என் நினைவில் எழுத்தாளர் கலா சிறீரஞ்சன் (பூங்கோதை) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

[பெண்கள் சந்திப்பினூடாக இடம்பெற்ற நினைவுப் பகிர்தலில் எனது உரை. - நவஜோதி ஜோகரட்னம்- ]
லண்டனில் ‘விம்பம’ நடாத்தும் இலக்கியக் கூட்டங்களின் போதுதான் கலாவை நான் முதன் முதலில் சந்தித்தேன். முதற்சந்திப்பின்போதே ‘பூங்கோதை’ எனத் தனது எழுத்துலகப் பெயரைக்கூறி தன்னை அறிமுகஞ்செய்து அன்பாகப்பேசி அழகு சேர்த்த பாங்கு என்னைக் கவர்ந்தது. பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளின் மூலமாக மட்டுமே எமது உறவு தொடர்ந்து நீடித்தது.
இலக்கிய விடயங்கள் சம்பந்தமான விடயங்கள் தவிர சொந்த விடயங்கள் எதுவும் எமக்கிடையில் பரிமாறப்படுவதில்லை. இருந்தும் 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் பாமுகம் பா ரிவியில் நான் தயாரித்து வழங்கும் ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலை மேற்கோள்ள வேண்டும் எனக் கேட்டிருந்தேன். பூங்கோதை மிகவும் மகிழ்ச்சியுடன் அதனைச் செய்ய ஒப்புக்கொண்டார். அவ்வேளைகளில் தான் அவர்பற்றிய சிறு விபரங்களை அவருடன் உரையாடிப் பெற்றுக்கொள்ள முடிந்தது. மிகவும் நல்ல தகவல்களோடு அந்த நேர்காணலை என்னுடன் மேற்கொண்டார். அந்த வேளையில்தான் தனக்கு இரு மகன்மார் இருக்கிறார்கள் எனக் கூறினார். எனக்கும் இரு மகன்மார் உள்ளனர் எனக்கூறி நாமிருவரும் ஒருவித ஒற்றுமையில் பூரிப்படைந்தோம். அத்தோடு கலா ஆசிரியைக்குரிய பண்போடு எனது இளைய மகனின் ஓவியத்தை ‘It's so beautiful well done to his artistic hands!’ என்று பாராட்டியிருந்தமையை என்னால் மறக்க முடியவில்லை.


கனவுகளில் தோய்ந்து
முன்னுரை


போபால் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சியில், மன்னன் அசோகனால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த தூபி அமைந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பல தூபிகள் உள்ளன இந்த தூபி புத்தரின் எச்சங்களுடன் கட்டப்பட்டதோடு, அதன் ஆடம்பரமான கூம்பு (கிரீடம் போன்ற அமைப்பு) பார்வையாளர்களை கவர்கிறது. தூபியின் நான்கு பக்கங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சிற்பங்கள், குறிப்பாகப் புத்தரின் ஜாதகக் கதைகள், பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரை உள்ள நிகழ்வுகள் மற்றும் அசோக மன்னரின் வாழ்க்கைச் சம்பவங்கள் கல்லில் காவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
தனது, 23ம் வயதில் சேதுபதி தமிழாசிரியனாய் இருந்த பாரதியை, ஜி.சுப்ரமணிய ஐயர் அழைத்து செல்கின்றார் (பத்திரிகை தொழிலில் ஈடுபடுத்தும் பொருட்டு). இரண்டு வருடங்களில், அவனோ புதுமையாக வலம் வருகின்றான். அவனது வியக்க வைக்கும் மொழிபெயர்ப்பு திறனும், பெண்கள் பொறுத்தும் சாதிய கீழ்நிலையில் ஜீவிக்க கூடியவர்கள் பொறுத்தும், இன ஒற்றுமை பொறுத்தும் அவனுள் கொந்தளிக்கும் எண்ணக்கருக்கள் அறிஞர்களையும் திகைக்க வைக்கின்றது. ஆங்கிலேயரின் ஆட்சியின்பால் சமரசமற்ற வெறுப்பணர்வை உமிழும் அவன், அவர்களின் ஆதிக்கத்தின் சூட்சுமங்களை கண்டுணரும் கூர்மதி படைத்தவனாகவும் இருக்கின்றான். மக்கள் சைன்யத்தை வாஞ்சையுடன் நெருங்கும் அவன், தனது எழுத்தை அவர்களுக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்கின்றான். இவ்வளவுமாய் இல்லை என்றால், இல்லை என்பதே உறுதியான விடையாகின்றது. கைலாசபதியின் வார்த்தைகளில் கூறுவதானால்: “அவனது பார்வை பாயாத இடமே இல்லை” எனலாம்.




“கௌதம், படிப்படி என்று தொண்டைத் தண்ணி வற்றுகிற அளவுக்குக் கத்துறேனே! கொஞ்சமாவது இந்த அம்மா மீது கரிசனை இருக்கா?”


நினைவுகளைத் தேடித் தேடி ‘திகம்பர நினைவுக’ளாகவும், ‘கலாபன் கதை’களாகவும், ‘காலக் கனா’ மற்றும் ‘குருடர்க’ளாகவும் எழுதி தொகுப்புகளாக்கிய பின்னரும், மனத்தின் ஆழவும், அதன் பக்கங்களில் ஒட்டிக்கொண்டும் கிடந்து நினைவுகள் இன்னும் வெடித்தெழவே செய்துகொண்டிருக்கின்றன. அவை, திகைக்க வைக்கும்படி முக்கியமான, என்னை உருவாக்கிய மூலாதாரமான சம்பவங்களாகவும் இருக்கின்றன. அவை, எவ்வாறு இதுவரை காலத்தில் எனக்குள் தவறிப்போய்க் கிடந்தனவென நானறியேன். அதனால் மேலும் ஒரு நினைவுக்குளிப்பை நடத்த நான் தீர்மானித்தேன். அந்த எழுச்சி முகிழ்ந்த கணம் இது.
சமூகம் என்பது கருத்துகளின் கூட்டுச் சுவாசம். ஒரு தலைமுறை எழுந்து நிற்க வேண்டுமெனில், அது கேள்விகளால் ஊட்டமளிக்கப்பட வேண்டும்; விமர்சனத்தால் செம்மையாக்கப்பட வேண்டும்; உண்மையால் வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில், சில அமைப்புகள் மற்றும் குழுக்கள், சமூக மாற்றத்தின் பெயரில் அதிகார அரசியலை உள்-வட்டமாக நிறுவி, வெளியில் இருந்து வரும் நேர்மையான விமர்சனங்களையும் கூட பகைமை என சித்தரித்து ஒடுக்குகின்றன. இந்த அதிகாரக் கட்டமைப்பு வெளியில் தெரியாத நிழல் போல செயல்பட்டாலும், அதன் தாக்கம் சமூகத்தின் ஆழ வேர்களையே சிதைக்கும் அளவுக்கு வலிமையானது.



'அமெரிக்கா' குறுநாவல்



நடையில் நின்று உயர் நாயகன் இராமனின் பெருமை குறித்து கூறும் கம்பராமாயணத்தில் அறிவியல் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், பூச்சியியல், வானவூர்தியியல், மரபியல், வானியல், கணிதவியல், உளவியல் போன்ற பல துறை சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் மருத்துவயியல் சார்ந்த கருத்துக்களை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









