நெடுங்கதை - சுதந்திரபுரத்தில்... - முல்லைஅமுதன் -

* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி : VNG
1
அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
மனதுள் புழுங்கினான்.
மணியமென்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சுதந்திரபுரத்தில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன்..அவனின் மனைவி சுகந்தியைத் திருமணம் செய்து ஐந்துவருடங்கள் ஆகிவிட்டது.எனினும் குழந்தைகளில்லை.ஆனாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்துவந்தனர். ஊரிலும் அவர்களுக்கு நல்லபெயர்.
கடைக்கு பலரும் வந்து போவார்கள்.
சிறுசிறு பொருட்களைவாங்க வருபவர்கள்..உதவி கேட்டு வருபவர்கள்..ஒசிப்பேப்பர் வாசிக்கவருபவர்கள்...சுகத்தியுடன் அரட்டை அடைக்க வருபவர்கள்..எப்போதும் கடை கலகலப்பாகவே இருக்கும். கடையை மூடியபின்பே வீட்டிற்குப் போவதால் கடைக்குப் பின் புறமாகவே மதிய உணவை சமைத்துச் சாப்பிடுவார்கள்.
'எதற்கு வீடு..?அதை விற்றுவிட்டு கடையைக் கொஞ்சம் பெருப்பிக்கலாமே' சுப்பையா அண்ணரின் ஆலோசனையை முற்றாக இருவரும் மறுதலித்தனர்.
'இன்றைக்கு கடை நல்ல வருமானம் தருகிறது.அதற்காக வீட்டைவிற்ரு கடையைப் பெருப்பிக்கும் எண்ணத்தால் ஒருவேளை கடை நடத்தமுடியாமல்போனால் வீடாவது மிஞ்சுமே?கடைசிக் காலத்திலாதாவது எங்களுக்கு இருக்கட்டுமே..வீடு என்ற ஒன்று குடும்பத்திற்கு வேணும்'
சுப்பையா அண்ணர் மறு பேச்சு பேசவேயில்லை..தலையை ஆட்டினார்..


கல்லூரி வாழ்க்கையில்தான் எத்தனை ஆயிரம் கதைகள் இருந்தாலும்,மறக்கமுடியாத,மனசை விட்டுப் பிரிக்க முடியாத ஒரு கதைதான் இது. 1972 களில் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம்.கல்லூரி மைதானத்தில் துடுப்பாட்டப் போட்டி(Cricket Match)ஆரம்பித்துவிட்டால் போதும், மைதானத்தைச் சுற்றி ஆட்டத்தைப்பார்ப்போரின் எண்ணிக்கை நிறைந்து வழியும்.ஒரு மூலையில் கூட்டமாக இருந்து,Pongos ஐயும் வாசித்தபடி College College என்று ஒரு பகுதி ஓங்கி ஒலியெழுப்ப,மற்றைய பகுதி Hindu College என்று உரத்துக்கத்த,எங்களின் வேகப்பந்து வீச்சாளன் வசந்தனும் துள்ளிவந்து பந்தை வீச விக்கற்றும் பறக்க நாங்களும் துள்ளிக் குதிப்போம்.காற்றில் புழுதி கிளம்ப அரசமரத்தின் இலைகளும் சரசரக்க,நீலமும்,வெள்ளையும் கலந்த கல்லூரியின்கொடி காற்றில் அசைந்து, பெருமிதமாக வெட வெடத்துப் பறக்கும். நீலவர்ணம் நிறைந்த வானம்.வெக்கையைக் கக்கும் வெயில்.என்றாலும் கூட வசந்தனின் சிரிப்பின் ஒளிவீச்சு மைதானத்தை நிறைத்து நிற்கும்.இப்படித்தான் எங்களுடைய ‘டட்ட டாங்'எல்லோருக்கும் அறிமுகமானார்.

தாஜ்மஹாலைக் கட்டிய மன்னர் ஷாஜகானின் தந்தையான முகலாய மன்னர் ஜஹாங்கீர் (Emperor Jahangir) இறுதி காலத்தில் மரணப் படுக்கையிலிருந்தபோது, அவரது உதவியாளர் ஒருவர்,“இந்த இறுதிக் காலத்தில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள், மகாராஜா?” என்று கேட்டபோது, அவர்,“காஷ்மீர் மட்டுமே; மற்றவை பிரயோஜனமில்லை,” என்றார்.
அழகான உடை பெண்ணின்







மனிதனின் மெய்யில் தோன்றும் சில உணர்வுகளை அவரவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் குறிப்புகள் மூலம் அறியலாம்.பேச்சுமொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலைசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்பெறுகின்றன. மெய்யின் படுதல் மெய்ப்பாடு, அதாவது, உணர்ச்சி மெய்யில்(புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும். உண்மைத் தோற்றம் உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறுகிறது. மெய்ப்பாடுகள் என்பவை மிகவும் நுண்மையானவை.அத்தகைய மெய்பப்பாடுகளை குறுந்தொகையில் மூலம் காணலாம்.



தாரை என்ற சொல்லுக்குக் ’கண்ணின் மணி’ என்று பொருள் தருகிறது திவாகரம்.தாரை, கிட்கிந்தை நாட்டின் வானரகுல அரசன் வாலியின் மனைவி.சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளதையும், உன் உயிரை எடுப்பதற்காகவே அவன் வந்துள்ளான் என்று நம்மீது அன்புடையவர்கள் கூறினர் என்று சொன்னாள். இளையபெருமாள் கோபத்துடன் வருவதைக்கண்டு, தவறு செய்த வானரர்களைக் கடிந்து பேசிவிட்டு, தானே நேராக இலட்சுமணனிடன் சென்று இதமாகப்பேசி, அவன் கோபத்தைத் தணித்து, சுக்ரீவன் மீது பிழை இல்லை என்று புரியவைத்து, ஒரு ராசமாதாவாக நடந்துகொண்டாள். தாரையின் அழகு, புத்திசாலித்தனம்,அமைதி,தவறு செய்தவரிடத்து கண்டிக்கும் மனநிலை, வானர குலத்தைக்காக்க அவள் செய்யும் முயற்சி, வாலி இறந்ததால் கைம்மைத் தோற்றம் என்று பன்முகத்தன்மை கொண்ட தாரை குறித்துக் கம்பராமாயணம் கூறியுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

- இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.



சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









