இரு கவிதைகள் - சி.ரஞ்சிதா , இலங்கை -

* ஓவியம் - AI
1. மலரும் பூக்களல்ல காதல்!
பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை
பூத்திடும் குறிஞ்சிப் பூக்களல்ல
நம் உறவு…!
பூத்த நொடிகளிலே உதிர்ந்து
விழும் சகுரா மலர்களல்ல
நம் காதல்…!
காலையில் மட்டும் கண்சிமிட்டும்
வெண் தாமரைப் பூக்களல்ல
நம் அன்பு…!
இரவில் இமைகள் இசைக்கும்
மல்லிகை மலர்களின் மணமல்ல
நம் நேசம்…!
வாசம் நுகர வாடிப்
போகும் அனிச்சம் மலர்களல்ல
நம் சரசம்…!
இடம் பார்த்துப் படர்ந்து
கொள்ளும் மணிச்சிகைப் பூக்களல்ல
நம் புரிதல்…!
அரும்பி அறுவடைகளை அழிக்கும்
பெரிய உந்தூழ் பூக்களல்ல
நம் பாசம்…!
பூக்களைக் காதலுக்கு ஒப்பிடுவதேன்…?
ஒப்பிடும் தரம் அல்லவே ஆழமான
உண்மை நெஞ்சங்களின் கேண்மை!




முத்தமிழ் வாழ்த்த முத்தையா பிறந்தார்.

இங்கு எல்லாமே காலம் போடும் 



பாரதி வந்தார் பற்பல பாடினார்
கன்னங்கரியாய் அப்பி நின்ற இருளுடன்,
கண்ணைக் கரிக்கும் 



தலைப்பிறை கண்டார் அன்பர்!



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









