“சட்டியை உடைக்காமல் பேய் வெளியேறப் போவதில்லை” - மீண்டும் வெடித்தது அமெரிக்க - ஈரான் போர்! - ஜோதிகுமார் -

1
“வீட்டை விட்டு அகலும் பேய், வீட்டு சட்டியையும் உடைக்காமல் அகலாது” என்பது சிங்களக் கிராமியப் பழமொழி. இதனையே உக்ரைனிய-ஈரானிய போரில் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. சிறப்பாக, ஈரானிய போரில் அமெரிக்காவின், உலக ஆதிக்கம் இப்படியான ஒரு முடிவை எட்டித்தான் முற்று பெறும் என்றால், அது, அப்படியே விதி வசம் பூண்டதாய் இருக்கட்டும்.
ஈரானின் மீது, இரண்டாவது தடவையாக, இன்று கோர தாக்குதல்களை தொடங்கி உள்ள அமெரிக்கா, ஈரானில், கொமெய்னியின், இறுதி கிரியைகளுக்காக நின்றிருந்த 200 லட்சம் மக்களின் கோபங்களை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. பெண்கள், சவ ஊர்வலத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் பொறுத்து, ஊடகங்கள், ட்ரம்பிடம் வினவிய போது, அது போலி செய்தி வகைப்பட்டது (Fake News)) என்று கூறிவிட்டார் மனிதர். இதனுடன் நிறுத்தாமல், தனது முதலாவது தாக்குதலை விட, தனது இரண்டாம் தாக்குதலை, தீவிரப்படுத்தினார் ட்ரம்ப்.
அவரது, வழமையான “ஈரானிய நாகரிகத்தை கற்காலத்துக்கு அனுப்பி வைப்பேன்” என்ற கூற்று உண்மையாகி விடுமோ என்று பலரும் பயந்திருந்த போது, ஈரானிய பதில் தாக்குதல்களும் அனேகமாக துவங்கி விட்டன. தொடர்ந்து, போர் நிறுத்தத்தில் இருந்து தான் வாபஸ் பெறுவதாகவும் இன்று ஈரான் அறிவித்து முடித்து விட்டது.
பஹ்ரேன், குவைத், கட்டார், சவுதி ஆகிய நாடுகளின், அமெரிக்க தளங்களின் மீது, அதி உக்கிரமான தாக்குதல்களை நடத்திய ஈரான், இவ்வகையில் புதிதாய் இன்று ஜோர்டனையும் (பிந்திய செய்திகளின் பிரகாரம், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது) உள்ளடக்கி கொண்டுள்ளது.


* கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
இருபதாம் மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக இலக்கியப் பரப்பில், ஒடுக்குமுறைக்கு எதிரான கவிதை மொழி என்பது வெறும் சொற்களின் சேர்க்கையாக இருக்கவில்லை. அது வரலாற்றின் சிதைவுகளுக்குள் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் அசைக்க முடியாத கூட்டு நனவிலியாக (Collective Unconscious) விளங்கியது. லத்தீன் அமெரிக்காவின் பப்லோ நெருடா, கியூபாவின் நிக்கோலஸ் கியென், ஆப்பிரிக்காவின் லியோபோல்ட் செங்கோர் மற்றும் நுகுகி வா தியாங்கோ போன்ற ஆளுமைகளின் வரிசையில், மத்திய கிழக்கின் ஆகப் பெரும் தத்துவார்த்தக் குரலாக ஒலிப்பவர் பலஸ்தீனத்தின் தேசியக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆவார்.
நகரம் 1916 ஆம் ஆண்டின் முதல் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் நகரமாக உள்ளது. சுற்றி வர திராச்சை தோட்டங்கள் சுற்றியிருக்கும் நிலப்பரப்பில், ஒரு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த நகர், கோட்டைச் சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.

இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து முன்னாள் ஆசிரியரும், தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.




அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும். அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.




வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரின் (FeTNA) மாநாடு, ரொறன்ரோவில் நிகழ்ந்திருந்தபோது, அதில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அதற்காக மொழிபெயர்ப்பு வேலைக்கூடாக என் சினேகிதிகளில் ஒருவராக மாறியிருந்த வசந்திக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது நிகழ்ந்து, 13 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நியூஜேர்சியில் நிகழ்ந்திருந்த அவர்களின் 39வது மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. வழமைபோல இந்த மாநாடும் ஜூலை இரண்டாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் நிகழ்ந்திருந்தது.



நீலகிரி படகர்கள் குறிஞ்சி வாழ்வியலை இடையாறாது பின்பற்றி வருபவர்கள். அவர்களை நீலகிரியில் வாழ்கின்ற குறிஞ்சி ஆயர்கள் எனலாம். ‘நாக்கு பெட்டா’ என்று வரையறுத்து வாழ்கின்ற நீலகிரியின் இவர்தம் புழங்குவெளி சிறப்பான கட்டமைப்பினை உடையது. இயற்கை சான்றது. தகவமைப்பின் நுட்பங்களை உட்செறித்தது. காலநிலைக்கேற்பக் காப்பு நிலையைத் தரித்தது. கடும் குளிரினையும், அடர் பனியினையும், அடை மழையினையும் கொண்ட நீலகிரியில் வாழ்வதற்குப் புறப் பாதுகாப்பினைத் தாண்டி, உணர்வுநிலை நீடும் அகப் பாதுகாப்பும் அவசியம். இது, சுற்றத்தால் அமைவது. அவ்வகையில் ‘மதிலு’, ‘அக்க பக்கா’ எனும் படகர்களின் புறம் சார்ந்த தொல்கூறுகளையும், ‘ஏகித்து கட்டோது’ எனும் அகம்சார்ந்த கூறினையும் இக்கட்டுரை ஆய்கிறது. இவை மூன்றும் சங்கக் கூறுகளோடு நெருங்கிய தொடர்புடையது நோக்கத்தகுந்தவை.

மலையக தமிழ் சமூகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது சில பாடசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களிடம் நாடக தயாரிப்பு நெறிமுறைகளும் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாடகத்தில் தயாப்பு முகாமைத்துவ விடயங்களை உட்புகுத்தி காத்திரமான நாடகத்தினூடாக சிறந்த அரங்க நிர்வாகிகளை வெளிக்கொணர முடியும்.
ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









