வன்னிச் சங்கம் கனடா: 'நிலக்கிளி' அ.பாலமனோகரனின் இரு நூல் அறிமுக விழா!
*அறிவிப்பைத் தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும்.
*அறிவிப்பைத் தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும்.
- சரஸ்வதி மஹால் நூல் நிலையம் -
மராட்டி-தமிழ் தொடர்புகள்; வரலாற்றுப்பின்னணி
பண்டைக் காலந்தொட்டே ஆசியக் கண்டத்தின் முக்கிய நிலப்பரப்பாக இந்தியா விளங்கி வருவதால், உலக நாடுகள் பலவும் பல்வேறு நிலைகளில் இந்தியாவுடான உறவுகளைப் பேணுவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளன. குறிப்பாக வணிகம் செய்தல், சமயத்தைப் பரப்புதல், அரசியல், பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்துதல் போன்றவை அவர்களின் முக்கிய நோக்கங்களாக இன்றளவும் உள்ளன. வெளிநாட்டவர்கள் தாக்கத்தில் இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்களும், குறுநில மன்னர்களும் தங்களின் மேலாதிக்கத்தைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒரு மொழிசார் நாகரிகம் பிற மொழிசார் நாகரிகத்திலிருந்து கடன் பெறுவது தொன்றுத்தொட்டு உலக மக்களிடையே காணப்படும் பண்பாட்டுப் பரிமாற்றப் போக்காக அமைகிறது. பொதுவாக வேற்றுநாட்டு அரசர்கள் பிற நாட்டின் மீதான தங்களுடைய ஆதிக்கத்தை, சமயத்தின் வழியாகவும் மொழியின் வழியாகவும் செலுத்திப் பண்பாட்டு மாற்றங்களை நிகழ்த்தினர். இதனை மணவாளன் அவர்கள் பின்வருமாறுக் கூறுகிறார். “கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தே விளைந்த அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டிலும் சமுதாயத்திலும் பல்வேறு பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தின என்று வரலாற்று வல்லுநர்கள் கருதுகின்றனர். வேற்று அரசர்களின் ஆட்சி, வேற்றுச் சமயத்தின் செல்வாக்கு, வேற்று மொழியின் ஆதிக்கம் போன்றன இம்மாற்றங்களை உண்டு பண்ணின” (அ.அ.மணவாளன்:2009:100) இவரின் கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
ஏ தாழ்ந்த யாழ்ப்பாணமே!
தமிழகத்தின் நிலை கண்டு அறிஞர் அண்ணா 'ஏ! தாழ்ந்த தமிழகமே!' என்று மனம் நொந்து நூலெழுதினார். உரைகள் பல ஆற்றினார். மக்களைத் தட்டி எழுப்பினார். விழிப்படைய வைத்தார். என் பிரியத்துக்குரிய யாழ் மண்ணின் அண்மைக்கால நிகழ்வுகள் யாழ்ப்பாணம் தாழ்ந்து விட்டதா என்னும் ஒரு கேள்வியை எழுப்புகின்றன. அல்லது யாழ்ப்பாணத்தின் மேன்மையினை கீழ்மைத்தனமான செய்லகள் சில மூடி மறைத்துவிட்டனவா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.
இலங்கையில் தமிழர்கள் வடகிழக்கில் செறிந்து வாழ்கின்றார்கள். ஏனைய பகுதிகளில் நடக்காத பல செயல்கள் யாழ் மாவட்டத்தில் தற்போது நடக்கின்றன. அவை யாழ் மண்ணின் எதிர்காலம் பற்றிக் கேள்விகளை எழுப்புகின்றன.
அடிக்கடி நடக்கும் வாள்வெட்டுச் சம்பவங்கள்! பணம் சம்பாதிகக் வேண்டுமென்ற வெறியில் நிகழும் முறைகேடான நிகழ்வுகள். அடிக்கடி நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள். அண்மையில் வீட்டுச் சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவர் ஒருவரின் வீட்டினுள் அத்துமீறிப்புகுந்த ஒருவன் அவரது தாலிக்கொடியைப்பறித்தெடுத்துச் சென்றிருக்கின்றான். இளம் அரசியல்வாதிகள் சிலர் நடந்து கொள்ளும் அநாகரிக முறை. பெண்களைப்பற்றிய பகிரங்கமான அவதூறுகள். போலி முகநூற் கணக்குகள் மூலம் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரியிறைத்தல். யாழ் பல்கலைகக்ழக மாணவ்ர்கள பட்டமளிப்பு விழாவைக் களியாட்ட விழாவாக மாற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். இது போதாதென்று யு டியூப் அங்கிள், அன்ரிமாரின் இளம் சமுதாயத்தின் மீதான எதிர்மறையான தாக்கங்கள்.
இலங்கைக்கு எமது குடும்பங்களைப் பார்வையிட அல்லது உல்லாசப்பயணியாக போகும்போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு ஆனால் இலங்கையின் உட்பிரதேசங்களுக்குச் சென்று வசதி குறைந்த மக்களுடன் பழகும்போது அவர்களின் வாழ்வாதாரம் குழந்தைகளின் கல்விநிலை பற்றி அறியும் போது எமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு. இலங்கை போன்ற நாடுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். அந்த இடைவெளியில் எந்தவொரு பாலமும் இதுவரை அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது மனவருத்தம் தரும் விடயம்.
நான் இலங்கை சென்றபோது நகர்ப்புற வசதி கூடிய குடும்பங்களில் வளரும் குழந்தைகள் கற்கும் முன்பள்ளி, நடுத்தரக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் கற்கும் முன்பள்ளிகள், மிகவும் வசதிகுறைந்த பின்தங்கிய பிரதேசங்களில் கற்கும் குழந்தைகளின் முன்பள்ளிகள் என பலதரப்பட்ட முன்பள்ளிகளுக்கு சென்றிருந்தேன்.
இலங்கையில் இலவசக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ஆரம்ப மற்றும் இடைநிலை, உயர்தர பள்ளிகள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன, இது முன்பள்ளிகளுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது எந்த உதவிகளும் வளங்கப்படாத நிலையில் உள்ளது. இது குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளை பெரிதும் பாதிக்கிறது.
உளவியல் நிபுணர்கள் மேற்கொண்ட பல ஆய்வுகளில் குழந்தைகளின் மிக முக்கியமான பருவம் முன்பள்ளி பருவமே என்பதை உணர்த்தினர். இதில் மழலைகளின் உடல் வளர்ச்சி, இயக்க வளர்ச்சி, மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, சமூக வளர்ச்சி ஆகியவை மிக வேகமாக வளர்ச்சி பெறுகின்றன என்பது ஆய்வுகளின் பெறுபேறுகளாகும். மேற்குறித்த விடயங்களை வைத்து முன்பள்ளியின் முக்கியத்தவத்தையும், உலகளாவிய ரீதியில் வியாபித்து உள்ள தன்மையையும் எம்மால் அறிய முடிகிறது.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைத் தமிழ்க்கவிஞருக்கு ஆதரவுக்கரம் நீட்டுதல்'
பாரதி இன்று இருந்திருந்தால் சக கவிஞர் ஆத்மாஜீவின் இன்றைய நோய் வருத்தும், நிதிநெருக்கடி அலைக்கழிக்கும் நிலைக்காக வருந்தி மேற்கண்டவாறு தனது கவிதையின் இறுதிவரியை மாற்றியமைத்திருக்கக்கூடும். கவிஞர் ஆத்மாஜீவ் முகநூற் பக்கம் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் 10 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள், பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவ்வத்துறைகளிலான UNSUNG HEROES அதற்கு மும்மடங்குக்கும் மேல். தற்காலத் தமிழ்க்கவிதையுலகில் அத்தகைய ஒருவர் ஆத்மாஜீவ். உடல் நிலைசார் நெருக்கடியும், நிதிநிலை சார் நெருக்கடியுமாக அவர் சமீபகாலமாக எழுதிவரும் கவிதைகள் மிகவும் துன்பகரமானதாக ஒலிக்கின்றன. கவிதை என்றாலே சோகம் ததும்புவது தானே, தமிழ்க்கவிஞர்களுக்கு உலகாயுதவாழ்வில் இன்னல்களும் இல்லாமையும் உடன்பிறந்த வையாயிற்றே, என்று பலவாறாகப் பேசி நம் மனதை சமாதானப்படுத்திக்கொண்டு கவிஞர் ஆத்மாஜீவின் கவிதைகளைக் கடந்துபோய்விடலாகாது. சமீபகாலமாக தனது ஃபேஸ்புக் வெளியில் அவர் உதவிகேட்டு எழுதும் வரிகளில் ஒரு கவிஞரின் துயரம் பீறிடுகிறது. அதைத் தாண்டி தமிழ்க்கவிதையார்வலர்கள், அமைப்புகள் தனக்கு உதவாதா என்ற ஏக்கம், உதவுவார்கள் என்ற நம்பிக்கை பீறிடுகிறது. தனிநபர்களாக முடிந்த உதவியை மனமுவந்து செய்பவர்கள் இருக்கிறார்கள். எள்ளல் பார்வையோடு அவரை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அவருக்கு உதவி தேவை. உதவ முடிந்தவர்கள் உதவவேண்டும் என்ற வேண்டுகோளோடு மின்னஞ்சல் வழி கேள்விகள் அனுப்பி அதற்கு அவர் அளித்திருக்கும் பதில்களை ஒரு நேர்காணலாக உங்களிடம் பகிர்ந்துள்ளேன். - லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன்: தரமான கவிஞராக உங்களை அறிவேன். நீங்கள் நடத்திய காலக்ரமம் சிற்றிதழ்களைப் படித்திருக்கிறேன். என்னுடைய ஓரிரு கவிதைகளும் அதில் வெளியானதாக நினைவு. இருந்தாலும் உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தாருங்கள். இலக்கியத்தில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
ஆத்மாஜீவ்: இயற்பெயர் வி.சி.இராஜேந்திரன், 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்து 28 ஆண்டுகள் அங்குதான் வளர்ந்தேன் வாழ்ந்தேன். கந்தக நிலத்திலிருந்துதான் எனது கலை இலக்கிய வாழ்க்கை துவங்கி வளர்ந்து அவ்விடத்திலேயே முடிந்தது. 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்ததுதான் எனது கலை சம்பந்தமான துவக்கமாக இருந்தது. நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் தான் எழுத்தார்வம் நாடகத்திலிருந்து சிறுகதைக்கும். கவிதைக்குமாக இடம் பெயர்ந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது, கலீல் ஜிப்ரானின் "முறிந்த சிறகுகள்" தொகுப்புதான் என்னை கவிதை எழுத கவர்ந்திழுத்தது. அந்த வயதில் எனக்கேற்பட்ட பால்ய காதலின் ஈர்ப்பில் அந்த பெண்ணுக்காக வடிவமைத்து கவிதையென நினைத்து எழுதிப் பழகினேன்.
நடந்தாய் வாழி வழுக்கையாறு
ஊர்பலகண்டு ஊற்றின்றிய நீரதை
கார்கால கருமேகம் கனதியாய்
பொழியவும்
கோடை தொடரினும் வற்ற மறுக்கும்
வனிதை!
வட்டுக்கோட்டையதை எட்டிப்பாய்ந்து
சென்று
வாட்டமின்றி அராலி ஆளித்தாயுடன்
ஆரம்பட அணைத்துக்கலக்கும் வரை
நடந்தாய் வாழி வழுக்கையாறு!!
வழுக்கையாறு (வழுக்கியாறு)மாரி காலத்தில் மட்டுமே சல சலத்து ஓடும். வானம் பார்த்த வரண்ட பூமி வாழ் கிராமிய மக்களின் பார்வையில் அது கொள்ளை அழகைக் கொடுத்துப் பாயும். அதன் கருணையில் செழித்துக் கொழிக்கும் நெற் பயிர்கள் நன்றி சொல்லத் தாமும் தலை சாயும். நண்டுகள் ஓடும், மீன்கள் துள்ளும். அது கண்டு நாரைகள், கொக்குகள் திரள் திரளாய்ப் பறந்து அவற்றை கொத்திக் கொண்டோடும். ஆற்றின் இருமருங்கிலும் உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பற்றாதிருந்தால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் கட, கடவெனச் சத்தம் எழுப்பி இறப்பர் குளாய்களினூடாக ஆற்றில் பாயும் வெள்ள நீரை வயல்களுக்குள் பாய்ச்சும். கமக்காரர் முகங்களில் ஒளி வெள்ளம் பளிச்சிடும். சின்னப் பெடியங்கள் அதில் கப்பல் செய்துவிட்டு விளையாடியதும், அரைக்காற் சட்டையுடனோ, கோவணத்துடனோ அல்லது அவையின்றி அம்மணமாகவோ உன்னிப்பாய்ந்து நீச்சல் அடித்து கொட்டம் போட்டதெல்லாம் அந்தக்காலம்.
மாரிப் பருவகால வழுக்கையாறு எந்த மலை உச்சியில் இருந்து உற்பத்தியாகிறது என்று மட்டும் கேட்டு விடாதீர்கள். வழுக்கி ஆற்றுக்கு நீரைக்கொண்டுவந்த பல பாதைகள் அதாவது வெள்ள வாய்க்கால்கள் இன்று பல பிரதான வீதிகளாகி விட்டன. பாதி வழுக்கி ஆறு காணாமலே போய்விட்டது.
இன்று பலர் நினைத்துக்கொண்டிருப்பது வழுக்கி ஆறு அம்பனைச் சந்தியில் ஆரம்பிக்கின்றது என்றே. வலிகாமத்தின் மிகப்பெரிய ஒரு பரப்பளவை வழுக்கி ஆற்றுப் படுக்கை தன் வட்டத்துக்குள் கொண்டு வருகிறது. ஏராளமான வாய்க்கால்கள், சிறு குளங்கள் மூலமாக தண்ணீர் வழுக்கியாற்றில் இருந்திருக்கிறது.
யாழ்க்குடாநாட்டின் குறிப்பாக வலிகாமத்தின் உயரமான பகுதிகளை கூர்ந்து அவதானித்தால் தெல்லிப்பழையின் வடமேற்காக மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிழான் பகுதிகள் வலிகாமத்தின் மிக உயரமான பகுதிகளாக இருந்திருக்கின்றன. அந்தப்பகுதிகளில் இருந்து தாழ்வான ஏழாலை பகுதிகளை நோக்கி ஓடிய வெள்ளத்தை கட்டுப்படுத்த கட்டுவன் பகுதியில் ஒரு அணையை கட்டியிருக்கிறார்கள். அந்த அணை இன்று ஒரு பிரதான வீதியாகி தெல்லிப்பழை-வறுத்தலைவிழான்- கட்டுவன் வீதியாகியிருக்கின்றது. “கட்டுவன்” என்ற பெயரே “கட்டு” “வான் கட்டு” என்பதில் இருந்து மருவி வந்ததாக கூறப்படுகிறது. குறித்த அணைக்கட்டு இந்த வீதியின் இன்றைய கிறிஸ்தவ சுடுகாடு இருக்கும் பகுதிக்கு அண்மித்ததாக இருந்ததாக கருதப்படுகிறது.
தாமரைச்செல்வியின் 'செங்காரிப்பசு' சிறுகதைத்தொகுப்பின் முதற் கதை 'யாரொடு நோவோம்'. தொகுப்பின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. வாணி என்னும் பெண்ணின் வாழ்வை மையமாகக்கொண்ட கதை. யுத்தத்தின் இறுதிக்காலத்தில் மக்கள் அடைந்த துயரின் குறியீடாக அமைந்த கதை. யுத்தத்தின் இறுயில் வாணிக்கு ஏற்பட்ட நிலைதான் ஆயிரக்கணக்கான பலருக்கும் ஏற்பட்டது. தொடர்ச்சியான படையினரின் ஷெல்லடி, தொடர்ச்சியான மக்களின் இடப்பெயர்வு, இடப்பெயர்வுகள் ஏற்படுத்திய வலி, எறிகணைத்தாக்குல்களினால் ஏற்பட்ட படுகாயங்கள், இழந்த உடலுறுப்புகள் , குடும்ப உறவுகள் பிரிக்கப்படல், (சில சமயங்கள் நிரந்தரமாகவே அமைந்து விடுகின்றன) இவ்விதமாக மக்கள் மேல் யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புகளைக் கதை விபரிக்கின்றது.
அவளது வாழ்க்கை வறுமை மிக்கது. அவளது தந்தை விதானையாரின் காணியில் குடிசை போட்டு வாழ்பவன். அவ்விதம் வாழ்ந்துகொண்டே விதானையாரின் வயலையும் பார்த்துக்கொள்கின்றான். வேணியும் குடும்பச்சூழல் காரணமாகப் படிப்பை எட்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லத்தொடங்குகின்றாள். இவ்விதமாக வாழ்ந்தவள் வாழ்க்கையில் செல்வராசா குறுக்கிடுகின்றான். விதானையாரின் வயலில் வேலை செய்ய வருபவன் மீது இவளுக்குக் காதல் முகிழ்க்கின்றது. திருமணம் செய்து வாழத்தொடங்குகின்றாள். குழந்தை பிறக்கின்றது. போர்ச்சூழல் செல்வராசாவையும் பிரித்து விடுகின்றது. அவன் காணாமல் போகின்றான். தேடித்தேடி வாடிப்போகின்றாள் வாணி.
தொடரும் போர் பரந்தன் தொடக்கம் முள்ளி வாய்க்கால் வரை அவளைத் துரத்தி அடிக்கின்றது. உறவுகளைக் குழந்தையுட்படப் பிரிந்து விடுகின்றாள். தாக்குதல்களுக்குள்ளாகி , ஆஸ்பத்திரியில் காலம் கழித்து, ஒரு கையிழந்த நிலையில் , மீண்டும் அவள் தாயையும், குழந்தையையும் கண்டடைகின்றாள். தாயும் சிறிது காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள். இவ்விதம் செல்லும் வாழ்க்கையில் திரவியம் எதிர்ப்படுகின்றான். முன்னாட் போராளியான அவனும் உறவுகளைப் போரில் இழந்தவன். கணவன் காணாமல் போய் விட்டான். இனியும் அவன் உயிருடன் இருக்கும் வாய்ப்பில்லை என்னும் நிலையில், நினைப்பில் கைக்குழ்ந்தையுடன் , ஒரு கையுடன வாழ்க்கைப்போராட்டத்தை எதிர்கொள்ளும் நிலையில் இருந்த வேணி திரவியத்துடன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்கின்றாள். ஒரு குழந்தையும் பிறக்கின்றது.
“நேற்றைய செய்தி, நாளை வரலாறாகிவிடும். செய்திகளே படைப்பிலக்கியமாக உருமாறும்போது, அதனை வாசிக்கும் வாசகர்களுக்கு கிட்டும் வாசிப்பு அனுபவத்தில், தங்களையும் இனம்காணத்தூண்டும். சில வேளைகளில் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்யவும் வழிகாண்பிக்கும். “ இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர், எழுத்தாளர் வி. எஸ். கணநாதன் அவர்கள் வெளியிட்டிருந்த சத்தியம் மீறியபோது என்ற கதைத்தொகுதி பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருந்தபோது குறிப்பிட்டிருந்தேன். தற்போது வி. எஸ். கணநாதன், நிம்மதியைத் தேடி என்ற மற்றும் ஒரு கதைத்தொகுப்பினை வரவாக்கியுள்ளார்.
கிழக்கிலங்கை மகுடம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலுக்கான முகப்போவியத்தை மெல்பன் எழுத்தாளரும், ஓவியருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் வரைந்துள்ளார்.
“ இன்று சிறுகதைகளின் வடிவ உத்திகள் பல்வேறு தளங்களில் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், கணநாதன் தனது கதைசொல்லும் உத்தியாக வாசகர்களுடன் உரையாடுவது போன்ற வடிவத்தை தன் எழுத்து நடையாக மாற்றியுள்ளார் “ என்று இந்நூலை பதிப்பித்திருக்கும் மகுடம் வி. மைக்கல் கொலின் குறிப்பிட்டுள்ளார்.
நிம்மதியைத் தேடி நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் வரலாறுகளையும் செய்திகளையும் பின்னணியாகக் கொண்டிருப்பவை.
கணநாதன், தனது வாழ்நாளில் சந்தித்த அனுபவங்களை, படைப்பிலக்கியமாக்கி வருபவர். ஆனால், அந்த அனுபவங்களை சந்திக்கும்போது, பின்னாளில், அவற்றை படைப்பிலக்கியமாக்கவேண்டும் என நினைத்திருப்பாரோ தெரியாது.
முத்திப் போன வயதில்
பக்கம் வர விடாமல்
பாதைகளுக்கு முள்வேலிகள் போட்டு
தெருக் கூத்து ஆடும்
பாவப்பட்ட இரவு
பேரிசைச்சலுடன் ஓசை எழுப்பி
பாம்பாய் படம் எடுத்து
சூரியனைத் கொத்தித் தின்ன
விசம் கலந்த புன்னகையோடு
உதட்டைப் பிதிக்கி
முகத்தில் அப்பிப் பூசும்
மனிதனின் மாமிசங்கள்தான் நீ.
உன் உள்ளத்தி எரியும் தீயினால்
காலத்தை மறைத்து
பொய்களைச் சோடித்து
வதந்திகளைப் பரப்பி
உண்மையை ஒழித்து மிதித்து
நடந்து பார்க்க வேணுமென
நீ நடித்தால் குருட்டு வெளவால் போல்
பறந்து திரிந்து
எங்கேயோ ஓர் இடத்தில்
மின் கம்பத்தில் கருகிக் கிடப்பாய்
ஓவியம் _ AI
அ
அம்மா இறந்த பிறகான இந்த ஒரு வருடத்தில் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. எந்தவிதமான நெருக்கடிகளிலும் என்னைத் தடம் புரளாமல் வழிநடத்திவந்த என் அப்பா அம்மாவின் இறப்பிற்குப் பிறகு தடம் புரண்டு போனார். அந்த நாட்களில் என்னை விட்டு அவர் வெகுதூரம் போய்விட்டது போலிருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு வரைக்கும் எனக்கு அப்பாவாக மட்டும் இல்லாமல் நல்ல நண்பரைப் போலவும் இருந்தவர்தான். படிப்பறிவு இல்லாமல் பட்டறிவைக் கொண்டே தனக்குண்டான மரியாதையையும் மதிப்பையும் எங்கள் சின்ன கிராமத்தில் தேடிக்கொண்டவர். அவருக்கிருந்த விசாலமான பார்வையினாலேயே என்னைத் தன்னியல்பாக சுயக்கட்டுப்பாடுடன் இருக்கச் செய்தாரே அன்றி ஒருநாளும் ஒரு சிறிய அறிவுரைகூடக் கூறியதில்லை. முக்கியமாக என்னை எனது சுதந்திரத்திற்கு விரோதமாக நடத்தி அவர் தன் கட்டுப்பாட்டிற்குள் என்னை வைத்திருக்க முயன்றதில்லை.
என் முதிராத, வெகுளித்தனமான பேச்சை அவர் எப்போதும் ரசித்துக் கேட்பார். என்னுடைய ஆதங்கத்தை, கோபத்தை, புறணிகளை எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு என் புரிதல்களின் பின்னே உள்ள விடுபாடுகளை, பார்வைக் கோணல்களை அவருக்கேயுரிய கேலி, நகைச்சுவைகளோடு எனக்குப் புரியவைப்பார்.
திருமணமானதும் மிகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் வேலையை, இலட்சங்களில் உள்ள சம்பளத்தை மன அழுத்தம் என்று உதறிவிட்டு விவசாயம் செய்ய வருகிறேன் என்று சொன்னதும் ஒரு வார்த்தை மறுத்துப் பேசாமல் தானே உழைத்து வாங்கிய எங்கள் குடும்பத்தின் ஒரே சொத்தான 15 ஏக்கர் விவசாய நிலத்தையும் ஊருக்குள் வாடகைக்கு விட்டிருந்த நான்கு வீடுகளையும் என் பெயருக்கு மாற்றி எழுதித் தந்துவிட்டார். நாங்கள் எல்லோரும் குடியிருந்த ஒரே ஒரு பெரிய வீட்டை மட்டும் – இந்த வீடு எங்களுடைய பூர்வீக இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது - அவர் பெயரிலேயே வைத்துக்கொண்டார். இப்படியாக எங்களுடைய உறவு எந்தவித ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சரிவிகிதமான புரிதலுடன் நிலைத்தன்மையில் சென்று கொண்டிருந்தது.
இதற்கிடையில் அம்மாவின் எதிர்பாராத இறப்பு எங்கள் குடும்பத்தை உலுக்கி எடுத்துவிட்டது. அதன் பிறகு அப்பாவுடைய இருப்பே எனக்குப் பெரும் தொந்தரவளிக்கக் கூடியதாக மாறியது. அந்த சமயத்தில் அப்பாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் எங்கள் உறவில் கசப்பை உண்டாக்கி, அவர் மீது நான் வைத்திருந்த மதிப்பு மரியாதையைக் குலைத்து ஆற்றுவெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மண்குதிரை போலாக்கியது. எங்களுடைய தந்தை, மகன் உறவு அவ்வளவு தூரம் மாசு படிந்து போகும் என்பதை இப்போதும் என்னால் நம்பமுடியவில்லை.
அவராக என் வழிக்கு வந்துவிடுவார் என்ற எனது நம்பிக்கை நாளடைவில் தகர்ந்துவிட்டது. அவர் மீது ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாவற்றையும் அவருடைய இறப்பு இப்போது மிகுவிக்கிறதே அன்றி குறைக்கவில்லை. ஒருவேளை அம்மாதான் அவரைக் கையாளச் சரியான ஆளோ என்று ஆதங்கமாக இருக்கிறது இப்போது. இன்று அப்பாவுக்குப் பதினாறாவது நாள் காரியம். அக்கா அழுது கொண்டேயிருக்கிறாள். தேற்ற முடியாத இழப்பு அவளுக்கு. துக்கம் விசாரிக்க வருகிறவர்களும் என்னிடம் கடமைக்கு விசாரித்துவிட்டு அவளை நினைத்துப் பரிதாபப்படுவது போல் எனக்குத் தோன்றும். அவர்கள் எல்லோருக்கும் தெரியும் செத்துப்போனவர் எனது அப்பா என்கிற உறவுக்கு வெறும் பெயராக மட்டுமே நடமாடியவர் என்பது. இத்தனை இழவு விசாரிப்புகளும் என்னைப் பொறுத்தளவில் எப்போதோ உயிரற்றுப் போன ஒரு பெயரழிந்த மனிதருக்குத்தான்.
அவுஸ்திரேலியா - விக்ரோரியா மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு V C E உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் தோற்றி, மிகச்சிறந்த புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்கத்தில், அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், தமிழ்மொழிச்சாதனை விழாவை எதிர்வரும் 30 ஆம் திகதி ( 30-03-2025 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்துகிறது.
இந்நிகழ்ச்சி அன்றைய தினம் , மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் ( 700, Waverley Road, Glen Waverley Vic 3150 ) மாலை 5-00 மணிக்கு நடைபெறும்.
மெல்பனில் இம்மாணவர்களுக்கான பாடசாலைகளை நடத்திவரும் அமைப்புகளைச்சேர்ந்த தலைவர்களும், ஆசிரியர்களும் மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைப்பர்.சங்கத்தின் தலைவரும் எழுத்தாளரும், ஓவியருமான திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவில், திருமதி சாந்தி சந்திரகுமார், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். மாணவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வையடுத்து, சித்தியடைந்த சில மாணவர்களின் உரைகளும் இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள கலைநிகழ்ச்சியில், கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தான் பிறந்த இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பொப்பிசைத் துறையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பொப்பிசைப்பிதா நித்தி கனகரத்தினம் அவர்கள் பாராட்டி கெளரவிக்கப்படவிருக்கிறார்.
அமரர் க்ரியா ராமகிருஷ்ணனின் தமிழ்ப் பதிப்பகத்துறைக்கான பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. க்ரியா என்றால் தரம் என்னும்சொல் நினைவுக்கு வரும். தேர்தெடுத்த தரமான தமிழ் நூல்களை, ஏனைய மொழிகளில் வெளியான தமிழ் மொழிபெயர்ப்புகளைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீட்டுடன் , க்ரியா பதிப்பகத்தின் அகராதித்துறைக்கான பங்களிப்பும் முக்கியத்துவம் மிக்கது. நூல்வெளியீடு, அகராதித் துறைப் பங்களிப்பு இவற்றுடன் இன்னுமொரு முக்கிய பங்களிப்புக்காகவும் க்ரியா ராமகிருஷ்ணன் நினைவு கூரப்படுகின்றார். நினைவு கூரப்பட வேண்டும். அது ரோஜா முத்தையா நூலகத்துகான அவரது பங்களிப்பு.
தனியார் உடமையான ரோஜா முத்தையா நூலகத்தைச் சிகாகோ பல்கலைக்கழகம் ஆய்வு நூலகமாக மாற்றியதில் முக்கிய பங்கினை வகித்தவர்களில் ஒருவர் க்ரிய ராமகிருஷ்ணன். சிகாகோ பலகலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் ஜேம்ஸ் நை தமிழகம் வந்திருந்தபோது, மொழி அறக்கட்டளையின் தலைவராகவிருந்தவர் க்ரிய ராமகிருஷ்ணன். அப்போது தமிழ் மொழி அறக்கட்டளையுடன் தொடர்பிலிருந்த பேராசிரியர் ஏ.கே.ராமனுஜனின் பரிந்துரையின் பேரில் , பேராசிரியர் ஜேம்ஸ் நை க்ரியா ராமகிருஷ்ணனை வந்து சந்திக்கின்றார். அவரை அப்போது தமிழகத்தில் நூலகத்துறையில் முக்கிய பங்காற்றிக்கொண்டிருந்த ப.சங்கரலிங்கத்தைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்தார் க்ரியா ராமகிருஷ்ணன். 'அந்தச்சந்திப்பே சிகாகோ பல்கலைக்கழகம் மொழி அறக்கட்டளையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தை நிறுவ வேண்டும் என்ற முடிவுக்குக் காரணமாக அமைந்தது' என இந்து தமிழ் இணையத்தில் வெளியான க்ரியா ராமகிருஷ்ணனின் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.
முதல் நாளிரவு நேரம் பிந்திப் படுக்கைக்குச் சென்றதால், அடுத்த நாள் ஆறுதலாக விழித்தெழுவது என்பதுதான் திட்டம். ஆனால், ரொறன்ரோ நேரத்தைவிட ஒரு மணி நேரம் முந்தியதாக இருந்த Aruba நேரம் என்னை ஏழு மணிக்கு முன்பாகவே விழிக்கச்செய்து விட்டது. ‘மீராவின் தம்பி’, ‘சிறகடித்துப் பறப்போம்; என்ற என் இரண்டு சிறுவர் நூல்கள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வீடியோவைத் தனுசன் அனுப்பியிருந்தார். நேரத்துடன் எழும்பியதால் அதனை உடனேயே பார்க்க நேரமிருந்தது. அதனூடாக முன்பின் தெரியாத இரு ஆசிரியர்கள் என் நூல்கள் பற்றிப் பார்வையைப் பகிர்ந்ததைக் கேட்கமுடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை முழுமையாகப் பார்த்துமுடித்ததும் அது பற்றி ஒரு குறிப்பெழுதவேண்டும் போலிருந்தது. உடனடியாக எழுதி, தனுசனுக்கு அனுப்பிச் சரிபார்த்துவிட்டு, வீரகேசரி வாரஇதழுக்கு அனுப்பினேன்.
எங்களின் சுற்றுலாவை Arubaஇன் பிரபல்யமான தேசிய பூங்காவான Arikok National Parkஇல் ஆரம்பிப்பது என முடிவெடுத்திருந்தபடி, மகள் எழுந்ததும் அதனைச் செயலாக்கினோம். Parkஇன் வரவேற்புப் பகுதியில் இருந்தோர் Four-wheel drive இல்லாமல் Parkஐ முழுமையாகப் பார்க்கமுடியாதென்றனர். சரி பார்க்கக்கூடியதைப் பார்ப்போமென முதலில் அங்கிருந்த குகைகளுக்குச் சென்றோம். 310 அடி அகலமான Fontein Cave இயற்கையின் ஓர் அதிசயமாக நின்றிருந்தது. மேலிருந்து தொங்கும் icicles போன்ற அமைப்புக்களும், கீழிருந்து கூம்பு வடிவில் மேலெழுந்து நிற்கும் அமைப்புக்களும் (stalagmites & stalactites) நிறைந்திருந்த அந்தக் குகையின் உட்புறத்தில் வளர்ந்திருந்த அல்காக்கள் மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் அதனை வர்ணமிட்டிருந்தன. அத்துடன் குகையில் கூரையில் அழகான ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. இருப்பினும் குகைக்குள் இருந்த அதிகமான வெக்கையும் ஈரப்பதனும் நீண்ட நேரம் அதற்குள் நிற்கவிடாமல் வியர்த்து விறுவிறுக்கச் செய்தது.
உ. வே.சா என்றால் - உழைப்பு , வேகம் ,சாதனை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் தமிழ் மொழி யின் ஏற்றத்தைப் பறைசாற்ற இலங்கியங்கள் குவிந்திருக்கின்றன என்று - மேடை களில் முழங்குகிறோம். கருத் துக்களாய் கட்டுரைகளை வரைந்து குவி க்கின்றோம். பல்கலைக்கழகங்களில் பலவித ஆராய்ச்சிகள் செய்து நூல்களாய் வெளியிடுகின்றோம். இப்படி யெல்லாம் நாங்கள் செய்வதற்கு ஆதாரமாய் ஆணிவேராய் இருப் பவரை நினைத் துப் பார்க்க வேண்டாமா ? ஆம் .... கட்டாயம் நினைத்துப் பார்க்கவே வேண்டும். அந்தப் பேராளு மைதான் உ.வே.சா என்னும் தமிழ் த் தாத்தா டாக்டர் மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயர் அவர்கள் ஆவார்.
உ.வே.சா என்னும் மூன்று எழுத்து தமிழ் வரலாற்றில் பதிந்து விட்ட மந்திரச் சொல்லாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்வார்க்கு ஆதார சுருதியாய் அமையும் மூல மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை மறந்தால் எங்கள் தமிழன்னை கண்ணீர் வடிப்பாள். எங்கள் தமிழன்னை எங்களைத் தனது பிள்ளைகளென்றே எண்ணமாட்டாள்.
அந்த மந்திரச் சொல்லை மறப்பார் தமிழர் என்னும் நிலையில் இருக்கவே மாட்டார்கள். அப்படி அந்த மூன்றெழு த்து மந்திரம் பெற்ற முக்கியத்துவம்தான் என்ன? அந்த மந்திரமாய் விளங்கும் டாக்டர் சாமிநாத ஐயர் என்னதான் செய்துவிட்டார் ? அவர் மறைந்து விட்டார் என்று சொல்லுகிறார். ஆனால் அவருக்கு மறைவேயில்லை. அவரென் றுமே வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பது தான் நிதர்சனமாகும். மறைந்தவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் புதிராக இருக்கிறதா ? இன்று நாம் படிக்கின்ற பழந்தமிழ் இலக்கியங்களில் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஒவ்வொரு பழந்தமிழ் இலக்கியங்களையும் தொட்டு வாசிக்கும் வேளை தமிழ்த் தாத்தாவும் உயிர்ப்புடன்தான் உலவுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா !
ஒல்லாந்தின் முக்கிய துறைமுக நகரமான அம்ஸ்டர்டாம், எங்கள் படகின் இறுதித் தரிப்பாக இருந்தது. ஏற்கனவே 150 வருடங்கள் இலங்கைத்தீவை ஆண்டவர்கள் என்பதால் அவர்களை பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டுள்ளேன். எஇலங்கையை விட்டு அவுஸ்திரேலிய வந்தபின் இலங்கையிலிருந்து வெளியேறிய ஒல்லாந்து கலப்பினத்தவர்கள் அதாவது இலங்கையில் அவர்களை ‘பேர்கர் ‘என்போம் அவர்கள் பலர் எனது மிருக வைத்திய நிலையத்திற்கு செல்லப்பிராணிகளை கொண்டு வருவார்கள். எனது கிளினிக்கில் வேலை செய்த நேர்ஸ் ‘கலி’ தனது பூட்டன் இலங்கையில் முதலாவது சேவையர் ஜெனரலாக இருந்தவர் எனவும் – அதற்கான ஆதாரங்களை காட்டினாள்.
இப்படிப் பல தொடர்புகள் ஒல்லாந்துடன் நாங்கள் கொண்டதால் ஒல்லாந்தை மேலும் அறிவோம். அம்ஸ்டர்டாமில் நான்கு நாட்கள் தங்குவதற்கு பதிவு செய்திருந்தேன். ஆனால், இரண்டு முக்கிய விடயங்கள் நான் பார்க்க நினைத்தவை ; அனி ஃபிராங் மியூசியம் , வான்கோ மியூசியம். ஆனால், குறைந்தது இரண்டு கிழமைக்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும் என பின்னால் புரிந்துகொண்டேன். எனது படகில் பலர் முன்னேற்பாடாக பதிவு செய்திருந்ததைப் பார்க்க எனக்கு அவர்கள் மேல் பொறாமையாக இருந்தது.
கோலோனில் இருந்து ரைன் நதி வழியாக புறப்பட்டு எங்கள் படகு மிகவும் பிசியான செயற்கையாக வெட்டப்பட்ட 72 கிலோ மீட்டர் (Amsterdam–Rhine Canal) வழியாக அம்ஸ்டர்டாம் வந்தது. இந்த கால்வாயை, ஒரு வருடத்திற்கு ஆயிரம் கப்பல்கள் பாவிப்பதாக சொன்னார்கள்.
லெ.லந்தாவு, யூ.ரூமர் என்னுமிருவர் எழுதிய ,சார்பியல் த்த்துவத்தின் முக்கிய அம்சமான சார்புத்தன்மையைப்பற்றிய , மிகவும் எளிமையாகச் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும வகையில் எழுதப்பட்டுள்ள நூல் 'சார்பியல் தத்துவம் என்பது என்ன?' என்னும் இந்நூல். இதனைத் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் ரா.கிருஷ்னையா.
சார்பியல் தத்துவம் சிறப்புச் சார்பியல் தத்துவம், பொதுச் சார்பியல் தத்துவம், வெளி, நேரமாம் சார்பானவை, காலவெளி ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதது, புவியீர்ப்பு என்பது காலவெளியில் பொருளொன்றின் திணிவு ஏற்படுத்தும் கேத்திரகணித விளைவு போன்ற சார்பியல் தத்துவத்தின் முக்கிய அம்சங்களை இந்நூல் கவனத்தில் எடுக்காதது துரதிருஷ்ட்டமானது. அவற்றையும் உள்ளடக்கியிருந்தால் இந்நூல் இன்னும் சிறப்புடையதாகவிருந்திருக்கும்.
இருந்தாலும் மேலோட்டமாக அதே சமயம் எளிமையாகச் சார்பியல் தத்துவம் கூறும் சார்புத்தன்மையைப்பற்றி நூல் சாதாரண பொதுமக்களுக்கு விபரிக்கின்றது. வாசகர்கள் சாதாரணப் பொதுமக்கள் என்பதால் நூலாசிரியர்கள் சார்பியல் தத்துவத்தின் அடிப்படை அம்சங்களான, மேலே நான் குறிப்பிட்டவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.
கடந்த ஒன்பது மாதங்களாக விண்வெளி ஆய்வுக்கூடத்தில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் எலன் மாஸ்கின் 'ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்' ((SpaceX Dragon) பத்திரமாகப் பூமி திரும்பினர். திட்டமிடாத வகையில் திரும்ப வேண்டிய போயிங்கின் விண்வெளிக் கப்பலில் ஏற்பட்ட ஹீலியம் ஒழுக்கு காரணமாகத் தொடர்ந்தும் விண்வெளி ஆய்வுக்கூடத்திலேயே அவர்கள் இருவரும் தங்க வேண்டியேற்பட்டது. பத்திரமாக பூமி திரும்பும் இருவரையும் , அவர்களுடன் கூடத் திரும்பும் மேலுமிரு விண்வெளி வீரர்களையும் வருக வருக என வரவேற்கின்றோம்.
இத்தருணத்தில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதிய வரவேற்புக் கவிதையையும் பகிர்ந்து கொள்கின்றோம்:
நல்வரவு சுனிதா வில்லியம்ஸ்
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
வருக சுனிதா.
பைன் மரக்காடென கூந்தல் உயர
வெளியெங்கும் பறந்தும் முக்குளித்தும்
கடல்கன்னியாய் மிதக்க எங்கு கற்றாய்?
சுனிதா, அங்கு அருகிருக்கும்
தேவர் உலகத்து இணையம் கிடைக்கிறதா?
*
மாட்டியதாய் சொன்னார்கள்
என்னாச்சடி சுனிதா?
தேடி விண்ணுக்கும் நீளுமோ
மனிதன் விதிக்கரங்கள்?
Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345
கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ்மொழிப் பங்களிப்பு - குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா & திருக்குறள் உரை!
கலைஞர் மு.கருணாநிதியின் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா. திருக்குறள் உரை & சங்கத்தமிழ்த் தொகுப்புகளை அவரது முக்கிய தமிழ்மொழிப்பங்களிப்புகளாக நான் கருதுகின்றேன். இவற்றுடன் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் எழுதிய நாடகம், அதனையொட்டி வெளியான பூம்புகார் திரைப்படம் இவையும் முக்கியமானவை. பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை வசனத்துக்குத் திருப்பியதில் கலைஞரின் வசனங்கள் முக்கியமானவை. பராசக்தி, மனோஹரா, ராஜாராணி & பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவர் ஆட்சியில் அமைத்த வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அமைத்த வள்ளுவர் சிலை இவையும் முக்கியமான பங்களிப்புகள். இவை தவிர அவரது பல படைப்புகள் புனைகதைகளாக, அபுனைவுகளாக, நாடகங்களாக & திரைக்கதைகளாக வெளிவந்துள்ளன. ரோமாபுரிப்பாண்டியன், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் - சங்கர் ஆகியவை முக்கியமான வரலாற்றுப் புனைவுகள். பல பாகங்களாக் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி சுயசரிதையும் முக்கியமான தொகுப்புகள்.
கலைஞரின் 'தொல்காப்பியப் பூங்கா' , குறளோவியம், திருக்குறள் உரை ஆகியவை தற்போது இணையத்தில் கிடைக்கின்றன.
கோலோன், ஜெர்மனியின் முக்கிய நகரமாகவும், எங்கள் படகு தரிக்கும் இறுதி ஜெர்மன் நகராகவும் இருந்தது. நாங்கள் படகை விட்டு இறங்கியபோது மழை பிடித்துக்கொண்டது . குடையுடனே எங்கள் நடை இருந்தது.
சிறு வயதிலிருந்தபோது எனக்கு அடிக்கடி காய்ச்சல் வரும் என்பதால் எங்கள் வீட்டில் எப்பொழுதும் ஒடிக்கொலோன் இருக்கும். தலையிடித்தால் துணியில் ஒடிக்கொலோன் தேய்த்து இரண்டு பக்க நெற்றியிலும் அம்மா வைப்பார். அதேபோல் இருமல் , நெஞ்சில் சளி வந்தால் நெஞ்சில் துணி நனைத்துப் பூசுவது வழக்கம் . பிற்காலத்தில் சட்டை கொலரில் எனது நண்பர்கள் ஒடிக்கொலோன் போடுவதை கண்டிருந்தேன் . அல்ககோலுடன் சில தைலங்கள் கொண்டது இந்த ஒடிக்கலோன் . பிற்காலத்தில் பல முக்கிய வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்டு வணிக்பொருளாகி, ஆரம்பத்தில் ஐரோப்பாவில் கொள்ளை நோய்யைக் (Bubonic plaque) குணப்படுத்த இதைக் குடித்தார்கள் என அறிந்தேன் . இப்படியாக வீடெங்கும் இருக்கும் ஒடிக்கொலோனை ஆரம்பத்தில் உருவாக்கிய இடம் ரைன் நதிக்கரையில் உள்ள கோலோன் நகரம் .
கோலோன் நகரில் இறங்கியதும் நதியின் மேல் உள்ள பாலத்தில் அடிக்கடி ரெயில் செல்வது தெரிந்தது. ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேலாக ரயில்கள் இந்தப் பாலத்தில் செல்லும் என்றார்கள். என்னைக் கவர்ந்த முக்கிய இடமாக நகரின் மத்தியில, அக்கால ரோமர்களால் போடப்பட்ட கற்பாதை இருந்தது. அந்த ஒரு பகுதியை இன்னமும் பாதுகாத்து வருகிறார்கள். இந்த நகரம் 2000 வருடங்கள் வரலாறு (AD 50) கொண்டது. ரோமர்கள் மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து ஐரோப்பாவின் பல பகுதிகளையும் இப்படியான கற்பாதைளால் ஒன்றாக இணைத்திருந்தார்கள்.
ஒன்பது
நீங்கள் நம்பமாட்டீர்கள். நான் கூறுகிறேன். சிறந்த மனிதத்துவம்
என்பது உங்களிடமும் மற்றவர்களிடமும் கேள்வி எழுப்புவதுதான். - சோக்ரடீஸ் -சோக்ரடீசின் மெய்யியல் விசாரணை சிறைகூடத்தில் எவ்வாறு இருந்தது என்பதனை ‘சிந்தனைக் களமாகிய சிறைக்கூடம்’ என்ற அடிப்படையில் அலசியுள்ளார். மரண தண்டனைக் கைதியாக முப்பது நாள்கள் சோக்ரடீஸ் சிறையில் வாழ்ந்தார். சிறையில் நடந்தவைகளை திரைகாவியம் போல நூலாசிரியர் காட்சிபடுத்தியுள்ளார். சோக்ரடீஸ் அவரது நண்பன் கிரீட்டோ ஆகியோருக்கிடையிலான உரையாடல் நாடகப்பாணியில் தரப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் இன் பேச்சு முழுவதும் மெய்யியல் விசாரணையே வியாபித்திருந்தது. நாடும் சட்டமும், ஆன்மாவும் மரணமும், நல்ல மரணம், தெய்வத்திற்கு நேர்த்திக் கடன். நீட்சே, சடமும் அகமும், ஒர்பிக்வாதிகளின் மரணக் கோட்பாடு, நப்ஸ்-சுயம், ரூஹ், சித்திலெப்பை: ரூஹ் போன்ற மினிதலைப்புகளில் சோக்ரடீஸ் இன் மெய்யியலை ஒப்பாய்வு செய்துள்ளார். சோக்ரடீஸ் நஞ்சை உட்கொள்ள முன்னும் பின்னும் நிகழ்ந்தவைகளை ஒரு திரைப்படத்தின் இறுதி காட்சிபோலவே நூலாசிரியர் சித்திரித்துள்ளார். மாதிரிக்கு சில வரிகள் வருமாறு,
நாங்கள் அனைவரும் அதுவரை அழுகையைக் கட்டுப்படுத்தியே அங்கு நின்றுகொண்டிருந்தோம். அவர் நஞ்சுக் கோப்பையை கையில் ஏந்தியதையும் அதைக் குடித்ததையும் பார்த்தபோது, எங்களால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இத்தனை பேர் அழுதுகொண்டிருக்கும் போது, சோக்ரடீஸ் மட்டும் அழாமல், அமைதியாக இருந்தார்……. சோக்ரடீஸ் தனது கால்கள் கனத்து மரக்கும்வரை நடந்து கொண்டிருந்தார். பிறகு அவர் தரையில் படுத்துக்கொண்டார். இப்போது காவலாளி அவருடைய பாதத்தையும் கால்களையும் பரிசோதித்தான். பாதத்தில் கிள்ளிவிட்டு வலி தெரிகின்றதா என்று அவன் கேட்டான். வலி தெரியவில்லை என்று சோக்ரடீஸ் பதில் சொன்னார். கால்களில் இருந்து உடலின் மேற்பாகம்வரை உடலைத் தொட்டுப் பரிசோதித்தான். உடம்பு குளிரடைந்து விறைத்துப் போயிருந்தது. பிறகு சோக்ரடீஸ் தாமே தமது உடலைத் தொட்டுப் பார்த்து விட்டு நஞ்சு இதயத்தை போய்ச் சேர்ந்ததும் உயிர் பிரிந்துவிடும். என்றார். முடிவைத் தீர்மானிக்கும் விதியின் கைகள் தொலைவில் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. அடிவயிறுவரை இப்போது குளிர்படர்ந்திருந்தது. அவர் தமது கடைசி வார்த்தைகளைக் கூறுவதற்குத் தயாரானார்…….
“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும் “ “ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும். சம்பளம் இல்லாத வேலை செய்பவர்களாக அவர்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. இயந்திரப் பயன்பாடு பெண்களுடைய உணர்வுகளை மழுங்கடித்து விடக் கூடாது “ என்று அமெரிக்க வாழ் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் பெண்கள் படைப்புகள் பற்றிய கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில் குறிப்பிட்டார் ( இவரின் டைரி, அமெரிக்காவில் சாதி ஆகிய நூல்கள் முக்கியமானவை. இரண்டும் பாரதி புத்தகாலயம் வெளியீடு )
இந்த ஆண்டில் திருப்பூர் சக்தி விருது விழா ஞாயிறன்று நடைபெற்றது. 25 எழுத்தாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் அமெரிகாவிலிருந்து இரண்டு பேரும் இந்த விருதுகளை பெற்றார்கள்
சுமார் 400 எழுத்தாளர்களுக்கு இந்த விருது கடந்த 21 ஆண்டுகளாக வழங்கப்பட்டது பற்றி தூரிகை சின்னராஜ் அவர்கள் குறிப்பிட்டு பேசினார்
மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம் பேசுகிறபோது ” சாகித்ய அகடமி முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையானவர்களை ஜீரிகளாகப் போடுகிறார்கள். ஜீரிகள் தங்களுக்கு தேவையானவர்களை விருதுக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் தான் 35 மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதி எழுதி இருக்கிறேன். ஆனால் சாகித்ய அகாடமி என்னைப் போன்றவர்களுக்கு அங்கீகாரம் தருவதில்லை. மூத்த படைப்பாளர்களை நிராகரிக்கிறார்கள் “ என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்
என் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு, 2020 ஏப்ரலில் Costa Ricaவுக்குப் போகலாமென எங்கள் நான்குபேருக்குமான விமானச் சீட்டுகளையும் மூத்த மகள் கொள்ளவனவு செய்திருந்தா. ஆனால், அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகச் சொல்லிக்கொள்ளாமல் வந்த கொரோனா எங்களின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. சரி, அறுபத்தைந்தாவது பிறந்தநாளுக்காவது அங்கு போகவேண்டுமென நினைத்தோம். ஆனால், அதைவிட மேலான சந்தோஷங்களைத் தருகிறேன் என வாழ்க்கை முன்வந்தது. கர்ப்பமடைந்திருக்கும் மூத்த மகளும், மருத்துவப் பயிற்சியில் இருக்கும் சின்ன மகளும் கொஞ்சக் காலத்துக்குப் பயணம்செய்ய முடியாதென்றானபோது, தானாவது எங்காவது என்னைக் கூட்டிச்செல்வது வேண்டுமென மற்ற மகள் விரும்பினா.
அதன்படி ஒரே பிறந்தநாளைக் கொண்ட நாங்கள் இருவரும் மட்டும் பயணம் செல்வதென முடிவானது. எங்கே செல்லலாம் என்றபோது பயணத்துக்காகச் செலவழிக்கும் நேரம் குறுகியதாகவும், போகுமிடம் உறையவைக்கும் ரொறன்ரோவின் காலநிலைக்கு எதிரான காலநிலையைக் கொண்டதாகவும் இருக்கவேண்டுமென நினைத்தோம். அதற்குப் பொருத்தமானதாக இடமாக Aruba இருந்தது. சில தேடல்களின் பின் பயணசீட்டுக்களையும் மகள் வாங்கிவிட்டா. இருந்தாலும், அதுவும் சாத்தியப்படுமா என்ற ஐயத்தைத் தலைகீழாக விழுந்துபோன விமானமும், ரத்துச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த விமான சேவைகளும் வலுவாக ஏற்படுத்திக்கொண்டிருந்தன.
ஆனாலும், முடிவில் Aruba here we come எனப் புறப்பட முடிந்திருந்தது. ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டிருந்தாலும்கூட, சேர வேண்டிய நேரத்துக்கு எங்களைக் கொண்டுபோய் சேர்ந்திருந்தார் அந்த விமானி. எங்களின் விமானம் முழுவதும் Aruba சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்தது என்றால், விமான நிலையமோ சுற்றுலாப் பயணிகளால் நிரம்பிவழிந்தது. குடிவரவுக்குச் செல்வதற்கான வரிசை முடிவில்லாத வளைவுகளுடன் மிக நீண்டிருந்தது. போக்குவரத்து நெரிசலிருக்கும் நேரங்களில் Don Valley Parkway இல் இருப்பதுபோல, அந்த வரிசையும் அசைவற்று நின்றிருந்தது. Skip the line? என்ற பதாகைகளுடன் உத்தியோகபூர்வமான உடைகளில் அங்குமிங்குமாக மாறிமாறி சிலர் நடந்துகொண்டிருந்தனர். விசாரித்தபோது, நாங்கள் நிற்குமிடத்திலிருந்து குடிவரவுப் பிரிவுக்குச் செல்வதற்கு 1 ½ மணி நேரத்துக்குக் கிட்டவாகச் செல்லுமென்றும், ஒருவருக்கு US$155 செலுத்தினால், காத்திருக்கத் தேவையில்லை என்றும் சொன்னார்கள். வித்தியாசமான வகையில் லஞ்சம் வாங்கும் ஊழலென எனக்கு அந்த நாட்டின் மீது சற்றுக் கோபம் வந்தது. மகளின் அந்தக் காத்திருப்பு நேரத்துக்கு அந்தக் காசு worthஆ என்று கேட்டேன். அதற்கு அவ, விடுமுறைக்காகத்தானே வந்திருக்கிறோம், எந்த அவசரமும் இல்லை என்றா. முடிவில் அடுத்த 20 நிமிடத்தில் விமானநிலையத்தை விட்டு வெளியேறிவிட்டோம். அதை அறிந்தால் US$155 கொடுத்து முன்சென்றவர்கள் கவலைப்படுவார்களா என்று யோசித்தேன் (ஆனால் பயணத்தின்முடிவில் அப்படிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது விளங்கியது, அங்கு வந்திருந்தவர்களில் பலர் அத்தனை பணம்படைத்தவர்கள்தான் இருந்தார்கள்).
- வில்லியம் மன்னரது 14 மீட்டர் சிலை -
நதி பயணத்தில் மிற்றன்பேர்க் என்ற சிறிய நகரம் தரிப்பாக இருந்தது . இதுவும் பவேரியா பகுதியில் உள்ள பழைய நகரம் ஒன்றாகும் இங்கு குடியேற்றம் ரோமர்களது காலத்திற்கு முந்தியதென்றாலும் அதனது எச்சங்கள் இங்கு இல்லை. மத்திய காலத்தின் எச்சங்களே தற்பொழுது காணப்படுகிறது.
நதியின் கரையில் இருப்பதால் எப்போதும் மக்கள் போக்குவரத்து வணிகம் இங்கு செழித்திருந்ததன் விளைவாக நகரம் முழுவதும் அழகிய மரக் கட்டிடங்கள் , கற்கள் பதித்த தெருக்கள் இருந்தன. அத்துடன் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்பு இடிந்த கோட்டை ஒரு மலையில் உச்சியிலிருந்தது . தற்பொழுது அது மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது . நாங்கள் அதில் ஏறாது அண்ணாந்து பார்த்ததோடு திரும்பிவிட்டோம்.
எங்களுக்கு வண்ண வண்ணமாக கிளாஸ் வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்குச் சென்றோம் . அதில் பலர் பல நேரம் செழித்தார்கள். மருந்துகளை அடைக்கும் பல கண்ணாடி போத்தல்கள் அங்கிருந்தது. ஜேர்மனி, கிளாஸ் தயாரிக்கும் தொழிலில் முக்கிய நாடாகப் பல காலம் இருக்கிறது. ஆனால், தற்பொழுது ரஸ்யாவிடமிருந்து கிடைக்கும் எரிவாயு தட்டுப்பாட்டால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன என அறிந்தேன்.
மில்றன்பேர்க் நகரத்தின் பாதையில் நடந்தபோது பல நிர்வாண ஓவியங்கள் கொண்ட ஒரு கட்டிடம் இருந்து . அதை அவுஸ்திரேலியாவில் உள்ளதுபோல் செக்ஸ் டொய்ஸ் (Sex toys) விற்கும் கடையாக இருக்குமோ என ஆவலுடன் எட்டிப்பார்த்தால் அது ஒரு ஓவியக் கண்காட்சி இடமாகத் தெரிந்தது. அதேபோல் ஒரு மருந்தகம் முன்பாக இரண்டு எலும்புக்கூடுகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன .
ஐரோப்பாவில் இருநூறு வருடங்கள் முன்பாக நடந்த நகரங்களின் வளர்ச்சியில் மூச்சுத் திணறி விலகி வந்த பல ஓவிய, சிற்ப, கட்டிடக் கலைஞர்கள் இப்பகுதியில் வந்ததால் இந்த நகரங்களில் தங்களது கைவண்ணத்தைக் காட்ட முடிந்தது என்று சொல்லப்பட்டது. இந்தப் பகுதிகளுக்கு போகும் பாதைக்கு ரோமான்ரிக் ரோட் (Romantic Road) எனப் பெயரிடப்பட்டது.
வசிகரன் எழுதிய ‘நோவிலும் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுதி ஆக்காட்டி வெளியீடாக வந்துள்ளது. வசிகரன் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் சூழலியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கின்றார். தொண்டைமானாற்றையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பகைப்புலமாகக் கொண்டமைந்த மரபுரிமைச் சின்னங்கள் தொடர்பான 'கரும்பவாளி' என்ற ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். அவர் எழுதிய ‘நோவிலும் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுதி போருக்குப் பிந்திய தலைமுறையினர் வாழ்வைப் பார்க்கும் கோணத்தைப் பேசுவதாக அமைந்துள்ளது.
அன்பு, காதல், இரக்கம், தனிமை, ஏமாற்றம், துயரம் முதலான அகவுணர்வுகள் விரவிய வகையில் இக்கவிதைத்தொகுதி அமைந்துள்ளது. கவிதையில் அவர் எடுத்தாளும் சொற்கள் மரபுவழியிலிருந்து வேறுபட்டு விரிவதைக் காணலாம்.
வியக்க வைக்கும் வானவில்லாகவும் பூக்களாகவும் அன்பின் நேசம் இருந்தது. இவ்வாறு துருத்திக் கொண்டுநிற்கும் அன்பின் திரள் பேரழிவின் முன்னான நகர்வாக இருக்கிறது. அன்பிருந்தால் அதன் பின்னர் ஓர் அழிவும் இருக்கும் என்பதை கவிஞர் தன் வாழ்வனுபவங்களில் இருந்து கூறவருகின்றார்.
'நினைக்காத கள்ளு' என்ற கவிதையில் அன்புக்குரியவளைக் காணச் செல்லும் தெரு நீண்டதாக இருக்கிறது. அவளின் ஞாபகங்கள் எவ்வளவு நீண்டனவோ அதேபோல என்று பாடுகிறார். ஆனால்
'கள்ளைப்போல் புளித்து
நம் காதல் மணம் வீசும்'
என்று பொதுப்புத்தியில் அர்த்தப்படுத்தப்படுவதை இங்கு மாறாகச் சொல்கிறார். விருப்பமில்லாத செயல் காதலர்களுக்கு இங்கு விருப்பமானதாக மாறுகிறது.