
கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061
முன்னுரை
தகவல் தொடர்பியல் (Communication) என்பது செய்திகள், கருத்துக்கள், உணர்வுகள் மற்றும் தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அல்லது ஒரு குழுவிற்குப் பரிமாறிக்கொள்ளும் முறையாகும். இது வாய்மொழி, எழுத்து, சைகை மற்றும் மின்னணு ஊடகங்கள் (வானொலி, தொலைக்காட்சி, இணையம்) வழியாக நடைபெறுகிறது. சமூக உறவுகள், மேலாண்மை மற்றும் சமூக மாற்றத்திற்குத் தகவல் தொடர்பு அடிப்படையாக அமைகிறது.
முன்பு மனிதர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்பு தகவல்களைப் பரிமாற சைகையால் பேசினர். பின்பு ஒலி எழுப்பி தன் மனதில் இருந்த செய்திகளைத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அதன் பின்பே சொற்களைப் பயன்படுத்தி பேசத் தொடங்கினர். கம்பராமாயணத்தில் தகவல்தொடர்பியல் குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கம்பராமாயணத்தில் தகவல் தொடர்பியல்
சைகையால் தகவல் கூறல், ஒற்றர், தூதர், தானே உணர்தல், முரசறைந்து தெரிவித்தல், திருமண செய்தியை முரசறைந்து தெரிவித்தல், சில சப்தத்தின் ஒலியால் அறிதல், இசை கருவிகளின் ஒலி மன்னர் வருகை, மங்கல ஆரவாரம், வில் நாண் ஒலி, அணிவகுத்து வருவதை உணர்த்தும் சத்தம், உறங்கும் இராவணனைக் கண்ட அனுமன், குரலால் தகவல் அறிதல், தேர்ச்சுவடு கண்டு தகவல் அறிதல், தேர்த்தடம் தொடர்ந்து தேடிச் செல்லுதல், ஒலியும் வாசனையும் தகவல் அறிவித்தன, தூரத்தில் பரதனின் தோற்றத்தைக் கண்ட குகன், தானே செய்தியைக் கூறல், தகவல்களை அறிந்து வைத்திருத்தல், அரசனானதை அறிவித்தல், இராவணன் -அனுமன் அறிமுகம், அங்கதன் -கும்பகர்ணன் அறிமுகம், ஆரவார ஒலியால் தகவலை அறிதல், ஆரவார ஒலியால் ஆனந்தத்தை அறிவித்தல், தோற்றத்தைப் பார்த்தே தகவல் அறிதல், அன்புடையோர் தந்த தகவல், பொருட்களைப் பார்த்து அவர்களுடையது தான் என்ற தகவலை அறிதல், வீடணன் கூற இராமன் தகவல் அறிதல், கண்களால் தூது -புன்னகையே தகவல், ஒரு தோற்றத்தைப் பார்த்து மற்ற தோற்றத்தினை நினைத்தல், அயோமுகியின் அலறல்.