உப்புக் காத்து! - ஜோதிகுமார்-

மெலிந்த கட்டை உடல்வாகு கொண்டவன் அவன். நான்கடி உயரம். அவன் நடந்து நான் கண்டதில்லை. ஓடி ஓடியே வேலைகள் அனைத்தையும் செய்வான். காலை ஐந்து மணி அளவில் அவனது வேலை ஆரம்பமாகும். விடுதியை சுற்றி கூட்டி, வாசலையும் துப்புரவாக்கி, பின் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி மீண்டும் கூட்டி பெருக்கி - இரவு ஏழு மணிக்குத்தான் இவனது அலுவல்கள் முடியும். இதற்கிடையில் வெவ்வேறு சில்லறை எடுபிடி வேலைகள். கூறினான்: றாகலை தோட்டத்தில் இருந்து வந்தவனாம். பின், இங்கேயே தங்கி திருமணத்தை முடித்து விட்டதாக. இப்போது மொத்தமாய் பதினைந்து வருடங்களாய் ஆகிவிட்டதாம் - இந்த விடுதி எசமானுக்கு ஊழியம் செய்து. நான் சென்றால் இவனுக்கு ஒரு வித சந்தோஷம். துள்ளி குதித்து வருவான். காலையில் காப்பியை தயாரித்து இருவரும் சேர்ந்து குடிப்போம். ஐந்து மணி. தனிமையில், குடில் போன்ற அந்த சமையலறையில் கோப்பியை சுவைத்து பருகியவாறே நாங்கள் அனைத்தையும் அளவளாவிக் கொண்டிருப்போம்.
ஒருமுறை கூறினான்: “சற்று வெளிச்சம் வந்தவுடன்தான் வீட்டை விட்டு புறப்படுவேன். சனம் அப்போதுதானே போக வர துவங்கும். சவம் எடுத்து வரும் பாதை இது…”.
“தோட்ட புறங்களில் பேயின் நடமாட்டம் ஒன்றும் அதிகமாக இல்லை. இங்கேதான் அதிகமாக இருக்கின்றது…”.
“அது ஏன்…?” என்றேன்.
“சுனாமிக்கு பின்னர்தான்… சுனாமியில்தானே நிறைய பேர் இறந்து போனார்கள்…”.
“காலையில் அஞ்சு மணிக்கு முன்னாடியே வந்துட்டு போயிரும்…”




கி.மு 384ல் கிரேக்க கொலனியான மெசடோனியா ஸ்ட்ரெஜிராவில் பிறந்த அரிஸ்டோட்டில் 17வது வயதில் எதென்ஸில் உள்ள பிளேட்டோவின் அகெடமியில் பிளேட்டோவின் மாணவனாகச் சேர்ந்தார். கி.மு. 368ல் இருந்து 20 வருடங்கள் அங்கு கல்வி கற்றார். பிளேட்டோவின் மரணத்தின் பின்னர் அரிஸ்டோட்டில் “லைசியம்” என்ற தனது கல்விக் கூடத்தை நிறுவினார். அதை ஆரம்பித்த பிறகு அரிஸ்டோட்டிலின் மெய்யியல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் பெரும் முன்னேற்றத்தை அடைந்தன. இவர் தனி ஒரு மனிதனாக வானவியல், உயிரியல், உடலியல் உடற்கூற்றியல், ஒழுக்கவியல், அரசியல் அளவையியல் எனப் பலதுறைகளை போதித்துச் சிறப்புப் பெற்றார்.

அத்தியாயம் 4: நிலத்தின் வரைபடமும் நினைவின் இலக்கணமும் (The Topography of Soil and Grammar of Memory)


ஆண்றொன்று போனால் வயது ஒன்று போகும் எனச்சொல்வார்கள். ஒருவருடைய பிறந்த தினம் வரும்போது, குறிப்பிட்ட நபர் தங்களது வயதில் மூத்தவராயின், வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம் “ எனச்சொல்வார்கள். அல்லது, வாழ்த்து மடல் அனுப்புவார்கள். வேறும் சிலர், தங்கள் முகநூலில் பதிவுசெய்து வாழ்த்துவார்கள். முன்பெல்லாம் பிறந்ததின வாழ்த்து மடலை தபாலில் அனுப்புவார்கள். ஆனால், சமகாலம் புதிய தொழில்நுட்பத்தின் தீவிர முன்னேற்றத்தால், மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலம் தங்கள் வாழ்த்துச்செய்தியை பகிர்வார்கள்.



கவிஞர் ஆத்மாஜீவ் அவர்களின் இயற்பெயர் வி.சி. ராஜேந்திரன். 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்தவர். 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் ஆரம்பித்த இவரது எழுத்தார்வம், நாடகத்திலிருந்து சிறுகதைக்கும், கவிதைக்குமாக, இடம் பெயர்ந்தது.

நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமெனில் நாமும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். அந்த வகையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அறிவுறுத்த வேண்டி, ஒரு நல்ல நெறிமுறைக்குட்பட்டு பல நல்ல கருத்துக்களை நல்வாழ்விற்காக கூறும் இலக்கியத்தில் வளையாபதியும் ஒன்று. அவை, ஒரு சமண சமயக் வழிகாட்டுதல்களாக எடுத்துரைக்கின்றது. வளையாபதி என்னும் காப்பியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைத்திடவில்லை.
கனடா ஒன்ராறியோவில் வோன் பகுதியில் உள்ள சினிப்ளெக்ஸ் திரையரங்கில் ‘தி ஒடிஸி’ (The Odyssey’) முதல் நாள் முதல்காட்சி பார்ப்தற்கு எனது வாசகர் வட்ட நண்பர் ஒருவர் அழைத்திருந்ததால், அந்தப் படத்தைச் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் காட்சிக்கான சீட்டுக்கள் விற்பனையாகி முடிந்திருந்தன. அவரும் கனடிய தமிழ் திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர். அவருக்காக அவர் தயாரித்த படங்களுக்குத் திரைக்கதை வசனமும் எழுதியிருக்கின்றேன். இப்படியான பிரபலமான பிரமாண்டமான படங்கள் வெளிவரும் போது சென்று பார்ப்பது வழக்கம். பொதுவாக எனக்கு நேரம் கிடைக்கும் போதுதான் படம் பார்ப்பேன், ஆனால் இம்முறை முதல் நாளே பார்க்க (17-7-2026) அவர் மூலம் சந்தர்பம் கிடைத்ததால் சென்று பார்த்தேன். பல்லின மக்களாலும் திரையரங்கம் நிறைந்து இருந்தது. படம் முடிந்தபின் அவர்களில் சிலருடன் இந்தத் திரைப்படம் பற்றி உரையாடவும் முடிந்தது.


* கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
நகரம் 1916 ஆம் ஆண்டின் முதல் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் நகரமாக உள்ளது. சுற்றி வர திராச்சை தோட்டங்கள் சுற்றியிருக்கும் நிலப்பரப்பில், ஒரு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த நகர், கோட்டைச் சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.










