'காந்தளகம்' வெளியீடாக இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டு வெளிவந்துள்ளது.
காந்தளகம் வெளியீடாக 916 பக்கங்களில் வெளிவந்துள்ளது இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டு தொகுப்பு நூல். இத்தொகுப்பு நூலில் 56 ஈழத்து இலக்கிய ஆளுமைகள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே இலக்கியப்பூக்கள் தொகுதி ஒன்று தொகுப்பு நூலினைத் தொகுத்தளித்த எழுத்தாளர் முல்லை அமுதனே இந்நூலின் தொகுப்பாசிரியராகவுமிருக்கிறார். அமரர்களான ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் விபரங்களைத் தொகுத்து இரு தொகுப்புகளை வழங்கியுள்ள முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர். இவ்விரு தொகுப்பு நூல்களும் ஆவணச்சிறப்பு மிக்கவை. இந்நூலில் இடம் பெற்றுள்ள இலக்கிய ஆளுமைகளின் விபரங்களும், அவர்களைப்பற்றி எழுதியுள்ள கட்டுரையாசிரியர்கள் பற்றிய விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. இந்நூலினை வாங்க விரும்புபவர்கள் காந்தளகம் பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:
காந்தளகம்
4, முதல் மாடி, இரகிசா கட்டடம்,
68, அண்ணா சாலை, சென்னை - 600 002.
தொ.பே.: 0091 - 44 - 2841 4505
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மின்னம்பலம்: www.tamilnool.com


காற்றுவெளி ஆவணிமாத இதழ் தங்கள் பார்வைக்கு: 








தடாகம் கலை இலக்கிய கல்வி கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினர் ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை ,கவிஞர்களை ,பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் ( கலாசூரி விருது ) கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள். அதன்மூன்றாவது கலாசூரி விருதினை பிரபல பெண்கவிஞர் பன்முக ஆற்றல் கொண்டவருமான சல்மா மாலிக் அவர்கள் பெறுகின்றார். திருச்சி மாவட்டதில் உள்ள துவரங்குறிஞ்சி என்னும் சிறிய கிராமத்தில் பெண்களை வெளியே அனுமதிக்கப்படாத ஒரு முஸ்லிம் சமூகத்தில் பிறந்தார் இவர். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது படிப்பைப் பாதியில் நிறுத்த விட்டார்கள். அன்று தான் முதன்முதலாக தனிமைப்படுத்தப்பட்டார். அதனால்அவர் முதல் கவிதை அங்கு இருந்து தான் பிறந்தது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









