நினைவுக்கூட்டமும் கலந்துரையாடலும்!


இலங்கையில் தமிழ் இலக்கியம் கடந்தகாலப் போரினால் ஏற்பட்ட தடைகளையும் மீறி தற்பொழுது துளிர்த்து வருகிறது. பலர் தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் வெவ்வேறு பிரதேசத்தில் இயங்குகிறார்கள் என்பது, பல இலங்கை நண்பர்களோடு பேசியபோது எனக்குப் புரிந்தது. இந்த இலக்கியச் செடியை உரமீட்டு மேலும் வளம்பெற செய்யவேண்டும் என்ற எனது விருப்பத்தால் பலருடன் கலந்துரையாடியபோது, தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மட்டுமே அதை ஏற்படுத்தமுடியும் என்பதும் மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு நிதிவளமும் தேவை என்பதும் புரிந்தது. ஆங்காங்கு நடத்தப்படும் மாநாடுகளையும் இலக்கிய சந்திப்புகளையும் விட்டு விட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தினாலும் தொடர்ச்சியான செயற்பாடுகளே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது எனது கணிப்பு. இது போன்ற விடயங்களை அங்கே தனிநபர்களோ அல்லது தற்போதைய அரசாங்கமோ செய்யும் நிலையில்லை. மொழியில் ஏற்படும் முன்னேற்றம் எழுத்தாளர்கள் அல்லது இலக்கியத்தோடு நின்று விடாது. தமிழ் எமது நாட்டில் புவியியல் மதம் என பிரிந்திருக்கும் தமிழர்களை இணைக்கும் பாலமாகும். அதை வலுப்படுத்துவது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யவேண்டிய கடமையாகும். இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது வளத்தில் சிறிய பகுதியை ஒருங்கிணைத்தால் அதனால் ஏற்படும் மாற்றம் மிகவும் பெரிதாக இருக்கும் என்ற கணிப்பில் சமீபத்தில் கனடாவில் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் சிலருடன் பேசியபோது அவர்களும் இக்கருத்தை வரவேற்றார்கள்.

சி. வைத்தியலிங்கம் அவர்களின் புதல்வியான திருமதி யமுனா சுமங்கலி தர்மேந்திரன் லண்டன் பிரெண்ட் மாநகராட்சி மன்றத்தின் நூலகங்களில் கடந்த முப்பத்தாறு வருடங்களாக பணியாற்றி வருகின்றார். லண்டனில் தமிழ் மொழியை வளர்ப்பதில் பல்வேறு வழிகளில் செயற்பட்டு வருகின்ற யமுனா தர்மேந்திரன், தமிழ் மக்களின் நலன் கருதி ஆயிரக்கணக்கான தமிழ்நூல்களை பிரெண்ட் மாநகராட்சி நூலகங்களில் அறிமுகஞ்செய்து வருவதோடு தமிழ் விழாக்கள் பலவற்றையும் மிகவும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றார். கடந்த ஒன்பது வருடங்களாக மாதந்தோறும் தமிழ் வாசகர் வட்டத்தினை நடாத்தி வரும் திருமதி யமுனா தர்மேந்திரன், அவற்றினூடாக பல்வேறு இலக்கிய ஆளுமைகளின் திறமைகளை கலந்துரையாடல் மூலமாகவும், ஆய்வுகள் மூலமாகவும் வெளிக்கொண்டு வருவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார். இத்தகைய முன்னெடுப்புக்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் திகழ்பவர் லண்டனில் சமூகசேவை மனத்துடன் ‘சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின்’ முன்னைய தலைவராகவும், தற்போதைய லண்டன் தியாகராஜ உற்சவ விழா நிறுவனத்தின் தலைவராகவும் செயற்பட்டு வரும் அவரது துணைவர் திரு. தருமேந்திரன் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
இத்தகைய செயற்பாடுகளின் மத்தியில் தமது தந்தையான, ‘ஈழத்துச் சிறுகதை முன்னோடி எழுத்தாளர்களின் மூலவராகக் கருதப்படும் சி.வைத்தியலிங்கம் ஞாபகார்த்தமாக’, யாழ் பல்கலைத் தமிழ் வழாகத்தில் தமிழைத் தமது கல்வித்தேர்ச்சிப் பயிற்சியாக (பட்டப்படிப்பு – – Degree) தெரிவுசெய்துள்ள மாணவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாவை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக இட்டுள்ளனர். அதன் மூலமாக வரும் வருமானத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் நிதியுதவியினைப் பெறுவதற்கான ஒழுங்குகளும்; செய்துள்ளனர். முப்பத்தாறாயிரம் ரூபா மேலதிகமாக அனுப்பப்பட்டு 2015- 2016 கல்வியாண்டில் இத்திட்டம் தொடங்கவுள்ளது.
மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற முடியும் என்பதனையும் தெரிவிக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு என்றும் அழியாது சிரஞ்சீவியாக இருப்பதுபோன்று இந்த நற்பணியும் அழியாது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.
போட்டிகள் பற்றிய பொது விதிகள்
1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2. ஒருவர் ஆகக்கூடியது மூன்று சிறுகதைகளை அனுப்பலாம். அவை போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.
3. சிறுகதைகள் தமிழ் ஒருங்குகுறி(Unicode) அல்லது பாமினி எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுச் சிறுகதைப் போட்டி- 2015’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும்.
4. அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5. இப்போட்டியில் பங்கேற்க வயதெல்லைகள் இல்லை.
6. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும், வானொலியில் ஒலிபரப்பவும் அல்லது காட்சிக்கிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
8. சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.
ப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:\
முதலாம் பரிசு - 300 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 200 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
மூன்றாம் பரிசு - 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
முடிவுத்திகதி: 30.11.2015. இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
போட்டி முடிவுகள் 2016 தை மாதம் முதல் வாரம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

காலம்: 10.10.2015 சனிக்கிழமை காலை 1030 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை. | இடம்: Trinity Centre , East Avenue, east Ham, London. தொலைபேசி: 07736 908 421 | 07479 942 681 | 07817 262 980 | 07915 555 458 | மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | மதிய உணவு ஏற்பாடுகளுக்காக உங்கள் வரவை முன்கூட்டியே அறியத்தாருங்கள்! அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்: தேவகாந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'குவியம்' இணையத்தள ஆசிரியரும், எழுத்தாளருமான பொன் குலேந்திரன் அவர்களின் 'முகங்கள்' சிறுகதைத்தொகுப்பு தமிழகத்தில், அக்டோபர் 7ந்திகதி , 'ஓவியா பதிப்பக' வெளியீடாக வெளிவரவுள்ளது. கனடாவில் 'பீல் தமிழ் முதியோர் சங்கத்தி'ல் வெளியிடப்படுமெனவும், தொகுப்பின் கதைகள் பாரம்பர்யம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் பிரதிபலிப்பு என்று கூறுகின்றார் நூலாசிரியர் பொன் குலேந்திரன். தொகுப்பிலுள்ள ஒரு கதை ஆசிரியரின் துபாய் நாட்டில் அவரடைந்த அனுபவங்களைச் சார்ந்ததென்றும், நூலின் அட்டையினை நண்பர் புகழேந்தி அவர்கள் தயாரித்திருப்பதாகவும் மேலும் அவர் கூறுகின்றார். நூல் வெளியீடு வெற்றியடைய வாழ்த்துகள். பொன் குலேந்திரன் அவர்களுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள்
1. திருவெண்ணைநல்லூர்
2. கிராமம்
3. திருக்கோவிலூர்
4. ஜம்பை - விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம் என்று பெயர். இது 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. காலம்: பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு ( தோராயமானது ). மொழி: தமிழ்.
எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து)
வழிகாட்டி : ஆய்வாளர் பேரா. பத்மாவதி, மங்கை ராகவன்
நாள் : அக்டோபர் 4 2015
தொடக்கம் : காலை 6:30 மணி - பனுவல் புத்தக விற்பனை நிலையம்
திரும்புதல் : இரவு 8:00 மணி - பனுவல் புத்தக விற்பனை நிலையம்
பயணக் கட்டணம் : ரூ.1000 ( நமக்கே நமக்காக தனியாக ஒரு பஸ் - காலை - மதியம் உணவு , தேனீர் , நினைவு பரிசு என எல்லாம் சேர்த்து )
ஆன்லைன் அல்லது பனுவலில் ( திருவான்மியூர் ) முன்பதிவு செய்யலாம்.
http://www.panuval.com/tickets/Archelogial-trip-to-Thirukoilur
Or Watsapp 97890-09666 to book yours.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இடம்: Don Montgomery Community Recreation Centre, 2467 Eglinton Ave. E,
Scarborough, ON M1K 2R1
காலம்: செப்டம்பர் 23, பி.ப 4மணி
ஏற்பாடு: தேடகம் (தமிழர் வகைதுறைவள நிலையம்)

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாக நூல் வெளியீட்டுடன் கூடிய பாராட்டு விழா ஒன்று எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. எஸ். சிவநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற இருக்கின்றது.
காலம்: அக்ரோபர் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை.
October 16th 2015 - Friday
நேரம்: மாலை 6: 45 P.M
இடம்: BABA Banquet Hall, 3300 McNicoll Avenue, Toronto. On. M1V 5J6.
(Middlefield Rd / McNicoll)
இலக்கிய ஆர்வலர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
விழாக் குழுவினர்
905 861 9323
416 312 5047
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

காலம் : Sep 15 ,2015 மாலை ஆறு மணி
இடம் : Rainbow villlage , 2466 Eglinton avenue east. 2nd floor party hall
இரவு உணவுடன் நடைபெறும் இந்த சந்திப்புக்கு ஒரு சிறிய கட்டணம் அறவிடப்படும்($15). உங்கள் வருகையை முற்கூட்டியே உறுதிப்படுத்தவும்.நன்றி!
தகவல்: செல்வகுமார் செல்லத்துரை
அவுஸ்திரேலியாவில் வதியும் மிருகவைத்தியரும் எழுத்தாளருமான டொக்டர் நடேசன் கனடாவுக்கு வருகைதந்துள்ளார். சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் சில நூல்களையும் வரவாக்கியிருக்கும் நடேசனுடனான சந்திப்பு கலந்துரையாடல் எதிர்வரும் 20 -09-2015 ஆம் திகதி ஞாயிறு கனடாவில், 430 Mayfair on the Green..,Mclivin Avenue , Scarborough , Ontario முகவரியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும். இந்தக் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் திருவாளர்கள் தேவகாந்தன், என். கே. மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு: திரு. சபேசன் 4168011654 | e mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
ஒருங்கிணைப்பு: சின்னையா சிவநேசன்
"அன்றாட தமிழாக்கத்தின் இன்றைய நிலவரம்" - உஷா மதிவாணன்
"தமிழாக்கத்தில் வாசகர்களின் எதிர்பார்ப்புகள்" - சுல்பிகா இஸ்மயில்
"புனைவிலக்கிய தமிழாக்கத்தில் ஏற்படும் பிரச்சினைகள் " - என்.கே.மகாலிங்கம்
"தமிழாக்கம்: வாசகர்களின் அவதானிப்புகள்" - அருண்மொழிவர்மன்
"தமிழாக்கம்: கண்ணில் பட்டதும் காதில் விழுந்ததும்" - மணி வேலுப்பிள்ளை
நாள்: 26-09-2015 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை |இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
3A, 5637, Finch Avenue East, | Scarborough, |M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
12-09-2015 - சனிக்கிழமை, இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர், கன்னிமாரா நூலகம் எதிரில். மாலை 4 மணிக்கு.
சிறப்பு அழைப்பாளர்கள்:
செயல்பாட்டாளர் சிவகாமி IAS
எழுத்தாளர் அழகிய பெரியவன்
பத்திரிகையாளர் அசோகன் (அந்திமழை)
நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தமிழ் ஸ்டுடியோவின் 67வது குறும்பட வட்டத்தில் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்பட்டு, படச்சுருளின் தலித் சினிமா சிறப்பிதழ் பற்றிய திறனாய்வுக் கூட்டமும் நடைபெறவிருக்கிறது. படச்சுருள் வாசகர்களும், தமிழ் ஸ்டுடியோ பார்வையாளர்களும், குறும்பட இயக்குனர்களும் இந்த நிகழ்வில் பரவலாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அரங்கம் சிறிதுதான் என்றாலும், அம்பேத்கர் படத்தை பார்க்க நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கூட வேண்டும். அப்படி பெருங்கூட்டம் கூடினால், இன்னொரு முறை பெரிய திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ் ஸ்டுடியோ திரையிடும். நண்பர்கள் சனிக்கிழமை மாலை மறக்காமல் குறும்பட வட்டத்திற்கு வந்துவிடுங்கள்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

‘தேடல்களின் வெளிப்பாடாகவும்,சொந்த அனுபவங்களின் வெளிப்பாடாகவும் ‘கட்டைவிரல்’ கட்டுரைகளைப் படிக்க முடிந்தது . இலங்கை வீரகேசரியில் வெளியான பல கட்டுரைகள் கட்டை விரலுக்கு அழகு சேர்ப்பதாகவும், ‘தடுத்திடுவார்கள் இன அழிப்பை’,‘போர்க்காலக் காதல்’ போன்ற கவிதைகள் கடந்த கால,சமகால நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டும் சிறந்த கவிதைகள்’ என முன்னாள் லண்டன் தெற்கு லண்டன் சதாக் பகுதியின் நகரசபை முதல்வரும்,தற்போதைய நகரசபை உறுப்பினருமான செல்வி எலிசா மன் அவர்கள் லண்டன் ஈஸ்ற்ஹாம் ரினிற்ரி மண்டபத்தில் மிக அண்மையில் பாரீசிலிருந்து வருகைதந்த திவ்வியநாதனின் நூல்; வெளியீட்டின்போது, தனது தலைமையுரையில் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் பேசுகையில்: ‘ கட்டைவிரல்’ தொகுப்பில் கவிதை, கட்டுரை,சமையற்குறிப்புகள் என விரிந்து கிடப்பது பாராட்டுக்குரியது. திவ்வியநாதனின் இத்தகைய உழைப்பு தமிழுலகுக்குச் செய்ய வேண்டிய அளப்பரிய செயற்பாடு. மேலும் இத்தகைய ஈடுபாடு; தொடரவேண்டுமென வாழ்த்துக் கூறினார்;.’
‘ நூலசிரியர் திவ்வியநாதன் பல புத்தங்களின்; தேடல்களினால் பெற்றுக் கொண்ட அறிவையும்,அவரது சொந்த அனுபவங்களையும் ஒன்று சோர்த்து இக் ‘கட்டைவிரலை’ப் படைத்துள்ளார். இக் ‘கட்டைவிரல்’ ஆங்கில மொழியில் வெளிவருமேயானால் மேலும் பயனுள்ளதாக அமையும்’ என இலக்கிய ஆர்வலரும்,இரசாயனப் பொறியியலாளருமான திரு ஜெயதீசன் தனது உரையில் தெரிவித்தார்.’
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவிற்காக கோவிந்த் நிலானி சென்னை வந்திருந்தபோது, அவருக்கும் படத்தொகுப்பாளர் லெனினுக்கும் இடையே இரண்டுமணிநேரம் சினிமா பற்றிய விவாதம் நடைபெற்றது. இருபெரும் ஆளுமைகள், தங்களுடைய திரைப்பட அனுபவங்களை பற்றியும், தங்கள் காலத்து சிறந்த இயக்குனர்கள், கலைஞர்கள் பற்றிய அனுபவத்தையும் பகிர்ந்துக்கொண்டார்கள். சினிமாவை விரும்பும் நண்பர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி இது. இதில் இயக்குனர் லீனாமணிமேகலையும் கலந்துக்கொண்டார்.
காணொளியை காண: https://www.youtube.com/watch?v=AIc81z8JU1Y
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சென்ற சனிக்கிழமை 22-08-2015 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கு ஒன்று ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறையில் காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவரும் எழுத்தாளருமான திரு. குரு அரவிந்தன், மற்றும் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ஆகியோரால் தமிழ் சிறுகதை ஆர்வலர்களுக்காக இந்த சிறுகதைப் பட்டறை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது சிறுகதைகளையே உதாரணமாக எடுத்து சிறுகதை பற்றி எல்லோரும் புரிந்து கெனாள்ளும் வகையில் விளக்கங்களைத் தந்தார். பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் நாட்டில் சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.
‘லட்சக்கணக்கான வாசர் வியாபத்தைக் கொண்ட, தமிழ் இலக்கிய உலகம் அறிந்த எழுத்தாளர் குரு அரவிந்தன், சிறுகதைகள் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்’ என்று எழுத்தாளர் இணையத் தலைவர் கலாநிதி சிவநாயகமூர்த்தி அவர்கள் தனது தலைமை உரையில் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய குரு அரவிந்தன் சிறுகதை பற்றிக் குறிப்பிடும் போது தனது அனுபவங்களையே முன்வைத்தார்.
சிறுகதை பற்றிச் சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை சீரான நடையோடு கற்பனைத் திறன் கலந்து சொல்வதுதான் சிறுகதை என்பது எனது கருத்து என்று குறிப்பிட்ட அவர், சிறுகதை மையக்கருவோடு அதாவது கதையின் நோக்கத்தோடு ஒன்றிப்போனால் மிகவும் சிறப்பாக அமையும். வாசகர்களுக்கு அதை வாசிக்கும் போது அந்தக் கற்பனைப் புனைவு மனதில் ஏதாவது நெகிழ்வை ஏற்படுத்துமானால், அது தரமான ஒரு சிறுகதையாகக் கணிக்கப்படலாம். சிறுகதை எப்படி இருக்கக்கூடாது என்று பார்ப்போமேயானால், கட்டுரைத் தன்மையில் இருந்து மாறுபட்டிருக்க வேண்டும். சிறுகதையில் உபகதைகள் சொல்ல வெளிக்கிட்டால் அது குறுநாவலுக்கான முயற்சியாக மாறிவிடலாம். அதுமட்டுமல்ல, சிறுகதையில் உபதேசத்தைத் தவிர்ப்பதும் நல்லது என்றே எண்ணுகின்றேன் என்றார்.
நண்பர்களே, பேசாமொழி மாற்று சினிமாவிற்கான தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. தற்கால தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனரின் படம் பேசாமொழியில் அட்டைப்படமாக வருவது இதுவே முதல்முறை. அந்த பெருமை இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களையே சாரும். பாலாஜி சக்திவேலின் மிக நீண்ட நேர்காணலும், அவருடன் நான் நடத்திய கலந்துரையாடலின் சுருக்கமான வடிவமும், இந்த இதழில் வெளியாகியிருக்கிறது. தவிர பண்ணையாரும் பத்மினியும் திரைப்பட இயக்குனர் அருண்குமாரின் நேர்காணலும் இந்த இதழில் வெளியாகியிருக்கிறது.
நிகழ்ச்சி நிரல்: "வரலாற்றில் ஜெயகாந்தன்"
பிரதம பேச்சாளர் உரை: "ஜெயகாந்தனின் ஆளுமை அம்சங்களும் இன்றைய சூழலில் அவரைப் பற்றியசிந்தனைகளின் தேவையும்" - கலாநிதி நா. சுப்பிரமணியன்
சிறப்பு விருந்தினர்கள் உரை:
"ஜெயகாந்தனின் நாவல்கள்" - திரு.தேவகாந்தன்
"ஜெயகாந்தனும் சிறுகதையும்" - திரு.எஸ்.கே.விக்னேஸ்வரன்
"ஜெயகாந்தன் காலத்தின் பின்பாக ஜெயகாந்தன் எழுத்துகள் - ஒருபார்வை" - திரு.அருண்மொழிவர்மன்
"ஜெயகாந்தனின் திரைப்படங்கள்" - திரு.கனடா மூர்த்தி
கடந்த மாதம் நடந்த இலக்கிய நிகழ்வுகள்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 29-08-2015 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை | இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் : 3A, 5637, Finch avenue East, carborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தகவல்: பொ.கருணாகரமூர்த்தி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
15.08.2015., சனிக்கிழமை., 5:00 மணிக்கு @ R.K.V ஸ்டுடியோ.,வடபழனி (வடபழனி பேருந்து நிலையம் எதிரில்)
2015ஆம் ஆண்டிற்கான லெனின் விருது பெறுபவர் திரு.பி.கே.நாயர்
சிறப்பு அழைப்பாளர்கள்:
இயக்குனர், ஒளிப்பதிவாளர் கோவிந்த் நிஹ்லானி, | இயக்குனர் பாலாஜி சக்திவேல்,
இயக்குனர், நடிகர் யூகி சேது, | கார்ட்டூனிஸ்ட் மதன்.,
தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன், | இயக்குனர், நடிகை ரோகினி,
திரைப்பட விழா இயக்குனர் சந்தானம் சீனிவாசன், | இவர்களுடன்.,
இயக்குனர்., படத்தொகுப்பாளர் பீ.லெனின் & பி.கே.நாயர்
பெரும் மதிப்பிற்குரிய உலகத் தொல்காப்பிய மன்றத்தின் உறுப்பினர்களுக்கு வணக்கம். நலம் நாடுகின்றேன். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பிரான்சுநாட்டுத் தலைநகர் பாரிசில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்த விரிவான அறிக்கையை தமிழ் / ஆங்கிலம் என இருமொழிகளிலும் இணைத்துள்ளோம். நம் மன்ற அன்பர்கள் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகின்றோம். முன்னதாகத் தெரிவித்தால் தங்குமிடம், உணவுக்கு ஏற்பாடு செய்யவும், நிகழ்ச்சியை வடிவமைக்கவும் வாய்ப்பாக இருக்கும். தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றவும், தொல்காப்பிய அறிஞர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கவும் எண்ணியுள்ளோம். நிகழ்ச்சியை வடிவமைப்பது தொடர்பில் அன்பர்களின் வழிகாட்டலை எதிர்பார்க்கின்றோம்.
மாநாட்டுக்குழுவின் சார்பில்
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவல்: த.சிவபாலு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இடம்: ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறை
காலம: சனிக்கிழமை 22-ஆகஸ்ட் 2015 (22-08-2015)
நேரம்: காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை
நடத்துபவர்கள்:
எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன், பேராசிரியர் நா.சுப்பிரமணிய ஐயர். தமிழ் சிறுகதை ஆர்வலர்களுக்கு அரியதொரு வாய்ப்பு;. பங்கு பற்றுபவர்கள் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் அழைத்து பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்
தொடர்புகளுக்கு: 416-267-6712, 416-861-9323, 416-292-4109
எஸ்.சிவநாயகமூர்த்தி (தலைவர்) | சிவநயனி முகுந்தன் (செயலாளர்)
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சென்ற வெள்ளிக்கிழமை யூலை மாதம் 24 ஆம் திகதி 2015 அன்று செல்வி அபர்னா செல்வராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கனடா றிச்மன்ஹில் சென்ரர் அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலைமன்றத்தின் அதிபர் நர்த்தன நாயகி, மானித மாதங்கி ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களின் மாணவியான செல்வி அபர்னாவின் அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினர்களாக எழுத்தாளர் திரு குரு அரவிந்தன், திருமதி மாலினி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி. பூங்கோதை பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். சுதர்சன் துரையப்பா அவர்கள் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.
இந்த அரங்கேற்ற நிகழ்வின் இசைக் கலைஞர்களாக ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு, கார்த்திகேயன் இராமநாதன், கல்யாணி சுதர்சன் ஆகியோருடன் இளம் கலைஞர்களான ஐஸ்வரியா சந்துரு, அனுஷன் மோகனராஜ், அபிநயா சந்துரு ஆகியோர் மிகவும் சிறப்பாக இசை வழங்கினர். முக்கியமாகத் தெலுங்குக் கீர்த்தனங்களில் மட்டும் தங்கியிராமல், பார்வையாளர்களால் புரிந்து கொள்ளக்கூடிய மொழியான தமிழ் மொழிப் பாடல்களையும் தெரிவு செய்து தமிழ் மொழியை இந்த மண்ணில் தக்கவைக்க அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டப்பட வேண்டும். ‘அன்னமே அருகில்வா அந்தரங்கம் ஒன்று சொல்வேன்,’ ‘விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்’ போன்ற பாடல்கள் இடம் பெற்ற போது புரிந்த மொழியாகையால் அபர்னாவின் ஒவ்வொரு அசைவும் பார்வையாளர்களின் கரவொலி மூலம் பாராட்டுப் பெற்றது குறிப்பிடத் தக்கது.
புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய 'எழுத்தாளர் விபரத்திரட்டு' தொகுப்பு நூல் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'காற்றுவெளி' இதழின் ஆசிரியரும், இலக்கியப்பூக்கள் தொகுதி ஒன்று, இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டுஆகிய இரு தொகுப்பு நூல்களின் தொகுப்பாசிரியரான எழுத்தாளர் முல்லை அமுதனே இத்தொகுப்பு நூலினைத் தொகுத்துள்ளவருமாவார்.
புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய முறையான , சரியான புரிதலுக்கு, அறிதலுக்கு இது போன்ற தொகுப்பு நூல்கள் முக்கிய ஆவணங்களாக விளங்கும் சிறப்பு மிக்கவை. இத்தொகுப்பு நூல்களைத் தனியொருவராகத் தொகுத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியிருக்கும் எழுத்தாளர் முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர்.
இத்தொகுப்பு நூல் மீள்பதிப்புகளாக வெளிவரவேண்டும். அவ்விதம் வெளிவரும்போது மேலும் மேலும் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். இந்நூலினைப் பெற விரும்புவோர் ஓவியா பதிப்பகத்துடன் தொடர்புகொள்ளுங்கள். விபரங்கள் வருமாறு:
ஓவியா பதிப்பகம்
17-16-5 ஏ, கே.கே.நகர்,
வத்தலக்குண்டு - 624 202
திண்டுக்கல் மாவட்டம்.