தோழர் சுகுவின் (திருநாவுக்கரசு சிறிதரன்) நூலை முன்வைத்து ஓர் உரையாடல்!
"1970களில் ஈழத்தமிழ் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களில் ஒருவராக போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திய தோழர் சுகு, சமூக ஜனநாயகத்தில் அக்கறை கொண்டவராகவும் . ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்கு குரல் எழுப்புவராகவும் , தொடர்ச்சியான சமூக, அரசியல் செயற்பாட்டாளராகவும் உள்ளவர். ஈழ அரசியல் வரலாற்றில் எஞ்சியிருக்கும் ஆளுமைகளில் ஒருவர். தன்னடக்கத்துடன் எப்போதுமே தன்னை மிகச் சாதாரண மனிதராகவே அடையாளப்படுத்த விரும்புபவர். கடந்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளில் அவரால் எழுதப்பட்ட 129 அரசியல்- சமூக, பண்பாட்டு பதிவுகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல் இது."
அமர்வு -01
தோழமையின் பணியும் நினைவுகளும்
வழிப்படுத்தல் - எ.சிவபாதசுந்தரம்
பகிர்வு. கே,சாந்தன், நிர்மலா இராஜசிங்கம்,ஈசன்.ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் முத்து, .கீரன்.Dr பாலா
அமர்வு- 02
நூல் தொடர்பான கருத்துக்களும் கலந்துரையாடலும்
வழிப்படுத்தல் - எம். பௌசர்
உரை- , வி.சிவலிங்கம், மு. நித்தியானந்தன்
காலம் - 22 ஜுலை 2017 ( சனி)
மாலை 3.30 தொடக்கம் 8 மணி வரை


பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: லென்ஸ் திரைப்பட இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணனுடன் கலந்துரையாடல்
கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் தமிழ் பெண்கள் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற இச் சிறுகதைத் தொகுப்பையும், சொப்கா மஞ்சரியையும் வெளியிடுவதில் பெருமைப்படுவதாக இச் சிறுகதைத் தொகுப்பை மிஸசாகா அடல்ட் சீனிய சென்ரரில் வெளியிட்டு வைத்த பீல் குடும்ப மன்றத்தின் உபதலைவரும், இந்த நூல்களின் தொகுப்பாசிரியருமான எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். முதற் பிரதியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி கோபி பிரசாந்தன் அவர்களும் சிறப்புப் பிரதிகளை மன்றத் தலைவர் சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் சூ மக்பெடன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் றொன் ஸ்ராறா அவர்களும், எழுத்தாளர்களின் சார்பில் ஜெயசீலி இன்பநாயகம் அவர்களும் மற்றும் சில பிரமுகர்களும் எழுத்தாளர் குரு அரவிந்தனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். பல்வேறு வயதுடைய பெண்கள் எழுதிய, அவர்களின் எண்ணக் கருக்களைக் கொண்ட, இளமையும், முதுமையும் கலந்த சிறுகதைத் தொகுப்பாக இச் சிறுகதைத் தொகுப்பு அமைந்திருப்பது மட்டுமல்ல, கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றது. புலம் பெயர்ந்து வந்த பெண்கள், கனடாவில் பிறந்த பெண்கள், பல்கலைக்கழக மாணவிகள் என்று பல தரப்பட்ட தமிழ் பெண்களின் ஆக்கங்களும் இச் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
அன்புடையீர்,
வாரா வாரம் அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamil.com) ஒலிபரப்பாகும் இலக்கியப்பூக்கள் 150ஆவது வாரத்தை நோக்கி பயணிக்கிறது. உங்கள் குரலில் படைப்புக்கள் தர விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொண்டு(தகவல்களை உள்பெட்டியில் இடுங்கள்) உங்கள் நேரத்தை தெரிவு செய்து ஒலிப்பதிவினை மேற்கொள்ளலாம். இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியாகும்.

‘ஈழத்தின் இசை மரபு குறித்தும், நடன மரபு குறித்தும், ஓவிய மரபு குறித்தும் ஏனைய நுண் கலைகள் பற்றியதுமான முறைமையான வரலாறு எழுதப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமானதாகும். ஈழத்து இலக்கிய வரலாறு ஒழுங்குமுறையான வரலாற்று நெறிக்கு உட்படுத்தப்பட்டதுபோல ஏனைய துறைகளில் அந்தச் சாதனை நிகழ்த்தப்படவில்லை. அந்த வகையில் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ என்ற இந்த நோர்காணல் தொகுப்பு ஈழத்தின் இசை, நாடக, நாட்டிய, ஓவிய, இலக்கிய, அரசியல், மருத்துவ, தொழில்முயற்சி வரலாற்றின் மிக நேர்த்தியான பதிவுகளைக் கொண்டு காணப்படுவது பாராட்டத்தக்க எழுத்து முயற்சியாகும்’ என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் ஈலிங் நூல்நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.






வணக்கம் நண்பர்களே, இத்துடன் அவுஸ்திரேலியா மெல்பேர்ன், சிட்னி, பேர்த் நகரங்களில் நடைபெறவுள்ள "மே18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்" பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கைகள், விளம்பரமும், பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய் து ”மெல்பேர்ன், சிட்னி, பேர்த் இன் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்” சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங் களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின் னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும்.
சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ராசபாளையம் கிளை ராசபாளையத்தில் 7/5/17 அன்று நடத்தியது. விசயராணி தலைமை வகித்தார்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









