இலங்கை வானத்தில் உறைந்த மூச்சுகள்! - ம .ஆச்சின் -

அலை இல்லை…
கடல் அமைதியாக உள்ளது,
ஆனால் அதில் ஒரு மௌனம் குரல் போல ஒலிக்கிறது
ஒரே நேரத்தில் ஆயிரம் உயிர்களின்
கடைசி மூச்சு,
காற்றில் மிதந்து செல்லாமல்
மண்ணின் மீது விழுந்த கனவுகள்
மண்ணோடு கலந்து கரைந்தன.
காற்று கூட சோகமாய் அமைதியாக இருந்தது,
மழை கூட கண்ணீராக மாறி
வீட்டுக்களில் சிதறிய நினைவுகளை நனைய வைத்தது.
தாய் மடியில் நடுங்கிக் கொண்டிருந்த
குழந்தையின் நொறுங்கிய குரல்,
மொய்க்கப்பட்ட உறவுகளின் மௌன கூச்சலாக மாறின.
வெள்ளம் மட்டும் உயரவில்லை
இதயம் முழுவதும் துயரம் பெருகியது.
குடும்பங்கள் சிதறின,
நெருங்கிய உறவுகள் தொலைந்தன,
மண்ணின் ஒவ்வொரு கோணமும்
ஒரு அழுகிய கதை சொல்கிறது.



இன்று, காசாவின் இருளில் 

கண்கள் தொலைதூரம் வெறித்திருக்க
தீயவை அகன்றால் நல்லவை மலரும்.


அழகான உடை பெண்ணின்

ஊரின் வாசம்

எம் மண்ணழகு.






முத்தமிழ் வாழ்த்த முத்தையா பிறந்தார்.

இங்கு எல்லாமே காலம் போடும் 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









