திக்குவல்லை கமால் சிறுகதைகள்: கலங்காத வாழ்வின் மெய்யியல்! - ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -

திக்குவல்லை கமால் (முகம்மது ஜமால்தீன் முகம்மது கமால்; 1950) எனக்கு பிடித்தமான எழுத்தாளர். ஒரே வேகத்தோடு தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவர். வாழ்வியலின் அச்சொட்டான படப்பிடிப்பு அவரது படைப்புக்கள். குறிப்பாக அவரது சிறுகதைகள் நிஜவாழ்வின் குறும்படங்கள். 2025 ஐப்பசி இல் ஜீவநதி (கலையகம், அல்வாய்) சாதனை நூல் வரிசையில் (ஓரு மாதத்தில் 31 நூல்கள்) வெளிக்கொணர்ந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு ‘மாடி வீடும் ஒரு தென்னை மரமும்’. க.பரணீதரன் நேர்த்தியாக வடிமைத்திருக்கும் இப்பிரதியின் பக்கங்கள் 68. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இருக்கின்றன. உயிர்பான இந்த பன்னிரண்டு உரைப்படைபுகளும் மிக விரிவாக விமர்சன பகுப்பாய்வுக்கு உட்படத்தக்கது. அதனை இன்னொரு ஆய்வுக்கு வைத்துவிட்டு, ஒரு சுருக்க நவீன வாசிப்பு இங்கு முன்வைக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழ்ச் சிறுகதை இலக்கியப் பரப்பில், திக்குவல்லை கமாலின் படைப்புகள், உள்ளூர் வாழ்வின் யதார்த்தங்களையும், இஸ்லாமியப் பண்பாட்டுக் குறியீடுகளையும் சுமந்து நிற்கும் தனித்துவமான இலக்கிய வெளியைக் கட்டமைக்கின்றன. “மாடி வீடும் ஒரு தென்னை மரமும்’ என்ற 12 கதைகளின் தொகுப்பாய்வு, இந்த இலக்கிய வெளியில் புதைந்துள்ள அதிகாரம், வர்க்கம், இன அடையாளம், மற்றும் தனிமனித அறவியல் ஆகியவற்றின் சிக்கலான அடுக்குகளை வெளிக்கொண்டுவரும் நவீன தேடலாக அமைகிறது.
திக்குவல்லை கமாலின் சிறுகதைகள், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலைத் துல்லியமாகப் பதிவுசெய்தாலும், அவற்றின் ஆழத்தில் அதிகாரம் (Power), சமூகக் கட்டமைப்பு (Social Structure), வர்க்கம் (Class), மற்றும் இன அடையாளம் (Ethnic Identity) ஆகிய நவீன கருத்தாக்கங்கள் பொதிந்துள்ளன.



முன்னுரை




தனித்த வாழ்வியலிற்காக யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட படகர்களின் தொல்சடங்குகள் தனித்துவமானவை. சுமய சார்பற்றவை. இவர்களே உருவாக்கிய தொல் பண்பாட்டினைக் கட்டியங் கூறுபவை. இவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வியலின் உறுதிபாடாகத் தொடர்பவை. அந்தச் சடங்குகளில் சில சங்கக் கூறுகளின் தொடர்ச்சியாகத் திகழ்பவை. இன்றும் இவர்களின் இயற்கை வாழ்வின், வழிபாட்டின் எச்சங்களாத் தொடர்கின்றன. அதில், இவர்களின் மரவழிபாடு இன்றியமையானதாகும்.
கட்டுரையின் கட்டமைப்பு (Outline)

கட்டுரையாளர்: முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317,
முருகு எனும் சொல் முருகனைக் குறிக்கின்றது. இந்த முருகனைப் பற்றி பல்வேறு தொன்மக் கதைகள் புனைந்துள்ளனர். அந்த வகையில் மிகவும் கவனிக்கத்தக்கது முருகன் சிவசக்தி மகனானது. ஆரம்ப கால முருக வழிபாட்டில் முருகன் யாருடைய மகனாகவும் (பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர்த்து..) பேசப்படவில்லை. மாறாக அவன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும், போருக்கு உரியவனாகவும், நோய் தீர்ப்பவனாகவுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். அவ்வாறான முருகன் இடைக்காலத்தில் சைவனாகவும் சிவசக்தி மைந்தனாகவும் திருமால் மருகனாகவும் புனைந்தது இந்து மத பரப்பும் நோக்கிலும் பிற வட இந்திய கடவுளோடு முருகனை இணைக்க வேண்டும் என்ற வலிய நோக்கத்தோடும் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கு முருகன் வெறியாட்டு உரியவன் செம்மறி ஆடு பலி பெற்றவன். சைவ கடவுளரகளோடு வலிய இணைத்ததன் காரணமாக அவன் சைவ படையலுக்கு உரியவனாக மாற்றம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் வழிவழியாக இருந்து வந்த தமிழர்களின் வழிபாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் இந்த கடவுள் இணைப்பு என்பது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இன்று அனைவரும் முருகனை சைவனாக ஏற்று சைவ படையலிட்டு வழிபடுவதை நாம் காண்கின்றோம். இது நம் பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு மரபு ஆகியவற்றின் மீதான மிகப்பெரிய சவாலான தாக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வேலனின் வெறியாட்டு நிலையும் கேரள தெய்யமும் எவ்வாறு ஒன்று என்கிறோம் என்பதை இவ்வாய்வு விரிவாக பேசவுள்ளது.
[எழுத்தாளர் மா.சித்திவினாயகம் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் 'கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை' பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]
கனேடியப் பனி நிலத்தின்இந்தப் பெருங் குளிரிலும், நம் தமிழ்க் கவிதைப் பூந்தோட்டம் சீரோடு செழிக்கிறது. அது கொடிவிட்டுத் தழைத்துச் செழிக்கின்ற புனிதத்தைப் போற்றுகிற, இந்த தமிழ்க்கவிதை உரையாடலுக்கு வருகை தந்திருக்கும் அறிஞர்களே, கவிஞர்களே அன்பு உறவுகளே உங்கள் கரங்களை தமிழன்போடு இறுகப் பற்றுகின்றேன். 
கட்டுரையாளர் - முனைவர். அ. ஸ்ரீதேவி , துறைத்தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -
கட்டுரையாசிரியர்: -கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேரதனைப் பல்கலைக்கழகம் 
முன்னுரை




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









