பதிவுகளில் அன்று: றஞ்சியின் (சுவிஸ்) நூல் மதிப்புரைகள் இரண்டு!
பதிவுகள்.காம் யூன் 2005 இதழ் 66
நூல் அறிமுகம்: 'ஓவியம் வரையாத தூரிகை' - றஞ்சி (சுவிஸ்) -
இனங்களின் மொழிகளின், தேசங்களின் மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன் விடுதலைப்போராட்டங்கள் வன்முறையாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலக்கியம் வாழ்வின் ஆதாரங்களைச் தேடிச்செல்லக் கூடிய சூழ்நிலையாக உள்ளது. அந்த வகையில் 'ஓவியம் வரையாத தூரிகை' பெண்ணின் ஆத்மார்த்தமான குரல்களைப் பல்வேறு வடிவங்களில் கேட்கமுடிகிறது.
பெண்களின் கனவுத்தேசத்தின் விடுதலையிலும் அனைவரும் சமமாக வாழக்கூடிய புதிய விடியலிலும் அனாரின் கவிதைகள் ஆழ்ந்து நிற்கின்றன. நிகழ்வுகளின் மீதான கோபம், தாக்கங்கள், நிற, இன ஒடுக்குதலுக்கு அவதியுறுவோர் என பெண் ஒடுக்குமுறைக்கு தனது அனுபவங்களை வேதனையை எதிர்ப்பு உணர்வை வெளியிடும் பெண் குரலாக இவரின் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. அனாரினால் எடுத்தாளப்படும் சொற்களும் படிமங்களும் வித்தியாசமானவை. இன்று தமிழில் கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகா¢த்து வருகின்றன. உணர்வுகளை பாதிக்கும் வகையில் கவிதைகளை எழுதி வருபவர்களில் -எழுத்துலகில் குறுகிய காலத்தில் நன்கு அறியப்பட்ட கவிஞரான- அனாருக்கு முக்கிய இடம் உண்டு. இவரின் 'ஓவியம் வரையாத தூரிகை' பெண்ணின் மனஉணர்வுகளை பெண் நிலையில் நின்று பதிவு செய்கின்றன.