திருப்பூர் இலக்கிய விருதுகள் 2024 : 1/12/24
16வது ஆண்டில்.. இதுவரை சுமார் 350 படைப்பாளிகளுக்கு எளிமையாக இந்த திருப்பூர் இலக்கிய விருது கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் இல்லை இவர் இல்லை என்று சொல்பவர்கள் அவர்களும் இவர்களும் முன்பே இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளலாம்
இந்த ஆண்டும் வழக்கமாக எளிமையாக ஒரு நூலகத்தில் நடைபெறுகிறது. 50 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி தரும் நகரத்தில் பின்னலாடை மூலம் வருமானம் கிடைக்கும் நகரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. இந்த முறையும் முயன்றோம். நகரத்தின் முக்கிய 8 பிரமுகர்களுக்கு ( ஓரளவு அறிமுகமானவர்கள் ) கடிதங்கள் அனுப்பினோம் .யாரும் பதில் அளிக்கவில்லை எளிமையாக வழக்கம் போல் நடத்துகிறோம்.
இதை இதைப் பற்றி விமர்சிப்பவர்கள், அவதூறாய் பேசுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் ஆதரவு தருவார்கள் அதிகம் இல்லை கூட இருப்பவர்களுக்கு கூட உதவி செய்ய மனவருவதில்லை இவர்களெல்லாம் கால வெள்ளத்தில் சாதாரண குப்பைகளாக கால வெள்ளத்தில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்
நகரத்தின் வியாபார வளர்ச்சியுடன் கலை இலக்கிய வளர்ச்சியும் இருந்தால் தான நகரத்தின் முழு வளர்ச்சியும் வெளியே தெரியும் அந்த வகையில் தமிழ் இலக்கிய பரப்பில் உள்ள சில எளிமையான படைப்பாளிகளை கௌரவம் படுத்தும் இந்த விழா எளிமையானது.சாதாரண எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் போலவே ஆடம்பரமான எழுத்துக்கள் வரிசையாக எழுத்தாளர்கள் உள்ளார்கள். அவர்கள் மத்தியில் எளிமையான எழுத்துக்களுக்கு கவுரவமாக கடந்த 16 ஆண்டுகளாய் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
இதைத் தவிர 20 ஆண்டுகளாய் பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது மற்றும் குறும்பட கலைஞர்களுக்கான குறும்பட விருது ஆகியவையும் நடந்து வருகின்றன என்பதையும் கவனத்தில் கொண்டு வருகிறோம். கனவு 38ம் ஆண்டில் தன் இலக்கிய இதழைக்கொண்டு வரும் நேரத்தில் இந்த நிகழ்வுகளையும் , மாதக் கூட்டங்கள் தவிர முன்னெடுத்து வருகிறது. எளிமையானப் படைப்பாளிகளை எளிமையான விழாவில் வாழ்த்துவோம். வாருங்கள்.


சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள்.




தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் ஒரு மாவட்ட தலைநகரில் உலகத் திரைப்பட விழாவை நடத்துகிறது இவ்வாண்டு கோவையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தாமதமாக திருவாரூரில் செப்டம்பர் மாதம் நடந்தது.. 15 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் இந்தியப் படங்களும் இருந்தன

“நடு இரவில் (?) விழிக்கும் இவன்! குறைமேகங்களுக்கு மத்தியிலிருந்து இறங்கிய மங்கிய நிலவு பூமி பரப்பின் மீதிருந்த பொருள்களின்; வெளிஉருவத்தை மட்டும் பிரித்துக்காட்டுவதாக இருந்தது… எதிரே ஒரு அரசமரம்… ஓர் அசைவும் காணப்படவில்லை சப்தமே போடாமல் ஃபோட்டோ சிந்தஸிஸ் நடந்துக்கொண்டிருந்தது” (பக்கம் 89-92). போட்டோ சிந்தஸிஸ் என்பது ஒளித்தொகுப்பு என விஞ்ஞானம் கூறுகின்றது. இதற்கு இத்தொகுப்பு நடக்க ஒளி ஓர் முக்கிய அவசியப்பொருள் எனக்கூறப்படுகின்றது.
இன முறுகலை நாவல் கையாளும் முறைமை
உதிர்கிற காட்டில் 




தமிழ்நாட்டில் பயணம் செய்யும்போது ஏதாவது ஒரு சொல்லில் கண்டுபிடித்து விடுவார்கள். 'நீங்க சிலோனா?இலங்கையா? ஈழமா?' என்று கேட்டு அடுத்துக் கேட்பது 'நாட்டு நிலமைகள் எப்படியிருக்கு?' உரையாடல் தொடரும். பொது மக்கள் கவலையோடும் அக்கறையோடும் விசாரிப்பது உண்மை. ஓலா ஓட்டுனர் ஒருவர் சொன்ன விடயம் மறக்க முடியாதது, படிக்கும் காலத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி பின் தன் படிப்பு இடையில் நின்று தன்னுடைய வாழ்வு எப்படிப் பாதிக்கப்பட்டதென்று கவலையாகப் பேசினார். இப்படிப் பலர் உண்மையாகவே உறவுகளின் துன்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று களமிறங்கியதும் உதவியதும் பதவிகள் இழந்ததும் அறிவோம்.
இலங்கையென்னும் நாட்டில் அனைத்து மக்களும் சரிக்கு சமமாக இணைந்து வாழ்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையினை நீக்குவோம். புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம். அதுவரை மாகாண சபையினை இயங்க வைப்போம். அரசியல் கைதிகளை விடுவிப்போம். ' இவ்விதம் பல வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைக் கேட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு இன, மத, மொழி பேதமின்றி மக்கள் 2/3 அறுதிப் பெரும்பான்மையினை வழங்கியிருக்கின்றார்கள். பெரு வெற்றியை ஈட்டிய அவருக்கும் , ஏனையோருக்கும் வாழ்த்துகள். அநுர குமார திசநாயக்கவுக்கு இனித் தன் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்குத் தடைகள் எவையுமில்லை. அவர் அவற்றை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.




’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று வாழ்த்து அணியாகும். தண்டியலங்காரத்தில் வாழ்த்து அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









