பயணத்தொடர்: ஐஸ்லாந்து (2) - நடேசன் -

எங்கள் முதல் நாள் பயணத்தின் முடிவில் ரீச்சவிக் அருகாமையில் ஒரு பண்ணையில் உள்ள சிறிய மரத்தால் ஆன கபின்(Cabin) எனப்படும் இடத்தில் தங்கியிருந்தோம். இங்கு மிகவும் சிறிதான ஒரு படுக்கை வைத்திருக்கக் கூடிய இடமும் திரும்பி உடலில் சவர்க்காரம் போடமுடியாத குளியலறையும் உள்ளது. இதுவரை காலத்தில் நான் இப்படி ஒரு இடத்தில் இராத் தங்கவில்லை. ஆனால் வெந்நீரும் ஹீட்டர் இருந்ததே போதுமாக இருந்தது .. தலைநகரிலும் மற்றும் ஒரு சில இடங்களைத் தவிர ஐஸ்லாந்தில் பெரும்பாலான தங்குமிடங்கள் இப்படியே. இவை வாடகை அதிகமில்லை என்பதால் அமரிக்கா ஐரோப்பாவிலிருந்து ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் இங்கு விடுமுறைக்கு வருகிறார்கள். நகரங்களில் உள்ள விடுதிகள் மிகவும் விலை கேட்டால் உடலில் மயிர்கூச்சம் ஏற்படும்.
ஐஸ்லாந்தைக் கரைகளால் வட்டமாக சுற்றி வரும் தெருப் பயணமே இங்கே பிரபலமானது. பல இடங்களில் நல்ல பாதையும் சில இடங்களில் கற்பாதையும் உள்ளது. இந்தப் பாதையால்போய் வருவதே ஒரு விதமான சாகசமே என்பதால் எங்கள் பயணமும் அதேதான். இங்குதான் அருவிகள் எரிமலைகள் , பனிப்பாறைகள் கறுப்பு கடற்கரைகள் அதிகம் ஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் எங்கள் பயணம் அத்திலாந்து சமுத்திரத்தின் கடலலை ஒரு பக்கமும் மலைகளை மறுபக்கமும் தடவியபடியே எங்களது பயணவான் சென்று கொண்டிருந்தது .
முதல் இடமாக ஸ்கோஃபொஸ் (Skógafoss)என்ற பிரசித்தமான ஒரு அருவியை நோக்கியே எங்கள் பயணமும் இருந்தது. இந்த அருவி ஆரம்பத்தில் கடலருகே இருந்ததாம். தற்பொழுது ஐந்து கிலோமீட்டர் முன்வழுக்கையில் தலைமயிர் மின்வாங்குவதுபோல் தள்ளிப் போய்விட்டது. இப்படியான மாற்றங்கள் மற்றைய இடங்களில் நடப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுக்கும் ஆனால் இங்கு ஒரு எரிமலை பொங்கி தனது குளம்புகளை தள்ளுவதன் மூலம் கடலை பின்னால் சில நாளில் தள்ளிவிடும்




” அதிகாரத்திற்கு எதிரான குரலாக இலக்கியச் செயல்பாடுகள் இன்றைக்குத் தேவையாக இருக்கிறது . உயர்ந்த விழுமியம், லட்சியம் கொண்டவை இலக்கியப் படைப்புகள். லட்சியவாதம்கொண்ட படைப்புகள் வாழ்க்கையை உயர்த்தும். அவ்வகைப்படைப்புகளை வாசகர்கள் படைக்க வேண்டும்.எழுத்தாளர்கள் எழுத வேண்டும்”

[ 2013இல் ,திருச்சி தேசியக் கல்லூரியில், கனடிய எழுத்துக்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. ‘கனடா: பல இடங்களின் தொகுப்பு’ என்ற தலைப்பில் இந்திய கனடிய ஆய்வுகள் சங்கம் இந்த மாநாட்டை நடத்தியது. வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த பின்வரும் ஆங்கிலக் கட்டுரை , Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan, முனைவர் ஆர். தாரணியால் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கட்டுரையின் தமிழாக்கம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலக் கட்டுரை இம்மொழிபெயர்ப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது]



மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில் இருந்து எனது தாயாரின் ஊரான சண்டிலிப்பாய்க்குத் துவிச்சக்கர வண்டியில் போகும் போது மகாஜனாவின் கட்டிட அமைப்பே என்னை முதலில் பிரமிக்க வைத்திருந்தது. இன்று அந்தப் பாடசாலையின் உயர்வகுப்பு மாணவனாக உள்ளே நுழைந்தபோது அதே பிரமிப்பில் மூழ்கிப் போயிருந்தேன். எனது அத்தான் அக்காவின் கணவர் பொ.கனகசபாபதி அவர்கள் மகாஜனாவில் அப்போது ஆசிரியராக இருந்ததால், எனது அக்காவின் விருப்பப்படி நானும் மகாஜனாவில் மாணவனாக இணைந்து கொண்டேன்.
ஓர் ஊர் அல்லது ஒரு தலம் அமைந்த இடம், அல்லது ஒரு தலம் குறித்த அதிகளவிலான இடப்பெயர் ஆராய்ச்சி, பல்வேறு நோக்குகளில் நடைபெற்றிருக்கும் எனில், அது ‘கதிர்காமம்’ என்பதற்கே என்பதை, இடப்பெயர் ஆய்வு பற்றிய ஈழத்து எழுத்துக்களை வாசித்தோர் நன்கு உணர்வர். ஈழத்தில், பல்லின பல்சமயச் சங்கமிப்பு நிகழும் இடங்களில், கதிர்காமம் முதன்மையானது. அதனால், அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில், அச்சொல் குறித்த அர்த்தப்படுத்தலும் அது குறித்த அவதானிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இப்பொருண்மை குறித்த அறிமுகக் கட்டுரையாகவே இது அமைகிறது. ஆகையால், ‘கதிர்காமம்’ என்பதன் இடப்பெயர் அர்த்தம் குறித்;து மொழி, பண்பாடு, சமயம் ஆகியவற்றின் நிலைநின்று, சுருக்கமாக விளக்க இக்கட்டுரை முயலுகிறது.
நேற்று 'நந்தலாலா' ஜோதிகுமார் அலைபேசியில் அழைத்து அண்மையில் எழுதிய எம்போராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் பற்றிய நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு அமைப்புகள் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டுப்போனமை முக்கிய காரணங்களிலொன்று. அது பற்றியும் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்றார். இது பற்றி எம்மவர் யாரும் இதுவரையில் போதிய கவனம் செலுத்தவில்லையென்றார். அது மிகவும் முக்கியமான கூற்று. நம் மத்தியில் யாராவது இவ்விடயம் பற்றி, அதாவது போராட்டத்தில் மக்களின் அந்நியப்படுத்தல் பற்றி, அல்லது மக்களிடமிருந்து அமைப்புகளின் அந்நியப்படுத்தல் பற்றி அதிகமாக எழுதியதாக அல்லது கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.










.அதற்குப்பிறகு மாமாவில் நிறைய மாற்றங்கள் தென்பட்டன.அம்மா கவனித்தாளோ தெரியவில்லை.அவர் இப்போது நிர்வாணமாக குளிப்பதில்லை..

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









