இந்தியப் பயணத்தொடர்: கான்ஹா புலிகள் சரணாலயம்! - நடேசன் -

தென்னிந்தியாவில் புலிகள் இருந்ததால் சோழர்கள் தங்கள் கொடியில் புலியை வைத்தனர். ஆனால் இலங்கையில் புலிகள் இல்லை; இங்கு இருந்தது சிறுத்தை. இந்நிலையில் நமது தமிழ் ஈழத்தவர்கள் புலியை அடையாளமாகத் தத்தெடுத்தது ஏன்? அக்காலத்திலேயே நான் எழுப்பிய கேள்வி அது. அதுபோல, சிங்கம் இல்லாத நாட்டில் சிங்கக் கொடி பறப்பதும் முரண்பாட்டான நகையே.
ஆப்பிரிக்காவில் சிறுத்தையும் சிங்கமும் உள்ளன. இந்தியாவில் மட்டுமே சிங்கம், புலி, சிறுத்தை மூன்றும் வாழ்கின்றன. இந்த மூன்று முக்கிய மிருகங்களைக் காண்பதில் ஆர்வமுடைய ஒரு கூட்டத்தில் நானும் ஒருவன். ஏற்கெனவே அசோகனின் வைத்தியசாலையில் மிருகங்களை “காட்சி சாலையில்” வைப்பது எங்களை சிறையில் அடைப்பது போலவே . குற்றம் செய்தால் மனிதர்கள் சிறைக்கு செல்கின்றனர்—அதுவும் எல்லாரும் அல்ல.
ஒருமுறை பெரியார் புலிகள் சரணாலயத்தில் ஒரு நாள் முழுவதும் அலைந்தும் புலியைக் காண முடியவில்லை. அங்குள்ள வழிகாட்டி எங்களுக்கு புலியின் மலத்தை மட்டும் காட்டினார். நேபாளத்திற்குச் சென்றபோதும் புலிகளை காண முடியவில்லை; அங்கே வழிகாட்டி, புலி தனது நகங்களால் கிள்ளிய மரத்தைக் காட்டி, “இங்கே புலி வந்திருக்கவேண்டும்” என்றார். உண்மையில் புலிகள் மரத்தில் நகங்களைப் பிறண்டி ஒழுங்குபடுத்தும் பழக்கம் உண்டு.


மனித வாழ்க்கை ஒரு விரிந்த வானத்தைப் போன்றது. அந்த வானத்தில் சிலர் விண்மீன்களாக மின்னுகின்றனர்; சிலர் சூரியனைப் போல ஒளி பரப்புகின்றனர்; இன்னும் சிலர் கருமேகங்களாக சூழ்ந்து, ஒளியை மறைக்க முயல்கின்றனர். ஆனால் கருமேகங்கள் எவ்வளவு அடர்த்தியாகச் சூழ்ந்தாலும், ஒளி கொண்டவற்றின் இயல்பை அவை மாற்றிவிட முடியாது. இந்த உண்மையை மிக அழகாக வெளிப்படுத்தும் உவமையே—கரு முகில்களின் நடுவே பேரொளி வீசும் சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது.

எழுத்தாளர் அநாதரட்சகன் தனது முற்போக்குச் சிந்தனையுடைய எழுத்துக்களால் நன்கு அறியப்பட்ட ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை நூல்களாகத் தந்துள்ளார். இத்தொகுதியில் ஈழத்தில் இருந்து வெளிவந்த புனைவுகளிலிருந்து தனது கருத்தியலுக்கு மிக நெருக்கமாக வரக்கூடியவற்றையும் தேவையின் பொருட்டு எழுதியவற்றையும் தொகுப்பாக்கியிருக்கிறார்.



ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. "கொட் டோக்" (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்'தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், 'சிக்கிட்ஸ்'ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான். 'ஏன் சிரிக்கிறாய்' என்றேன்.
இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன்.
பூம்புகார் என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் மற்றொரு பெயர். இது சிறந்த வாணிகத் தலமாகவும், துறைமுகமாகவும் பண்டைய காலத்தில் விளங்கியுள்ளது. இத்துறைமுகத்தின் வழியே நாட்டின் பலபகுதிகளுக்கும் சென்று உள்நாட்டு வாணிகத்தில் வாணிகர்கள் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி சீனா, இலங்கை, சாவகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றும் வணிகம் செய்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் இத்துறைமுகப் பட்டினத்திற்கு வந்து தங்கியும் வாணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு பாய்மரக்கலங்களும், கப்பல்களும் பொருட்களை ஏற்றி வந்தவண்ணம் இருந்துள்ளன. அதுமட்டுமன்றி இந்நகரில் சிறந்த வாணிகர்களுக்கு எட்டி முதலான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான சிறப்புகளை உடையதாக விளங்கிய பூம்புகார் காப்பிய காலத்தில் கடல்சீற்றத்தால் அழிவுக்குள்ளானது. அதன் விளைவால் இன்று சிறிய கிராமமாக திகழ்கின்றது என்பதை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.








மூகம் - சமுதாயம் என்ற இருநிலையை நாம் முதலில் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒரு குறிப்பிட்ட இனக்குழுவில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் எனத் தனிப்பண்பாட்டு அடையாளங்களின் நிலைப்பாடுகளை முன்நிறுத்துவதால், அவர்கள் ஒரு சமுதாயத்திற்கு உட்பட்ட மக்களாக மாறுகிறார்கள். ஒவ்வொரு சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் முறைகள் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளுக்கு ஏற்றார்போல் மாற்றமடைந்தும் காணப்படுகின்றது. ஆனால் சமூகம் என்பது இச்சமுதாயத்தை எல்லாம் உள்ளடக்கிக் கொள்வது. சமுதாயத்தில் ஏற்படக்கூடிய கலவரங்கள் அவை வெளியுலகிற்கு வரும்போது சமூகத்தின் நீட்சியாக உருவெடுக்கிறது. இந்நீட்சி எல்லைகளற்ற தீர்வாகவும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளான சுவர், நசுக்கம், எதிர்ப்பதியம் போன்ற கதைகளிலிருக்கக்கூடிய சமூகச்சூழல் எவற்றை நோக்கி பயணிக்கிறது. அப்பயணிப்பில் மக்களின் பங்களிப்பு எவ்வகையில் உலவுகின்றது – அதற்கானக் காரணங்களும், சமூக மாற்றம் யாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற முனைப்பில் இக்கட்டுரை முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.






பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









