திரைப்பட, குறுந்திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான சுமதி ரூபனுடனான சந்திப்பு - பெண் எழுத்து... பெண் அரங்கு -


நண்பர்களே, சுயாதீன திரைப்பட கலைஞர்களை போற்றும் விதமாக தமிழ் ஸ்டுடியோவால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் லெனின் விருது வழங்ம் விழாவிற்கான அழைப்பிதழை இத்துடன் பகிர்ந்திருக்கிறோம். வருகை புரிந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது வெறுமனே விருது மட்டுமல்ல, இந்திய சினிமாவின் மிக போற்றுதலுக்குரிய கலைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கலை, கலாச்சார பரிவர்த்தனை மேற்கொள்ளும் மிக முக்கிய நிகழ்வு. சென்ற ஆண்டு அனுராக் காஷ்யப் வந்திருந்தார். இந்த ஆண்டு மலையாள சினிமாவின் முன்னோடி இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் சென்னை வருகிறார். வாருங்கள் மலையாள சினிமா குறித்தும் உரையாடுவோம். சுயாதீன கலைஞர்களை போற்றுவோம்.
'நபிகள் நாயகம்' எனும் மகுடத்தை நாமமாகக் கொண்டு 57 வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 20.08.2017 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவிருக்கிறது.
முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் வெளியீடான இந்நூலுக்கு கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் தொகுப்பாசிரியராகவும் கவிஞர் ஏ.எம். கஸ்புள்ளா உதவியாளராகவும் இருந்து நெறிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் தொகுப்பாக்க ஆலோசனை கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி, பிரதம நூலகர் எம்.ரீ. சபருள்ளாக்கான் போன்றோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கவிஞர்களின் கவிதைகள் ஒன்றுதிரட்டப்பட்டு நூலுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இதில் சகோதர இனத்துக் கவிஞர்களது கவிதைகளும் இடம்பெற்றிருப்பதானது இந்நூலின் மதிப்பினை மேலும் உயர்த்துவதாக அமைந்துள்ளது.
இந்நூலுக்கு கணிப்புரை வழங்கியுள்ள கவிஞரும், விரிவுரையாளருமான எப்.எச்.ஏ. ஷிப்லி 'உலக மக்களால் அறிவிலிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அரேபிய பாலைவனப் பூமியில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்நிலையை அடைய முடிந்தது எப்படி? என்ற கேள்விக்கான விடையை இந்நூலில் நீங்கள் பெறலாம்' மேலும் 'நபிகள் நாயகம் போன்று ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்? நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் அப்படியே இன்றும் பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விக்கான விடைகளும் கவிதை வடிவில் இந்நூல் எங்கும் விரவிக் கிடக்கின்றது' என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புடையீர் வணக்கம் . இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வின் அழைப்பிதழை இணைத்துள்ளேன் . உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். இலக்கியவீதியும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும், 'கலைகளால் செழிக்கும் செம்மொழி' - தொடர் நிகழ்வு - இந்த மாதம் 08.08.2017. செவ்வாயன்று, மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் - செம்மொழியின் செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு என்கிற நிகழ்வுக்கு, தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் , முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் , சிறப்புரை : கவனகக்கலை மாமணி - கலை. செழியன் அவர்கள் , அன்னம் விருது பெறுபவர் : 'திருக்குறள்' இரா. எல்லப்பன் அவர்கள், நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி அவர்கள் . தகுதியுரை : செல்வி . ப. யாழினி அவர்கள். உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன் -
இலக்கியவீதி இனியவன்.

1. அவுஸ்திரேலியா - விக்ரோறியா மாநிலத்தில் வதியும் தமிழ்மக்களுக்கான விசேட அறிவித்தல்.
அவுஸ்திரேலியாவிற்கு தற்போது வருகை தந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான சமகால அரசியல் கலந்துரையாடல் எதிர்வரும் 04-08-2017 வெள்ளிக்கிழமை மெல்பேனிலும், 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை சிட்னியிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முடிந்தளவில் பங்கெடுத்து, இலங்கைத் தமிழ் அரசியல் நிலவரம் பற்றி தெளிவடைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். எனவே இவ் அரசியல கருத்தரங்கிற்கு அனைத்து தமிழ்மக்களும் வருகைதந்து இதில் கலந்துகொள்வதோடு உங்களது சந்தேகங்களையும் கேள்விகளையும் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டு தெளிவடைந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அனைவரும் இச்செய்தியை இயன்றவரையில் உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். நாம் மிகநீண்டகாலமாக எதிர்பார்த்த இவ்வாறானதொரு கருத்தரங்கு தற்போது இடம்பெறவிருப்பதையிட்டு மனநிறைவு கொள்கின்றோம். மேலும் இந்தச்சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம் என அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேம்.
Please Kindly Participates in Public Meeting with Hon. Gajendrakumar Ponnambalam, whom will be here in Melbourne on next friday (4/08/2017) and in Sydney on next Sunday (6/08/2017).
- Tamil Organisations of Victoria -
2. ILAM THULIR Music Show 2017 on 5th August at 6pm.
ILAM THULIR IS BACK IN 2017!! After the enormous success of its sold out show in 2012, the Ilam Thulir band are finally back in full force for another memorable night of musical entertainment. This year we have international play back singers SATHYAPRAKASH and PRAGATHI GURUPRASAD and we will also have international comedian and YouTube sensation DAYAN SHAN “TAMILOL” joining the team. Under the direction of Niroshan Sathiyamoorthy, the Ilam Thulir band is one of Australia’s most distinguished and leading Tamil music bands today. The band was formed using the best of Melbourne & Sydney’s Tamil musicians, most of whom are proficient in more than one instrument. Courtesy of our major sponsor Australian Unity, Ilam Thulir 2017 will be the Tamil music event of the year and one not to be missed. From current Tamil and Bollywood hits to the classics there will be something for everyone!

தென் இந்திய இசையமைப்பாளர் ஜனாப். தாஜ்நூர் அவர்களுக்கு எழுத்தாளர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா 'பூங்காவனம்' காலாண்டு இலக்கிய சஞ்சிகை வழங்குவதையும், 'பூங்காவனம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்கள் அருகில் இருப்பதையும் படத்தில் காணலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் கோவை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளில் வெளியிடப்பட்டன. இளஞ்சேரல் தலைமை தாங்கினார். The hunt –Shortstories ( Trans. Ramgopal) நூலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆரம்பகால நிறுவனரும், கேர் தன்னார்வக்குழுவின் இய்க்க்குனருமான பிரித்விராஜ் வெளியிட்டுப் பேசினார்: சாயத்திரை போன்ற நாவல்கள் முதல் சுப்ரபாரதிமணியன் நாவல்கள், சூழலியல் கட்டுரைத் தொகுப்புகள் மூலம் சுற்றுச்சூழல் அக்கறையைப் படைப்பிலக்கியத்தில் வெளிப்படுத்தி வருகிறார். சமூகச் சூழலியல் விசயங்கள் படைப்பிலக்கியத்திற்குள் வர வேண்டிய முக்கியத்துவத்தை அவரின் நோக்கம் நிறைவேற்றுகிறது. .இலக்கியத்தின் பயன்பாடு அது சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதில் இருக்கிறது. இலக்கிய ரசனை என்பதை மீறி சமூகச் சூழலியல் அக்கறை வெளிப்பாட்டை படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவப்படுத்துவது என்பது இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள முக்கிய கடமையாகும்.உழைக்கும் பெண்கள், அவர்களின் கொத்தடிமை வாழ்க்கை , அவர்களுக்கான மீட்சிகளைப் பற்றி தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் பேசுகிறார்.

Pilot program for newcomers launching companies in Canada to be made permanent
July 28, 2017 – Toronto, ON – Canadians are welcoming to people and ideas from around the globe. Welcoming entrepreneurs who have the expertise to turn their ideas into successful companies is one way that Canada’s openness can help build a world-class innovation economy. The Start-up Visa Program, a pathway to permanent residence for cutting-edge entrepreneurs launching a start-up company in Canada, will become a regular feature of Canada’s immigration landscape in 2018. As part of the five-year pilot, launched in 2013, innovative entrepreneurs can apply to become permanent residents after a Canadian venture capital fund or angel investor group has made a significant financial commitment in their business idea, or after a business incubator has accepted them into their program.
A recent evaluation of the Start-up Visa Program found that it is delivering on its goals; immigrant entrepreneurs are actively developing innovative companies in Canada that are beginning to show positive results for Canada’s economy and creating middle-class jobs across a range of industries. Making the program permanent supports the Government of Canada’s Innovation and Skills Plan, which seeks to attract investment and support the growth of a diverse range of companies, creating well-paying jobs for Canadians. In the months ahead, IRCC will work to finalize regulations for the permanent program in order to have a seamless transition when the pilot expires on March 31, 2018.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 2017 மே 10 ஆம் திகதி முதல் ஜூன் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் மேற்கொண்ட பணிகள் பற்றிய குறிப்புகள்:
மேலதிக விபரங்களுக்கு - http://www.csefund.org/documents/SL_report_july_2017_v1.pdf
நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில் நடைபெறும் விழாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதை வழங்குகிறார். லெனின் விருது 10000 ரொக்கப் பரிசும், கேடயமும், பாராட்டுப்பத்திரமும் உள்ளடக்கியது. லெனின் விருதின் மிக முக்கிய அங்கம், விருது பெறுபவரின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். இறுதியாக சென்னையில் திரையிடப்பட்டு விருது வழங்கப்படும். படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே லெனின் விருதின் தனித்தன்மை.
பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்: அம்பாசமுத்திரம் பக்கத்திலுள்ள வழுதூரைச் சார்ந்த ஸ்வர்ணவேல் அவர்கள் பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். அங்கு பாலு மஹேந்திராவிற்கு பல வருடங்கள் ஜூனியர். ஆவணப் படங்களின்பால் தனது கவனத்தைச் செலுத்திய சொர்ணவேல் தங்கம் (1995), ஐ.என்.ஏ. (1997), வில்லு (1997), போன்ற முக்கிய ஆவணப் படங்களின் இயக்குனர். அவரது சமீபத்திய படங்களில் முக்கியமானது அன்பினிஷ்ட் ஜர்னி: எ சிடி இன் ட்ரான்ஷிஸன் (2012) மற்றும் மைக்ரேஷன்ஸ் ஆப் இஸ்லாம் (2014). அன்பினிஷ்ட ஜர்னி, சொர்ண்வேல் தனது நண்பர் பேராசிரியர் மார்க் ஹூல்ஸ்பெக்குடன் இணையாக தயாரித்து இயக்கிய படம். ப்ளோரிடா மாகாணத்திலுள்ள அமெரிக்காவின் முதல் நகரமென கருதப்படும் செயிண்ட் ஆகஸ்டினில் 1960களில் நடந்த இதுவரை அதிகம் அறியப்படாத இன/நிற வெறுப்புச் சம்பவங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பட்ட கஷ்டங்களை ஆவணப்படுத்தியிருக்கும் இப்படம் பகழ்பெற்ற (AWDFF) ஆப்ரிகன் வொர்ல்ட் பிலிம் பெஸ்டிவலினால் அமெரிக்க சிவில் ரைட்ஸ் மூவ்மெண்டின் 50வது ஆண்டுவிழாவிற்காக தெர்ந்தெடுக்கப்பட்டு பல இடங்களில், குறிப்பாக ஆப்ரிக்காவில் நைஜீரியாவிலும், இப்பொழுதும் ஆப்ரோஅமெரிக்கர்கள் நிறவெறியினால் துயறுரும் பெர்கஸனுக்குப் பக்கதிலுள்ள மிஸ்ஸூரி பல்கலைக் கழகத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரிக்க அமெரிக்க ம்யூஸியத்தில் அரங்கேறியது தமிழர்களுக்கு பெருமை.
மெல்பேன் தமிழ் இளையோர்களின் உயர்ந்த நோக்கங்களிற்கும், முன்னெடுப்புக்களுக்கும் உங்களால் முடிந்த முழுமையான ஆதரவை இன்று (26ம் திகதி) வழங்குவதோடு மட்டுமல்லாமல், மண்டபம் நிறைந்த நிகழ்வாக மாற்றுவதற்கு, உங்களிற்கு தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். கறுப்பு ஜீலையின் 34ம் ஆண்டு ஞபாகார்த்தமாக, No Fire Zone எனும் எமது இறுதிக்கட்ட போரின் போது நடாத்தப்பட்ட இனவழிப்பு விபரணச்சித்திரம் காண்பிக்கப்பட்டு, இதன்மூலம் திரட்டப்படும் பணத்தைக் கொண்டு தாயகத்தில் அல்லற்படும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு உதவவுள்ளர்கள். அனுமதி 10 வெள்ளிகள் மாத்திரமே. மேலதிக விபரங்களிற்கு கீழே உள்ள இணைப்பையும், மின்னஞ்சலையும் பார்க்கவும்.
Please support UTY's Event on Today (Wednesday (26th July at 6:45pm)) by attending their 'No Fire Zone' screening to raise awareness and help rehabilitate our Tamil families back in Sri Lanka. Help give back to those back home as proceeds help educate children through Trinco Aid.
As a responsible Tamil Citizens, Seniors of Tamil community, we should have wholeheartedly encourage the Tamil youth's good initiatives.
Special Guest Rob Stary, who is a Criminal Defence Lawyer and Friend of the Tamil Community.
Date: Wednesday, 26th July 2017 (Time: 6..45 pm (Doors Open at 6.30pm))
Address: Rotunda - Lecture Theatre 2, 46 Exhibition Walk, Monash University, Clayton Campus
Tickets: $10 Per Person (Light Refreshments and Tea/Coffee will be available)

தகவல்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இன்றைய டிஜிற்றல் தொழில்நுட்பம் சார்ந்த உலகில், சினிமாவின் ஆத்மாவில் கண்ட யதார்த்த சாத்தியங்களிலிருந்து விலகி நாம் வெகு தொலைவில் வந்து நிற்கின்றோம். C.G .I ( Computer Generated Images) கணணியிலிருந்து உருவாகும் விம்பங்கள் தன் கண்முன்னே யதார்த்தமாக உள்ளவற்றைப் பதிவாக்கிய கமராவிலிருந்து வெகுவாக விலகி வந்துவிட்டது. உள்ளதையும் இல்லாததையும் கற்பனையில் கண்டதையும் இணைத்துக் கட்டமைக்கும் திறனை இந்த நவீன தொழில் நுட்பம் கொண்டிருக்கிறது. ஒரு மந்திரவாதியின் மாயக்கண் போன்று டிஜிற்றல் தொழில் நுட்பத்தில் மாயச்சித்திரங்களை நாம் வடிவமைக்க முடிகிறது. இன்று வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பம் சினிமாவில் எல்லையற்ற சாத்தியங்களை ஒரு கலைஞனின் கற்பனை வீச்சுக்கு எல்லையற்ற வெளிகளை திறந்துவிட்டிருக்கிறது’ என்று லண்டனில் ஹரோ சந்தி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ‘சமகாலத் திரை உலகம்’ பற்றிய கருத்தமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமெரிக்காவின் மிச்சிக்கன் பல்கலைக்கழக திரைப்படத்துறை கலாநிதி சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் உரையாற்றும்போது தெரிவித்தார்.
ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கில் பேராசிரியர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, ‘ஈழத்தின் யுத்த அனர்த்தங்களையும், அகதிகளாக உலகெங்கும் பரந்து வாழும் நிலைமையும் வரலாற்றில் பதிவாகவேண்டிய அழுத்தமான சுவடுகளை நிறையவே கொண்டிருக்கிறது. ஏதிலிகள்,மௌன விழித்துளிகள் போன்ற படங்கள் புனைவாக இருந்தாலும் ஈழத்தின் துயர் நிறைந்த காலகட்டத்தின் ஒரு பதிவாக விளங்குகின்றன. புனைவுகளோ, அ புனைவுகளோ அவை காலத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்பது மிக முக்கியமான அம்சமாகும். ஈழத்தின் வாழ் நிலைமையைக் களமாகக் கொண்டு எழுந்த குறும்படங்களில் மக்கள் வாழ்வில் படும் துயரின் சில கணங்கள் எப்படியோ இந்தத் திரைப்பட ஆக்கங்களில் பதிவு செய்யவே முனைகின்றன.
"1970களில் ஈழத்தமிழ் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களில் ஒருவராக போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திய தோழர் சுகு, சமூக ஜனநாயகத்தில் அக்கறை கொண்டவராகவும் . ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்கு குரல் எழுப்புவராகவும் , தொடர்ச்சியான சமூக, அரசியல் செயற்பாட்டாளராகவும் உள்ளவர். ஈழ அரசியல் வரலாற்றில் எஞ்சியிருக்கும் ஆளுமைகளில் ஒருவர். தன்னடக்கத்துடன் எப்போதுமே தன்னை மிகச் சாதாரண மனிதராகவே அடையாளப்படுத்த விரும்புபவர். கடந்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளில் அவரால் எழுதப்பட்ட 129 அரசியல்- சமூக, பண்பாட்டு பதிவுகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல் இது."
அமர்வு -01
தோழமையின் பணியும் நினைவுகளும்
வழிப்படுத்தல் - எ.சிவபாதசுந்தரம்
பகிர்வு. கே,சாந்தன், நிர்மலா இராஜசிங்கம்,ஈசன்.ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் முத்து, .கீரன்.Dr பாலா
அமர்வு- 02
நூல் தொடர்பான கருத்துக்களும் கலந்துரையாடலும்
வழிப்படுத்தல் - எம். பௌசர்
உரை- , வி.சிவலிங்கம், மு. நித்தியானந்தன்
காலம் - 22 ஜுலை 2017 ( சனி)
மாலை 3.30 தொடக்கம் 8 மணி வரை

தகவல்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: லென்ஸ் திரைப்பட இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணனுடன் கலந்துரையாடல்
15-07-2017, சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான லென்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் பொருட்டு தமிழ் ஸ்டுடியோ நடத்தும் நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் இந்த வாரம் லென்ஸ் திரைப்பட இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணனுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது. சினிமாவில் இருக்க வேண்டிய சமூக அக்கறை, ஒரு பிரச்சனையை பிரச்சார தன்மை இல்லாமல் எப்படி சினிமாவில் எப்படி சொல்வது, சமூக வலைத்தளங்களின் நன்மை தீமைகளை இந்த சந்திப்பில் கலந்துரையாடலாம். அவசியம் வாருங்கள்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் தமிழ் பெண்கள் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற இச் சிறுகதைத் தொகுப்பையும், சொப்கா மஞ்சரியையும் வெளியிடுவதில் பெருமைப்படுவதாக இச் சிறுகதைத் தொகுப்பை மிஸசாகா அடல்ட் சீனிய சென்ரரில் வெளியிட்டு வைத்த பீல் குடும்ப மன்றத்தின் உபதலைவரும், இந்த நூல்களின் தொகுப்பாசிரியருமான எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். முதற் பிரதியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி கோபி பிரசாந்தன் அவர்களும் சிறப்புப் பிரதிகளை மன்றத் தலைவர் சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் சூ மக்பெடன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் றொன் ஸ்ராறா அவர்களும், எழுத்தாளர்களின் சார்பில் ஜெயசீலி இன்பநாயகம் அவர்களும் மற்றும் சில பிரமுகர்களும் எழுத்தாளர் குரு அரவிந்தனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். பல்வேறு வயதுடைய பெண்கள் எழுதிய, அவர்களின் எண்ணக் கருக்களைக் கொண்ட, இளமையும், முதுமையும் கலந்த சிறுகதைத் தொகுப்பாக இச் சிறுகதைத் தொகுப்பு அமைந்திருப்பது மட்டுமல்ல, கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றது. புலம் பெயர்ந்து வந்த பெண்கள், கனடாவில் பிறந்த பெண்கள், பல்கலைக்கழக மாணவிகள் என்று பல தரப்பட்ட தமிழ் பெண்களின் ஆக்கங்களும் இச் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
வணக்கம்! “காடு: இயற்கை – காட்டுயிர்” இதழும் சென்னை எம். ஜி. ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் “இயற்கையோடு நாம் – 2017”
8 & 9 ஜூலை, 2017 (இரண்டு நாட்கள்)
இடம்: எம். ஜி. ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அடையார்.
தொடர்புக்கு: 89399-67179 / 9789-00-9666
சிறப்பு கூறுகள்:
1. கருத்தரங்கு:
இயற்கையோடு இயந்த வாழ்வை கொண்டிருந்த முன்னோர்களின் வாழ்வியல் சிந்தனையும், தற்போதைய பருவ நிலை மாற்றத்தையும், வரும் காலத்தில் பல்லுயிரிய சமநிலைக்கு செய்ய வேண்டியவை குறித்து சிந்திக்கவும் செயல்படவும் கருத்துரைகள் தெறிவு செய்யப்பட்டுள்ளது.
அன்புடையீர்,
இந்நிகழ்வில் எனது பிந்திய படைப்புக்களான “அன்புடைமை” என்னும் சுயமுன்னேற்ற அறிவியல் நூலும், “இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்”; என்னும் இலக்கிய நூலும் வெளியீடு செய்யப்படவுள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து நூற்பிரதிகளையும் வாங்கி ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். . நன்றி
அன்புடன் அகணி சுரேஸ் , நூலாசிரியர்
காலம் : யூலை மாதம் 22ஆம் திகதி
நேரம் : பிற்பகல் 2;:45 மணி
இடம் : ஸ்காபரோ சிவிக் சென்ரர் (Scarborough Civic Centre) 150, Borough Drive, Scarborough, ON, M1P 4N7
தொடர்பு : அகணி சுரேஸ் , 4167328021
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வாரா வாரம் அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamil.com) ஒலிபரப்பாகும் இலக்கியப்பூக்கள் 150ஆவது வாரத்தை நோக்கி பயணிக்கிறது. உங்கள் குரலில் படைப்புக்கள் தர விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொண்டு(தகவல்களை உள்பெட்டியில் இடுங்கள்) உங்கள் நேரத்தை தெரிவு செய்து ஒலிப்பதிவினை மேற்கொள்ளலாம். இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியாகும்.
கவிதை 2 அல்லது 3 நிமிடங்கள் வரலாம்.இலக்கியம் அல்லது உருவகக்கதை/குட்டிக்கதை,நூல் அறிமுகம் 5 - 7 நிமிடங்கள் வரலாம். ஒலிப்பதிவு செய்து அனுப்பவிரும்புவோர் தெளிவான,இசை இசைக்கோர்பின்றி அனுப்புங்கள். உங்கள் நண்பர்களையும் அறிமுகம் செய்துவையுங்கள்.
எனது ஸ்கைப் ஐ.டி: mullaiamuthan
தொலைபேசி: +44 20 3286 9523(Recording only)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பு 05.07.2015
இடம்: பெரிய சிவன் ஆலய கலாசார மண்டபம்
1148 பெல்லாமி வீதி. ஸ்காபரோ. ( 1148 Bellamy Road, Scarborough)
திகதி; 05.07.2017 புதன்கிழமை -- நேரம்: மாலை 5:00 – 6:30 மணி
அன்புடையீர்:
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் எழுதி வெளியிடவுள்ள “கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும் - ஓர் வரலாற்றுப் பதிகை” என்ற நூலானது கனடாவில் வாழும் ஈழத் தமிழரது வரலாற்றைப் பதிவு செய்துள்ள ஓர் அரிய வரலாற்று ஆவணமாகும். 1950ஆம் ஆண்டு முதலாக இலங்கைத் தமிழர் கனடாவுக்குக் கல்வி, தொழில், ஏதிலிக் கோரிக்கை, குடிவரவு என்ற அடிப்படைகளில் வருகை தந்துள்ளனர். அவர்களின் வரலாறு, இந்நாட்டில் அவர்கள் கல்வி கற்றுத் தம் வாழ்வை வளமாக்கிய வரலாறு, கனடாவில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, ஆகியவற்றைப் பேணுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுவரும் பல்வேறுபட்ட முயற்சிகள், ஈழத்தமிழரின் அரசியல் செயற்பாடுகள், கனேடிய அரசியல் பிரவேசம், குடும்பம், வாழ்வியல், இளையோர், முதியோர், தலைமுறைஇடைவெளி. தமிழ் ஊடகங்களின் தோற்றம், வளர்ச்சி என்ற பல்வேறு விடயங்கள் இந்நூலிலே வரலாறாக எழுதப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் பற்றிய தரவுகளைக் கடந்த பத்து ஆண்டுகளாகத் திரட்டி, ஆராய்ந்து 530 பக்கங்களில் தனிநூலாகத் தந்துள்ளார். இது எமது எல்லோரது வாழ்வியல் பற்றிய வரலாற்று ஆவணமாகும.; இந்நூலின் வெளியீடு இம்மாதம் 16. 07. 2017 ஞாயிற்றுக்கிழமை மேலே குறிப்பிடப்பட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அன்புடையீர் வணக்கம். அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் உதவிபெறும் கிழக்கு மாகாணத்தில் கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் அண்மையில் வித்தியாலய அதிபர் திரு. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இங்கு பயின்று நிதியத்தின் உதவி பெற்ற செல்வி க. ஹர்சினி, இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தினார். இம்மாணவி தற்போது தனது பட்டப்படிப்பை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்துள்ளார். இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் செ. யோகராஜா, மற்றும் சமூகப்பணியாளர் செங்கதிர் கோபாலகிருஷ்ணன், வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம், சீர்மிய ஆசிரியை திருமதி சுபாஷினி கிருபாகரன் ஆகியோருடன் முருகபூபதியும் பங்குபற்றினர். உதவி பெறும் மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.

தகவல்: முனைவர் இ.பாலசுந்தரம் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.