ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் முன்னகர்த்தும் அரசியல்! (2) - ஜோதிகுமார் -
IV“பொன்னுமணிதானே உன் பெயர்…”
“அடியன் ஓம்… ஏமானே…”
‘உன் அப்பன் பெரிய ரகளைக்காரனாமே…”
“நாங்க இஞ்ச வாலாட்டுத நாய்க… நண்ணி மறக்க மாட்டம்” (பக்கம் 77).
“உற்சாகமாக ஒரு நம்பூதிரியும் வந்தார். நம்பூதிரி சதுரங்கப் பலகையை முன்வைத்தார்…”
“பண்ணிமலை விஷயமாய்…”
“அது இப்போது…”
“பண்ணிமலைக்காட்டை இவனுக்கு…”
“கொடு… கொடு…”
“அடியன், நாங்க இந்த உப்ப தின்னுத சாதி, தின்ன நண்ணி ஒருக்காலும் மறக்கமாட்டோம்” என்றான் பொன்னுமணி. (பக்கம் 77-79).
V
இனி இப்படி பெறப்பட்ட, பண்ணிமலை காட்டுக்கு யாது நடக்கின்றது என்பது நாவலில், அத்தியாயம் 11ல் விபரிக்கப்படுகின்றது.
“அவர்கள் அங்கேயே தங்கினார்கள். வாழைக்காய்களையும் கிழங்குகளையும் காட்டிலிருந்து சேகரித்துச் சுட்டுத் தின்றபடியும், அவ்வப்போது முயல்களையும் பறவைகளையும் வேட்டையாடிச்சுட்டுத் தின்றபடியும் வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவருமே காட்டுக்குப் பழகிப் போனவர்கள். காலை முதல் இரவு விழும் நேரம் வரை உழைத்தார்கள். உழைப்பின் பலனைவிட, இயற்கையின் சவால் எழுப்பும் உற்சாகமே அவர்களை இயக்கியது” (பக்கம் 93).