'ரவி அல்லது' கவிதைகள்! - ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -

அதீத நிதர்சனம்
அநேகமாக
இந்தச் சூரியன் இன்றோடு நின்றுவிடப்போவதில்லை.
அந்த
நிலவுக்கு மேகத்தில் மறைதல்
கால நீடிப்பானாலும்
ஒளிவதற்கு உகந்த இடமெனக் கொள்ள முடியவில்லை.
ஆடு கடித்தாலும்
அந்தப் பூ
அடுத்தடுத்த நாளில்
பூக்கத்தான் போகிறது.
அவளைக் காதலிக்கத்தான்
வேண்டுமென்ற
அவசியங்கள் எதுவுமில்லை.
எப்படியும் கல்யாணம் செய்யத்தான் போகிறார்கள்.
இம்முறை
அடை வைத்த முட்டைகள்
பொறிக்காமல் போனாலென்ன
மறுமுறை முட்டைகள் போடும் கோழி இருக்கத்தான் செய்கிறது.
எனக்குத் தெரிந்தவரை
என் தாத்தாவும்
அவர் தாத்தாவும் செத்துத்தான் போனார்கள்.
இங்கு
இப்பொழுதென
எதார்த்தத்தை
ஏற்று
இயல்பில்
இணங்கியவனுக்கு
நாளை பற்றிய
நம்பிக்கைத் தேவையில்லை
தருணப் புரிதலில் லயிப்பதற்கு.


புதைந்திருக்கும் ஒலி ஒன்று,
கனவுகளில் தோய்ந்து
வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா






இன்று, காசாவின் இருளில் 

கண்கள் தொலைதூரம் வெறித்திருக்க
தீயவை அகன்றால் நல்லவை மலரும்.

அழகான உடை பெண்ணின்

ஊரின் வாசம்
எம் மண்ணழகு.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









