மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது (பிறந்த திகதி 27-06-1927)! இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்!
- 'மல்லிகை' ஆசிரியர் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு ஜூன் 27 அன்று வயது தொண்ணூறு. அதனையொட்டி எழுத்தாளர் முருகபூபதி எழுதிய இக்கட்டுரை வெளியாகின்றது. -

நான் அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது. அவருக்கு அப்போது 37 வயது. காலம் 1964 ஆம் ஆண்டு. யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியின் ஆண்கள் விடுதியிலிருந்து படிக்கும் காலம். விடுதியில் பாரதி, வள்ளுவர், கம்பர் என்று மூன்று மாணவர் இல்லங்கள். எனக்கு அந்த வயதிலும் பாரதிதான் மிகவும் பிடித்தமானவர். அவரது பாடல்கள் இலகுவாகப்புரிந்ததும் ஒரு காரணம். பாரதி இல்லத்திலே சேர்ந்துகொண்டேன். என்னுடன் படிக்க வந்திருந்த எனது மாமா மகன் முருகானந்தன் வள்ளுவர் இல்லத்திற்குச் சென்றுவிட்டான். ஆண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் கிரிக்கட், உதைபந்தாட்டம், கிளித்தட்டு போட்டிகளை இல்லங்களின் மட்டத்தில் நடத்துவார்கள். அவ்வப்போது மூன்று இல்லங்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளும், ஒன்றுகூடல் விருந்துகளும் நடத்தும். அத்துடன் யாராவது ஒரு பெரியவரை அழைத்து கல்லூரி பிரதான மண்டபத்தில் பேசவைப்பார்கள். அன்று ஒருநாள் வந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல் அணிந்திருந்தார். சிவந்ததேகம். அவர்தான் பிரபல பேச்சாளர் டொமினிக்ஜீவா என்று ஒரு இல்லத்தின் தலைவர் அறிவித்தார். அப்பொழுது அவர் மல்லிகை என்ற இலக்கிய இதழை தொடங்கியிருக்கவில்லை. அவர் மேடையில் பேசும்போது ஆத்திரத்தில் பேசுவதுபோலவே எனக்குப்புரிந்தது. அதனைத்தான் பின்னாட்களில் தர்மாவேசம் எனப்புரிந்துகொண்டேன். அவருக்கு எமது தமிழ் சமூகத்திடம் ஏதோ கோபம், ஆழ்ந்த வருத்தம் இருப்பதாகவே அந்த வயதில் தெரிந்துகொண்டேன். சங்கானை என்னும் இடத்தில் நடந்த சாதிக்கலவரம் பற்றி அவர் பேசினார். சாதி என்றால் என்னவென்று தெரியாமல்தான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன். விடுதியில்தான் அதன் அர்த்தம் எனக்கும் முருகானந்தனுக்கும் தெரிந்தது.
டொமினிக்ஜீவா, அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பற்றியும் பேசினார். அவர், ஒரு விறகுவெட்டிப்பிழைக்கும் தொழிலாளியின் மகன் என்ற தகவலும், தெருவிலிருந்த மின்கம்பத்தின் கீழே அமர்ந்து படித்திருக்கிறார் என்ற செய்தியும் டொமினிக்ஜீவா அன்று சொல்லித்தான் எனக்குத் தெரியும். டொமினிக்ஜீவா அன்று பேசும்போது அவரது நெற்றி நரம்புகள் புடைத்திருந்தன. பேசி முடித்த பின்னர் அவருக்காக மேசையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானப்போத்தலை எடுத்து அருந்தினார். மிச்சமும் வைத்தார். அதனை அருந்துவதற்கு இரண்டு மாணவர்கள் போட்டியிட்டனர். அதுதான் நான் டொமினிக்ஜீவாவை முதல் முதலில் கண்ட காட்சி. அவரை பின்னாட்களில் சந்திப்பேன் என்றோ, அவர் வெளியிட்ட மல்லிகையில்தான் எனது முதலாவது இலக்கியப்பிரதி வெளியாகும் என்றோ, அவர் எனது குடும்ப நண்பராவார் என்றோ, அவர் பற்றி கட்டுரைகளும் நூலும் எதிர்காலத்தில் எழுதுவேனென்றோ அந்தச் சிறிய வயதில் நான் கனவுகூட காணவில்லை. ஆனால், நான் அன்று காணாத கனவெல்லாம் பிற்காலத்தில் கனவாக வந்து நனவாகியிருக்கின்றன. அவருடன் நெருங்கிய பின்னர். அவரும் என்னுள் கனவுகளை விதைத்தார். அவற்றை நனவாக்கியிருக்கின்றேன் என்ற மனநிறைவுடன், தமது 90 ஆவது அகவைக்கு வந்திருக்கும் அவரை வாழ்த்துகின்றேன்.

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்றுகூடலும் அண்மையில் நடைபெற்றன. இலங்கையில் நீடித்த போரில் தந்தையை அல்லது தாயை (குடும்பத்தின் மூல உழைப்பாளியை) இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருக்கும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் இந்த ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்குரிய நிதிக்கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் அண்மையில் யாழ்ப்பாணம் அரசாங்க செயலகத்திலும் ( யாழ். கச்சேரி) முல்லைத்தீவில் விசுவமடுவிலும் வவுனியா வேப்பங்குளத்திலும் நடைபெற்றன. இவற்றில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர்கள் திருவாளர்கள் அ. சதானந்தவேல், முருகபூபதி ஆகியோரும் வருகை தந்து உரையாற்றினர். வன்னியில் 2009 இல் நடந்த இறுதிக்கட்டப்போரில் தந்தையை இழந்த பல மாணவர்களுக்கு இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவி வருகின்றது. அத்துடன் ஏற்கனவே கடந்த பலவருடங்களாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இந்நிதியம் உதவிவருகிறது. 
அவுஸ்திரேலியாவில் கடந்த 29 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை வரையில் யாழ். மாவட்ட அரச செயலகத்தில் ( கச்சேரியில்) குறிப்பிட்ட நிதியத்தின் உதவியுடன் கல்வியைத் தொடரும் யாழ். மாவட்ட மாணவர்களுடனான ஒன்றுகூடலை நடத்துகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர்கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட மாணவர் கண்காணிப்பு தொடர்பாடல் நிறுவனமான சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் மேற்குறித்த மாணவர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் கல்வியை இடைநிறுத்தாமல் தொடரும் வடக்கு, கிழக்கு உட்பட போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்l வன்னி மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடல், தகவல் அமர்வு என்பன இந்த மே மாதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முதலாவது நிகழ்ச்சி எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். அரச செயலகத்தில் (கச்சேரி மண்டபத்தில்) ஆரம்பமாகிறது. யாழ். அரச அதிபர் திரு. என். வேதநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொள்வார். மங்கல விளக்கேற்றலுடன் நீடித்த போரில் உயிரpழந்த மக்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர், திரு. த. ஜெயந்தன் வரவேற்புரையும், நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. சொ. யோகநாதன் தகவல் அமர்வு உரையும் நிகழ்த்துவர்.


" புத்தாண்டின் முன்னிரவுப்பொழுது. வறண்ட கோடையின் மத்தியில் வெக்கையானதொரு இரவு. திசையெங்கும் திணறடிக்கும் கும்மிருட்டு..! காய்ந்த ஓடைப்பாதையின் புதர்மூடிய வரப்புகளும் கண்ணுக்குத்தென்படாத காரிருள். வானைக் கருமேகமெதுவும் சூழ்ந்திருக்கவில்லை. வறண்ட நிலத்தின் புழுதிப்படலமும் தொலைதூரத்தில் எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையுமே அந்த இரவின் இருளைக்கனக்கச்செய்திருந்தன." இவ்வாறு ஆரம்பிக்கிறது ஹென்றி லோசனின் ஒற்றைச்சக்கர வண்டி என்ற சிறுகதை.
வவுனியாவின் எல்லையில் மடுக்கந்தை என்ற அந்த அழகிய கிராமத்தில் வசித்த மக்கள் துயில் எழுந்திருக்காத புலராத பொழுதிலே, அந்தச்சிறுவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து, கால்நடையாக சுமார் 6 மைல் தூரம் ஒற்றையடிப்பாதையிலும் வயல் வரப்புகளிலும் நடந்து சமணங்குளம் தமிழ்ப்பண்டிதரிடம் வருவான். அவ்வேளையில் அவன் வவுனியா இரட்டைப்பெரிய குளத்தில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்தான். தாய் மொழியும் வீட்டு மொழியும் சிங்களம். ஆங்கிலம் படிக்க சரியான வசதி வாய்ப்புகள் இல்லை. அயல் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அதனால், அவர்களுடன் பழகி உறவாடும் சந்தர்ப்பங்களும் அச்சிறுவயதில் அவனுக்கு கிடைக்கிறது. தமிழைப்பேசவும் புரிந்துகொள்ளவும் பழகிவிடுகின்றான். ஆங்கிலம் அந்நிய தேசத்திலிருந்து வந்த மொழி. அருகிலேயே தொன்மையான தமிழ் மொழி வாழ்கிறது. இதனைவிட்டு விட்டு எதற்காக அந்நியமொழிக்காக ஏங்கவேண்டும் என்ற சிந்தனை அந்த இளம் உள்ளத்தில் பிறக்கிறது. அயலில் சமணங்குளத்தில் பண்டிதர் கந்தையா என்றொருவர் ஆசிரியராகவும் அதேசமயத்தில் விவசாயியாகவும் வசிப்பதாக அறிந்துகொள்கின்றான். அவரைத்தேடி நடந்த சென்று, தனக்கு தமிழ் சொல்லித்தரும்படி கேட்கின்றான். அவர் ஒரு நிபந்தனை வைக்கிறார். "என்னிடம் தமிழ் படிக்கவருவதாயிருந்தால், அதிகாலை 4 மணிக்கு முன்பே வந்துவிடவேண்டும். நான் காலை 6 மணிக்கெல்லாம் வயலுக்குப்போய்விடுவேன். அதன் பின்னர் பாடசாலைக்குச்செல்வேன். மாலையில் வீடு திரும்பினாலும் உனக்கு தமிழ்ப்பாடம் சொல்லித்தருவதற்கு எனக்கு நேரம் இல்லை. மீண்டும் வயல், தோட்டம் என்று போய்விடுவேன். அதனால் உனக்கு தமிழ் சொல்லித்தருவதற்கு அதிகாலை வேளைதான் உகந்தது. அதற்கு சம்மதமாயிருந்தால் நாளை முதல் வந்துவிடு." அதிகாலைக்குளிரில் வீட்டில் போர்த்திப்படுத்திருக்கவேண்டிய அச்சிறுவன் தமிழ் மீது கொண்டிருந்த காதலினால், " காலை எழுந்தவுடன் படிப்பு" என்று பாடிக்கொண்டே காடு, மேடு, குளம், குட்டை கடந்து ஒற்றையடிப்பாதையால் வந்து பண்டிதர் கந்தையா அவர்களிடம் தமிழ் எழுதவும் பேசவும் கற்றுக்கொள்கின்றான்.
கவியரசு கண்ணதாசனைத்தேடி தொலைதூரத்திலிருந்து அவரது அபிமான ரசிகர் வந்துள்ளார். " எதற்காக இவ்வளவு தூரத்திலிருந்து என்னைத் தேடிவந்தீர்கள்...?" என்று கண்ணதாசன் அவரைக்கேட்டதும், " உங்கள் பாடல்களும் அதிலிருக்கும் கருத்துக்களும் என்னை பெரிதும் கவர்ந்தன. எனது வாழ்நாளுக்குள் உங்களை நேரில் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல்." எனச்சொன்னார் அந்த ரசிகர்.
எண்பத்தி ஏழு ஆண்டுகால விருட்சம் வீரகேசரி, எத்தனையோ காலமாற்றங்களை சந்தித்தவாறு தனது ஆயுளை நகர்த்திக்கொண்டிருக்கிறது. வீரகேசரி துளிர்விட்ட வருடம் 1930. விருட்சமாக வளரும்போது எத்தனைபேர் அதன் நிழலில் இளைப்பறுவார்கள், எத்தனைபேர் அதற்கு நீர்பாய்ச்சுவார்கள், எத்தனைபேர் அந்த நிழலின் குளிர்மையை நினைத்துகொண்டு கடல் கடந்து செல்வார்கள் என்பதெல்லாம் அதற்குத்தெரியாது. வீரகேசரி ஒரு வழிகாட்டி மரமாக அந்த இடத்திலேயே நிற்கிறது. பின்னாளில் அதன்வழிகாட்டுதலில் வந்தவர்களில் ஒருவர் அது துளிர்த்து சுமார் ஐந்துவருடங்களில் பிறந்தார். அவருக்கு தற்பொழுது 82 வயதும் கடந்துவிட்டது. அவர்தான் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம். அவருக்கு கடும் சுகவீனம் என்று அவருடைய நீண்ட கால நண்பரும் பல வருடங்கள் வீரகேசரியில் அவருடன் இணைந்து பணியாற்றியவருமான வீரகேசரியின் முன்னாள் விநியோக - விளம்பர முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் நேற்று 12 ஆம் திகதி, தொலைபேசியில் சொன்னார். அவருடன் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு வந்து எனது கணினியை பார்த்தேன் நண்பர் செல்லத்துரை மூர்த்தி கனடாவிலிருந்து அதே செய்தியை மிகுந்த கவலையுடன் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.
" ஈழநாட்டிலே பல சமூகத்தவர்கள் இருக்கின்றார்களெனினும் தமிழரின் சொந்தப் பண்பாட்டினையும் உரிமைகளையும் எடுத்துரைக்கும்போது, பிறசமூகத்தினரும் இந்நாட்டில் வாழ்ந்துவருகின்றனர் என்பதையுணர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை காண முயலவேண்டும். ஒற்றையாட்சி( யுள்ள) இந்நாட்டில் மனித உரிமைகளைப்பெறுவது சாத்தியமானதா...? அடிப்படை மனித உரிமைகள் அனைத்தும் நன்கு பாதுகாக்கப்படுமா...? அன்றேல் சமஷ்டிதான் இலங்கைக்கு உகந்ததா...? மாகாண சுயாட்சி முறை எமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றத்தக்கதா...? இவைபோன்ற கேள்விகளுக்கு விளக்கம் தரும் கருத்தரங்கமாக 'ஈழநாடு' விளங்கும்." -
சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன் குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்ஷாவை காணும் குழந்தை, " அப்பா ரிஷ்க்கா " என்று சொல்கிறது. உடனே தகப்பன், " அது ரிஷ்க்கா இல்லையம்மா.... ரிக்ஷா" என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். " ரி... க்...ஷா..." குழந்தையும் அவ்வாறே, " ரி...க்...ஷா..." எனச்சொல்லிவிட்டு, மீண்டும் ரிஷ்க்கா" என்கிறது. தகப்பன் பொறுமையாக, மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தையின் உச்சரிப்பை திருத்தப்பார்க்கிறார். ஒவ்வொரு எழுத்தையும் அழகாக உச்சரிக்கும் குழந்தை, முடிவில் "ரிஷ்க்கா" என்றே சொல்கிறது. தகப்பன் எப்படியும் குழந்தை வாயிலிருந்து சரியான உச்சரிப்பு வந்துவிடவேண்டும் என்று நிதானமாக சகிப்புத்தன்மையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால், குழந்தை மீண்டும் மீண்டும் ரிஷ்க்கா என்றே தவறாக உச்சரிக்கிறது. அப்பொழுது கடைத்தெருவுக்குச் சென்ற மனைவி திரும்பிவருகிறாள். சென்ற இடத்தில் நினைவு மறதியாக குடையை விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொல்கிறாள். " பரவாயில்லை, ஒரு ரிஷ்க்காவில் போய் எடுத்துவா..." என்கிறார் கணவன். மனைவி திடுக்கிட்டு, " என்ன சொன்னீங்க...?" எனக்கேட்கிறாள். " ரிக்ஷாவில் போய் எடுத்துவா" எனச்சொன்னேன். " இல்லை... இல்லை... நீங்கள் வேறு என்னவோ சொன்னீர்கள்...!!!" இத்துடன் இச்சிறுகதை முடிகிறது. இதனை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வாழ்விலே ஒரு முறை என்ற சிறுகதைத்தொகுப்பில் படித்திருக்கின்றேன். ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடலில் ஆழ்ந்திருக்கும் படிமத்தை அதில் கண்டு வியந்தோம். 
ஏறினால் கட்டில், இறங்கினால் சக்கரநாற்காலி. அத்தகைய ஒரு வாழ்க்கையை அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்துகொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் அண்மையில் தனது 88 ஆவது வயதைக் கடந்திருக்கிறார். எனினும், நினைவாற்றலுடன் தனது கடந்த கால வாழ்க்கைப் பயணத்தை நம்முடன் தொலைபேசி ஊடாக பகிர்ந்துகொண்டார். அன்பின் மறுபெயர் அம்பி என சில வருடங்களுக்கு முன்னர் மல்லிகை, ஞானம் அட்டைப்பட அதிதி கட்டுரையில் இவர் பற்றி எழுதியிருக்கின்றேன். நான் எழுதப்புகுந்த 1970 காலப்பகுதியிலிருந்து இவருடனான எனது இலக்கிய நட்புறவு குடும்ப நட்புறவாகவும் நெருங்கியமைக்கு அம்பியின் நல்லியல்புகளே அடிப்படை.

இலங்கைத்தமிழ்ச்சூழலில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக வாழ்வதன் கொடுமையை வாழ்ந்து பார்த்து அனுபவித்தால்தான் புரியும். எனக்குத்தெரிய பல முழுநேர தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய துன்பங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை, வஞ்சனைகளை, சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது அவர்களின் வாழ்வு எனக்கும் புத்திக்கொள்முதலானது. நான் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியில் மினுவாங்கொடையைச் சேர்ந்த நண்பர் மு.பஷீர், எங்கள் இலக்கியவட்டத்தின் கலந்துரையாடல்களின்போது குறிப்பிடும் பெயர்:- இளங்கீரன். இவரது இயற்பெயர் சுபைர். இவரும் முழு நேர எழுத்தாளராக வாழ்ந்தவர்.
இலக்கியச்சிந்தனை அமைப்பின் விழா சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் 1984 ஏப்ரில் மாதம் நடந்தவேளையில் அங்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வில் சுஜாதா பேசி முடித்தபின்னர், மேடைக்குச்சென்று அவருடன் உரையாடியபொழுது, " இலங்கை திரும்பு முன்னர் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் அர்த் சத்யா படத்தையும் பார்த்துவிட்டுச்செல்லுங்கள். " என்றார்.
கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியானை மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக் கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி என்ற இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச் வெளியீடுகளின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.

“உங்களுடைய கையெழுத்து அழகாக இருக்கிறது” என்றேன். “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான புன்னகை. பல எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது போன்று அழகாக அமையவில்லை என்பது என்னவோ உண்மைதான். வேறு எந்தத் தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத் தொடங்கியவர்களின் வரிசையில் இடம் பெற்றவர் மு.கனகராசன். இவர் பணியாற்றிய பத்திரிகைகள் பல. இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நான் அறிந்த வரையில் மு.க. என எம்மால் அழைக்கப்பட்ட மு. கனகராசன் சுதந்திரன் - தேசாபிமானி - புதுயுகம் , தினகரன் முதலான பத்திரிகைககளிலும் சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர். 
" நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்." என்று 35 வயதுள்ள அவர், நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர், சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில் விவாதிக்கும் திறமையும் அவருக்கிருந்தது. இவ்வளவு ஆற்றலும் இருந்தும், எதற்காக பத்திரிகையும் நடத்தி வீணாக நட்டப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சிவாஜி அவருக்கு புத்திமதி சொன்னார். 
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு, இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள். அவர்கள் தந்த சுதந்திரம் எமது அரசியல்வாதிகளுக்கு தந்திரமானதுதான் மிச்சம். இந்தப்பின்னணியில் முதல் பிரதமராக பதவிக்கு வந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952 இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும், அடுத்த பிரதமர் யார்...? என்ற பதவிப்போட்டியில் வேரோடியிருந்த இனப்பிரச்சினை இன்னமும் தீரவில்லை. சிங்களத்தலைவர்கள் பதவிக்கு வரவேண்டுமானால் இலங்கை தேசிய சிறுபான்மை இனங்கள் பலிக்கடாவாகவேண்டும். 1955 இல் பிரதமராக யாழ்ப்பாணம் சென்ற சேர். ஜோன் கொத்தலாவலை, வடபுலத்து மக்கள் வழங்கிய மாலை மரியாதை வரவேற்பினால் மனம் குளிர்ந்து, " தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவருவேன்" என்றார். இதனை தவறாகப்புரிந்துகொண்ட எச். எல். மேத்தானந்தா என்ற ஒரு பௌத்த மத தீவிரவாதி " சரிதான், இனிமேல் சிங்களவர்களும் தமிழ்தான் படிக்கவேண்டிவரும் " என்று தென்னிலங்கையில் வகுப்புவாதம் கக்கத்தொடங்கினார். அதனை தனக்குச்சாதமாக்கினார் பண்டாரநாயக்கா. இதனைப்புரிந்துகொண்ட கொத்தலாவலை, தாமதிக்காமல் ஒரு பல்டி அடித்தார். 1956 இல் களனியில் ஐ.தே.கட்சி மாநாட்டில், தனிச்சிங்களமே ஆட்சி மொழி என்றார். பண்டாரநாயக்கா அதன் பிறகும் சும்மா இருப்பாரா...? தாம் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவேன் என்றார். ஐ.தே.க.வை தோற்கடிக்க ஐம்பெரும் சக்திகளை (பஞ்சமா பலவேகய) திரட்டிக்கொண்டு தேர்தலில் வென்ற பண்டாரநாயக்காவுக்கு உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. டீ.எஸ். சேனாநாயக்காவுக்குப்பிறகு தனக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் டட்லிக்கும் அவரையடுத்து கொத்தலாவலைக்கும் சென்றதுதான் அவரை சிங்கள தீவிரவாதம் பேசக்காரணமாக இருந்திருக்கிறது. அதற்குப்பின்னாலிருந்து நெருப்பு மூட்டியவர்கள் மேத்தானந்தா, புத்தரகித்த தேரோ ஆகியோர்.
கடந்த பதினொரு ஆண்டுகளுக்குள் (2005 -2016) நான் மூன்று தடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்ட வியத்தகு அம்சங்கள். கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர் தற்கால தமிழக இலக்கிய சூழலில் நிரம்பவும் பேசப்படுபவர். 2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக வந்தபோது முதல் முதலில் சந்தித்தேன். 2009 இல் தி.மு.க.வின் இளைஞர் அணி மாநாட்டை திருநெல்வேலியில் கொடியேற்றி தொடக்கிவைத்த அவரது அரசியல் பிரவேசத்தைக்கண்டேன். 2013 இல் கரிசல்காட்டின் வாசம் நிரம்பிய சில நூல்களின் படைப்பாளியாக பார்த்தேன். குறிப்பிட்ட இந்த எட்டு ஆண்டுகளுக்குள் ஒரு சந்தர்ப்பத்தில் லோகசபைத்தேர்தலில் ஒரு எம்.பி.யாக நிற்பதற்கு வேட்புமனு தாக்கல்செய்யவேண்டிய தருணத்தில் எதிர்பாராதவிதமாக வேலூரில் கார்விபத்தில் சிக்கியதனால் அந்த வாய்ப்பையும் இழந்து, அதனால் சில மாதங்கள் படுக்கையிலிருந்தபோதிலும் மீண்டு எழுந்துவந்து கவிதைகள், கட்டுரைகள் படைத்தார். பாதியில் நின்ற ஆய்வேட்டை பூர்த்திசெய்து முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.
வள்ளுவர் கம்பன் இளங்கோ பாரதி முதலான முன்னோடிகளை நாம் நேரில் பார்க்காமல் இவர்கள்தான் அவர்கள் என்று ஓவியங்கள் உருவப்படங்கள் சிலைகள் மூலம் தெரிந்துகொள்கின்றோம். இவர்களில் பாரதியின் ஒரிஜினல் படத்தை நம்மில் பலர் பார்த்திருந்தாலும், கறுப்புக் கோர்ட் வெள்ளை தலைப்பாகை தீட்சண்யமான கண்களுடன் பரவலாக அறிமுகம்பெற்ற படத்தைத்தான் பார்த்து வருகின்றோம். அந்தவரிசையில் வீரபாண்டிய கட்டபொம்மனை நடிகர் திலகம் சிவாஜியின் உருவத்தில் திரைப்படத்தில் பார்த்துவிட்டு அவரது சிம்ம கர்ஜனையை கேட்டு வியந்தோம். பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக்கம்பனிக்கு அஞ்சாநெஞ்சனாகத் திகழ்ந்து இறுதியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட வீரபாண்டியகட்டபொம்மன் மடிந்த மண் கயத்தாறைக் கடந்து 1984 இல் திருநெல்வேலிக்குச் சென்றேன். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அந்தப் புளியமரம் இப்பொழுது அங்கே இல்லை. கட்டபொம்மன் பற்றிய பல கதைகள் இருக்கின்றன. அவன் ஒரு தெலுங்கு மொழிபேசும் குறுநில மன்னன் என்றும் வழிப்பறிக்கொள்ளைக்காரன் எனவும் எழுதப்பட்ட பதிவுகளை படித்திருக்கின்றேன். இவ்வாறு கட்டபொம்மனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்பே எனது இளம்பருவ பாடசாலைக்காலத்தில் இலங்கை வானொலியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சக்தி கிருஷ்ணசாமியின் அனல்கக்கும் வசனங்களை சிவாஜிகணேசனின் கர்ஜனையில் அடிக்கடி கேட்டதன்பின்பு- அந்த வசனங்களை மனப்பாடம்செய்து பாடசாலையில் மாதாந்தம் நடக்கும் மாணவர் இலக்கிய மன்ற கூட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் தரித்து நடித்தேன். ஜாக்சன் துரையாக நடித்த மாணவப்பருவத்து நண்பன் சபேசன் தற்பொழுது லண்டனிலிருக்கிறான். இடைசெவலைக் கடந்துதான் திருநெல்வேலிக்குப்போக வேண்டும். வழியில் வருகிறது கயத்தாறு. அந்த இடத்தில் இறங்கி கட்டபொம்மன் சிலையைப்பார்த்தேன். பாடசாலைப்பருவமும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமும் நினைவுக்கு வந்தன. அவ்விடத்தில் அந்தச்சிலை தோன்றுவதற்கு முன்னர் மக்கள் தாமாகவே ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்பியிருந்தார்களாம். எப்படி...?
பதிவுகள் இணையத்தில் கிரிதரன் குறிப்பிட்டிருப்பது போன்று இன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் சிறந்த வாசகர். அத்துடன் நல்ல நினைவாற்றலும் பல்துறை ஆற்றலும் மிக்கவர்.தினமும் அவர் நூல்கள் படிப்பவர். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் சினிமாவுக்கு வந்தது ஒரு விபத்து. தொடர்ந்து கல்லூரியில் படித்து பட்டம் பெறுவதற்கே விரும்பியிருந்தவர். தாய் நடிகை சந்தியாவிடம், பத்மினி பிக்ஷர்ஸ் பந்துலுவும், சித்ராலய ஶ்ரீதரும் கேட்டதனாலேயே அம்மு என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா தமிழ்த் திரையுலகிற்கு வந்தார்.
தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் - படைப்பிலக்கியவாதி - பத்திரிகையாளர் - சினிமா வசனகர்த்தா - பாடலாசிரியர் - திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன.
வீரகேசரியால் எனக்குக்கிடைத்த நண்பர்கள் அதிகம். ஊடகத்துறையானது நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதித்துக்கொடுக்கும். ஆனால், பொருளாதார ரீதியில்தான் சம்பாத்தியம் குறைவானது. வீரகேசரிக்கு நூறு வயது விரைவில் நெருங்கவிருக்கிறது. மகாகவி பாரதியின் உற்ற நண்பர் வ.ராமசாமி (வ.ரா) அவர்களும் முன்னொரு காலத்தில் இதில் ஆசிரியராக பணியாற்றியவர்தான். புதுமைப்பித்தனுக்கும் பிறிதொரு காலத்தில் அச்சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர் சினிமாவுக்கு வசனம் எழுதச் சென்னைக்குச் சென்றமையால், இலங்கைக்கு வரவில்லை. கே.பி. ஹரன், அன்டன் பாலசிங்கம், செ.கதிர்காமநாதன், கே.வி. எஸ்.வாஸ், காசிநாதன், கோபாலரத்தினம், க. சிவப்பிரகாசம், டேவிட் ராஜூ, பொன். ராஜகோபால், சிவநேசச்செல்வன், நடராஜா, கார்மேகம், டி.பி.எஸ். ஜெயராஜ், அஸ்வர், கனக. அரசரத்தினம், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பலர் பணியாற்றிய பத்திரிகை வீரகேசரி. வீரகேசரி குடும்பத்தில் இருந்த சிலரைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். மின்னஞ்சல் - இணையத்தள வசதிகள் இல்லாத அக்காலத்தில் அங்கு பணியாற்றியவர்களின் வாழ்க்கையை இன்று நினைத்துப் பார்க்கும்பொழுது சுவாரஸ்யங்களும் துயரங்களும் கெடுபிடிகளும் சவால்களும் நெருக்கடிகளும்தான் நினைவுகளில் வந்து அலைமோதுகின்றன. அத்தகைய ஒரு கால கட்டத்தில்தான் வரதராஜா வீரகேசரியில் இணைந்திருந்தார்.அவர் அங்கு அலுவலக நிருபராக பணியாற்றினார். எனக்கு வீரகேசரியுடனான தொடர்பு 1972 இலிருந்து தொடங்கியது. அப்பொழுது நீர்கொழும்பு பிரதேச நிருபராகவே அங்கு இணைந்தேன்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









