இயற்கை விவசாய வாரம் 08/01/2018 to 14/01/2018 : இலங்கையின் வடகிழக்கில் ஜனவரி 20188இல் நடைபெறவுள்ள கல்வி, விவசாயம் பற்றிய பட்டறைகள்!
ஜனவரியில் இலங்கையின் வடகிழக்கில் கல்வி, விவசாயம் சம்பந்தமாக நடைபெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் விவசாயிக்களுக்காக நடைபெறவுள்ள பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் பங்குபற்றவுள்ள தகவலை முனைவர் தாரணி அவர்கள் அறியத்தந்திருந்தார். அவை பற்றிய அவர் அனுப்பிய விபரங்களைக் கீழே அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன். இவர்களது திட்டம் பூரண வெற்றியடைய வாழ்த்துகள்!
இப்பட்டறைகளில் கல்வி மற்றும் விவசாயம் பற்றிய பட்டறைகளில் பங்குபற்றவுள்ளவர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:
Education:
1) Prof.Dr Jayanthasri Balakrishnan
2) Prof.Dr Balakrishnan ADIYODI
3) Dr.R.Dharini, Assistant Professor of English, Government Arts College
4) Dr. E.Bennet, Associate Professor of English, National College, Trichy
5) Mrs.S.Sharon Shakkila Swarnavathy
6) K Venkatesan , Entrepreneur Development ( 3days)
Agriculture:
7) Murugaiah Balasubramanian (Pamayan) - Soil and Water
8). S.Ramasamy sundararaman (S.R. Sundararaman) - Crop Management
9). Varanavasi gounder Eswaramurthy (Ravi) (vermicompost)
10) P. Sathurakiri (Integrated farming)
11) (Professor) Nadarajah Sriskandarajah PhD, Professor Emeritus, Swedish University of Agricultural Sciences, Uppsala, Sweden
12) (Dr) Sridevy Sriskandarajah PhD, Research Scientist

பயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.


அண்மையில் 28-10-2017 அன்று மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ரொறன்ரோ, 2740 லோறன்ஸ் அவென்யுவில் உள்ள கல்லூரி மண்டபத்தில் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா ஒருங்கமைப்பாளர் கந்தப்பு சிவதாசனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி தேசிய கீதம், கல்லூரிக் கீதத்துடன் விழா சரியாக 5:31 க்கு குறித்த நேரத்தில் ஆரம்பமானது. எழில் மதிவண்ணன், கிருஷ்ணகுமார் சியாமளன், சக்திதரன் தர்சனன், தர்சனா சக்திதரன், சோபிகா ஜெயபாலன் ஆகியோர் தேசிய கீதம் இசைத்தனர். கல்லூரிக் கீதம் இசைப்பதில் செயற்குழு உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். 
03-12-2017, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு., பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை - இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் Blacktown என்னுமிடத்தில் அமைந்த Sydwest Multicultural Services மண்டபத்தின் ( 1/ 125, Main Street, Blacktown, N.S.W.2148) முதலாவது தளத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் கவிஞர் எஸ். வைதீஸ்வரன், இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள எழுத்தாளரும் செங்கதிர் இதழின் ஆசிரியருமான த. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுவர். மெல்பன், கன்பரா மற்றும் சிட்னியைச்சேர்ந்த எழுத்தாளர்களும் ஒன்றுகூடும் இந்நிகழ்ச்சியில் நூல்களின் அறிமுகம், கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறும்.
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ 23-11-2017 அன்று அதாவது நாளை 10வதுஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் தமிழ் ஸ்டுடியோ கடந்த வந்த பாதை உங்களுக்காக...

திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “ சூழல் அறம் “ என்றத் தலைப்பில் கருத்தரங்கம் புதன் அன்று நடைபெற்றது. பேரா. கண்ணகி ( தமிழ்த்துறைத்தலைவர் ) தலைமை வகித்து திருப்பூர் குமரன் பிறந்த தினத்தையொட்டி குமரன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக அவரின் படத்திற்கு மாலை அணிவித்து நினைவு கூறப்பட்டது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் “ சூழல் அறம் “ – சுற்றுச்சூழலும் உணவும் என்றத் தலைப்பில் பேசினார் . அப்போது இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும், உடல் நலமும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் தனதுரையில் குறிப்பிட்டவை:
அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 29 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 11-11-2017 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் நடைபெறும். நிதியத்தின் தலைவர் திரு.விமல். அரவிந்தன் தலைமையில் நடைபெறவுள்ள 29 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் நிதியத்தின் உறுப்பினர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் இடம்பெறும். இலங்கையில் நீடித்த போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிதியம், இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியுள்ளது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிதியத்தின் உதவியினால் பல்கலைக்கம் பிரவேசித்து, பட்டதாரிகளாகியிருப்பதுடன் மேலும் பல மாணவர்கள் அரச மற்றும் தனியார் துறைகளிலும் பணியாற்றுகின்றனர். மேலும் பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதியம் உதவவேண்டியிருப்பதனால் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வதற்காகவும் 29 ஆவது ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் தகவல் அமர்வும் ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது. 
‘நடனத்திற்கு மிகவும் பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து வார்த்தைகளை உணர்ந்து அந்த மனநிலைகளை அபிநயத்தால் வெளிக்காட்டுவது குருவுக்கும் சீடருக்குமான மரபுசார் நுட்பமாகும். இத்தகைய சாஸ்திரீய முறைகளை மிக அழகாகவே குருவிடமிருந்து பயின்று புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், பதம், அஷ்டபதி, தில்லானா போன்ற அத்தனை உருப்படிகளிலும் செல்வி பிரீத்தி பவித்திரா மகேந்திரன் வித்தியாசமான தனது கலை நுட்பங்களை வெளிக்காட்டியிருந்தார்’ என்று அண்மையில் லண்டன் ‘பெக் தியட்டரில இடம்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றத்தின்போது பிரதம விருந்தினாராக வருகை தந்திருந்த ஸ்ரீமதி கீதா உபத்தியா அவர்கள் தெரிவித்திருந்தார்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









