குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! - லதா ராமகிருஷ்ணன் -

18 வயதுக்குட்பட்டோர் அனைவருமே குழந்தைகள் என்று குறிப்பிடப் படுவது பொதுமக்கள் மனங்களில் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவது உண்மைதான். மழலையர், சிறு குழந்தைகள், சற்றே பெரிய குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் என குழந்தை என்ற பிரிவின் கீழ் பலர் இடம்பெறுவர். ஆனால், அவர்கள் எல்லோருமே குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள், வளர்ந்தவர்கள் உணரவேண்டியது அவசியம்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்தபட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர்களால் நடத்தப்படுவது அவர்களி டம் என்னென்ன அக – புற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
இன்று சமூக ஊடகங்கள் நிறைய இருப்பதால் குழந்தைகள் மீதான சுரண்டல்கள், பெரியவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் சிறார்களை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ பயன்படுத்திக்கொள்வது எல்லாம் உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடுகின்றன. அதனால், நாற்பது-ஐம்பது வருடங்களுக்கு முன் குழந்தைகள் மீதான இத்தகைய சுரண்டல்கள் அறவேயில்லையென்றோ, அதிகம் இல்லையென்றோ சொல்லிவிட இயலாது.
ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என சிலபலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களு டைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எழுத்தாளர் வண்ணநிலவன் என சில பெயர்களைக் குறிப்பிடலாம். துக்ளக் இதழ் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ‘பள்ளிகளில் மாணாக்கர்கள் அடித்துக் கண்டிக்கப்படவேண்டியவர்கள் என்று வலியுறுத்துவதைத் தனது சமூகக் கடமைகளில் ஒன்றாகச் செய்துவருகிறது.
சமீபத்திய துக்ளக் இதழில் எஸ்.ஜே.இதயா என்பவர் ‘குற்றங்களைக் குறைக்குமா சிங்கப்படை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். கீழே அந்தப் பத்தி தரப்பட்டுள்ளது:


இந்திய மெய்யியலின் ஆன்மிக மனத்தை, தமிழுக்கேயான உலகநிலைப்பட்ட நவீன சிந்தனை மரபொன்றைக் கட்டமைப்பதற்குத் தளமாக்கி, சிந்தித்தும் எழுதியும் செயலாற்றியும் வினை புரிந்தவன், பாரதி. பண்டைய வேத, உபநிஷத ஞான மரபினூடும் வேதாந்த மரபினூடும், பல்வகை மதநெறிகளின் உட்கிடையான முழுமுதல் பற்றிய அறிவினூடும், தமிழ் நிலத்தின் சித்தர் தத்துவத்தினூடும் அவன் பெற்றிருந்ததும், காலத்தேவையுணர்ந்து புதுமை செய்ததும், அதனைத் தனது பாணியில் முன்வைத்ததுமான கருத்துநிலையை, 'பாரதீயம்' என இக்கட்டுரை கருதுகிறது. தமிழ் நவீனம் என்பதைத் தனியே மொழி, இலக்கிய நவீனமாக அணுகாது, தனது காலத்திருந்த, ஒட்டுமொத்த இந்திய மெய்யியல் சாரத்தினூடு அணுகிய, பாரதியின் தனித்த சிந்தனையின் தேட்டமே, 'பாரதீயம்'. இது, பாரதி நவீன காலத்தில், தமிழுக்கு வழங்கிய தத்துவார்த்தக் கொடை. பாரதீயத்தில் வேத, உபநிஷத் வழிவந்த வேதாந்தமாகிய பகவத்கீதை குறித்த உரையாடல்களே முதன்மையானவை. அவ்வகையில், 'பாரதி பார்வையில் பகவத்கீதை' எனும் பொருளிலான இந்த அறிமுகக் கட்டுரை, கீதையின் தோற்றம், பிரதான அடிப்படைகள் எவ்வாறமைந்தன, சத்திரியர்களின் மேலெழுகையை எதிர்கொண்டு தாக்கியதில் கீதையின் வகிபாகம் எவ்வாறமைந்தது, இந்திய விடுதலை இயக்க காலத்தில் அதன் வரலாற்றுப் பாத்திரம் எவ்வகையில் முதன்மை மிக்கது, தத்துவத்தின் வரலாற்றோட்டத்தில் கீதை மீதான எதிர்க் கருத்தியலை பாரதி எவ்வாறு எதிர்கொண்டான், கீதை பற்றிய பாரதியின் நோக்குநிலை எவ்வாறமைந்தது, கீதையூடு அவன் அவாவிய புரட்சி எத்தகையது போன்ற வினாக்களை இக்கட்டுரை அலச முன்னிறுத்துகிறது.

பனாமா கால்வாயைக் கடந்து அத்திலாந்திக் பெருங்கடலுக்குள் நுழையும்போது நாம் சந்திப்பது கரிபியன் கடலாகும். நமது இந்து சமுத்திரத்தில் அரபிக் கடல் எவ்வாறு முக்கியமோ, அதுபோலவே இந்தக் கடலும் அமெரிக்கக் கண்டத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றால் வளைக்கப்பட்ட இந்தக் கடல், பவளப் பாறைகள் நிறைந்த பிரதேசமாகவும், பெரிதும் சிறிதுமாக 7,000-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. உஷ்ண வலயத்தில் அமைந்துள்ளதால், ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. அதேசமயம், உலகின் முக்கிய உல்லாசப்பயணப் பகுதிகளில் ஒன்றாகவும் கரிபியன் கடல் திகழ்கிறது.

எம். பௌசரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட 'தோழர் வேலு சிந்தனையும் செயலும்' எனும் இந்நூல் , எம்மிடையே வாழ்ந்த உன்னதமான மனிதனின் வாழ்நாட் போராட்டங்களையும், பல கருத்தியல்களையும் மையப்படுத்தி வெளி வந்திருக்கின்றது. ‘சமூகம் இயல்’ பதிப்பகத்தின் வெளியீடான இந்நூலில் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும் மேற்குலக நாடுகளிலும் அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர் பற்றிய அனுபவங்களையும் அவரது அரசியல் சமூகச் செயற்பாடுகளையும் எழுதியுள்ளனர்.

ஞாபகங்களை மீட்பதென்றால்,அதேபோல இன்றும் அத்தகைய சூழ்நிலைகள் அமைதல் அவசியம்.அப்படித்தான் இன்று என் பெயர்த்திகளுடன் கூடியிருந்து,ஒரு A4 கடதாசியை எடுத்து மூத்தவளிடம் காண்பித்து "உனக்கு என்னம்மா இந்தக் கடதாசியில் ஐயா செய்து தரவேணும்?"என்று கேட்டேன்.
பாரம்பரிய நடனக் கலை மரபுகளில் ஒன்றான பரதநாட்டியம் உலகில் மரபுக் கலையைப் பிரதிபலிக்கும் அழகிய நடன வடிவமாகும். கைகளின் அபிநயங்களோடு கண்களில் பாவங்கள் மற்றும் முகபாவங்களின் தனிச்சிறப்பினைக் கொண்ட அழகிய கலை. இத்தகைய இந்த பரதநாட்டியக் கலையானது இசையோடும் தாளத்தோடும் இணைந்து ஆனந்த உணர்வினைத் தரும் அற்புதக் கலையாகும்.


இப்போது நாம் வன்முறை, மரணம், இடப்பெயர்வு ஆகியவற்றால் நிரம்பிய ‘எட்டாவது நரகம்’ தொகுப்பின் ஆகப் பெரும் ஆசுவாசமாகவும், அதேநேரம் குரூர உலகினால் சிதைக்கப்படும் மென்னுணர்வின் சாட்சியாகவும் விளங்கும் அத்தியாயம் 4: வெல்வெட்டுப் பறவையும் காதல் பித்தும்: குறியீட்டியல் வாசிப்பு (Eroticism, Memory & Romantic Mysticism) என்ற பகுதிக்குள் நுழைகிறோம்.
பத்துப்பாட்டு என்ற பெயரில் இன்று வழங்கப்படும் நூல்களுள் முதலில் இடம்பெற்றுள்ளது திருமுருகாற்றுப்படை. முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்று கூறும் நச்சினார்க்கினியர் உரையுடன் நமக்குக் கிடைத்துள்ளது. இத்திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் பற்றி வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இவர் நெடுநல்வாடை மற்றும் எட்டுத்தொகையிலுள்ள பாடல்களைப் பாடிய நக்கீரர் அல்லர் என்றும், இவர் பிற்காலத்தவர் என்றும் நிறுவியுள்ளார் பேராசிரியர் எஸ்.வையாபுரிபிள்ளை1.
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்று முக்காலத்திலும் நடைபெறுவதை அறிவன் நமக்கு கூறுவர். அறிவன் என்பது ஜோதிடரைக் குறிக்கும் சொல்லாகும். சங்க இலக்கியத்தில் கணியன் என்று கூறப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதல் இன்று வரை எல்லா இலக்கியங்களிலும் ஜோதிடக் குறிப்புகளை நாம் காண முடிகிறது. ஜோதிடம் குறித்த சிந்தனை மிகப் பழங்காலம் தொட்டே நம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. ஜோதிடம் என்பது மக்கள் அறிவியல் பயனால் பெற்ற ஒன்று. ஜோதிடம் அன்று முதல் இன்று வரை தமிழக வாழ்வுகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மக்களும், மன்னர்களும் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். மன்னர்கள் போர் செய்யும் போது, திருமணம் செய்யும்போது, முடிசூட்டும் போது நல்ல நாள் பார்த்து செய்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர். கம்பர் தம் இராமாயணத்தில் ஜோதிடம் குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.
‘தாயொடு செல்வம் போம், தந்தையொடு கல்வி போம்’ என ஒரு பழம் பாடல் சொல்கிறது. என் ஒன்பதாவது வயதில் என் தந்தையை நான் இழந்தபோதும், என் கல்விக்கு எந்தப் பங்கமும் நேரவில்லை. அதற்காக எந்தளவு சிரமத்தை என் தாய் உத்தரித்திருப்பார் என்று உணர்கிற வயதும் அப்போது எனக்கில்லை. ஆனால் வாழ்க்கைச் சாகரத்தில் நான் அடியெடுத்து வைத்த பிறகு, ஒவ்வொரு சிரமங்களையும் சாதுர்யமாய்க் கடந்திருந்த காலங்களில், கல்வியின் அவசியத்தையும் அதை எனக்களித்த தெய்வம் அதற்காய்ப் பட்ட சிரமங்களையும் எண்ணிப்பார்க்க முடிந்திருக்கிறது. ஆனால் சமகாலத்தின் எந்தக் கரிசனமும் இல்லாமலேதான் அந்தக் காலம் கழிந்து சென்றதாக இப்போது படுகிறது.
இந்தத் திரைப்பட விழாவில் துவக்க விழா படமாக ஃபர்ஸ்ட் ஃபிலிம் என்ற படம் திரையிடப்பட்டது . இந்த படம் சென்ற மாதம் திருப்பூர் டாப் நூலகத்தில் நடந்த பெண்கள் தினத்திரைப்பட விழாவில் முதல் படமாக திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது..
ஈரானிய போரும் ஹோமூஸ் நீரிணையும் ஓர் இடியாப்ப சிக்கலாய் நீளுவதாய் உள்ளன. பரஸ்பர தாக்குதல்களும், பரஸ்பர மறுப்புகளும் இப்போரின் உறுத்தும் முக்கிய அம்சங்களாகின்றன. கண்ணுக்கு புலப்படாத, அதி நவீன விமானம் என்று பெயர் பெற்ற F - 35 விமானமும், மூன்று நாசகாரி கப்பல்களும் தாக்கப்பட்டு விட்டதாய் ஈரான் கூறினாலும் அமெரிக்கா அதனை உடனடியாக மறுப்பது வழமையாகின்றது. உண்மையில், அப்படி எந்த ஒரு கப்பலும் தாக்கப்படவில்லை. நாங்களாகவேதான் நீரிணையினையிலிருந்து அவற்றை அப்புறப்படுத்தி விட்டோம் என்று அமெரிக்கா எடுத்துரைப்பதையும் உலகம் வேடிக்கை பார்க்கத்தான் செய்தது. போதாதற்கு, இப்போரின் நிலவரங்கள் இப்போது, நாளுக்கு நாள், மணிக்கு மணி, செக்கனுக்கு செக்கன் மாறி கொண்டே இருப்பது இன்னும் ஒரு விசேட அம்சமாகிறது.


இராஜ அரியரத்தினத்தின் அழகுவின் கதையை தமிழுக்கு கொண்டுவந்த (“சேதுப்பாட்டி”) முயற்சிக்குப் பிறகு, அழகுவின் ஆங்கிலக் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கான அடுத்த முக்கிய முயற்சியாக 1973ஆம் ஆண்டு மல்லிகை மார்ச் மாத இதழில் (அழகுவின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்ட இதழ்) அழகுவின் The Scholar என்ற ஆங்கிலக் கதை “பட்டதாரி மாணவன்” என்ற தலைப்பில் ராஜஸ்ரீகாந்தனால் மொழிபெயர்க்கப்பட்டது.
நல்லூர் ராஜதானியாக விளங்கிய காலகட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள் , கள ஆய்வு போன்றவற்றிலிருந்து நல்லூர் ராஜதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார். 

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற் பயணம். அடிமனத்தில் முதல் பயணமாதலால் எப்படி பயணம் இருக்கும்? 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









