- கட்டுரையாசிரியர்: சீவகசிந்தாமணியில் அகப்பொருள் மரபுமாற்றங்கள்! - முனைவா் பா.பொன்னி,,இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், இளங்கலைத்தமிழ்த்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி( தன்னாட்சி ), சிவகாசி -
இலக்கியங்கள் அவை தோன்றும் காலத்தின் பின்புலத்திற்கு ஏற்ற மாற்றங்களைத் தன்னுள் ஏற்கும் தன்மை உடையவை. ஆகவே இலக்கியங்கள் வரலாறுக்கு அடிப்படையாகவும், வரலாற்றை அறிவதற்கு ஆதாரமாகவும் அமைகின்றன. குறிப்பிட்ட காலச்சூழலில் தோன்றும் இலக்கியங்கள் அவை காலத்திய சூழலுக்கு ஏற்ப அமைகின்றன. இலக்கியங்களில் ஒரு காலத்தில் மரபாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருண்மைகள் பின்னா் வரும் காலத்தில் மாற்றங்களைப் பெறுவதும் கூட மரபாகவே அமைகின்றன. அவ்வகையில் சீவகசிந்தாமணியில் மாற்றம் பெற்ற அகப்பொருள் மரபுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
மரபு :
முன்னோா்கள் மொழிந்த பொருளினை அவ்வாறே பின்பற்றுவதை மரபு என்று சுட்டுவா். மரபு என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி “பழமை, முறைமை, வழக்குமுறை, இலக்கணம், இயல்பு”1 ( கழகத் தமிழ் அகராதி, ப.742 ) என்று பல பொருள் தருகிறது. தமிழ் மொழி அகராதியானது“குணம்,பழமை,முறைமை” (தமிழ் மொழி அகராதி, ப. 126 ) எனச் சுட்டுகிறது.
மேலும்,“மரபு என்பது இலக்கணம் மட்டும் அல்ல. மரபு என்பது இலக்கியத்திற்கு மட்டும் அல்ல. மரபு என்பது முந்தைய தலைமுறை சோ்த்து வைத்திருக்கும் அனுபவம், அறிவு, முடிவு ஆகிய அனைத்தும் சோ்ந்தது. குலநீட்சியில் மானுட வா்க்கம் தன் அறிவுத் தோட்டத்தில் அனுபவத்திளைப்பில் உணா்ந்து தெளிந்து உருவாக்கிய முடிவுகள். அவை வருங்காலத்திற்கென்று இலக்கியமாக, சமயமாக, அறநெறியாக, பிற அறிவுத்துறைகளாக முந்தைய தலைமுறை விட்டுச் சென்ற அனுபவத் திரட்டு தான் மரபு. அறிவுத் தோட்டத்தில் கிடைத்த செல்வம் தான் மரபு” ( பாலா, புதுக்கவிதை ஒரு பாா்வை, பக்.22-23 ) என்பா். இவற்றின் வாயிலாக முன்னோா்கள் வகுத்துள்ள வரைமுறைப்படி அமைவதே மரபு எனலாம்.