நீலகிரி படகர்களின் ‘சுத்துக் கல்லு மொரா’ எனும் கடவுள் முதுமரமும் சங்கக் கூறுகளும்! - முனைவர்.கோ.சுனில்ஜோகி , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை -

தனித்த வாழ்வியலிற்காக யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட படகர்களின் தொல்சடங்குகள் தனித்துவமானவை. சுமய சார்பற்றவை. இவர்களே உருவாக்கிய தொல் பண்பாட்டினைக் கட்டியங் கூறுபவை. இவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வியலின் உறுதிபாடாகத் தொடர்பவை. அந்தச் சடங்குகளில் சில சங்கக் கூறுகளின் தொடர்ச்சியாகத் திகழ்பவை. இன்றும் இவர்களின் இயற்கை வாழ்வின், வழிபாட்டின் எச்சங்களாத் தொடர்கின்றன. அதில், இவர்களின் மரவழிபாடு இன்றியமையானதாகும்.
நீலகிரிக்கே உரிய மரங்களைப் பாதுகாப்பதையும், தமது வாழ்வியல் தகவமைப்பில் பெருந்துணை நல்கியமையும், நமது மூதாதையர்கள் மற்றும் முன்னோர்களின் நம்பிக்கையின் திரட்சியாக விளங்கியமையும், இயற்கைப் பேணலைத் தக்கவைத்து தலைமுறைக் கடத்துதலையும் உட்செறித்த இவர்களின் மரவழிபாட்டில் ‘நேரி’, ‘பிக்கெ’ உள்ளிட்ட மரங்கள் இடம்பெறுகின்றன. அதில் ‘நேரி’ மரத்தினைக் கொண்டமையும் இவ்வழிபாட்டின் தொன்மையினை இக்கட்டுரை விளக்குகின்றது. நேரி மரத்தினைக் கொண்டு நீளும் ‘சுத்து கல்லு மொரா’ எனும் குறிஞ்சி நிலம் சார்ந்த வழக்காறினைச் சங்கக் கூறுகளோடுப் பொருத்தி இக்கட்டுரை ஆய்கின்றது.
படகர்களின் கடவுள் முதுமரம் நேரி - சுத்தக் கல்லு மொரா
ஆதிமுதல், எருமை மந்தை பேணலையும் மலைப்புல வேளாண்மையினையும் தமது வாழ்வியலாகக் கொண்டிருக்கும் படகர்களின் மரபில், பண்பாட்டில் ‘நேரி’ எனும் நாவல் மரம் அடிப்படையானவொன்றாகும். படகர்களின் தாய்மொழியான ‘படுகு’ மொழியில் வழங்கப்படும் ‘நாடு, சீமெ, பெட்டா, அக்க – பக்க, ஊரு, அட்டி’ எனும் அவர்களின் வாழ்க்களப் பரப்பில், ‘அட்டி’ என்பது அம்மக்கள் வாழ்கின்ற ஊராகும். பெரும்பாலும், மலைகளின் கோடுகளிலும், அதன் சரிவினையொட்டியும் அமைந்திருக்கும் இக்குடியிருப்பினை இவர்கள் “அட்டி அணெ” என்று வரையறுப்பதுண்டு. இதில் ‘அணெ’ என்பது மலையில் அமைந்துள்ள புல்வெளியாகும். இதை, இவர்கள் ‘மந்தா’ என்றும் அழைப்பதுண்டு. இந்த இடங்களெல்லாம் நீர்நிலைகளை அடிப்படையாக வைத்தே அமைக்கப்பட்டவையாகும்.

கட்டுரையின் கட்டமைப்பு (Outline)
அமெரிக்காவின் ஒற்றைத்தருவ உலக ஆதிக்கம் (Unipolar Hegemony), அதன் இராணுவத் தலையீடுகள் மற்றும் அவை எவ்வாறு உலகளாவிய விநியோகச் சங்கிலி (Global Supply Chain), பணவீக்கம் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்பது குறித்த ஒரு சுருக்கமான அறிமுகம்.


கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
கட்டுரையாளர்: முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317,
முருகு எனும் சொல் முருகனைக் குறிக்கின்றது. இந்த முருகனைப் பற்றி பல்வேறு தொன்மக் கதைகள் புனைந்துள்ளனர். அந்த வகையில் மிகவும் கவனிக்கத்தக்கது முருகன் சிவசக்தி மகனானது. ஆரம்ப கால முருக வழிபாட்டில் முருகன் யாருடைய மகனாகவும் (பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர்த்து..) பேசப்படவில்லை. மாறாக அவன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும், போருக்கு உரியவனாகவும், நோய் தீர்ப்பவனாகவுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். அவ்வாறான முருகன் இடைக்காலத்தில் சைவனாகவும் சிவசக்தி மைந்தனாகவும் திருமால் மருகனாகவும் புனைந்தது இந்து மத பரப்பும் நோக்கிலும் பிற வட இந்திய கடவுளோடு முருகனை இணைக்க வேண்டும் என்ற வலிய நோக்கத்தோடும் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கு முருகன் வெறியாட்டு உரியவன் செம்மறி ஆடு பலி பெற்றவன். சைவ கடவுளரகளோடு வலிய இணைத்ததன் காரணமாக அவன் சைவ படையலுக்கு உரியவனாக மாற்றம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் வழிவழியாக இருந்து வந்த தமிழர்களின் வழிபாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் இந்த கடவுள் இணைப்பு என்பது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இன்று அனைவரும் முருகனை சைவனாக ஏற்று சைவ படையலிட்டு வழிபடுவதை நாம் காண்கின்றோம். இது நம் பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு மரபு ஆகியவற்றின் மீதான மிகப்பெரிய சவாலான தாக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வேலனின் வெறியாட்டு நிலையும் கேரள தெய்யமும் எவ்வாறு ஒன்று என்கிறோம் என்பதை இவ்வாய்வு விரிவாக பேசவுள்ளது.
[எழுத்தாளர் மா.சித்திவினாயகம் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் 'கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை' பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]
கனேடியப் பனி நிலத்தின்இந்தப் பெருங் குளிரிலும், நம் தமிழ்க் கவிதைப் பூந்தோட்டம் சீரோடு செழிக்கிறது. அது கொடிவிட்டுத் தழைத்துச் செழிக்கின்ற புனிதத்தைப் போற்றுகிற, இந்த தமிழ்க்கவிதை உரையாடலுக்கு வருகை தந்திருக்கும் அறிஞர்களே, கவிஞர்களே அன்பு உறவுகளே உங்கள் கரங்களை தமிழன்போடு இறுகப் பற்றுகின்றேன். 
கட்டுரையாளர் - முனைவர். அ. ஸ்ரீதேவி , துறைத்தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -
கட்டுரையாசிரியர்: -கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேரதனைப் பல்கலைக்கழகம் 

முன்னுரை






மகாகவி பாரதியார் அனைத்துத் துறைகளிலும் சொல், பொருள், வளம், கலை ஆகியவற்றைப் புதிய நோக்கில் தமது படைப்புகளில் தமிழுலக்கு அறிமுகப்படுத்தினார். தாம் வாழ்ந்த முப்பத்தொன்பது ஆண்டுகளில் (1882 - 1921) தமிழ் மொழிக்குப் புதுப்பொலிவையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தினார். இத்தகைய பரிமாணங்களோடு விளங்கிய இக்கவிஞரிடம் காணப்படுகின்ற மற்றொரு வியத்தகு ஆற்றல் வடிவமே கல்வி குறித்து அவர் கொண்டிருந்த சிந்தனைகளாகும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









