பதிவுகள் முகப்பு

ரொறன்ரோவில் தமிழ் சார்ந்த ஆய்வு நூல்கள் வெளியீடு! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
30 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற யூலை மாதம் 13 ஆம் திகதி பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் ஆய்வு நூல்கள் மூன்று ரொறன்ரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றன. சுவாமி விபுலாந்தர் தமிழ் ஆய்வு மையத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வுக்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். இந்த நிகழ்வில் சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம், தமிழர் நாட்டுப்புறவியல் களஞ்சியம், திருக்குறள் ஓர் உலகப் பொது நூல், ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பெற்றன. தாய்மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மொழி சார்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு அதிக நூல்களை வெளியிட்ட பெருமை பேராசிரியருக்கு உண்டு.

ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து செல்வி சத்திய சங்கவி முகுந்தனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பெற்றது. கனடா தேசியப் பண்ணைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.

வரவேற்புரையை எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து தலைவர் உரை இடம் பெற்றது. வாழ்த்துரை அறிஞர் சாமி அப்பாத்துரை மற்றும் அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன் ஆகியோரால் வழங்கப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய அங்கத்தவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.  

மேலும் படிக்க ...

இருபத்தி நான்காம் வயதில் பாரதி : பகுதி II - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
30 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



01

பாரதியின் எழுத்துக்களில், மூன்று முரண்களை நாம் அடையாளப்படுத்தலாம்:

ஒன்று, அவனது ஆன்மாவில் (அல்லது சிந்தையில்) தட்டுப்படக்கூடிய முரண். இரண்டாவது, அவனது அரசியலில் காணக்கிட்டும் முரண். மூன்றாவது, அவன் தன் எழுத்தை ஓர் வாகனமாக வடிவமைக்கும்போது அங்கே எழக்கூடிய முரண். இம்முரண்கள் ஒவ்வொன்றும், தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப வாதிக்கப்படுவது விரும்பத்தக்கது. இதன் காரணத்தினாலேயே, இக்கட்டுரைத் தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன.

இதனால், பாரதியைக் கற்கும் இத்தகையவொரு செயற்பாட்டில், அவனது வளர்ச்சிக்கேற்ப, இக்கட்டுரைத் தொடரின் இறுதி முடிவுகள், மாற்றமுறலாம் என்பதனை ஆரம்பத்திலேயே கூறிவைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

02

பாரதி என்ற இளைஞன், தன் 24ஆம் வயதிலேயே, மனித வாழ்வு பொறுத்தும், மரணம் பொறுத்தும், சிந்தித்துத் தெளிய முற்பட்டிருப்பது குறிக்கத்தக்கதாகின்றது. இதன்போது, இவ் இளைஞன் கூறுவான்: “உலக வாழ்க்கை மிகவும் நம்பத்தகாததாக இருக்கின்றது. எந்த நிமிசத்திலே மரணம் சம்பவிக்குமோ அல்லது எந்த நிமிசத்திலே நீக்க முடியாத நோய் வந்து சேருமோ (என்பதனை) நம்மால் நிச்சயித்துக் கூற இடமில்லை… பெரும்பாலர் துன்பக்கடலில் மிதந்து கொண்டே செல்லுகிறார்கள்… எத்தனைப் புயற் காற்றுகள்! எத்தனைச் சுழிகள்! எத்தனைப் பாறைகள்! நடுவே… சில சில இன்பத் தீவுகள்… மறுபடியும் அலைகள், சுழிகள், பாறைகள், புயற் காற்றுகள்… மிக மிகச் சில ஆறுதல்கள்…” (பக்கம் -235, ஜுலை 1906 : சக்கரவர்த்தி)

மேலும் படிக்க ...

எம்.ஜி.ஆர் என்னும் வள்ளல்! - - ஆய்வாளர்: கு.மு. ரமேஷ்பாபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை – 117 -

விவரங்கள்
- ஆய்வாளர்: கு.மு. ரமேஷ்பாபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை – 117 -
ஆய்வு
30 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஆய்வாளர்:  கு.மு. ரமேஷ்பாபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை – 117 | நெறியாளர்: முனைவர் தே. தேன்மொழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை - 117 --

முன்னுரை

புரட்சித் தலைவர் என்றும் மக்கள் திலகம் என்றும் மக்களால் அழைக்கப்படும் ம.கோ.இராமச்சந்திரன் அவர்கள் தமிழ்த் திரைப்பட நடிகராய் இருந்து அரசியியலில் அடியெடுத்து வைத்து பல ஆண்டு காலம் மக்கள் பணியாற்றியவர். இவர் நடிகராய் இருக்கும்பொழுதே அன்றைய தலைமுறை இளைஞர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் பேசும் வசனங்களுக்காகவே இவர் நடித்த திரைப்படங்கள் பல மாதங்கள் ஓடியிருக்கின்றன. திரைத்துறையில் ஆளுமைமிக்க நடிகராக இருந்தபோதும் இவர் அரசியல் மீது கொண்டிருந்த விருப்பினாலும் மக்கள் மீது கொண்டிருந்த அன்பினாலும் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணிகள் செய்து வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டார். குறிப்பாக இவரின் வள்ளல் தன்மைக்காகவே இவர் தமிழ் மக்களால் இன்றைக்கும் மறக்க முடியாத மனிதராக அவர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றார் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்குத் தன்னலம் கருதாது மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல் தன்மை பற்றி அவரை அறிந்த அறியாத மனிதர்கள் கூறும் செய்திகளைப் பதிவுசெய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மேலும் படிக்க ...

பாரதியாரின் குடும்பப் புகைப்படம்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
இலக்கியம்
28 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரதியார் தன் குடும்பத்தவருடன் நிற்கும் அரியதொரு புகைப்படம்.  17.2. 1982 அன்று வெளியான ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமான  'பாரதி தரிசனம்' தொடர் கட்டுரையில் இடம் பெற்ற புகைப்படம்.

என் யு டியூப் சானல்: வ.ந.கிரிதரனின் பாடல்கள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
இங்குள்ள யு டியூப் தளத்தில் எனது பாடல்களை நீங்கள் கேட்டு மகிழலாம். செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்ட பாடல்கள். இத்தொழில் நுட்பத்தை நான் விரும்புகின்றேன். இதன் ஆரோக்கியமான அம்சங்களை நான் மிகவும் வரவேற்கின்றேன். பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல்களை பல்வேறு இசை வடிவங்களில் அல்லது கலக்கப்பட்ட பல்வேறு இசை வடிவங்களில், பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட இசை வடிவங்களில், பல்வேறு வாத்தியங்களைப் பல்வகைகளில் கலந்து பாடல்களை உருவாக்க இத்தொழில் நுட்பம் வழி வகுக்கின்றது. அது இத்தொழில் நுட்பத்தின் ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்று.
மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: ‘யாழ்ப்பாணப் பொது நூலகம், அன்றும் இன்றும்’ - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
நூல் அறிமுகம்
27 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குமரன் புத்தக நிலையத்துக்கூடாக, 2019ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் ‘யாழ்ப்பாணப் பொது நூலகம், அன்றும் இன்றும்’ என்ற நூலின் வெளியீட்டு விழா ரொறன்ரோவில் நிகழ்ந்தபோது எனக்கும் அழைப்பு வந்திருந்தது. ஆனால், அதில் கலந்துகொள்ள என்னால் முடியவில்லை. அண்மையில் வேலைக்காகச் சென்ற ஓரிடத்தில், என்னைச் சந்தித்த ரூபவதி நடராஜா அவர்கள், இந்த நூலின் ஒரு பிரதியை எனக்குத் தந்து, அது பற்றிய கருத்துக்களை கூறும்படி கேட்டிருந்தார். நேற்றுவரை இதனை வாசிப்பதற்கு எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை. வாசித்ததும் உடனேயே இதனைப் பற்றி எழுதவேண்டுமென்ற உத்வேகம் ஏற்பட்டது.

தந்தைக்கும், கணவருக்கும் காணிக்கையாக்கப்பட்டிருக்கும் அவரின் இந்த நூல், அன்று யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் அவரது நூலகர் வேலையை (1974 -1987) எத்துணை விருப்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்திருப்பாரென்பதை காட்டுகிறது. முன்னட்டையில் யாழ் நூலகத்தின் படத்தைத் தாங்கியிருக்கும் இதில், யாழ் மாநகராட்சி மன்றத்தின், மன்றக் கீதம் முதலாவதாக இடம்பெற்றிருக்கிறது.

தேவ மந்திர கீத மொலிக்கும்
விளக்கிடு குர் ஆன் நாதமொலிக்கும்
ஓதிடு பைபிள் போத மொலிக்கும்
ஓங்கிய கோபுர மணிகள் ஒலிக்கும்

என சமத்துவத்தைக் கூறுமொரு கீதம் யாழ் மாநகரசபைக்கு இருக்கிறது என்பதிலிருந்து, பிராயச்சித்தம் தேடும் வெண்தாமரை இயக்கம்வரை இதுவரை அறிந்திராத பல விடயங்களையும் இதன்மூலம் நான் அறிந்துகொண்டேன்.

மேலும் படிக்க ...

அஞ்சலி! எழுத்தாளர் அ.சேகுவேரா மறைவு! ஆழ்ந்த இரங்கல். - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
26 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுநா குழுமம் தன் முகநூற் பதிவில் ஊடகவியலாளரும், முன்னாட் போராளியும், வவுனியா பிரசைகள் குழுவின் ஊடகப்பேச்சாளரும்,, எழுநா ஆவணப்பட வரிசைப் பொறுப்பாளருமான இசைப்பிரியன் என்று அறியப்பட்ட அ.சேகுவேராவின் மறைவுச் செய்தியினை அறிவித்திருந்தது. ஆழ்ந்த இரங்கல்.

அ.சேகுவேரா என்ற பெயரைக்கேட்டதும் உடனடியாக நினைவுக்கு வந்தது பதிவுகள் இணைய இதழுக்கு இவர் அனுப்பிய கவிதைகள், கட்டுரைகள்தாம்.  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலிலிருந்து தன் படைப்புகளை  அனுப்புவார். சில வேளைகளில் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலிலிருந்தும் அனுப்புவார். அவரது கவிதைகள், கட்டுரைகள் சமுதாயப் பிரக்ஞை மிக்க அவரது ஆளுமையை வெளிப்படுத்தின. அதனால் அவற்றைப் பதிவுகள் பிரசுரித்தது.

படைப்புகளூடு மட்டுமே எனக்கு இவருடனான தொடர்பிருந்தது. நேரடியாக நான் அறிந்திருக்கவில்லை. எழுநா குழுமத்தின் இவரது மறைவுச் செய்தி பற்றிய பதிவே எனக்கு இவரைப்பற்றிய நினைவுகள் மீள் ஏற்படுத்தின. இவரது நினைவாக இவர் அனுப்பிப் பதிவுகளில் வெளியான கட்டுரைகளை,கவிதைகளை மீளப்பதிவிடுகின்றேன். ஒரு வகையில் இவை ஆவணப்பதிவுகளாகவும்  இருக்கும் என்பதால் முக்கியத்துவம் மிக்கவை.

எழுத்தாளர் அ.சேகுவேராவின் பதிவுகள் இணைய இதழில் வெளியான படைப்புகள்:


1. 08 மார்ச் 2014 - “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” - இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்! - அ.ஈழம் சேகுவேரா (இளம் ஊடகவியலாளர்-இலங்கை.) -      
    
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 21வது கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடன், சூடான வாதப்பிரதிவாதங்களுடன் ஆரம்பித்திருக்கிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை, அதிருப்தியை சர்வதேச நாடுகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள்-ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா அரசால் இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள்,  இனப்படுகொலைகள், சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், அரசியலுரிமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், அனைத்துலக மனித உரிமைச்சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டுள்ளமை தொடர்பாகவும், காத்திரமான அனைத்துல விசாரணைகள் நடத்தப்பட்டு, இலங்கை ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் சகாக்கள் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உயிர் வலிக்கும் ரணங்களோடும், கணங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தரப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரின் போது அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்களுக்கு இலங்கையைச்சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அ.ஈழம் சேகுவேரா மனு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.” எனும் இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, காலப்பதிவாக அதன் முழு விவரமும் இங்கு பிரசுரமாகிறது.  குறித்த மனு தொடர்பான உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  எனும் மின்னஞ்சல் முகவரியூடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.    

மேலும் படிக்க ...

அஞ்சலி: வரலாற்றுப் புனைகதைச் சேகரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணன் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சரித்திரப் புனைகதைச் சேகரிப்பாளர் திரு.சுந்தர் கிருஷ்ணன் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். துயருற்றேன். இவர் முகநூல் அறிமுகப்படுத்திய என் முகநூல் நண்பர்களில் ஒருவர். தமிழ் சரித்திர நாவல்கள் மீது தீராத பற்று மிக்கவர். அவற்றைப்பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துவதற்காக 'தமிழ் சரித்திர நாவல்கள்' என்னும் வலைப்பதிவினை வைத்திருந்தார்.

இவ்வலைப்பதிவின் முதற் பக்கத்தில் சுந்தர் கணேசன் பின்வருமாறு கூறியிருபார்:

"தமிழ் சரித்திர நாவல்கள் வணக்கம் இன்றைய உலகில் தமிழ் நாவல்கள் அதுவும் சரித்திர நாவல்களின் தகவல்கள் இங்கு சேமித்து கொடுக்கப்படுகின்றன. இதுவரை 752 நாவல்கள் கிடைத்துள்ளன. இந்த வலை பதிவு சரித்திர நாவல் பிரியர்களுக்கு உரிய தகவல்களை ஒரே இடத்தில் தரவேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்..உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் சுந்தர் கிருஷ்ணன்"

மேலும் படிக்க ...

அஞ்சலி: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின - தன் கொள்கையில் நோக்கில் தெளிவும் திடமும் மிக்க தலைவர்களில் ஒருவர். சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைக்குரலாக ஒலித்த தென்னிலங்கை அரசியல்வாதி. - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
25 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தென்னிலங்கை அரசியல்வாதிகளில் மார்க்சியச் சிந்தனையாளர்களில் ஒருவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தொடர்ச்சியாக இலங்கையின்  அனைத்து  மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்தவர். தனது கொள்கைகளில் தெளிவுடனிருந்தவர். திடத்துடனிருந்தார். நாடு இனவாதச் சேற்றில் மூழ்கியிருக்கையில் அதற்கெதிராகச் செயற்பட்டவர். நடைபெற்ற யுத்தத்திற்கு ஒருபோதுமே நிதிப்பங்களிப்பு செய்ய மாட்டேனென்று அவர் மேல் மாகாண சபையில் ஆற்றிய உரை முக்கியத்துவம் மிக்கது.

இலங்கையின் சிறுபான்மை மக்களின், குறிப்பாகத்  தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் பற்றி, அவர்கள் அடைந்த இன்னல்கள் விடயத்தில் தெளிவுடனிருந்தவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின. எப்பொழுதும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர். தனது உறுதியான , தெளிவான அவரது அரசியல் செயற்பாட்டால், நோக்கால் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் பல. பதவி இழந்தார். தலை மறைவாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இவற்றாலெல்லாம் அவர் கலங்கி  அடிபணியாமல் தான் கொண்ட கொள்கையில், சிந்தனைகளில் உறுதியுடன் இருந்தார். இதுவே அவரது மிக முக்கியமான ஆளுமை அம்சம்.

மேலும் படிக்க ...

இரவு மெதுவாக வந்தது (The Night Came Slowly) - மூலம் ஆங்கிலத்தில் கேட் சோபின் (Kate Chopin) | தமிழில் அகணி சுரேஸ் -

விவரங்கள்
- மூலம் ஆங்கிலத்தில் கேட் சோபின் (Kate Chopin) | தமிழில் அகணி சுரேஸ் -
சிறுகதை
25 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                    - Kate Chopin -

நான் மனிதர்கள் மீதான ஆர்வத்தை இழக்கிறேன்; அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் செயல்களின் முக்கியத்துவத்தில். பத்து புத்தகங்களைப் படிப்பதை விட ஒரு மனிதனைப் படிப்பது சிறந்தது என்று யாரோ ஒருவர் சொன்னார். எனக்கு புத்தகங்களோ ஆண்களோ வேண்டாம்; அவர்கள் என்னை கஷ்டப்படுத்துகிறார்கள். அவர்களில் ஒருவரால் என்னுடன் இரவு - கோடை இரவு போல பேச முடியுமா? விண்மீன்களைப் போல  அல்லது  தழுவிச் செல்லும் காற்றுப் போல ? பேச முடியுமா?

நான் ஆலமரத்தடியில் படுத்திருந்தபோது இரவு மெதுவாக, மென்மையாக வந்தது. நான் கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு அது தவழ்ந்து, பள்ளத்தாக்கிலிருந்து திருட்டுத்தனமாக ஊர்ந்து வந்தது. அருகிலுள்ள மரங்கள் மற்றும் இலைகளின் வெளிப்புறங்கள் ஒரே கருப்பு நிறத்தில் ஒன்றிணைந்தன, மேலும் இரவும் அவற்றிலிருந்தும், கிழக்கு மற்றும் மேற்கிலிருந்தும் திருடப்பட்டது, வானத்தில் ஒரே ஒளி இருக்கும் வரை, மேப்பிள் இலைகள் மற்றும் ஒரு நட்சத்திரம் வெறித்தனமாக கீழே பார்க்கிறது.

இரவு புனிதமானது மற்றும் மர்மம் என்று பொருள்படும்.

மேலும் படிக்க ...

வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளின் 41ஆவது நினைவு தினம்! 1983 ஜூலை 25 – 27 – 28 ஆம் திகதிகளில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக ! தாயகம் முதல் புகலிடம் வரையில் அலைந்துழலும் ஈழவிடுதலைக் கனவைச் சுமந்த ஆத்மாக்கள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஐந்து வருடங்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு பிரான்ஸில், எனது மதிப்பிற்குரிய ஆசான் ( அமரர் ) பண்டிதர் க. மயல்வாகனன் அவர்களின் நூற்றாண்டு விழா நடந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் அதற்கு என்னையும் அழைத்திருந்தனர். அங்கு பயணமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், எனது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்த ஒரு அன்பர் என்னுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டார். அவரது பெயரைப்பார்த்துவிட்டு, அந்தப்பெயரில் இலங்கையில் எவரையும் எனக்குத் தெரியாதிருந்த நிலையில், “ தமிழ்நாட்டில் நீங்கள் எவ்விடம்? “ எனக்கேட்டிருந்தேன். அவர் தமிழ்நாட்டில் சிறிதுகாலம் வசித்திருந்தாலும், அவரது பூர்வீகம் இலங்கையில் வடபுலம்தான் என்பதை தெரிந்துகொண்டேன்.

இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையும் இனவிடுதலைப் போராட்டமும் அவரையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. இந்தப்போராட்டத்தில் அவரும் ஒரு இயக்கத்தில் இணைந்திருந்தவர். அத்துடன் அறிவுஜீவி. தொடர்பாடலின் ஊடாக அவரும் பிரான்ஸிலிருப்பதை அறிந்துகொண்டேன்.

நான் அங்கு சென்றதும் என்னைத்தேடி வந்து சந்தித்தார். அவருக்கு நான் ஏற்கனவே எழுதியிருந்த சொல்லமறந்த கதைகள், சொல்லவேண்டிய கதைகள் ஆகிய நூல்களை கொடுத்தேன். அவற்றைப் பார்த்துவிட்டு, தன்னிடமும் சொல்லவேண்டிய கதைகள், சொல்ல முடியாத கதைகள் ஏராளமாக இருப்பதாகச் சொன்னார்.

மேலும் படிக்க ...

கறுப்பு ஜூலை நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
23 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

     -  1983 கறுப்பு ஜூலையில் நாடே பற்றியெரிந்தபோது...

ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜூலை மாதம் எனக்கு மிக மிக முக்கியமானது. அத்துடன் மறக்க முடியாத மாதம். இந்த மாதத்தில்தான் 1951 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி நான் பிறந்தேன். 13 ஆம் இலக்கம் அதிர்ஷ்டம் அற்றது என்பது பொதுவான கருத்து. சில நாடுகளில் அமைந்துள்ள உல்லாசப்பயண விடுதிகளில் 13 ஆம் இலக்கத்தில் விருந்தினர்கள் தங்கும் அறையும் இருக்காது என்பார்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கொலிவூட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கவிப்பேரரசு வைரமுத்துவும் பிறந்தார். இவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் அற்றவர்களா..? நான் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை பிறந்தேன். சில நாடுகளில் ஆங்கிலேயர்கள் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வந்தால், அதனை கறுப்பு வெள்ளி துரதிர்ஷ்டமான நாள் எனச்சொல்லிக்கொண்டு வேலைக்கும் செல்ல மாட்டார்களாம் ! இது எப்படி இருக்கிறது..?

கவியரசு கண்ணதாசன் “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..?“என்று தொடங்கும் பாடலை இயற்றியிருக்கிறார். அவர் இந்த வரிகளை தனது சொந்த அனுபவத்தில்தான் எழுதியிருப்பார். எனக்கும் இந்த ஜூலை மாதத்தை பல காரணங்களினால் மறக்க முடியவில்லை. எனது முதல் சிறுகதையும், கனவுகள் ஆயிரம் , 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் மல்லிகையில் வெளியானது.

மேலும் படிக்க ...

சொற்களின் வழியே கடந்தகாலத்திற்குச் திரும்பிச் செல்லுதல் - த.அகிலன் -

விவரங்கள்
- த.அகிலன் -
நூல் அறிமுகம்
22 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தேவகாந்தனின் மொழி அதிகமும் அழகான உரையாடல் தருணங்களால் நிரப்பப் படாதது. ஆனால் கனதியான கதைத் தருணங்களால் வாழ்வையெழுதும் சொற்கள் அவருடையவை. ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் தேவகாந்தன் ஒரு முதிர்ந்த யானையைப் போல இருக்கிறார். மெதுவான நடை ஆனால் தேங்காத பயணம், எல்லாத்திசைகளிலும் வழியறிந்த யானை. தமிழ்ச்சமூகம் அவரைக்கொண்டாடியது போதாது என்று அவரைப் படிக்கும்தோறும் தோன்றிக்கொண்டேயிருக்கச் செய்பவை தேவகாந்தனின் சொற்கள். நான் முன்பொருமுறை சொன்னதைப்போல அரசியல் சதிர்களுக்கப்பால், போர்க்களத்தின் முன்பும் பின்புமான தமிழ்நிலத்தின் வாழ்வை அவருடைய சொற்கள் தீண்டியிருக்கின்றன. ஓயாமல் தமிழ் நிலத்தின் வாழ்வைப் பாடும் பாணன் அவர். இங்கே எழுதப்பட்டிருக்கும் இயக்கச் சண்டைகள், கட்சிச் சண்டைகள், சேறடிப்புக்களைத் தாண்டி தமிழ் வாழ்வையறிய எதிர்காலத்தின் வரலாற்றைக் கற்பவர் தேவகாந்தனைத்தான் படிக்கவேண்டும்.  

தாங்கள் தவறவிட்ட தருணத்தை, மனிதர்களை, இளைமையை, ஆசையை மறுபடியும் சந்திக்கும் மனிதர்களின் கதைகள் இவை என நான் எண்ணகிறேன். அத்தருணங்கள் சிலருக்கு அதுவாய் அமைகிறது, சிலர் அமைத்துக் கொள்கிறார்கள். அத்திரும்பிச் செல்லுதல் சில விடுகதைப் புதிர்களை அவிழ்க்கிறது, சில முடிச்சுக்களைப் போடுகிறது, ஓர் ஆறுதலை அல்லது வெறுமையை கதைமாந்தருக்கும் வாசகனுக்கும் அளிக்கிறது. இந்தத்தொகுப்பை படித்து முடிக்கையில் எனக்கு உடனடியாக வந்த மனப்பதிவு இதுதான். இத்தொகுப்பின் பொதுத் தன்மையாய் நான் கண்டடைந்திருப்பதும் அதுவே.  

மேலும் படிக்க ...

இருபத்தி நான்காம் வயதில் பாரதி - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
21 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

ஆன்ம உணர்த்திறன்

மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.

மனுக்குலத்தின் மீது அவன் கொள்ளும் பேரன்பு சமூகநீதிக் கோரி, அவனைச் சமரசம் இன்றி தேடலுக்கு உட்படுத்தி, அவனுக்கு ஆன்மப் பக்குவத்தை அளிக்கக்கூடும். இருந்தும் இந்நகர்வில், அவனுக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் - அவன் தரக்கூடிய விலை, அவன் எதிர்க்கொள்ளவேண்டிய துன்பங்கள் - இவையனைத்தும் உடன் நிகழ்வதே ஆகும்.

சுருங்கச் சொன்னால், இப்பயணிப்பின் போது அவன் சுமக்க முனையும் சுமையின் எடை அசாதாரணமானது எனக் கூறலாம். இத்தகைய ஓர் சமன்பாட்டில்தான், பாரதி எனும் இவ் இருபத்து நான்கு வயது இளைஞன், ஏற்கனவே வகுத்தளிக்கப்பட்ட, கறாரான திட்டங்கள் ஏதுமின்றி இச்சுமையைத் தூக்க சம்மதிக்கின்றான்.

இக்காலப்பகுதியில், இவ்இளைஞன், தன் ஆன்மாவைக் கட்டியெழுப்பும் விதம் எமது கவனத்துக்குரியது. பல் கூறுகளாய் அமையக்கூடிய அவனது தேடல்களின், ஒரு கூறு கடவுள் சம்பந்தமானது.

ஒருசந்தர்ப்பத்தில் மகா கலைஞன், மக்சிம் கார்க்கி கூறுவான்: “உனது கடவுள் யார் என்ற கேள்விக்கு நேர்மைமிக்க எந்த மனிதனும் விடையளிப்பது சற்றுச் சிரமமானதே” (1898).

பாரதி பொருத்து, ஆழ ஆய்வு செய்யும், பேராசிரியர் கைலாசபதி கூறுவார் : “இவன் ஒரு சாக்த பக்தன்” என.

மேலும் படிக்க ...

அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பு பற்றிய குறிப்புகள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
21 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மலையக மக்கள் பற்றிய இலக்கியப் பங்களிப்பு பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க பற்றித் தினகரனில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

1. "கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்."

மேலும் படிக்க ...

திரைப்படம் விமர்சனம்: இந்தியன் – 2 - சமூகத்தை திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
21 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வட இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் ஹாத்ரஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு சாமியாரின் கால் பதிந்த மண்ணை எடுக்க முனைந்து, அந்த ஜன நெரிசலில் 122 பேரளவில் பரிதாபமாக இறந்திருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாக சாகடிக்கப்பட்டிருக்கும் துயரம் கப்பிய காலப் பகுதியில், தமிழ் நாட்டில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகியிருக்கும் வேளையில், சில அரசியல் தலைவர்கள் கூலிப்படைகளினால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு ஐநூறு கோடி ரூபாவுக்கு மேல் செலவுசெய்து அதில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள கைக் கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வேளையில், இந்திய தேசத்தில் நீடித்திருக்கும் ஊழலை, சொத்து சேகரிப்பை , கருப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற குரலோடு லைக்கா சுபாஸ்கரனின் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்த இந்தியன் – 2 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

இந்தியன் 1996 ஆம் ஆண்டில் இதே சங்கரின் இயக்கத்தில் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்து, கமலுக்கு அவ்வாண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. 28 வருடங்களுக்குப் பின்னர் அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்பு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்தியன் 2 வெளிவந்துள்ளது. இம்மாதம் 12 ஆம் திகதி உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் காட்சிக்கு வந்திருக்கும் இந்தியன் 2 முதல் நான்கு நாட்களிலேயே நூறு கோடி ரூபாவை வசூல் செய்திருக்கிறது என்ற செய்தியும் வெளியானது.

மேலும் படிக்க ...

காலமும் கணங்களும்: இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை தலாத்து ஓயா கே. கணேஷ் (1920 – 2004 )! நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
21 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

( ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஒலிக்கும் ஐ. ரி. பி. சி. வானொலியில் “ எம் தமிழ் உறவுகள் “ நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய உரை. நேர்கண்டவர்: எஸ்.கே. ராஜென் )


பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப் பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது ” என்றாள்.

தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்து - உழைப்பிலிருந்து பிறந்த பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச் சுருக்கமாகச்சொன்னேன்.

மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி எனது காலமும் கணங்களும் தொடரில் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.

உழைக்கின்ற மக்கள் நிலையோ தாழ்வு
உழைக்காத துரைமார்கள் சுகபோக வாழ்வு
மழைக்காற்று மதிக்காது வடிக்கின்ற மேல்நீர்
மனம்குளிர நாமுண்ணும் ஒரு கோப்பைத்தேநீர்

இந்தக்கவிதையை இயற்கையும் பசுமையும் கொஞ்சும் மலையகத்தை சித்திரிக்கும் ஒரு Picture Postcard இல் எழுதி 1988 ஆம் ஆண்டு எனக்கு அனுப்பியிருந்தார் நண்பர் கே.கணேஷ். இலங்கை மலையகத்தில் பெண்கள் கொழுந்து பறிக்கும் அழகியகாட்சி அந்த அட்டையில் பதிவாகியிருந்தது.

மேலும் படிக்க ...

யி டியூப் சானல்: வ.ந.கிரிதரன் பாடல்கள்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
20 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது இசைப்பாடல்களை 'வ.ந.கிரிதரன் பாடல்கள் (V.N.Giritharan Songs) என்னும் யு டியூப் சானலில் நீங்கள் கேட்டு மகிழலாம். அதற்கான இணையத்தள முகவரி - https://www.youtube.com/@girinav1

வ.ந.கிரிதரனின் இசைப் பாடல்கள். எனது பாடல் வரிகளை பல்வகை வாத்தியக் கருவிகளுடன், பல்வகை இசை வடிவங்களைக் கலந்து பாடல்களாக்கி உள்ளேன். இதற்காகக் குரல் தந்ததுடன், இசையமைத்துத்  தந்ததற்காகவும் செயற்கை நுண்ணறிவான 'சுனோ'வுக்கு ( AI SUNO) என் மனம் நிறைந்த நன்றி. என் பாடல்களை இன்னும் பல்வேறு நாடுகளின் இசை வடிவங்களில் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்க வேண்டுமென்பது என்  அவா.

தனது பாடல்களை இவ்விதம் பாடல்களாக்குவதற்கு இசைக்கலைஞர்கள் , பாடகர்கள் பலரின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கான சாத்தியம் அற்ற என்னைப்போன்ற பாடலாசிரியர்கள் இவ்விதம் இசையமைத்து பாடல்களை உருவாக்கி, பரீட்சித்துப் பார்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் உதவுகின்றது. அவ்வகையில் இத்தொழில் நுட்பத்தை ஆரோக்கியமானதொரு தொழில் நுட்பமாகவே பார்க்கின்றேன்.

மேலும் படிக்க ...

பாடல்; குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
19 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


- இசை & குரல் - AI SUNO --

பாடலைக் கேட்க

[என் குருமண்காட்டு நினைவுகள் என்னும் நெடுங் கவிதை சிறு மாறுதல்களுடன் இப்பாடலாக உருவெடுத்துள்ளது.  வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். ரப், பொப், ரொக் என்று உருவான இசைக் கலவை இது. ]

பாடல்; குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -

பால்யப் பருவத்துக் குருமண் காடே!
நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோயவே முடியும்.
நனவிடை தோயவே முடியும்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.

வனம், வாவி நிறைந்த குருமண்காடு.
வளமான பூமி என் குருமண்காடு.
காடு  இன்று அங்கில்லை.
அந்த வனப்பு அங்கில்லை.
அந்த வளம் அங்கில்லை.
என்று நான் காண்பேன்?
எங்கு நான் காண்பேன்?
என் நினைவுகளில் நிற்கும்
இன்னுலகம் என் குருமண்காடு.

மேலும் படிக்க ...

கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? - வ.ந.கிரிதரன்--

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
19 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


                       - இசை & குரல் - AI  SUNO  -

[இக்கவிதை எனது கவிதைத்தொகுப்புகளான 'எழுக அதிமானுடா', 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது. யு டியூப்பிலும் இக்கவிதையை நீங்கள் கேட்கலாம் - https://www.youtube.com/watch?v=_9Ilsgy2T7I ]

'காங்ரீட்'!  'காங்ரீட்'!  'காங்ரீட்'!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

மேலும் படிக்க ...

இது பாட்டுக் கேட்கும் நேரம் : 'அனுபவம் புதுமை' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
15 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காதலிக்க நேரமில்லை' தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை என்றதும் நினைவுக்கு வரும் படங்களில் முதலில் நிற்பது. ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் திரைப்படம். இருவருமே தமிழ்த்திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள். ரவிச்சந்திரன் நான், இதயக்கமலம், காதலிக்க நேரமில்லை  என வெள்ளிவிழாப் படங்களைத் தந்தவர். ஒரு சமயம் குட்டி எம்ஜிஆர் என்றும் அழைக்கப்பட்டார்.

நடிகர் ரவிச்சந்திரன் சிங்கப்பூரிலிருந்து நடிக்க வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். 'அனுபவம் புதுமை' என்னுமிந்தப்பாடலில் அவருடன் இணைந்து நடித்திருப்பவர் ராஜஶ்ரீ. சிறந்த நர்த்தகி. இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் கண்ணதாசன். பாடியிருப்பவர்கள் - பி.பி.ஶ்ரீனிவாஸ் & பி.சுசீலா. இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி.

மேலும் படிக்க ...

நூல் மதிப்பீடு: வெலிகம ரிம்ஸா முஹம்மதின் "விடியல்" ஆய்வு நூல் ஓர் எளிய மதிப்பீடு! - சிறீ சிறீஸ்கந்தராசா -

விவரங்கள்
- சிறீ சிறீஸ்கந்தராசா -
நூல் அறிமுகம்
15 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைக் கற்கை நெறிக்காக ஆய்வு ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வை ஒரு சில மாற்றங்களோடு "விடியல்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். இந்த விடியல் என்ற நூலினையே இங்கே ஓர் எளிய மதிப்பீட்டிற்காக நான் எடுத்துக்கொள்கின்றேன். ஏனைய இலக்கிய வடிவங்களைப் போன்று ஆய்வுத் துறையானது தொடக்கம், வளர்ச்சி, உச்ச கட்டம், முடிவு போன்ற வளர்ச்சிப் படிமுறைகளைக் கொண்டதல்ல.

ஆய்வின் நோக்கம், ஆய்வின் பொருள், முன்னர் ஆய்வு செய்யப்பட்டதா? அப்படியாயின் மீள் ஆய்வு  செய்யப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இத்தகைய ஆய்வின் மூலம் சொல்ல வரும் செய்தி என்ன? போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக ஒரு ஆய்வு இருக்க வேண்டும். ரிம்ஸா முஹம்மத் இளம் ஆய்வாளர், கவிஞர், பன்னூலாசிரியர், சஞ்சிகையாசிரியர், ஊடகவியலாளர் என்ற வகையில் மூத்த எழுத்தாளர் மூதூர் முகைதீனின் கவிதைகளைத் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத், முதலாவது அத்தியாயத்தில், கவிதை பற்றிய அறிமுகத்தைத் தந்துவிட்டு தான் எடுத்துகொண்ட ஆய்வின் பிரச்சனைகள், ஆய்வின் வரையறை, உள்ளடக்கம் பற்றிக் கூறுகின்றார்.  இரண்டாவது அத்தியாயத்தில் கவிதையின் வரைவிலக்கணம், கவிதையின் வகைகள், மரபுக் கவிதைகள் நவீன கவிதைகள் பற்றியும் பேசுகிறார். மூன்றாவது அத்தியாயத்தில் கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் கவிதைத் தொகுப்புகள், அவர் பெற்ற விருதுகள், பரிசில்கள், கௌரவங்கள் பற்றி மிகச் சிறப்பான முறையில் எழுதிச் செல்லுகிறார். நான்காவது அத்தியாயத்தில் "பிட்டும் தேங்காய்ப் பூவும்", "இழந்துவிட்ட இன்பங்கள்", "ஒரு காலம் இருந்தது" ஆகிய 03 கவிதைத் தொகுதிகளிலுள்ள கவிதைகள் பற்றியும் மிகவும் சிறப்பான எடுத்துக் காட்டுகளோடு பதிவு செய்து விளக்குகிறார். ஐந்தாவது அத்தியாயத்தில் கவிதைகளின் சமூக கலாசார பங்களிப்புகள் பற்றியும், வாசகர்கள் மத்தியில் கவிதை நூல்களுக்கான வரவேற்புப் பற்றியும் தனக்கே உரித்தான பாணியில் கூறுகிறார்.

மேலும் படிக்க ...

தமிழ்நாடு கலை, இலக்கிய, சமூக ஆர்வலர் தாமரை சி. மகேந்திரனுடன் சந்திப்பு!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
15 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  | Zoom Meeting ID: 897 1209 2206 | Passcode: 914664

மேலும் படிக்க ...

பானுபாரதியின்(நோர்வே) உன்னத சங்கீதம்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நூல் அறிமுகம்
14 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நோர்வே மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட பானுபாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்தபோது ஒவ்வொரு கவிதையையும் வாசித்து விட்டு கண்ணை மூடியபடி ஆழ்மனத்தில், ஓர் ஆணாகச் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் உலாவிவிட்டே மீண்டும் அடுத்த கவிதையை வாசித்தேன். மிகவும் ஆழமான, ஆனால் நமக்குச் சமீபமான விடயங்களை அந்தக் கவிதைகள் பேசுகின்றன.

மூலக்கவிதைகளை நான் படிக்காதபோதும், மொழிமாற்றம் மிகவும் அழகாக, அமைதியாக மனதில் வந்து குளத்தின் கரையின் அலையாக ஈரலிப்பைத் தருகின்றன. பெண்களின், பெண்களுக்கே உரிய காதல் , தாய்மை உணர்வுடன் எழுதப்பட்ட கவிதைகள், அதாவது அகத்தின் வெளிப்பாடுகள் என்றாலும் சில பட்டினி, போர் எனும் புறவய வெளிபாட்டை பேசுபவையாக உள்ளன. அவை பெண் குரலாக நமக்குக் காதில் ஓங்கி அறைகின்றது. ஒரு குறுகிய இனமோ நாடோ அற்று மொத்தமான மனித வாழ்வின் தேறலை பிளிந்து நமக்குத் தருகின்றன. ஆண்கள் சிந்திக்காத கோணத்தில் இருந்து அவைகள் வருவதே எனக்குப் பிடித்தது.

முதல் கவிதையே சிறு குழந்தைக்குத் தலையில் ஊற்றிய ஒரு குடம் வெந்நீர்போல் என்னைத் திக்கு முக்காடப்பண்ணியது.

மேலும் படிக்க ...

முல்லைஅமுதன் கவிதைகள் மூன்று!

விவரங்கள்
முல்லைஅமுதன்
கவிதை
14 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. அழைப்பிதழ்!

அழைப்பு வந்திருந்தது.
பிரித்துப் படித்ததில் ஆச்சரியம்..
கண்களுடன்,
மனதும் வியந்தததுடன்
ஒருவித அச்சமும் வந்தது.
மனைவியிடம் கொடுத்தேன்.
இதில் உங்கள் பெயர் இல்லையே
என்றாள்.
அப்படியாயின்
உனக்காக இருக்குமோ?
அவள் பயந்தாள்.
இருவரும் எதுவும் செய்ததில்லையே..
நல்லது செய்தாலும் அச்சமே நண்பன் சொல்லியிருந்தான்.
நாளை உனக்கான தண்டணை நிறைவேற்றப்படும்.
அவை கடுமையாக இருக்கும்..
ஆயுதங்களின் கடிதங்களை யாரிடமும் காட்டிக்கொள்ளமுடியாது..
கடவுளின் தண்டணையைவிட
ஆயுதங்கள் முன் தன்னைப் பலியிடுதல் என்பது
கொடூரம்தான்..
நாங்கள் முழந்தாளிட்டுள்ளோம்.
பரமபிதாவே!

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ஞானிகளின் பரிசு! - ஆங்கிலத்தில் ஓ ஹென்றி ( The Gift of the Magi ) | தமிழில் அகணி சுரேஸ் -
  2. கம்பராமாயணத்தில் ஒற்றர்கள்! - முனைவர் க.மங்கையர்க்க
  3. மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகள் பற்றி.. - வ.ந.கி -
  4. முகநூல்: எழுத்தாளர் 'கம்பிகளின் மொழி' பிரேம் அகால மரணம். ஆழ்ந்த இரங்கல். - யோ.புரட்சி -
  5. பாரதியார் நான் பேசுகின்றேன்!
  6. அலசல் : கருவறுக்கும் அரசியலும்! - மன்சூரின் அண்மித்த கட்டுரையும் - ஜோதிகுமார் -
  7. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்... வ.ந.கிரிதரன் -
  8. அஞ்சலி: சமூக, அரசியற் செயற்பாட்டாளர் போல் சத்தியநேசன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
  9. 200 வருட வரலாற்றுப் பூர்த்தி! இரண்டு நூற்றாண்டுகளாக மலையக மக்கள் இந்த நாட்டுக்கு செய்த பாரிய பங்களிப்பு! - சட்டத்தரணி இரா. சடகோபன், தலைவர், மலையக மக்கள் ஆய்வு அபிவிருத்தி மன்றம் -
  10. கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -
  11. தமிழறிஞர் த.துரைசிங்கம் நினைவு கூரலும் நூல் வெளியீடும்! - தகவல்: வி.ரி.இளங்கோவன் -
  12. அஞ்சலி: எழுத்தாளர் எஸ்.முத்துமீரான் மறைவு!
  13. கவிதை: மழை பொழியும் நள்ளிரவில் படுக்கையில் நான்! - வ.ந.கிரிதரன் -
  14. “காலமும் மனிதர்களும்” நூல் பற்றி.... - இளையராஜா -
பக்கம் 20 / 104
  • முதல்
  • முந்தைய
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • அடுத்த
  • கடைசி