பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (8): - யப்பானிய நிஞ்ஜாசா, முராய் வீரர்கள்! - நடேசன் -

நாங்கள் சென்ற அடுத்த சிறிய நகரம் ஒன்றில்(Town of Iga) அங்கு நிஞ்ஜா வீடும், நிஞ்ஜா உடைகளும், போர்க் கருவிகளும் வைக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளது . அத்துடன் ஆணும் பெண்ணும் ஒரு மணி நேரம் நிஞ்ஜா ஆயுதங்களையும் போர் புரிவதையும் எங்களுக்குக் காட்டினார்கள். பெரும்பாலான விடயங்கள் சீனாவிலிருந்து வந்து கும்ஃபு போர்க்கலையைச் சார்ந்தது இருந்த போதிலும் அதிரடியான தாக்குதல் , தாக்கிவிட்டு மறைவது , கரந்துறைதல் என்பன முக்கிய அம்சங்களாகும் . யப்பானிய நிலவுடைமை சமூகத்திலிருந்த போட்டிகளால் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக இந்த மாதிரியான இராணுவ பயிற்சிகள் உள்ளவர்களின் தேவைகள் அங்கிருந்தது. ஆனால் , அவை எல்லாம் மீஜி மன்னரின் சீர்த்திருத்தத்தின் பின்பு மறைந்துவிட்டன . இவைகள் தற்போது பழைமை பேணுவோர்களால் உல்லாச பிரயாணிகளுக்காக காட்சிப்படுத்துகிறார்கள் .
எமது வழிகாட்டி ரிச்சாட்டின் கூற்றுப்படி யப்பானில் பச்சை குத்தியவர்கள் வேலைகளிலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள் யப்பானில் பாதாள உலகம் எனப்படும் பணத்திற்காகக் கடத்தல், கொலை செய்பவர்கள் இல்லை. என்றபோது யக்குசா என்ன பாதாளலோகக் குழுவிற்கு (Yakuza) என்ன நடந்தது என்று நான் கேட்டபோது இப்பொழுது வெளிநாடுகளில் இயங்கலாம், உள்நாட்டில் அவர்கள் மிகவும் குறைவு என்றார் – அவர்கள் இருந்தாலும், அவர்கள் ஆரம்ப தொழில்கள் இப்போது குறைவு. சூதாடுதல் , அதிக வட்டிக்குப் பணம் கொடுத்தல் என்பவை சாத்தியமில்லை . இப்பொழுது ஓரளவு சூதாடுதல்( Poker and sports) யப்பானில் உள்ளது. மிக குறைந்த வட்டிக்கு அல்லது வட்டி இல்லாது யப்பானில் கடன் பெறமுடியும். இப்படியானவற்றால் யக்குசாவில் அங்கத்தினர் குறைந்துள்ளார்கள் என்றார்.










பூகோளரீதியாகத் தென் அமெரிக்காவில் இருக்கும், நெதர்லாந்தின் ஒரு பகுதியான Aruba, One Happy Island என்ற அவர்களின் sloganக்கு ஏற்ப மகிழ்ச்சியான ஒரு தீவாகவே தெரிந்தது. பிச்சைக்காரர்களையோ, வீடற்றவர்களையோ அங்கு காணவில்லை. ஆனாலும், பூமியிலேயே மிகப் பெரிய கடலான கரேபியன் கடலால் சூழப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் தாவரங்களைக் காண்பது அருமையாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கடலிலிருந்து ஆவியாகும் நீருக்கு என்ன நடக்கிறது, ஏன் அது மழையாகப் பொழியவில்லை என்பதே என் கேள்வியாக இருந்தது. பதிலை அறியும் ஆர்வத்தில் இணையத்தில் தேடியபோதே, இங்கு வீசும் காற்று (trade winds) வளியை மேலெழவிடாது கீழேயே வைத்திருப்பதால் அது முகில் உருவாக்கத்தையும் மழையையும் தடைசெய்கிறதென அறிந்தேன். அதேவேளையில் ஈரப்பதனையும் அது அகற்றுவதால், வெக்கையைத் தாங்கமுடியாத நிலை உருவாகாமலும் தடைசெய்கிறது.

முதல் நாளிரவு நேரம் பிந்திப் படுக்கைக்குச் சென்றதால், அடுத்த நாள் ஆறுதலாக விழித்தெழுவது என்பதுதான் திட்டம். ஆனால், ரொறன்ரோ நேரத்தைவிட ஒரு மணி நேரம் முந்தியதாக இருந்த Aruba நேரம் என்னை ஏழு மணிக்கு முன்பாகவே விழிக்கச்செய்து விட்டது. ‘மீராவின் தம்பி’, ‘சிறகடித்துப் பறப்போம்; என்ற என் இரண்டு சிறுவர் நூல்கள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வீடியோவைத் தனுசன் அனுப்பியிருந்தார். நேரத்துடன் எழும்பியதால் அதனை உடனேயே பார்க்க நேரமிருந்தது. அதனூடாக முன்பின் தெரியாத இரு ஆசிரியர்கள் என் நூல்கள் பற்றிப் பார்வையைப் பகிர்ந்ததைக் கேட்கமுடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை முழுமையாகப் பார்த்துமுடித்ததும் அது பற்றி ஒரு குறிப்பெழுதவேண்டும் போலிருந்தது. உடனடியாக எழுதி, தனுசனுக்கு அனுப்பிச் சரிபார்த்துவிட்டு, வீரகேசரி வாரஇதழுக்கு அனுப்பினேன்.











பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









