வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் AI
பாடலைக் கேட்க
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
பழம் பெருமை பேசுவதை நிறுத்தார்.
பழைய நூல்களை வாங்கவே மாட்டார்.
சமூகப் பிரிவுகள் வளர்த்தே வாழ்வார்.
சங்கத் தமிழரென்றே பொங்கி எழுவார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
தமிழர் நூல்களை ஏறெடுத்தும் பாரார்.
தமிழர் படைத்தார் குறுந்தொகை என்பார்.
தமிழர் சிலம்பு என்பார், மணிமேகலை என்பார்.
தமிழர் இவரோ இவற்றை வாங்கார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நடிகை பின்னால் மயங்கிக் கிடப்பார்
நடிகர் பின்னால் மயங்கிக் கிடப்பார்.
உணர்ச்சி அரசியலில் மூழ்கிக் கிடப்பார்.
உணர்ச்சி மிகுந்து மோதிக்கொள்வார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
தமிழ் எழுத்தாளர் எழுத்தால் வாழ்ந்ததில்லை.
தமிழ்க் கலைஞருக்கோ ஆதரவு இல்லை.
ஊடகப் புகழ் நாடியே அலைந்து திரிவார்.
உணர்ச்சியில் மட்டுமே நிலை மறப்பார்.


மேற்கத்திய அரசியல் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தும் 'அரசியல் யதார்த்தவாதம்' (Political Realism) மற்றும் மகாத்மா காந்தியின் 'தார்மீக அரசியல்' ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளை இக்கட்டுரை ஆராய்கிறது. வன்முறையற்ற எதிர்ப்பு (Satyagraha) மற்றும் அதிகாரப் பரவலாக்கல் (Sarvodaya) மூலம் காந்தி எப்படி ஒரு புதிய அரசியல் பரிமாணத்தை உருவாக்கினார் என்பதை விளக்குகிறது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை 18-1-2026 அன்று கனடா எத்தோபிகோவில் உள்ள திஸ்டில் நகரமண்டபத்தில் கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல், மரபுத்திங்கள், மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பின் பாடலுக்கு, நடன ஆசிரியர் திருமதி தயாளினி ஜீனராஜின் மாணவிகளின் நடனம் இடம் பெற்றது. இந்தப் பாடலை அகணி சுரேஸ் எழுத, சி. சுதர்சன் இசையமைக்க, மயூரதி தேவதாஸ் பாடியிருந்தார். அடுத்து திருமதி கலைமகள் புஸ்பநாதனின் வரவேற்பு உரை இடம் பெற்றது. நூல் வெளியீட்டு நிகழ்வில் கனடாவில் இருந்து வெளிவரும் இளையதலை முறையினருக்கான, எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்ட ‘வதனம்’ எட்டாவது இதழும், திருமதி கமலவதனா சுந்தா எழுதிய சிறுவர்களுக்கான ‘தைப்பொங்கல்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பெற்றன.
காலை ஏழு மணி. வெயில் ஆறுமணிக்கே விழத் தொடங்கியிருந்த கோடை காலக் காற்றிலும் குளிர் இருந்தது. தூரத்தே அடர்த்தியான பைன் மரக் கூம்புகள் கொண்ட மலைகள் மெல்லிய நீல பனிப் புகாரினூடே தெரிந்தன. பளிச்சென்ற வெய்யில் வந்து மலை விளிம்புகள் தெளிவாகத் தெரியும் வரை இந்தப் புகார் இருக்கும்.


இனி எமது நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் கலாமோகனிற்கான வரவேற்பும் அங்கீகாரமும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்று பார்ப்போமானால் ஒரு தெளிவற்ற சித்திரம் ஒன்றே எம்முன் தென்படுகின்றது. கலாமோகன் பல சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். அவற்றில் சில தமிழின் மிகச்சிறந்த கதைகளகாக் கொண்டாடப்படுகின்றன. அவரது சிறுகதையான 'மூன்று நகரங்களின் கதை' தமிழின் மிகச்சிறந்த 100 கதைகள் என்ற பட்டியலிற்குள் தமிழகத்து இலக்கிய ஆளுமைகள் பலராலும் வகைப்படுத்தப்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலிற்குள் வெறும் நான்கைந்து ஈழ எழுத்தாளர்கள் மட்டுமே அடங்கியுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. எனவே இது ஒரு அசாத்தியமான சாதனையாகவே எமக்குப் புலப்படுகின்றது. மேலும் தமிழக விமர்சகர்கள் ஈழ-புகலிட இலக்கிய ஆளுமைகள் என்று பட்டியலிடும்போது இவரது பெயர் இரண்டாவது அல்லது மூன்றாவதாக எஸ்.பொன்னுத்துரை,மு.தளையசிங்கம், மற்றும் சட்டநாதனிற்கு அடுத்ததாக அல்லது அதற்கு முன்னதாக முன்னிறுத்தப்படுகின்றது. இவரது சிறுகதைகள் பலவும் இன்றளவும் பல்வேறு இணைய இதழ்களிலும் தொடர்ச்சியாக மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன.
தமிழக எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் 'பாண்டிய நெடுங்காவியம்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதியிருக்கின்றார். மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்நாவலின் மூன்று பாகங்களும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 2015. இந்நூலின் பின்னட்டையிலும், உள்ளே விமர்சகர் ஒருவரின் திறனாய்விலும் தமிழில் சரித்திர நாவல் எழுதிய முதலாவது பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா?
அணுவினைப் பற்றி கூறும் இயல் 'அணுவியல்' ஆகும். இயற்பியலின் ஒரு பிரிவாக விளங்குகிறது. 'அணு' என்ற சொல்லிற்கு 'நுண்மை' என்று பிங்கல நிகண்டு பொருள் கூறுகிறது. இன்றையக் காலத்தில், அறிவியல் உலகில் பல அற்புத வளர்ச்சிகளைப் பெற்று விளங்குவது அணுவியலேயாகும். கம்பராமாயணத்தில் அணு பற்றியச் செய்திகள் குறித்து கூறப்பட்டுள்ளவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
தமிழியலாய்வு வளர்ச்சியில் இடதுசாரி முற்போக்கு ஆய்வாளர்களின் பங்களிப்புகள் பெருந்திருப்பத்தை ஏற்படுத்தின. வரலாற்று நோக்கு, சமூகப் பார்வை முதலானவற்றின் பின்னணியில் தர்க்கபூர்வமாக ஆய்வுகளை முன்னெடுத்துள்ள அவர்கள், கலை இலக்கியங்களுக்கும் சமூக இயக்கத்துக்கும் இடையிலான தொடர்புகளையும் கலை இலக்கியங்களில் வர்க்கக் குணாம்சங்கள் அமைந்துள்ளவாற்றையும் கண்டறிந்து விளக்கினர். அக்குழுவினர் கையாண்ட அணுகுமுறையினால் கலை இலக்கியங்களின் உருவ – உள்ளடக்க அமைவில் சமூக வாழ்வு செலுத்திய தாக்கங்கள் கண்டறியப்பட்டதுடன் கலை இலக்கியங்களைக் கொண்டு சமூக வரலாற்றை மீட்டெடுத்தலும் சாத்தியமாயிற்று. 1950களில் தனித்துவமுடைய செல்நெறியாக வளர்ந்துவந்த அவ்விமர்சனமுறைமை, 1980களின் பிற்பகுதி முதல் தன் முதன்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது. அத்தேய்வு வெவ்வேறு தளங்களில் இடம்பெற்று வருகின்றபோதிலும், முற்போக்கு விமர்சகர்கள் வளர்த்தெடுத்த செழுமையான ஆய்வுமரபின் தொடர்ச்சியைப் பேணும் முயற்சிகளைச் சிலர் மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுள் தனித்துச் சுட்டிக்காட்டத்தக்க ஒருவராக எல்.ஜோதிகுமார் விளங்குகிறார்.

- கட்டுரையாசிரியர்: சீவகசிந்தாமணியில் அகப்பொருள் மரபுமாற்றங்கள்! - முனைவா் பா.பொன்னி,,இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், இளங்கலைத்தமிழ்த்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி( தன்னாட்சி ), சிவகாசி -
நெதர்லாந்து, அதன் நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதி கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளதால், நீர் மேலாண்மை மிகவும் முக்கியமானது. நீர் மேலாண்மையின் முக்கிய பங்குகள்:
1
தமிழர் ஆரியச் செல்வாக்குக்கு உட்படமுன்னரே ஊரறிய திருமணச் சடங்குகளை நிறைவேற்றியுள்ளனர். உறவினர்கள், ஊரவர்கள் கூடி மிகச்சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ஆரம்ப காலத்தில் காதலர் இருவர் கருத்தொருமித்துக் காதல் திருமணம் செய்யும் முறையும் பெற்றோர் மணம்பேசு திருமணம் செய்துவைக்கும் முறையும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. காதலன் காதலியைக் கண்டு மனம்விரும்பி தாய் தந்தையார் உறவினர் யார் என்று தெரியாத நிலையில் காதல் வயப்பட்டு மணம் முடித்துள்ளனர். இருவர் ஓரிடத்தில் ஒருவரை ஒருவர் எதிர் கொள்கின்றனர். தங்கள் மனதைப் பறிகொடுக்கின்றனர். கண்டதும் காதல் சங்ககாலத்திலும் இருந்துள்ளது. உனது தாய் தந்தை யார் என்று அறியேன், உனது ஊர் எதுவென அறியேன் எனது தாய் தந்தையருக்கு அவர்கள் என்ன உறவோ என்றும் அறியேன் ஆனால் உன்மீது காதல் பிறந்துவிட்டதே எங்கள் இருவரது நெஞ்சளும் கலந்துவிட்டனவே பார்வையில் என செம்புலப் பெயல் நீரார் என்னும் புலவர் பாடடிய பாடலைப் பார்த்தால் காதல் மணம் அன்றே நடந்துள்ளதை அறியமுடிகிறது:
என்றும் அழியாத நல்ல நாமத்தோடும் புகழோடும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருந்கக் கூடியவர்கள் கலை இலக்கியத்தினூடக தமது ஆற் றல்களை எப்போதும் புதிய பரிணாமங்களுடன் வெளிப்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களே என்றால் அது மிகையாகாது.
கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் இந்த உரை வரலாற்றில் நிலைத்து நிற்கபோகும் உரை! தற்போதுள்ள சூழலில் , டொனால்ட் ட்ரம் அமெரிக்க அதிபராக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த 
மத்தியப் பிரதேசத்தின் யபல்பூரில் (Jabalpur) நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நர்மதா நதி ஓடிக்கொண்டிருந்தது. வழிகாட்டி கூறியபடி, இந்த நதி இந்திய உபகண்டத்தின் பழமையான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதைக் கேட்டு நான் ஆச்சரியத்துடன் சிந்திக்கத் தொடங்கினேன்.
பெண்ணிய எழுத்தாளரான தாமரையின் 'கதவும் கள்ளிப்பாலும்' எனும் கவிதையின் தொகுப்பில் 'தொலைந்து போனேன்' கவிதையில் பெண்ணின் மனவெளிப்பாட்டினை வெளிப்படும் நோக்கில் அமையப் பெற்றதாகும்.
[இக்கதையில் ஆசிரியர் கழுகு, தாமரை என்று குறிப்பிடுவது அக்காலகட்டத்தில் இலங்கையில் இயங்கிய தமிழ் அமைப்புகளில் இரண்டை. - பதிவுகள் -]
''அருள், இந்த உக்ரேன் பிரச்சனை...என்ன, ஒன்றுமே விளங்க மாட்டேன் என்கிறதே? '' கட்டடியிலே சபேஷ், கேட்க கூடி இருந்த உமா,யோகி, நாகேஷ்...எல்லார் மூஞ்சியிலும் அறியும் ஆர்வம் சுடர் விட்டது. அருளர் பழைய தொழில்சங்க அமைப்பில் இருந்தவர். அவனுடைய காலத்தில் அவர் ஒன்றாய் ஒரே விடுதலைக்குழுவில் புழங்கியவர் .மற்றவர்களுக்கு தான் புதியவர் . யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த பிறகு எவரும் தெரிந்தவர் எனக் காட்டிக் கொவள்தில்லை. கழுகால் தடை செய்யப்பட்டு , பல வருசங்கள் ஓடி விட்டன . யாரும் எவரையுமே இப்பவெல்லாம் தெரிந்து கொள்ளவும் முயல்வதில்லை . 



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









