronto Scarborough.
நிகழ்வில் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு விற்பனை செய்யப்படும். நிகழ்வில் கிடைக்கும் நிதி முழுமையாக ஸ்கார்பரோ நகரில் அமையவுள்ள தமிழ் சமூக மையத்திற்கு (Tamil Community Centre) நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் இளமைக்காலத்தோற்றம். *டிஜிட்டல் ஓவியம் - இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) -
முன்னுரை:
தாகூரின் செல்வாக்கில் இருந்து, மாற்றமுற்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது. ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை அவர் தன் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி கவிதைக்குள் செல்லலாம்:
மயில் நிறத்து சேலை…
மயில் நிறத்து
சேலை…
அடர் வண்ண
பச்சை, மஞ்சள், சிவப்பாடை…
இமைகளையும் பெரிதாய் தீட்டி
நெற்றியில் அழுத்தமாய்
குங்குமம் பள பளக்க இட்டு…
கன்றி சிவந்த இதழ்களும்
அழகியதாய்…
தூய்மையில் விட்டிருப்பர்… ஆகா, எம்
அனைத்தையும்
இன்பத்திலும் ஆழ்த்தியிருப்பர்…

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடத் தப்பட்ட தெரிவுகளில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான பரிசுத் தொகைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டன.
மீண்டும், இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்காக அறிவிக்கப்படுகிறது.
இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.
1. கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

* ஓவியம் - AI
மலையன் பெற்றோர் யார்? என்பது குறித்த சர்ச்சை மீண்டும் பேசுபொருளாக மாறியது. அந்த ஆண்டின் பிறந்தநாள் விழாவின்போது தான் அது நடந்தது.
அது அவனுடைய ஆயிரத்தெண்ணூறாவது பிறந்தநாள். சிலர் அது அவனுடைய ஆயிரத்து நூறாவது பிறந்தநாள் என்றும் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தனர். கொண்டாட்டத்தில் மதி கலந்துகொண்ட போதுதான் மலையன் பற்றிய செய்தியை முதல்முறையாக கேட்ட நினைவு மெல்ல அவனுக்குள் எழ ஆரம்பித்தது.
ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அந்த ஆண்டு நல்ல மழை. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபொழுது, ‘பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் ஆறு நிறைய தண்ணீர் சென்று கொண்டிருப்பதாக’ தந்தைக் கூறினார்.
வழக்கம்போல பள்ளிக்கூடத்தில் மூன்றாவது இருக்கையில் அவன் அமர்ந்து கொண்டிருப்பான். ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைய அனைத்து மாணவர்களும் எழுந்து இருகைகள் கூப்பி வணக்கம் தெரிவித்து அமர்ந்தனர்.
பொறுமையின் வடிவமாய்த் திகழும் அந்த ஆசிரியர் பெயர் பொன்முடி. அன்று வழக்கமாய் ஏற்றும் மாயவிளக்கை ஏற்றிக் கொண்டிருந்தார். அதை பல நாட்களாய்ச் சரியாகக் கவனிக்கத் தவறிய மதி மேசையின்மீது நிறுத்தப்பட்டு இருந்தான். விளக்கின் அவசியம் குறித்து அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. மாயவிளக்கு ஏற்றுவதில் கைதேர்ந்தவர் என்ற சிறப்பைப் பெற்றிருந்த அந்த ஆசிரியர் தன்னுடைய வித்தையைச் சில காரணங்களுக்காக ஒரு வாரகாலமாகத் செய்யாமல் இருந்தார். அது பற்றி அவனுக்கு எதுவும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

முன்னுரை
மக்களின் பேச்சு மொழியைப் புனைவிற்குள் கொண்டுவரும் போக்கு இன்று தொடர்ந்து பெருகி வருகிறது. தமிழின் பொது அல்லது இலக்கிய வழக்கிலிருந்து மக்களின் அன்றாட வழக்கில் வெளிப்படும் (பேச்சு) மொழியைக் கொண்டு அவர்களின் வாழ்வியலை மிக அணுக்கமாகக் கூறுவது படைப்பாளரின் தனித்த அடையாளங்களுள் ஒன்றாக அமைந்துவிடுகிறது. மண்ணின் மரபை அம்மண்ணின் மக்களின் வாழ்வியலை மிக அணுக்கமாக கூறுவதற்கு ஏற்ற ஒன்றாக அதைப் படைப்பாளர்கள் கையாளுகின்றனர். பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டு தான் சார்ந்துள்ள சமூகத்தினைப் புனைவிற்குள் கொண்டுவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வரவேற்று மகிழ வேண்டிய ஒன்று. அது காலத்தின் தேவையும் கூட.
செந்தமிழ் / கொடுந்தமிழ் என்பன வெறுமனே தமிழ் மொழியின் இரு பிரவுகள்தானே ஒழிய. உயர்ந்தது x தாழ்ந்தது என்ற பொருளில் அவற்றை அணுகுவது தவறான ஒருபோக்காகவே அமையும். கொடுந்தமிழ் என்பதைப் பாமர மக்களின் பேச்சு மொழி என்று விலக்கிவிட முடியாது. காரணம், அம்மக்களின் வாழ்வியலை விளக்குவதற்கான சாத்தியக் கூறுகளை அவை அதிகமாக்குகின்றன. இந்தக் கோணத்தில் சிந்திக்க முற்படுவதன் விளைவாகத்தான் பலர் அத்தகைய மொழிநடையைப் பின்பற்றுகின்றனர். அதனால் அவர்களுக்கு அம்மக்களின் வாழ்வியல் விழுமியங்களை மிக நுட்பமாக ஆவணப்படுத்துவதும் சாத்தியமாகின்றன. சிலர் தங்கள் வட்டார வழக்குகளைத் தொடர்ந்து எழுவதன் மூலமாக முக்கியமான ஆளுமைகளாக வளர்ந்து வந்துள்ளதையும், அத்தகைய எழுத்தாளர்களைத் தமிழ் எழுத்து உலகம் கொண்டாடி மகிழ்வதையும் தற்போது பார்க்க முடிகிறது.
என்றாலும், பேச்சு மொழி பயன்பாட்டினைப் பற்றிய மொழியியல் பின்புலத்தில் ஆய்வுகள் முன்னெடுக்க பட்டனவா? என்றால், இல்லை. அதாவது, மக்களின் பேச்சு வழக்குகள் புனைவிற்குள் வந்துள்ள அளவிற்கு அவற்றைப் பற்றிய ஆய்வு முன்னெடுப்புகள் நிகழ்த்தப்படவில்லை என்பது மறுக்க இயலாத உண்மை. அத்தகைய ஆய்வுகள் நிகழ்த்த வேண்டிய தேவை அவசியமாகிறது.

[இலங்கையின் பிரபல முற்போக்கு எழுத்தாளார் எஸ்.அகஸ்தியர் அவர்களின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 . அதனையொட்டி அவரது இக்கட்டுரை வெளியாகின்றது. இதனைப் 'பதிவுக'ளுக்கு அனுப்பி வைத்தவர் அவரது மகள் எழுத்தாள்ர் நவஜோதி யோகரட்னம். . ‘இலக்கியத்தில் ஒழுக்க வாதம் அல்லது நடுநிலைமை வாதம்’ என்னும் தலைப்பில் கண்டியில் 29.6.1969 இல் இடம்பெற்ற இலக்கிய அரங்கில் அகஸ்தியர் ஆற்றிய உரையின் சுருக்கம். இந்த இலக்கிய அரங்கில் அரு.சிவானந்தன், இல.இராசு, இரா.அ.இராமன், சி.பன்னீர்ச்செல்வம், அபதுல் ரவுஹீம், அ.கணேஷ், பெரியசாமி, உமாபதி, சி.கந்தையா, பெரி. சுவாமிநாதன், செல்வி.சி;. இந்திராணி, செல்வி சித்தி.ஹமீதா, வெ. இராசம்மா ஆகியோரும், இன்னும்பல இலக்கிய முற்போக்கு இளங்கலை எழுத்தாளர்களும் பங்கு பற்றினர். ]
ஒழுக்கம் என்பது கட்டுப்பாடு. அது மனித வர்க்கத்திற்கு மட்டுமல்ல இலக்கியங்களுக்கும் மிக அவசியமானதாகும். இந்த ஒழுக்கம் என்ற கோட்பாட்டை எப்படி நிர்ணயிக்க முடிகின்றது என்று நாம் ஆராய்ந்து பார்க்ககும்போது, இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அவசியம்தானா என்ற கேள்வி நம்முன்னே எழுகின்றது. அதுவுமல்லாமல், இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அல்லது நடுநிலைமை வாதம் பேசுபவர்கள் யார், அவர்கள் யாருக்காக இலக்கியம் படைக்கிகிறார்கள், அவர்கள் இலக்கியத்தில் ஒழுக்கவாதம்; பேசுவதன் மூலம், எந்த சமூக அமைப்பைக் கட்டிக் காக்க விரும்புகிறார்கள் என்ற இன்னோரன்ன கேள்விகளுக்கும் நாம் விடை காணவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
சரி, இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அவசியம்தானா? இந்தக் கேள்விக்கு ஒரு விடை காண்பதற்கு முன், நாம் இந்தச் சமூக அமைப்பில் ஒரு ஆழமான கண்ணோட்டத்தைச் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஏனெனில், இன்றைய இந்தச் சமூக அமைப்பு இரண்டு முரண்பட்ட வர்க்கங்களாக அமைந்திருக்கின்றன. இது உழைப்பாளிக்குப் பாதகமாகவும், உடமைவாதிக்குச் சாதகமாகவும் அமைக்கப் பட்டிருக்கின்றது. இத்தகையச் சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் இருப்பதால்தான் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளே கொலை, களவு, கற்பழிப்பு, கீழ்த்தர குருர உணர்ச்சி, வறுமை ஆகியவைகள் சமுதாயத்தில் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.

2022இல், மகுடம் வெளியீடாக வெளிவந்திருந்த ‘ஒன்றே வேறே’ என்ற என் சிறுகதைத் தொகுதியின் பிரதிகளை எனக்கு அனுப்பும்போது, கிழக்கு மாகாணச் சாகித்தியப் பரிசை 2019இல் தனதாக்கிக்கொண்டிருந்த ‘பரசுராம பூமியின்’ பிரதியொன்றையும் அனுப்பிவைப்பீர்களா என மைக்கல் கொலின் அவர்களைக் கேட்டிருந்தேன். தொன்மங்களை மீளாய்வுக்குட்படுத்தும் படைப்பாக அது இருந்ததால் அதனை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் வந்திருந்தது. ஆனால், அந்தத் தொகுப்புப் பற்றிய என் வாசிப்புப் பகிர்வை எழுதவேண்டுமென்ற எண்ணம் காலஓட்டத்தில் கரைந்துபோயிருந்தது. தற்போது, மூன்று வருடங்களின்பின்பு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருக்கும் நிலையில்தான் அந்த எண்ணத்தைச் செயலாக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
பாரதம், இராமயணம், விவிலியம் ஆகிய நூல்களின் சில கதாபாத்திரங்களை அல்லது சம்பவங்களை, கேள்விக்குள்ளாக்கும் கவிஞர், எழுத்தாளர், வெளியீட்டாளர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கும் மைக்கல் கொலின் அவர்களின் ஒன்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ‘வரம்’, ‘ஓர்மம்’, ‘ஞானம்’ ஆகிய மூன்று கதைகளும் என்னைக் கவர்ந்திருந்தன. மைக்கல் கொலின் அவர்களின் கவித்துவத்தைப் புலப்படுத்தும் அற்புதமான மொழியில், ‘வரம்’ என்ற கதை அகலிகைக்குப் புதுப்பரிமாணம் கொடுத்துள்ளது.
அகலிகை பற்றிப் பல கதைகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்திரனால் அவள் வன்புணர்வுக்குட்பட்டாள் எனக் கூறும் ‘அகலிகையும் அகல்யாவும்’ என்ற குறுங்காப்பியம், வன்புணர்வுக்குட்பட்டதால்தான் கெளதமர் அவளுக்குச் சாபவிமோசனம் கொடுத்தார் என்கிறது. ஆனால், ‘அகல்யா’ என்ற குறுங்காப்பியமோ, தன்னுடன் புணர்ந்தவன் யாரென்பது அகலிகைக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், இருப்பினும், அதைப் பற்றி உலகம் என்ன பேசுமோ என்று கெளதமர் கவலைப்பட்டார் என்றும் கூறுகிறது. இந்த இரண்டு கருக்களினதும் அடிப்படையில் ‘சாபவிமோசனம்’, ‘அகலிகை’ என இரண்டு கதைகளை புதுமைப்பித்தன் அவர்கள் எழுதியிருக்கிறார். இந்திரன் தன் தவறை உணர்கிறான், மனத்தூய்மைதான் கற்பென அகலிகைக்குக் கெளதமர் ஆறுதல்சொல்கிறார் என்றவகையில், ‘அகலிகை’ என்ற கதையை அவர் 1934இல் எழுதியிருந்தது பாராட்டுதலுக்குரியது. சாபவிமோசனம் கிடைத்தும், பாவவிமோசனம் கிடைக்காதா என ஏங்குமொரு பரிதாபநிலையை 1943இல் எழுதிய ‘சாபவிமோசனம்,’ என்ற கதையில் அவர் காட்டியிருக்கிறார். அத்துடன், யாரைப் பார்த்தாலும் அகலிகைக்குச் சந்தேகம் வருகிறது என்றும், கெளதமரின் வார்த்தைகளுக்கும் இரட்டை அர்த்தம் இருக்குமாவென யோசிக்கிறாள் என்றும், கெளதமராலும் அவளுடன் முன்போலப் பழகமுடியவில்லை என்றும் தொடரும் அந்தக் கதை முடிவில், சீதையின் தீக்குளிப்புப் பற்றி அறிந்தவள், மீளவும் கல் ஆகிறாள் என நிறைவுகிறது.

இந்தப் பதிவு இளைய தலைமுறையினருக்கானது. சமுதாயப் பிரக்ஞை மிக்க, தொலை நோக்குச் சிந்தனை மிக்க இளைய தலைமுறையினருக்கானது.
தமிழ் இளைஞர்களே! நீங்கள் செயற்பட வேண்டிய தருணமிது. தமிழ்த் தேசியத்தைப் பற்றிக் கவலைப்பட அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்கள் வழியில் செல்லட்டும். ஆனால் தமிழர்களின் வர்க்க விடுதலை, சமூக விடுதலை பற்றிக் கவலைப்படுவதற்கு , செயற்படுவதற்கு யாருளர்? தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. வடக்கில் அது போன்ற அமைப்பொன்றும் இல்லை. அத்தகைய மக்கள் விடுதலை அமைப்பொன்றின் தேவை உள்ள காலகட்டம் இது. அதன் பெயர் மக்கள் விடுதலை அணி, மக்கள் விடுதலை அமைப்பு என்று கூட இருக்கலாம். இளைஞர்களே1 சிந்தியுங்கள்! இப்பதிவு உங்களில் யாருக்காவது ஒரு பொறியினைத் தட்டி விடுமானால் அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கம்.
நீங்கள் ஒவ்வொருவரும் வாழும் , உங்கள் ஊரில் உள்ள மக்களைப் பாருங்கள். சமூகப் பிரிவுகள் , வர்க்கப்பிரிவுகளாக அவர்கள் பிரிந்து கிடக்கினறார்கள். அவர்களின் வர்க்க விடுதலை பற்றி, சமூக விடுதலை பற்றிச் சிந்திப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்? அவர்களைப் பற்றித் தொலை நோக்குடன் சிந்தியுங்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்களும். சமூகப்பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நீங்கள் அனைவரும் ஒரு வர்க்கமாக ஒன்றிணைந்துதான் இருக்கின்றீர்கள். வர்க்கமாக ஒன்றிணைவதை உங்களுக்கிடையில் நிலவும் சமூகப் பிரிவுகள் தடுத்து நிற்கின்றன. அதைப் புரிந்து கொள்ளுங்கள். செயற்படுங்கள்.

நடிகர் மம்முட்டியின் சிறந்த படங்களிலொன்று 'மதில்கள்'' . ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தேர்தெடுத்த இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிப்புக்கான் 25 தேர்வுகளில் ஒன்றாக இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் மம்முட்டியின் நடிப்பும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, இயக்கம் & தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் 1990ற்கான இந்திய மத்திய அரசின் நான்கு விருதுகளை இயக்கம், நடிப்பு , ஒலிப்பதிவு & சிறந்த பிராந்தியத் திரைப்படம் ஆகியவற்றுக்காகப் பெற்றது. சிறந்த நடிப்புக்காக மம்முட்டிக்கு இப்படத்திற்காகவும், 'ஒரு வடக்கன் வீரகதா'வுக்காகவும் கிடைத்தது. ஒரே நேரத்தில் இவ்விதம் இரு படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்ற ஒரே நடிகர் மம்முட்டியாக மட்டுமேயிருப்பார்.
இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீர். அது ஒரு குறுநாவல். அவரது சொந்தச் சிறை அனுபவத்தின் அடிப்படையில் உருவான சுயசரிதை நாவலாக அந்நாவல் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுவர்.
கதை இதுதான்: தேசத்துரோகக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற அரசியல் கைதி பஷீர். அங்கிருக்கும் பெண்களின் சிறையில் கொலைக்குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி நாராயணி. ஆண்களின் சிறைப்பகுதியையும், பெண்களின் சிறைப்பகுதியையும் பிரிக்கின்றது நெடுமதில்.
பஷீருக்கும், நாராயணிக்குமிடையில் உரையாடல்கள் மூலம் காதல் மலர்கின்றது. படம் முழுவதும் நாராயணியைக் காட்டவே மாட்டார்கள். அவளது குரல் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும். அக்குரலுக்குச் சொந்தக்காரி மலையாள உலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரும், அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கும் நடிகை K. P. A. C. லலிதா. 2022இல் மறைந்து விட்டார். அவரது குரல், அதில் தொனிக்கும் காதல், தாபம் எல்லாம் கேட்பவர் உள்ளங்களைக் கவர்வதுடன் உலுப்பியும் விடக்கூடியவை.

- பேராசிரியர் க.கைலாசபதி -
ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இரமணிதரன் கந்தையா, சித்தார்த்த சே குவேரா என்னும் பெயரில் சிறுகதை, கவிதை எழுதி வருபவர். பதிவுகள் இணையத் தளத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இடம் பெற்ற விவாதத்தளத்தில் திண்ணை தூங்கி என்னும் பெயரில் விவாதங்கள் பலவற்றில் பங்கு பற்றியவர்.
செயற்கைத் தொழில் நுட்பம், 'கிராபிக்ஸ்' மென்பொருட்கள் பாவித்து இவர் உருவாக்கி வரும் 'டிஹிட்டல்' ஓவியங்கள், 'அனிமேஷன்'கள் முகநூலில் பலரையும் கவர்ந்தவை.
அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் பலரின் புகைப்படங்களை மேற்படி தொழில் நுட்பங்களைப் பாவித்து , உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் 'டிஜிட்டல்' ஓவியங்களாக்கி வருகின்றார். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு: இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah)
இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) ஒரு குறிப்பிடத்தக்க ஈழத்து எழுத்தாளர் ஆவார். ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.

- முன்றிலில் பெரிய நந்தியின் சிலை -
யப்பானில் உள்ள தென் பகுதி தீவான குயிசு (Kyushu) வின் உள்ளே ஒரு சிறிய நகரம் (Dazaifu) சென்றோம். அங்கு ஒரு புராதனமான ஷின்டோ கோவில் உள்ளது. அது காலை நேரம். மக்கள் அதிகமாக வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அங்கு அந்த கோவிலின் முன்பாக நின்று மக்களை வேடிக்கை பார்த்தபடி நின்றபோது, எனக்கு ஒரு வித்தியாசமான காட்சி தரிசனமாகியது. அந்த முன்றிலில் பெரிய நந்தியின் சிலை இருந்தது. அது வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக இந்திய சிவன் கோவில்களில் கருங்கல்லால் நந்தியை பார்த்திருக்கிறேன். அது பார்த்தபோது, நிழலில் இரை மீட்டியபடி இயல்பாக படுத்திருப்பது போன்ற நினைக்கத் தோன்றும். ஆனால், இங்கு பார்த்தபோது இன்னமும் பாரமான வண்டியை இழுத்தபடி செல்லும் களைத்த காளை மாடாகத் தெரிந்தது. உருவாக்கிய கலைஞனின் எண்ணமும் அதுவாகவே இருக்க வேண்டும். அதனது முகம் தனியாக உடலைவிட மினுக்கியது காரணம் , யப்பானிய பள்ளி மாணவர்கள் வரிசையாக வந்து அந்த நந்தியின் முகத்தில் தொடுவதும் முகத்தை வைத்து அதனருகே நின்று படம் எடுப்பதுமாக இருந்தார்கள். அவர்கள் செய்வதில் ஒரு பிரார்த்தனையின் படிமம் தெரிந்தது. எல்லோரும் பாடசாலை சீருடையில் இருந்ததால் 12 வகுப்பில் படிக்கும் இளவயதினர் போலிருந்தார்கள். நந்தி சிலையருகே நாங்கள் செல்வதற்கு சந்தர்ப்பம் தராமல் தொடர்ந்து மாணவர்கள் வரிசையாக வந்தபடியிருந்தனர்.
இந்த காளையில் உருவத்தில் இரகசியம் ஏதோ இருக்கவேண்டும் என்ற என் நினைவு மனதை கோடைகாலத்து இலையானாக மொய்தபடி இருக்க அந்த ஆலயத்தின் உட்சென்றேன். ஆலயம், மரங்கள் பூங்கா என அழகான பின்னணியில் இருந்தது . இந்த ஷின்டோ ஆலயம் 903இல் இறந்த ( Michizane) மிசிசான் என்ற ஒரு அறிஞரது சடலத்தை கொயோட்டாவிலிருந்து (Kyoto) வண்டியில் வைத்து இழுத்து வந்த இந்த காளை மாடு , வண்டி இந்த இடத்தை வந்ததும் நகர மறுத்துவிட்ட தாகவும், அதனால் மக்கள் இதுவே அந்த அறிஞரின் இறுதியான இடமென நினைத்து இங்கே அவரது சடலத்தை அடக்கம் செய்து அவருக்கு சமாதி கட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த சமாதியருகே இந்த ஷின்டோ ஆலயம் உருவாகியது. ஆலய முன்றலில் சடலத்தை இங்+++++++++++++++++++++ கொண்டு வந்த அந்த காளையின் உருவம் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது என அறிந்தேன்.

ஈழத்து யாழ். மண் ஈன்றெடுத்த எண்ணிலடங்காத புலமையாளர்கள் பலர். அவர்களுள் எழுத்துத் துறையில் பிரவேசமாகி தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய பெருமை மிகு சான்றோர்கள் வரிசையில் புலம் பெயர் எழுத்தாளர்களுக்கும் கணிசமான பங்களிப்பு இருக்கின்றது. எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர். ஈழத்தில் யாழ். மண்ணில் அவதாரம் எடுத்த அவர் இன்று புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் மணமும் தமிழ் உணர்வும் இலக்கிய படைப்பின் மீது கொண்ட தீராத அவாவினாலும் தன்னை ஓர் எழுத்தாளராக அடையாளப்படுத்திக்கொண்டு சிறுகதை, நாவல், மேடை நாடகங்கள், திரைக்கதை, சிறுவர் நாடகங்கள் எனப் பல்வேறு தளங்களில் நின்று பயணிக்கின்றார். இவருடைய எழுத்துக்கள் தமிழ்ச் சமூகத்தையும், அதன் பண்பாடு, பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்தும் அதேவேளை புலம்பெயர் நாடுகளில் அந்தப் பண்பாடு சார் பழக்கவழக்கங்கள் எவ்வாறான தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக சித்திரித்துள்ளன.
குரு அரவிந்தனின் படைப்புகளான இதுதான் பாசம் என்பதா?, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று ஆகிய சிறுகதைகளிலும் உறங்குமோ காதல் நெஞ்சம்?, உன்னருகே நான் இருந்தால், எங்கே அந்த வெண்ணிலா?, நீர்மூழ்கி நீரில் மூழ்கி… ஆகிய நாவல்களிலும் இவரது சமூக நோக்கு நன்கு வெளிப்படுவதைக் காணலாம். இக்கட்டுரையில் குரு அரவிந்தன் அவர்களால் படைப்பாக்கம் செய்யப்பட்ட “இழப்பு” ,“மூன்றாவது பெண்”, “பனிச்சருக்கல்” , “என் காதலி ஒரு கண்ணகி” ஆகிய சிறுகதைகளில் வெளிப்படும் சமூகப்பார்வை பற்றியே ஆராயப்படுகின்றது.


'அதிகாலை வேளையில் அடிக்கடி அந்த உருவம், கனவில்வந்து பாடாய்ப் படுத்துகிறது. முன்னர் பார்த்திராத கோலத்தில், விலங்கினதும் பெண்ணினதும் கலவையானதொரு தோற்றத்தில் அது தோன்றி மறைகிறது. உருவத்தில் பெண்ணின் முகம் சற்றுத் தெளிவாகத் தெரியும்போது, அந்த விம்பம் தன் தாயின் சாயலையொத்து இருப்பதை சயந்தன் உணர்ந்தான். அம்மாவின் கால்களுக்கு இடையே தொங்கும் சேலைப் பகுதியைப் பதித்து ஏணையாக்கி, அதற்குள் தான் இருப்பது போலத் தோன்றிய தருணங்களில் மூச்சு முட்டி அவனுக்கு விழிப்பு வந்துவிடும்...
அம்மாவின் மடியில் தான் இருந்ததைப் போன்று, வரிச்சித்திரத்தில் தாய்விலங்கும் குட்டியும் இணைந்திருந்ததைச் சயந்தன் அவதானித்தான். அந்த வரிவடிவம் கங்காரு என்னும் மிருகத்தின் உருவம் என அறிந்ததும், தான் பார்த்த கோட்டுச் சித்திரத்துக்கு முடிந்தவரை முழுமையான உருவம் கொடுத்து யோசித்தான்.....'
இந்த வரிகளை வாசிக்கும் போது கங்காருவுடனும் சயந்தனுடனும் சேர்ந்து, உளவியல் மருத்துவரான சிக்மண்ட் ஃபுரொய்ட் (Sigmund Freud )உம் ஞாபகத்தில் வரக் கூடும். கனவுகளுக்கு அர்த்தம் சொன்னவர்தான் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இந்த உளநோய் மருத்துவர்.

எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே' தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளையும் வாசித்தேன். அதை ஒட்டியதாக என்னுடைய இந்தக் குறிப்புகள் அமைந்துள்ளன.அவரது கதைகள் பிரதானமாக இரண்டு அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.
1 புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள், அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து வாழ்வதில் எதிர்கொள்கின்ற சவால்களும் சிக்கல்களும். (இங்கு கனடா மையமாகக் கொள்ளப்படுகிறது.)
2 பெண்கள் மீது ஆண்களினால் பாலியல்ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளும் துன்புறுத்தல்களும்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள், அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து வாழ்வதில் எதிர்கொள்கின்ற சவால்களும் சிக்கல்களும்!
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களில் புதிய தலைமுறையினர் உருவாகியுள்ளனர். இவர்கள் அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து கொள்வதில் பெரியளவிலான சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை. மாறாக முன்னர் புலம்பெயர்ந்தவர்களும் புதிதாகப் புலம்பெயர்ந்து செல்பவர்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். தலைமுறைகளுக்கு இடையிலான முரண்பட்ட நிலைமைகளும் புதிய சூழலை எதிர்கொள்வதில் அவர்கள் அடைகின்ற சிக்கல்களும் பல கதைகளில் நுணுக்கமாக எடுத்தாளப்பட்டுள்ளன.

அண்மையில் 'வாட்ஸ்அப்' (WhatsApp) மூலம் நண்பர் ஒருவரிடமிருந்து செய்தி வந்திருந்தது. Please do me a favour என்ற தகவலைப் பார்த்ததும் விளங்கியது நண்பரின் 'வாட்ஸ்அப்' கணக்கு கணனித் திருடன் ஒருவனால் அபகரிக்கப்பட்டு விட்டதென. அச்சமயம் நண்பரும் அலைபேசியில் அழைத்தார். தன் 'வாட்ஸ்அப்' கணக்கு இவ்விதம் கணனித் திருடன் ஒருவனால் திருடப்பட்ட விடயத்தைக் கூறினார். ஒருவர் இலங்கையிலிருந்து பணம் அனுப்பும்படி தகவலைத் தன் நண்பர்களுக்கு அனுப்புவதாகக் கூறினார். அவர் தன் 'வாட்ஸ்அப்' கணக்கை மீண்டும் இயுங்கும் நிலையில் பெறுவதற்கிடையில் அவரது நண்பர்களில் ஒருவர் பணம் அனுப்பி விட்டிருந்தார்.
இவ்விதம் அவரது 'வாட்ஸ்அப்' கணக்குத் திருடப்பட்டதை அவர் தவிர்த்திருக்க முடியாதா? இச்சம்பவத்தைப் பொறுத்தவரையில் நிச்சயம் அவர் தடுத்திருக்கலாம். அவரது 'வாட்ஸ்அப்' கணக்கின் பாவனையாளர் பெயர், கடவுச்சொள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட கணனித்திருடர் பெற்று விட்டிருக்கின்றார். அவர் அவற்றைப் பாவித்து நண்பரின் 'வாட்ஸ்அப்' கணக்குக்குள் செல்ல முயற்சி செய்திருக்கின்றார். புதியதொரு அலைபேசியில் யாரோ ஒருவர் புக முயற்சி செய்வதைப்பார்த்த 'வாட்ஸ்அப்' நண்பரின் அலைபேசிக்குத் தகவலை அனுப்பி யாரோ ஒருவர் அவரது கணக்குக்குள் புக முயற்சி செய்கிறார். அவர் என்றால் அனுப்பும் இலக்கத்தைப்பாவித்து உட் செல்லவும். அத்துடன் அவ்விலக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமென்றும் கூறியுள்ளது.

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள்
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு
வந்து விடுகின்றன.
இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.
நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு
நட்பு ஒப்பந்தம் செய்து
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
எண்ணங்கள் எல்லாமே
என்னைச் சுற்றிக் குளிர்காலம்
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.
அடுத்தவருடமாவது
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும்
எண்ணங்களைத் தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. அவர் குற்றமிழைத்திருக்கின்றார். கைது செய்யபப்ட்டுள்ளார். இதற்கு எதிர்வினையாற்றிய தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலர் ரணில் தன் வீட்டையே தான் படித்த கல்லூரிக்குக் கொடுத்தார். அதன் பெறுமதி 200 கோடி. அதைக்கொடுத்தார். இதைக்கொடுத்தார். பதவிக்குச் சம்பளம் வாங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியை சிறு குற்றத்துக்காகக் கைது செய்யக்கூடாது. இப்படி ஆளுக்கு ஆள் கூறுகின்றார்கள்.
இவர்களிடம் ஒரு கேள்வி?
மிகப்பெரும் பணக்காரரும், கொடை வள்ளலுமான ஒருவர் மிகவும் வேகமாகத் தன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றார். 40 கிலோமீற்றர்/மணி வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் 100கிலோமீற்றர் / மணி வேகத்தில் செல்கின்றார். அவரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். அப்பொழுதும் இப்படித்தான் ரணில் 200 கோடி கொடுத்தார்,அவருக்கு அபராதக் கட்டணம் விதித்து 'டிக்கற்'கொடுக்கக்கூடாது என்பீர்களா?

அடுத்த இரண்டு பகுதிகளும் ('திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை' , 'சுருக்கம்' & அணுகுமுறை) இருபத்து நான்கு வயது இளைஞனான பாரதி வரலாற்றில் எந்தப் புள்ளியில் நிறகின்றான் என்பதை ஆராய்வதுடன், அவனது சரியான ஆளுமையை முடிவு செய்வதுமாகும். அவன் மதவாதியா, தீவிரவாதியா, ஆங்கிலேயருக்கெதிரான் தேசிய விடுதலைப்போரில் அவனது நிலைப்பாடும், செயற்பாடும் எவையெவை என்பவை பற்றித் தர்க்கபூர்வமாக ஆராய்வதாகும்.
அவற்றை ஆராய்வதற்கு முதல் ஜோதிகுமார் பாரதியாரின் எழுத்தின் நோக்கம், எழுத்தின் தன்மை பற்றிச் சிறிது கவனம் செலுத்துகின்றார்.
பாரதியின் எழுத்தின் நோக்கமும், தன்மையும்
பாரதியாரின் எழுத்தின் முக்கிய பண்பாக அவதானிக்கக்கூடியது அவரது ஆழமும், எளிமையும் கூடிய மொழி நடை. உதாரணத்துக்கு 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையைக் கூறலாம். பொருள் முதல்வாதம், கருத்து முத்ல்வாதம் பற்றிய தர்க்கமே அதன் அடிநாதம். ஆனால் அதனைக்கண்டடைவது முறையான, தர்க்கமொன்றின் மூலமே சாத்தியம். ஆனால் அவர் அக்கவிதையில் பாவித்துள்ள மொழி நடை என்பது மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியது. அதனால் விளையும் முக்கிய நன்மைக்களிலொன்று - வாசிப்பின் பல்வேறு படி நிலைகளிலுள்ள வாசகர்களாலும் இக்கவிதையை எளிதாக வாசிகக் முடியும். ஆனால் , புரிதல்தான் அவரவர் வாசிக்கும், சிந்திக்கும் திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப வேறுபடும்.
இவ்விதமாக பாரதியார் தன் எழுத்து நடையைப் பாவித்ததற்கு ஒரு நோக்கம் இருந்ததா என்பது பற்றித் தன் கவனத்தைச் செலுத்துகின்றார் ஆய்வாளர் ஜோதிகுமார். பாரதியாரின் 'பாரதகுமாரிகள்' கட்டுரையையே இதற்கும் ஆதாரமாகக்கொண்டு அவர் பின்வருமாறு கூறுவார்:
“நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும், அவர்களது ஆன்மாவும் இருளடைந்துபோக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச் செயல் வேறில்லை. ஞானக் கிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது "
இது பற்றி மேலும் கூறுகையில் "எழுத்தின் நோக்கத்தை, இதைவிட நேர்த்தியாகச் சொல்வது கடினம். இவ் இளவயதில், இவ் இளைஞன் தனது எழுத்தின் நோக்கத்திற்கான மேற்படி தாரக மந்திரத்தை இப்படியாக வரையறுத்துக் கொள்வது மாத்திரம் இல்லாமல், மேற்படி எழுத்தானது மக்களை அதிலும் குறிப்பாக, மாதரைச் சென்றடைய வேண்டிய தேவைப்பாட்டினையும் இவன் நன்கு உணர்வதினை, மேற்படி வரிகள் எமக்கு எடுத்தியம்புவதாக உள்ளன" என்று கூறுவார்.

(* புகைப்படம் - நன்றி - தாயகம்)
எழுத்தாளர், கலை,இலக்கிய ஆர்வலர், நூல் வெளியீட்டாளர், நூல் சேகரிப்பாளர், நூல் ஆவணச் செயற்பாட்டாளர் எனப் பன்முக இலக்கியப்பங்களிப்பைச் செய்து வருபவர் பத்மநாப ஐயர் அவர்கள். அவரது பிறநத நாள் ஆகஸ்ட் 24. அதனையொட்டிக் கலாநிதி சுதர்சன் செல்லத்துரை எழுதிய கட்டுரை. அவருக்கும் பதிவுகள் இணைய இதழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
“தன் தந்தை கொல்லப்பட்டதைத் தனயன் மறந்துபோவான். ஆனால், தன் பூட்டனின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதை, அவன் ஒருபோதும் மறந்துபோகமாட்டான்.” - மாக்கியவல்லி.
பண்பாட்டு விடுதலைக்கான தேசியப் போராட்டங்கள் உலகில் நடைபெறும்போதெல்லாம் பண்பாட்டழிப்பே ஆதிக்கவாதிகளின் ஒரேகுறியாக இருந்துவந்துள்ளது. அழிக்கப்பட்டதும் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதுமான பண்பாட்டை மீள நிலைநிறுத்துவதற்காக உலகெங்கிலும் நிகழும் போராட்டங்கள் இருவகை. ஒன்று, ஆயுதத்தால் நிகழ்வது. மற்றையது, எழுத்தினால் நிகழ்வது. முன்னையதை ஆயுத அரசியல் என்றும் பின்னையதை எழுத்து அரசியல் என்றும் குறிக்கலாம். பண்பாட்டு அழிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஆயுத அரசியலைவிடவும் எழுத்து அரசியலுக்கு அதிக முதன்மை உள்ளது. எழுத்து என்பது அர்த்தம் நிறைந்த அரசியல் சமூக பண்பாட்டு இயக்கியாக, வலுவுள்ள பேசும் சாதனமாக, சுடுகுழலைவிடவும் வன்மையான ஆயுதமாக எல்லாம் விடுதலைக்காகப் போராடும் நிலத்தில் முக்கியமான பாத்திரமேற்றலை நிகழ்த்துகிறது. காலனித்துவம், பேரரசுவாதம் என்பவற்றுக்கெதிரான வரலாற்றுரீதியான பண்பாட்டுப் போராட்டங்கள் வெற்றிபெற்றனவோ, இல்லையோ அப்போராட்டங்களில் இடம்பெற்ற எழுத்து அரசியலுக்கு, அப்போராட்டங்களை இயக்கின என்பதிலும் பதிவாக்கின என்பதிலும் முக்கிய பங்குண்டு.
எழுத்து அரசியல் என்பது வெறுமனே மலினமானதும் பொதுவானதுமான கட்சி அரசியல் பற்றியதல்ல. அது ஓர் இனத்தின் அனைத்துப் பண்பாட்டுக்கூறுகளையும் முதன்மைப்படுத்திய, கவிதையிலிருந்து விமர்சனம்வரையும், சடங்கிலிருந்து நவீன ஆற்றுகைக்கலைகள்வரையும், துண்டுப்பிரசுரத்திலிருந்து சுவரொட்டிவரையும், இனவரலாற்றிலிருந்து இலக்கிய வரலாறுவரையும், பதிப்பிலிருந்து விநியோகம்வரையும் நீண்டு விரிந்த அர்த்தப்பரப்பைக் கொண்டது. முக்கியமாக, காலந்தோறும் வரலாறு சுமந்த பண்பாட்டு ஆவணங்களைக்கொண்டு உரையாடுவதாக அது அமைந்திருக்கும். ஓர் இனத்தின் உரிமை, அழிவுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகும்போது, அந்த இனம் தனது பண்பாட்டு முதுசொத்திலிருந்து தனக்கான அரசியலை வடிவமைத்துக்கொள்ளும்.
பண்பாட்டு அழிப்புக்கு எதிரான கலாசார எதிர்ப்புமுகமாக மட்டுமன்றி, புவியியல்சார் எல்லைகளால் வரையறுத்துக்கொள்ளப்படும் தேசத்துக்கு அப்பால் அரசியல், சமூக, பண்பாட்டுக் கருத்துநிலைகள் நிர்ணயிக்கும் தேசத்தை, அறிவுநிலையில் கட்டியெழுப்புவதும் நிலைநிறுத்துவதும் எழுத்து அரசியலே. ஆயுதப் போராட்ட அரசியல் வரலாற்றினை அதிகம் பேசியும் எழுதியும் விவாதித்தும்வரும் சூழலில், அதைவிடவும் முக்கியமான, ஆயுதப் போராட்டத்திற்கும் அடிப்படையான, ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரும் வலிமையோடு விளங்குவதும் இயங்குவதுமான எழுத்துவழி நிகழ்ந்த பண்பாட்டழிப்புக்கு எதிரான போராட்டங்களைப் பேசுவதும் எழுதுவதும் விவாதிப்பதும் அரிது என்றே கூறலாம்.

* ஓவியம் - AI
எங்கே போயின எல்லாமே?
வீட்டைச்சுற்றி
வாழ்ந்த தென்னை மரங்கள்.
வீட்டு வாசலைப் பார்த்தபடி
காவல்நின்ற பலா.
கிணற்றடியில் நின்ற வாழைகள்.
தென்மேற்குப் பருவக்காற்றில்
மோகங்கொண்டு எம்மை மயக்கிய
முற்றத்தில் நிலைத்து நின்ற
வேம்பும், கறி வேப்பிலை மரமும்.
கூடிவந்து குந்தியிருந்து
'குசாலம்'விசாரித்த பறவைகள்.
கோடிக்குள் குடியிருந்த பப்பாளி.
வாசம் பரப்பிய மல்லிகை.
பின் தோட்டத்தில்
செழித்து நின்று சுவைதந்த
பாண்டியும்,அம்பலவியும்.
வீட்டைச் சுற்றிச்
சோடிச்சு நின்ற பூமரங்கள்!"
அங்கேதான் நாம் வாழ்ந்தோம் என்ற
எம் அடையாளங்கள்
அனைத்தையும் புதிதாக வந்தவர்கள்
முற்றாக அழித்துவிட்டு
காற்றும் வராதபடி புதிதாக
அடுக்குமாடி வீடொன்றைக் கட்டிவிட,
இப்போது அது
இயற்கையைத்தடுத்துத்
துரத்திவிட்டு உயர்ந்து நிற்கின்றது.

இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் பாரதியின் மூன்று முரண்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவையாவன்; அவனது சிந்தையில் காணப்படும் முரண், அவன் அரசியலில் தென்படும் முரண், அவன் எழுத்தில் புலப்படும் முரண். இவ்விதம் ஆரம்பமாகும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் தொடர்ந்து இம்முரண்கள் பற்றி விரிவாகத் தர்க்கம் செய்வார் என்றே வாசிக்கும் எவரும் உணர்வர், ஆனால் 'இம்முரண்கள் ஒவ்வொன்றும் , தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப விவாதிக்கப்படுவது விரும்பத்தக்கது' என்பதுடன் மேலும் அம்முரண்கள் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து விடுகின்றார் ஜோதிகுமார். 'இதன் காரணத்தினாலேயே ,இக்கட்டுரைத்தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன' என்றும் கூறுகின்றார். இம்முரண்களைப்பற்றி விரிவாகத் தர்க்கத்தைத் தொடர்ந்திருந்தால் அது மிகவும் பயனுடையதாகவிருந்திருக்கும். பாரதியின் முரண்கள் எல்லாம் அவனது தேடலையும், வளர்ச்சியையும் , அவ்வளர்ச்சியினூடு அவனிடம் ஏற்பட்ட முதிர்ச்சியினையும், தெளிவினையும் வெளிப்படுத்துவதாக அத்தர்க்கம் அமைந்திருக்கும். அதற்கான சந்தர்ப்பத்தைத் தவற் விட்டுவிட்டார் ஜோதிகுமார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் , விரிவாக இம்முரண்கள் பற்றிய தர்க்கத்தை அவர் தொடர்வார் என்று எதிர்பார்ப்போம்.
அடுத்து அவர் கவனம் 24 வயது இளைஞனான பாரதியின் மானுட இருப்பு, மரணம், சிறை, ஆங்கிலேயரின் மத ரீதியிலான பிரித்தாளும் தந்திரம், மிதவாதப் போக்கில் செயற்பட்டுக்கொண்டிருந்த இந்திய காங்கிரஸின் அம்மிதவாதப் போக்கிற்கு எதிரான விமர்சனங்கள், அவன் மீதான திலகரின் தீவிரவாதப் போக்கின் தாக்கங்கள், அக்கால உலக அரசியலில் அவனுக்கிருந்த் அறிவு, தெளிவு, ருஷய புரட்சியின் அடித்தளம் பற்றிய புரிதல் போன்றவற்றில் திரும்பி விடுகிறது. அவை பற்றிய விபரிப்புகளிலும், கேள்விகளிலும் மூழ்கி விடுகின்றது. இவை பல தகவல்களை அறிமுகப்படுத்தவும் செய்கின்றன.

இருபத்திநான்காம் வயதில் பாரதி:: ஆன்ம உணர்ந்திறன்
இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் 'மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.' என்று குறிப்பிடுகின்ரார். இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. அது - ஜோதிகுமார் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதுதான். மார்க்சியவாதிகள் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்பதில்லை. அவர்கள் பொருள்முதல்வாதிகள். ஆன்மா என்று ஒன்றிருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. உண்மையில் ஆன்மா என்று இங்கு ஜோதிகுமார் கருதுவது எதனை?
ஆன்மா என்று ஜோதிகுமார் கருதுவது , பொருள்முதல்வாதிகள் கருதுவது போல் , உடலிலிருந்து தனித்து இயங்குமொன்றினை அல்ல , மாறாகச் சிந்தையைத்தான். அதனைத்தான் இந்நெடுங்கட்டுரையில் மூன்றாம் ப்குதியில் வரும் இவ்வரி புலப்படுத்துகின்றது: "ஓன்று அவனது ஆன்மாவில் (சிந்தையில்) தட்டுப்படக் கூடிய முரண்''
இங்கு பாரதியார் ஆன்மாவுக்கு இன்னுமோர் அர்த்தமாகச் சிந்தை என்று கருதுவதையும் அறிய முடிகின்றது. சிந்தை என்பது மார்க்சியவாதிகளின் கருத்துப்படி பொருள்வயமான மூளையின் செயற்பாடு. மூளையில்லையேல் சிந்தையில்லை என்பது அவர்கள் கருத்து.மாறாகக் கருத்துமுதல்வாதிகளோ ஆன்மா என்பது உடலிலிருந்து வேறானது என்று கருதுவர்.
இப்பகுதியில் பாரதியார் மதம், கடவுள் பற்றிய தேடல்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. கடவுள்கள் பலர் இருப்பதை விவேகானந்தரைப் போல் பாரதியும் நிராகரிக்கின்றான். பாரதியார் மீதான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விரிவாக ஆராயப்படுகின்றது. பிரம்மம் என்னும் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படை . அதே சமயம் இவ்விதமான கடவுள், மதம் பற்றிய தேடல்கள் மானுட சமுதாயத்திலிருந்து விலகி, தனித்து , தவங்களில் ஈடுபடுவதாக இருக்கக் கூடாது. அது அங்கிருந்து இறங்கி வந்து மக்களுடன் கலந்து நிகழ்வதாக இருக்க வேண்டுமென்பது பாரதியின் நிலைப்பாடு. இதனை அவர் எவ்வாறு வந்தடைந்தார்?