முனைவர் சு.சோமசுந்தரியின் ‘சில்லாட்டை’ சிறுகதை நூல் ஒரு பருந்துப்பார்வை! - முல்லைஅமுதன், இலண்டன்-

தமிழில் கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரை, நூல்ஆய்வு என தன்னை இலக்கிய உலகில் அறியப்பட்ட எழுத்தாளர் சு.சோமசுந்தரி அவர்கள் காற்றுவெளி, தமிழ்நெஞ்சம், முத்தமிழ்நேசன், முத்தமிழ்க்கலசம், பதிவுகள் இணையம், ஞானம், வல்லினச்சிறகுகள், ஊடறு போன்ற பல இதழ்களின் மூலம் நமக்கு அறிமுகமானவரின் சிறுகதையைத் தனித்து நூலாக்குகின்ற அவரின் தெரிவு இன்றைய காலத்திற்கு அவசியமானதொன்று.
தெளிவான சிந்தனைகளைக் கொண்டவர். தனது அனுபவ வெளிப்பாடுகளை சிறப்புற சிறுகதைகளாக்கித் தருவதில் வல்லமையுள்ளவராகத் தெரிகிறார். அலுவலகத்தில் கடமையாற்றும் ஒரு பெண்ணின் அன்றாட சங்கடங்களை அத்துமீறல் கதையில் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் எனக்குப் பிடித்தது பாத்திரங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயராக இருப்பது. கார்குழலி உதாரணம். அதே போல ஒரு சராசரி அப்பாவின் மனநிலை, அவரின் இழப்பு, அவர் சார்ந்து குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை பற்றிச் சொல்லிச் செல்கிறது அப்பா கதை. மனித மனங்கள் எவ்வளவு விசித்திரமானது.. ஒரு தாய்க்கு கொள்ளி போடாத மகன்..மருமகனையே கொள்ளிப் போடச்சொல்லும்உறவுகள்...யதார்த்தமானகதை. நமது வாழ்வுடன் ஒத்துப்போகும் அனுபவங்களின் தொகுப்பாகவும் இவரின் கதைகள் அமைந்துள்ளன. ஈரமற்ற மனித மனங்களைக் காணும்போது தனக்குள் துடிக்கவும், ஏக்கமுறவும் ஒருத்தி...தாகத்துக்கு தண்ணீர் தராமல் நின்ற மக்களின் நடுவே இறந்துபோன உயிரைப் பற்றிப் பேசும் கதையாய் ஈரம் கதை எழுதப்பட்டிருக்கிறது.
உடைந்து போன கலசங்கள் நல்ல கதை. வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவரது வாழ்வுநிலை பற்றிப் பேசும் கதை ஏகாந்தம்... உண்மைக்கதை போன்றுள்ளது. கதையை நகர்த்தும் பாணியும் மனதில்ஏதோ ஒன்றை உணர்த்திச் செல்கிறது. சொரியலாக ஆங்காங்கே பிரசுரமான கதைகளை வாசித்திருந்தாலும், தொகுப்பாக இணைத்து வாசிக்கையில் கதைகளின் சிறப்பு உணரப்படும் என்றே கருதுகிறேன். கட்டுரை, விமர்சனங்கள் என இவர் எழுதியிருந்தாலும் கதைகளில் காட்டும் ஆர்வம் நம்மையும் உடன் இருத்தி அழைத்துச்செல்லும் சூழலை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு கதைகளிலும் எளிமையான உரைநடை, கதைசொல்லும்பாங்கு 'இது எனது கதை.. என்னை அல்லது எங்களைப் பற்றிய கதைகள் என ஒவ்வொரு கதைகளும் இருப்பதாக உள்ளுணர்வு சொல்கிறது. அவைதான் கதாசிரியருக்குக் கிடைத்த கிடைக்கப்போகும் வெற்றியுமாகும். தான் காணும் மாந்தர்களை உள்வாங்கி அசைபோட்டு, அசைபோட்டு பாத்திரங்களாக்கி கதைகள் எழுதும்போது அவைகள் அல்லது அக்கதாபாத்திரங்கள் நம்முள் ஒருவராக மாற்றி பாதிப்பையும் நமக்குத் தெரியாமல் ஏற்படுத்திவிடுகிறது. சமகால வாழ்வியலை அற்புதமாக படம்பிடித்துத் தந்திருக்கிறார்.



அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.
முதன்முதலாக நான் கருத்தரித்திருந்தபோது, இலங்கையிலிருந்த சித்தியுடனும், அவவின் சில சினேகிதிகளுடனும் பருத்தித்துறையிலிருந்து, நுவரெலியாவுக்குச் சென்றிருந்த பயணமொன்று மீளவும் என் நினைவுக்கு வந்தது. அந்தப் பயணத்தின்போது, செங்குத்தான குன்றுகளில் ஏறவேண்டியிருந்தபோதுகூட, தனது ஒன்பது மாதக் குழந்தையைச் சித்தியின் சினேகிதி ஒருவர் மிக இயல்பாகவும், எவ்வித தயக்கமும் இல்லாமலும் தூக்கிக்கொண்டு வந்திருந்தார். அப்போது நான் எடுத்திருந்த நிழல்படங்களில், அந்தக் குழந்தை நீர்வீழ்ச்சியருகே, மலையோரக் காய்கறிக் கடையில், ஏரிக்கரையில் என எல்லாவிடங்களிலும், சிலநேரங்களில் விழித்தபடியும், சிலநேரங்களில் உறங்கியபடியும், ஆனால், எப்போதும் தூக்கி வைத்திருந்தபடிதான் இருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு என் கணவருடன் சென்றிருந்தபோது, சமைக்கும்போதும், வீதிகளில் அல்லது கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோதும், தன் ஒரு வயதுப் பேத்தியைத் சித்தியும் அவ்வாறே தூக்கிவைத்துக் கொண்டிருந்ததும் என் நினைவுக்கு வந்தது. இலங்கையில் எடுக்கப்பட்டிருந்த என்னுடைய பழைய நிழல்படங்கள் உள்ளடங்கலான ஏனைய நிழல்படங்களை மீளப் பார்த்தபோதும், அவற்றிலிருக்கும் குழந்தைகளை யாரோ ஒருவர் தூக்கிவைத்திருப்பதையே நான் பார்த்தேன்.
திக்குவல்லை கமால் (முகம்மது ஜமால்தீன் முகம்மது கமால்; 1950) எனக்கு பிடித்தமான எழுத்தாளர். ஒரே வேகத்தோடு தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவர். வாழ்வியலின் அச்சொட்டான படப்பிடிப்பு அவரது படைப்புக்கள். குறிப்பாக அவரது சிறுகதைகள் நிஜவாழ்வின் குறும்படங்கள். 2025 ஐப்பசி இல் ஜீவநதி (கலையகம், அல்வாய்) சாதனை நூல் வரிசையில் (ஓரு மாதத்தில் 31 நூல்கள்) வெளிக்கொணர்ந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு ‘மாடி வீடும் ஒரு தென்னை மரமும்’. க.பரணீதரன் நேர்த்தியாக வடிமைத்திருக்கும் இப்பிரதியின் பக்கங்கள் 68. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இருக்கின்றன. உயிர்பான இந்த பன்னிரண்டு உரைப்படைபுகளும் மிக விரிவாக விமர்சன பகுப்பாய்வுக்கு உட்படத்தக்கது. அதனை இன்னொரு ஆய்வுக்கு வைத்துவிட்டு, ஒரு சுருக்க நவீன வாசிப்பு இங்கு முன்வைக்கப்படுகின்றது.
சுயசரிதை பாங்கில் அமைந்த 'ஒரு விதையின் இருமலர்கள்' – 'Two Blooms of One Seed' என்ற நூல் எனக்கு அண்மையில் படிக்கக் கிடைத்தது. நண்பர் ஶ்ரீபாலன் இதனை எனக்குத்தந்தார். இந்நூலை எழுதியிருப்பவர் எனது மற்றும் ஒரு நண்பர் திரு. கந்தசாமி சரநாதன். கவிதைத்துறையில் ஈடுபாடுமிக்கவரான சரநாதன், தனது கதையையும் கவிதையாகவே புனைந்துள்ளார். அதனால், இலக்கிய நயத்தையும் நாம் உணர்கின்றோம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரம் யார் யாரின் கைகளில் இருந்திருக்கின்றதோ அவர்கள் காலங்காலமாக சாமானிய மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் என்பதை காலந்தோறும் எழுதப்பட்டிருக்கின்ற சமூக வரலாறுகள் எமக்கு உணர்த்தியிருக்கின்றன. நூற்றாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு வண்ணங்களிலும் வெவ்வேறு வடிவங்களிலும் இது தொடர்ந்து கொண்டிருப்பதை ஒடுக்குதல்களுக்கு உள்ளாகும் யாவரும் அறிவர்.
கலை என்பது சிலருக்கு பொழுதுபோக்காகவும் சிலருக்கு உள்ளூறும் உணர்வாகவும் இணைந்து வாழ்வுடன் பிரிக்க முடியாததாக உள்ளது. இவ்வாறான ஒரு உண்மைக் கலைஞராக, வாழ்வியலை ஆழ்ந்து படித்து அதிலிருந்து சிறந்த அனுபவங்களை உளம்கொண்டு நாடகங்களையும் நடிகர்களையும் உருவாக்கியவர் திரு.க. பாலேந்திரா அவர்கள். 
அமெரிக்கா நினைத்தால் எதனையும் செய்யலாம். உற்பத்தி சங்கிலிகளையும், விநியோக பாதைகளையும் ஒருங்கே சிதைத்து மூடலாம். பொருளாதார தடைகளை விதிக்கலாம். முழு உலகத்தையும் பட்டினி போட்டு அலைய செய்யலாம். கடற் பாதைகளை, கைப்பற்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்யலாம்.

[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade”), அதன் உள்ளடக்கத்தையும் கூகுள் நனொ பனானா மூலம் பெற்றுப் படித்தேன். இது வெளிப்படுத்தும் தகவல்களை இக்கட்டுரையில் பாவித்துள்ளேன். தகவற் பிழையெவையாவது தென்பட்டால் அறியத்தாருங்கள் ]

முன்னுரை


மாயா யதார்த்தம் எனப்படும் இலக்கிய வகை, Salman Rushdie (Midnight’s Children), Gabriel García Márquez (One Hundred Years of Solitude), மற்றும் அமெரிக்க கறுப்பின பெண் எழுத்தாளர் Toni Morrison (Beloved) போன்றோரின் படைப்புகளைப் படித்தபோது எனக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது.
நாடகக் கவிமணி எம்.வி. கிருஷ்ணாள்வார் கரவெட்டி மத்தியில் பிறந்து வளர்ந்தவர். நாட்டுக்கூத்தில் வல்லவராக அவர் வளர்ந்த வரலாறு ஈழத்து நாட்டக்கூத்து வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். பாடலுடன்இ ஆடலும் சேர்ந்து வர பொருளுக்கேற்ப பாடி ஆடுவது கூத்தின் பாங்கு. மிக நளினமாக தான் பூண்டுகொண்ட வேடத்திற்கேற்பவே மாறிவிடுகின்ற உன்னத நடிப்பாற்றல் கொண்டவர் அண்ணாவியால் என பிற்காலத்தில் எல்லோராலும் அழைக்கப்பட்டவரும் அறியப்பட்டவருமான நாடக கவிமணி அவர்கள். பாடல்களை இயற்றுவதிலும், அதனை இசையமைத்துப் பாடுவதிலும் வல்லவராக விளங்கினார். பண்டிதர்களும் ஏற்றிப்போற்றும் நிலைக்கு கவிதை யாப்பதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கியவர். கரவெட்டியில் இடம்பெறும் அரசியல் பிரமுகர்களின் கூட்டங்களில் வாழ்த்துக் கவி இயற்றிப் பாடுவதிலும், அந்தியேட்டிச் சபிண்டீகரணத்தில் தான்எழுதிய கல்வெட்டில் உள்ள பாடல்களை மனமுருகப் பாடுவதிலும் சமத்தராக காணப்பட்டவர். சமத்துவத்தை வலியுறுத்தி சமதர்ம சமுதாயம் அமையவேண்டும் என விழைந்தவர். ஏழை எழியவர்களின் நண்பனாக, பட்டி தொட்டியெங்கும் சென்று கலைப்பணி ஆற்றியவர். அவரால் எழுதப்படும் இறந்தவரைப் பற்றிய நினைவலைகள் பிள்ளைகள் புலம்புவதாகவோ அன்றி மனைவி அல்லது கணவன் புலம்புவதாக அமையும்போது அவை உண்மையிலேயே நிகழ்ந்தவற்றைப் பின்னிப்பிணைந்தவைiயாக யதார்த்தமாக அமைந்திருப்பதற்கு அவர் இருந்த சூழலில் உள்ளவர்கள் அனைவரையும் அவர் நன்கு அறிந்திருந்தார். அவர்களில் வாழ்வில் ஒரு பங்காளராக, பார்வையாளராக அவர் மிக நெருக்கமாகப் பழகிவந்தமை அவரின் சமூகக்கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுவன.


எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி)!


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









