பதிவுகள் முகப்பு

வேனில் கொண்டாட்டம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கனடாச் சங்கத்தின் ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்! - தகவல்: சுதர்சன் (அருண்மொழிவர்மன்) -

விவரங்கள்
-சுதர்சன் (அருண்மொழிவர்மன்) -
நிகழ்வுகள்
26 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கணேஷின் கவிச்சிதறல்

விவரங்கள்
- கணேஷ் -
கவிதை
26 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வினாக்கள் ?

உனது குற்றங்களை மன்னித்து                     
உன்னை ஏற்றுக் கொண்டவரை
குற்றம் சுமத்தி
தண்டிப்பது  என்ன​ நியாயம் ?
யேசுகள் என்றும்
தண்டிக்கபடுவது ஏனோ ?

சிவன் பன்றிக்குட்டிகளுக்கு
தாய்பன்றியாகி பால் கொடுத்தது ,
இராவணன்  தவவேடம் தாங்கி
சீதையை சிறை வைத்தது ,
அன்னை தெரேசா  கருவுற்று
தாயாகாமல் இருக்கலாம்
கருணையுற்று அனைவருக்கும் அன்னை  ஆனார் .
யேசுநாதர்  மக்களுக்காக​ சிலுவை சுமந்தார் .
உறவுகள் ....துர்பிரயோகம் !
கருணை ?
அன்பு ?
சுயநலம் . துரோகம் ...ஏன் , ஏன் ...?

மேலும் படிக்க ...

பாப் மார்லி: 'உங்கள் உரிமைகளுக்காக எழுந்து நில்லுங்கள்' & 'கிட்டார்க் கடவுள்' எரிக் கிளாப்டன் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரெகே (Reggae) இசையென்றதும் முதலில் நினைவுக்கு வரும் பாடகர் பாப் மார்லி (Bob Marley) . அறுபதுகளின் இறுதியில் ஜமைக்காவில் உருவான இசை வடிவம் இது. தனித்துவமான 'ரிதம்' கொண்ட இசை. சம உரிமை, சமூக நீதி, அடக்குமுறைகளுக்கெதிராக ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகக் குரல் கொடுத்தல் போன்றவை ரெகே இசையின் சமுதாயப் பிரக்ஞையினை வெளிப்படுத்தினாலும் காதல், ஆன்மீகம், உறவுகள் பற்றியுமிருக்கும்.

மேலும் படிக்க ...

கியூபிசக் கோட்பாட்டை முன்வைத்து ‘என்ன சொல்லப் போகிறாய்?’ - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
24 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: வன்னி நாவல் பற்றிய எனது பார்வை! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
நூல் அறிமுகம்
24 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- 18 - 06 - 2015 ஆம் ஆண்டில் இந்த விமர்சனம் என்னால் எழுதப்பட்டது. தன்னுடைய " வன்னி " நாவலை திரு. கே. எஸ் . சுதாகர் மூலமாக எனக்கு அனுப்பி , விமர்சனம் எழுதுமாறு எம்மை விட்டுப் பிரிந்த ஆளுமை பெரியவர் திரு. கதிர் பாலசிங்கம் தொலைபேசி வாயிலாகக் கேட்டுக் கொண்டார். அவரின் அன்பான வேண்டுகோளினை ஏற்று எழுதியதே இந்த விமர்சனம் என்று அவர் இல்லா நிலை யில் இரங்கல் செய்தியாய் பகிர்ந்து கொள்ளுகின்றேன். அவரின் பிரிவினால் வாடும் பிள்ளைகள் , மருமக்கள் , பேரர்கள் , உற்றார் , உறவினர் அனைவருக்கும் ஆறுதலையும் , தேறுதலையும் , தெரிவித்தும் கொள்ளுகின்றேன். அவரின் நூல்களை அனைவரும் படிக்கும் வண்ணம் அவரின் பிள்ளைகள் செய்வதே அவரின் ஆன்ம ஈடேற்றத்துக்குச் சாந்தியை அளிக்கும்.  -


வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.  பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையா னது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்று விடும். பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால்  'வன்னி '  நாவல் அப்படியானதன்று. தமிழன் உள்ளகாலம் வரை பேசப்படும் நாவலாக இருக்கும் என் பது எனது எண்ணமாகும்.

    மஹாவம்சத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். அது வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் சுயபுராணக் கதையாகும். அதில் பல புனைவுகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் ஒருப க்கச் சார்பானதாகும்.  வன்னி நாவலையும் தமிழரின் மஹாவம்சமாகவே நான் பார்க்கின்றேன். ஆனால் பழைய மஹாவ ம்சத்துக்கும் இதற்கும் பாரியவேறுபாடு. வன்னி நாவல் உண்மையை சொல்லி நிற்கிறது. ஊத்தைகளையும் காட்டுகிறது. உலுத்தர்களையும் காட்டுகிறது. எல்லாவற்றையும் தோலுரித்துக் காட்டுகிறது. இது இந்த நாவலின் சிறப்பு எனலாம்.

       நாவலின் முக்கிய பாத்திரம் மேஜர் சிவகாமி. அந்தச் சிவகாமியே எம்மை எல்லாம் காடு, மேடு,போர்க்களம் , கொழும்பு , என்று கூட்டிச்செல்வதோடு  குடும்பம் , மகிழ்ச்சி , இன்பம் , துன்பம் ,பிரிவு , வஞ்சகம் , சூழ்ச்சி , நட்பு ,    நம்பிக்கைத் துரோகம் , மிருகத்தனம் , மனிதத்தன்மை , இவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லுகின்றார்.

மேலும் படிக்க ...

20ம் ஆண்டு திருப்பூர் சக்தி விருது விழா! - தகவல்: சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்
24 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பெண் எழுத்தாளர்களுக்கான இவ்வாண்டின் திருப்பூர் சக்தி விருது  23/6/24 ஞாயிறு மாலை  மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூரில் நடைபெற்றது  

தலைமை: கே பி கே பாலசுப்ரமணியம் ( முத்தமிழ்ச்சங்கம்). அறிமுக உரைகள் : சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி ரவி, தூரிகை சின்னராஜ். சிறப்பு விருந்தினர்: சமூக சேவகி  ஆர். ராஜம்மாள் அவர்கள். முன்னிலை: சத்ருக்கன், ராஜா மற்றும் மக்கள் மாமன்ற நிர்வாகிகள்.

"இந்திய சமூகத்தில் மன நோய் அதிகரித்து வருகிறது. மன அழுத்தங்களுடன் பலர் வாழ்கிறார்கள். அவர்களின் பாரங்களை இறக்கி வைக்கும் இடமாக மன நல ஆலோசகர்கள் அதிகரித்து வருகிறார்கள். குடும்பம் என்பது பாரத்தை இறக்கி வைக்கக் கூடியது, அவ்வகை குடும்பச்சூழல்களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வீடு என்பது பாதுகாப்பானது. மன அழுத்தங்களிலிருந்து விடுபட இலக்கியம் சிறந்த கருவி.. வாசிப்பும் மஅழுத்தங்களிலிருந்து  நம்மைப் பாதுக்கும் கலங்கரை விளக்கம் "  என்று சமூக சேவகி ராஜம்மாள் விழாவில் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க ...

லண்டனில் ‘சுவடுகள்’இ ‘பூப்பும் பறிப்பும்’ வெளியீடு! - மீனாள் நித்தியானந்தன், லண்டன் -

விவரங்கள்
- மீனாள் நித்தியானந்தன், லண்டன் -
நிகழ்வுகள்
19 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  

லண்டனில் எஸ். அகஸ்தியரின் ‘சுவடுகள்’ நாவலும் அவரின்  புதல்வி நவஜோதி ஜோகரட்னத்தின் ‘பூப்பும் பறிப்பும்’ சிறுகதைத் தொகுப்பும்; கடந்த வாரம் (8.6.2024) ஹரோ ஐயப்பன் மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

    அகஸ்தியரின் ‘சுவடுகள்’ நாவலுக்கு தலைமை தாங்கிப் பேசிய எழுத்தாளர் ந. சுசீந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில்: ’எஸ். அகஸ்தியர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஜேர்மனியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இலக்கிய மகாநாட்டில் அகஸ்தியர் படைப்புகள் பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கை நடாத்தியதில் நான் பெருமைப்படுகின்றேன். அவரது நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுகள் என்பன ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் அவருக்கு தனி இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஈழத்து முற்போக்கு எழுத்தாளரான மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அரசன்பே சரித்திரத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஆய்வு நூல் அவரது ஆய்வுத் திறனை வெளிப்படுத்தி நிற்கின்றது. எளிமையாகப் பழகவல்ல அகஸ்தியர் அவர்கள் வாழ்நாளின் இறுதிக் காலங்கள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த இலக்கியப் பெருமகன் ஆவார். அவர் மறைந்த இருபத்தியொன்பது ஆண்டுகள் கழித்து இந்நூல் அவரது புதல்வி நவஜோதி ஜோகரட்னம் வெளியிடுவது பாராட்டுக்குரியது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க ...

ஜூன் 21 கனடாவில் தேசிய பழங்குடி மக்கள் தினக்கொண்டாட்டம் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
18 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தேசிய பழங்குடி மக்கள் தினம் என்பது கனடாவின் முதற்குடி மக்கள், இன்யூட் மற்றும் மெடிஸ் பழங்குடியின மக்கள் ஆகியோரின் கலாச்சாரங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு நாளாக யூன் மாதம் 21 ஆம் திகதி இருக்கின்றது. கனடாவின் கவர்னர் ஜெனரல் ரோமியோ லெப்லாங்க் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், 1996 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

கனடிய பழங்குடி மக்கள் பாரம்பரியமாக தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு நாள் என்பது உட்பட பல காரணங்களுக்காக இந்த திகதி சட்டரீதியான விடுமுறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாள் 2001 ஆம் ஆண்டு முதல் வடமேற்குப் பிரதேசங்களில் ஒரு சட்டப்பூர்வ பிராந்திய விடுமுறையாகவும், 2017 ஆம் ஆண்டு முதல் யூகோன் பகுதியில் இருந்தும் கொண்டாடப்படுகிறது. கனடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிகழ்வை தேசிய பழங்குடி மக்கள் தினம் என்று மறுபெயரிடுவதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும் ஏனைய பகுதிகளுக்குச் சட்டரீதியான விடுமுறை கொடுக்கப்படவில்லை.

இந்த நாள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது. இலங்கையில் சிறுபாண்மை இனத்தவரான ஈழத்தமிழர்கள் யுத்தம் என்ற போர்வையில் சொந்த நிலங்களைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட போது, அவர்கள் அனாதைகளாக போவதற்கு இடமின்றித் தவித்த போது, கனடியப் பழங்குடி மக்கள்தான் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டித் தங்கள் நிலத்தில் எங்களைக் குடியிருக்க வைத்தார்கள். இன்று கனடியத் தமிழர்கள் அரசியல் பொருளாதாரத் துறைகளில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அன்று அவர்கள் பெருந்தன்மையோடு எங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரவேற்றதேயாகும்.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: தமிழ்நாடு கலை, இலக்கிய, சமூக, அரசியல் ஆய்வாளர் தோழர் சி.மகேந்திரன் ! இளம் அரசியல் தலைவராக ‘ இந்தியா டுடே ‘ இதழ் தேர்வுசெய்த சமூகப்போராளி ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
18 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அசோக மன்னரால், இலங்கைக்கு அரசமரக் கன்றுடன் அனுப்பிவைக்கப்பட்ட அவரது புதல்வி சங்கமித்திரை பற்றி வரலாற்றில் அறிந்திருப்பீர்கள். நல்லெண்ணத்தின் அடிப்படையில் அன்று அன்பையும் அகிம்சையையும் இலங்கைக்கு போதிக்க வந்த சங்கமித்திரை பற்றி, இந்தப்பதிவில் நான் ஏன் நினைவூட்டுகின்றேன் ? காரணம் இன்றி காரியம் இல்லை. இலங்கையில் இன முரண்பாடு தோன்றி, அது ஆயுதப்போராட்ட வடிவமெடுத்தபோது நெருக்கடிகள் உக்கிரமடைந்தன. 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையின் வடமராட்சிப் பிரதேசத்தில் விமானங்கள் குண்டுகளை பொழிந்து அப்பாவிப்பொது மக்களின் உயிர்களை பலியெடுத்தன. இந்தத் தாக்குதல் சம்பவத்தை Operation Liberation என்று அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர். அவ்வேளையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பர்களாக இந்திய விமானங்கள் இலங்கை அரசின் அனுமதியின்றி வடமராட்சி வான்பரப்பில் பிரவேசித்து உணவுப்பொட்டலங்களை வீசியது.

இதனைக்கண்ட அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவும், பிரதமர் ரணசிங்க பிரேமதாசவும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் மட்டுமன்றி அரசும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்தியாவின் இந்தத் திடீர் நடவடிக்கையையடுத்து வடமராட்சித்தாக்குதல் நிறுத்தப்பட்டு, ஜே. ஆரின். அரசு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அதனால் பிறந்த குழந்தைதான் இலங்கை – இந்திய ஒப்பந்தம். அதனால், 13 ஆவது திருத்தச்சட்டம் என்ற மற்றும் ஒரு குழந்தையும் பிறந்தது. எனினும் இந்தக்குழந்தைகள் வளர்ச்சியடையவில்லை. பிறந்த இடத்திலேயே நிற்கிறது.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவிலக்கியம் படைக்கும் தேவகி கருணாகரன் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
18 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீர்கொழும்பில் முன்னர் தமிழர்கள் வாழ்ந்தார்களா..? என்று இன்றும் கேட்கும் தமிழர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். இதுபற்றி ஏற்கனவே நான் தொகுத்து வெளியிட்ட நெய்தல் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன். எனது இந்த முதல் சந்திப்பு தொடரில் இடம்பெறும் எழுத்தாளர் தேவகி கருணாகரனின் பெரிய தந்தையார் சண்முகம் கதிர்வேலு விஜயரத்தினம் ( எஸ். கே. விஜயரத்தினம் ) அவர்கள் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரின் நகரபிதாவாக ( மேயர் ) இருந்தார் எனச்சொன்னால், இக்கால தலைமுறைத் தமிழர்கள் நம்புவார்களா..? அவர் நீர்கொழும்பு கடற்கரை வீதியிலமைந்திருந்த இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தலைவராக இருந்தபோதுதான் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின் போது எனக்கும் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்து , விவேகானந்தா வித்தியாலயம் அன்று தொடங்கியது. அவரது தம்பி எஸ். கே. சண்முகமும் புதல்வன் ஜெயம் விஜயரத்தினமும் நீர்கொழும்பு மாநகர சபையில் அந்த மூன்றாம் வட்டாரத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்கள். 32 தமிழ்க்குழந்தைகளுடன் ஆரம்பமான அந்த வித்தியாலயம்தான் பின்னாளில் அதன் ஸ்தாபகர் விஜயரத்தினம் அவர்களின் பெயரில் வடமேற்கில் இன்றும் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாகத் திகழுகின்றது.

மேலும் படிக்க ...

பெண் எழுத்தாளர்களுக்கான இவ்வாண்டின் சக்தி விருது - தகவல்: சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்
18 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

பெண் எழுத்தாளர்களுக்கான இவ்வாண்டின் சக்தி விருது  தங்களின் இலக்கியப் பணிக்காக வழங்கும் விழா பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.தங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். சக்தி விருது 2024 ( 20ம் ஆண்டு )

மேலும் படிக்க ...

தி ரோலிங் ஸ்டோன்ஸ்ஸின் 'பூதம் அல்லது சாத்தான் மீதான இரக்கம்' (Sympathy For The Devil) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
Administrator
கலை
17 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனக்குப் பிடித்த மேனாட்டுப் பாடகர்களில் ஒருவர் மிக ஜகர் (Mike Jagger) . 'ரொக்' இசையில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'தி ரோலிங் ஸ்டோன்ஸ்' குழுவை உருவாக்கியர்களில் ஒருவர். அவரது தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் முக்கிய பாடல்களில் ஒன்று 'Sympathy For The Devil' (சாத்தான் அல்லது பூதம் மீதான இரக்கம்).  தி ரோலிங் ஸ்டோன்ஸின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று இப்பாடல். 1968இல் லண்டனின் பார்வையாளர்களின் ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.

பாடகர் தன்னைச் சாத்தானாக உருவகித்துப் பாடும் பாடலின் வரிகளை உணர்ந்து இரசிக்கையில் பாடலும், பாடகரின் நடிப்பும், குரலும், நடன அசைவுகளும் சுவைக்கும். பாடலின் தொடக்கத்தில் 'Please allow me to introduce myself' (தயவுகூர்ந்து என்னை அறிமுகப்படுத்த விடு) என்று தன்னை அறிமுகப்படுத்தும் பூதம்  (பாடகர் குரலினூடு) தொடர்ந்து வரும் தான் வேறுயாருமில்லை பூதமே என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர வைக்கின்றது.

மேலும் படிக்க ...

அப்பா! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.  இந்நாளில் எந்தையும் தாயும் மகிழ்ந்து  குலாவி இருந்த மண்ணின் நினைவுகள் எழுகின்றன. எந்தை, தாயுடன்  கழித்த இனிய தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.

என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா (நடராஜா நவரத்தினம் - நில அளவையாளராகப் பணி புரிந்த காலத்தில்  அவரைப் பலர் 'Tall Nava' என்று  அறிந்திருக்கின்றார்கள்).  தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக 'ஷெல்ஃப்' ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணன், பி.ஜி வூட்ஹவுஸ்,  டி.இ.லாரண்ஸ் ('லாரண்ஸ் ஒஃப் அராபியா' (Lawrence of Arabia), டால்ஸ்டாய் என்று பலரின் நூல்கள் அவரது 'புக் ஷெல்வ்'வில் இருந்தன.

கல்கி, குமுதம், விகடன், ராணி, ராணி முத்து, பொன்மலர், பால்கன், சுதந்திரன்ம், ஈழநாடு, தினமணி, The Hidnu, கலைமகள், மஞ்சரி, பொம்மை, பேசும்படம், தினமணி, தினமணிக்கதிர் என்று தமிழில் வெளியான வெகுசன சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளால் வீடு நிறைந்து கிடந்தது. ஒரு தடவையாவது வாசி என்று அவர் கூறியது இல்லை. சூழல் எம்மை வாசிக்க வைத்தது. போட்டி போட்டு வாசித்தோம்.

ராஜாஜியின் வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன், பாரதியார் பாடல்கள் அடங்கிய முழுத்தொகுப்பு, புலியூர்க்கேசிகனின் சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்கள் இவை எப்போதும் வீட்டில் இருக்க வேண்டிய நூல்கள் என்று வாங்கி வைத்தார். ஆரம்பத்திலேயே இவற்றுடனான தொடர்பு ஏற்படக் காரணம் அப்பாவின் இப்போக்குத்தான்.  அப்பாவுக்கு இராமாயணம், மகாபாரதத்தின் மீதிருந்த ஈடுபாடு எதுவரை இருந்ததென்றால் எங்கள் அனைவருக்கும் பெயர்கள் வைக்கும் அளவுக்கு இருந்தது. கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி, தேவகி இவை அனைத்தும் அந்த ஈடுபாட்டின் விளைவுதான்.

மேலும் படிக்க ...

வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா 2024! - தகவல்: வென்சிலாஸ் அனுரா -

விவரங்கள்
- தகவல்: வென்சிலாஸ் அனுரா, நிறுவனர் வென்மேரி அறக்கட்டளை -
நிகழ்வுகள்
15 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

வென்மேரி அறக்கட்டளையின் ஆற்றல்மிகு ஆளுமைகளுக்கான விருது வழங்கும் விழா 2024 கனடா.   - தகவல்: வென்சிலாஸ் அனுரா, நிறுவனர் வென்மேரி அறக்கட்டளை -

வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா கனடாவில் Audley Recreation center 1955 Audley Rd, Ajax, ON L1Z 1V6 என்னும் இடத்தில் 11/08/2024 அன்று பி.ப. 2 மணிக்கு நடைபெற உள்ளது. தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

கனடா வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது சர்வதேச விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ளது. தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய ஆளுமைகளை இனங்கண்டு அவர்களுக்கு மதிப்பளித்து, பாராட்டி, கெளரவித்து ஏனையோர்க்கு முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாக வரலாற்றில் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே வென்மேரி அறக்கட்டளை. மேற்படி அறக்கட்டளையின் முதலாவது விருது வழங்கும் விழா கடந்த ஆண்டு யாழ் . நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் அறக்கட்டளையின் தலைவர் வென்சிலாஸ் அனுரா தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டுக்கான இரண்டாவது சர்வதேச விருது வழங்கும் விழா பிரான்ஸில் நாட்டில் நடைபெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பதினொராம் திகதி 2024ம் ஆண்டுக்கான மூன்றாவது சர்வதேச விருது வழங்கும் விழா கனடாவில் பிற்பகல் 2.௦௦ மணிக்கு Audley Recreation center Ajax என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம் : தாமரைச்செல்வியின் சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு கதைத் தொகுப்பு! - தாருணி பாலேசன், பிறிஸ்பேன், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- தாருணி பாலேசன், பிறிஸ்பேன், அவுஸ்திரேலியா -
நூல் அறிமுகம்
15 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்துலகில் சிகரம் தொட்டு பொன்விழாவைக் கொண்டாடிய திருமதி. தாமரைச்செல்வி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு: ‘சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு’.

சிறுகதையோ, நாவலோ அல்லது கட்டுரையோ வாசித்து முடித்தபின்பு பல எண்ணங்கள் வாசகரின் மனதில் உருவாகும்.

சில சமயங்களில் மகிழ்ச்சியாய் இருக்கும். சிரிப்பு வரும். முடிவு சில சமயங்களில் துக்கத்தைக் கொணரும். தாமரைச்செல்வி அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும்போதோ பற்பல உணர்வுகள் ஒருசேர எம்மைச் சூழ்ந்து கொள்ளும்.

நிறையவே எம்மைச் சிந்திக்கத் தூண்டும். எமது கடந்த கால வாழ்வில் நாம் சந்தித்த மனிதர்களைப் பற்றிய எண்ணங்களை மீட்டிப் பார்க்கச் சொல்லும். எமது வாழ்வின் அர்த்தத்தை தேடச் சொல்லும்.

கிருஸ்ணபகவானை தனது பக்தியால் அருச்சுனன் கட்டிப்போட்டது போல தாமரைச்செல்வி அவர்களின் படைப்புகள் வாசகர்களாகிய எம்மைக் கட்டிப்போட்டுவிட்டன என்று சொன்னால் மிகையாகாது.

ஒரு பொழுதுபோக்காக வாசித்து முடித்துவிட்டு எம்பாட்டில் கடநது செல்வதற்கு அவரது எழுத்துகள் எம்மை அனுமதிப்பதில்லை. எம் மனதில் பல மாற்றங்களை உருவாக்கும். எம் எண்ணங்களில் உள்ள கறைகளைக் களையச் சொல்லும்.

மேலும் படிக்க ...

கவிதை: புள்ளி - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
கவிதை
14 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தப் புள்ளியிலிருந்து தான்
நடக்கத்தொடங்கினேன்.
வழியில் யாரோ புள்ளி ஒன்றை எறிந்திருந்தார்கள்.
வானத்திலிருந்து வீழந்ததாகச் சொன்னார்கள்.
கோபத்தில் உமை சிவன் மீதெறிந்திருக்கலாம்,
நண்பனின் கூற்று.
கனவில் வந்தது மாநிறப்புள்ளி.
அது இதுவல்ல.

மேலும் படிக்க ...

கானல் வரி! - வ.ஐ.ச.ஜெயபாலன்-

விவரங்கள்
- வ.ஐ.ச.ஜெயபாலன்-
கவிதை
14 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கருகும் முது மாலை.
பூம்புகாரின் தொல்கரைகள் சிவக்க
நுரைக்கும் திராட்சை மதுவாய்
நெழிகிறது எழுவான் கடல்.
இது படுவான் கரையென்றால்
மாலை செம்பொன்னாய்ச் சொரியுமே.
எனினும் காதலில் சிறகுகள் உரச
கூடு ஏகும் பறவைகளின் பாட்டில்
கானல் வரி தொனிக்கிறது.

*

இந்த மதுவார்க்கும் மாலையில்
தனித்த முது கவிஞன்.
நினைவு இடறி நான்கு தசாப்தங்கள்
காலச்சரிவில் உருள்கின்றேன்.
எங்கோ ஒரு ஜப்பானியப் பாடல்
தாபம் வளர்கிறது.

மேலும் படிக்க ...

மணிமேகலையின் பௌத்த துறவின் பின்புல அரசியல் - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வு
14 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச் சுருக்கம்

தன்னுடைய காதலன் கோவலன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட மாதவி தான் துறவு மேற்கொண்டதோடு தன்னுடைய மகள் மணிமேகலையையும் துறவியாக மாற்றினாள். வைணவம், சைவம், சமணம் எனப் பல மதங்கள் இருந்த நிலையில் குறிப்பாக கோவலன் சமண சமயத்தைப் பின்பற்றுபவனாக இருந்த நிலையில் ஏன் அவள் துறவிற்குப் பௌத்தத்தைத் தேர்வு செய்தாள் என்ற வினா இங்கு எழுகிறது. அத்துடன், மாதவி பௌத்த துறவியாக மாறினாள் பௌத்த சமயத்தினுடைய கருத்துக்களைத் தெரிந்து கொண்டாள். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு பௌத்த துறவியாகவே வாழ்ந்து இறந்து (அல்லது முக்தி அடைந்தாள்) போனாள் என்று இல்லாமல் அவள் பௌத்த துறவியாக மாறிய பின்னணியில் அவளிடம் ஏன் அமுதசுரபி என்ற பாத்திரம் வந்து சேருகிறது? அந்தப் பாத்திரத்தைக் கொண்டு அவள் ஏன் மக்களுடைய பசிப்பிணியைப் போக்குகிற அறப்பணியை மேற்கொண்டாள்? என்ற கேள்விகளும் எழுகின்றன.

மேலும், அமுதசுரபி என்ற பாத்திரம் பார்ப்பனர்களால் ஆபுத்திரனது உணவுப் பாத்திரத்தில் கல் போட்டுத் துரத்தப்பட்ட பின்னர் அவனுக்கு சிந்தாதேவி என்ற பெண் தெய்வத்தால் கொடுக்கப்பட்டது என்பதும், அப்படிக் கிடைத்த அந்தப் பாத்திரந்தான் மணிமேகலைக்கு மணிபல்லவத் தீவில் உள்ள கோமுகிப் பொய்கையில் கிடைத்தது என்பதும் முக்கியமாக கவனிக்கத்தக்கன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கிறபொழுது ஏன் இந்த தொடர்ச்சியான செயல்பாடுகள் எல்லாம் நிகழ்ந்தன என்பதும் அவற்றைக் காப்பிய ஆசிரியர் கூறுவதற்கான நோக்கம் என்ன? என்பது குறித்தும் நாம் விரிவாக ஆராய வேண்டி உள்ளன. அத்தகைய ஒரு விரிவான தேடலை முன்வைக்கிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 39 - “குரு அரவிந்தனின் படைப்புக்கள்”

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
14 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இளவாலை விஜயேந்திரனின் கவிதைத்தொகுப்பு அறிமுக நிகழ்வு: 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?"

விவரங்கள்
தகவல்: பா.அ.ஜயகரன் -
நிகழ்வுகள்
13 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜூன் 06 - ரஷ்ய மொழி தினமும், அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த நாளும்! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்கினேஸ்வரா -
இலக்கியம்
13 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(ரஷ்ய இலக்கிய சிருஷ்டி, பெருங்கவி அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜூன் 06, 1799 இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும்  கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது)

ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியருக்கு ஒப்பானவராக கருதப்படுவரே ரஷ்ய இலக்கிய சிருஷ்டி அலெக்சாண்டர் புஷ்கின். வையகம் புகழ் ரஷ்ய இலக்கிய சிருஷ்டி கர்த்தா அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜூன் 06, 1799 இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 06 ஆம் திகதி கிழக்கு ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யக் கவிஞரும், காதல் கவிதைகள் யுகத்தின் சிறந்த படைப்பாளியுமான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) ரஷ்ய மொழியில் : Алекса́ндр Серге́евич Пу́шкин பிறந்த தினம் ஜீன் 6 ஆகும். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் 1799 இல் பிறந்தவர். இளம் வயதிலேயே தனது நகர நூலகத்தில் பல புத்தகங்களைப் படித்தார். இந்த சூழல் இலக்கிய தாகத்தை ஊற்றெடுக்க வைத்தது.

மேலும் படிக்க ...

கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரின் நூல் வெளியீடு - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
13 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக் கிழமை 02-06-2024 அன்று கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரால் அமரர் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் தாய்வீடு பத்திரிகையில் எழுதிய ‘இலக்கிய உறவுகள்’ என்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு ஆவண நூலாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்விற்கு கனடா – குரும்பசிட்டி நலன்புரி சபையின் தலைவர் ஐயாத்துரை ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலில் அமரர் கந்தவனம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி இடம் பெற்றது. குடும்பத்தினர், மற்றும் வருகை தந்தோரின் மலரஞ்சலியைத் தொடர்ந்து இறைவணக்கம் இடம் பெற்றது. கனடா பண், தமிழ் வாழ்த்து, இறைவணக்கம் ஆகியன சாச்சவி திலீபன் அவர்களால் பாடப்பெற்றன. அதன்பின் அமைதி வணக்கம் இடம் பெற்றது.

செயலாளர் கணேஸ்வரி குகனேசன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஐயாத்துரை ஜெகதீஸ்வரனின் தலைமையுரை இடம் பெற்றது. அடுத்து மறைந்த கவிஞருக்கான அஞ்சலி உரைகள் இடம் பெற்றன. திரு. வி.எஸ் துரைராஜா, திரு. க.சிவதாசன், எழுத்தாளர் இரா. சம்பந்தன், உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், வீணைமைந்தன் சண்முகராஜா, பொன்னையா விவேகானந்தன், தமிழ்ப்பணி வா.மு. சே. திருவள்ளுவர் ஆகியோரது அஞ்சலி உரைகள் இடம் பெற்றன.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் ஜெயமோகனும் , இலங்கை இலக்கியச் சூழலும்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"ஈழ இலக்கியச் சூழலை எடுத்துப் பாருங்கள். சிங்கள இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவது. சிங்கள நாடகமும் சினிமாவும் கலைமதிப்பு கொண்டவை. நமக்கு அங்குள்ள ஈழ இலக்கிய ஆளுமைகள் எவரேனும் சிங்கள இலக்கியம், சினிமா, நாடகத்தை அறிமுகம் செய்தார்களா? சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இவ்விதம் கூறியதாக அறிந்தேன். ஆச்சரியம் தரவில்லை. உண்மையில் ஜெயமோகனை அறிந்தவர்களுக்கு இக்கூற்று ஆச்சரியம் எதனையும் தராது. ஜெயமோகனைப் பொறுத்தவரையில் தன்னைத் தன் துதிபாடிகள் மட்டும் கதைத்தால் போதாது. தன் எதிரிகளும் கதைக்க வேண்டும். அதற்கு அவர் கையாளும் தந்திரங்களில் ஒன்று தான் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது. ஜெயமோகனைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு  மெல்ல அவல் கிடைத்த மாதிரி இச்சர்சைக்குரிய கருத்துகள். ஆளுக்கு ஆள் கொதித்தெழுந்து துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடுவார்கள். ஜெயமோகனுக்குத் தேவை அதுதான். இதைப்பார்த்து ஆனந்தமடைவதில் அவருக்குப் பெரு விருப்புண்டு. தன் துதிபாடிகளின் பாராட்டுரைகளை விட எதிரிகளின் வசவுகளில் குளிர் காய்பவர் ஜெயமோகன்.

மேலும் படிக்க ...

உலக மகாகவி சேக்ஸ்பியரைப் பாதித்த கவிஞன் கிறிஸ்தோபர் மார்லோ ( Christopher Marlowe) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Christopher Marlowe சேக்ஸ்பியர் காலத்தில் வாழ்ந்த கவிஞர். இவரது புகழ்பெற்ற கவிதை  Hero and Leander!  ஹீரோ என்னும் பெண்ணுக்கும், லியான்டெர் என்னும் ஆணுக்குமிடையிலான காதலை விபரிப்பது. இக்கவிதை தூய  காதல், விதி, மானுட உணர்வுகளில் விதியின் பங்கு ஆகியவற்றை ஆராய்கின்றது.

இதில் கவிஞர் காதல் , வெறுப்பு போன்ற உணர்வுகள் தன்னிச்சையாகத்  தோன்றுகின்றன.  சிந்தித்துச் சீர்தூக்கி வருவதில்லை. பார்த்த மாத்திரத்தில் உருவாகின்றன. பின்னால் விதியிருந்து ஆட்டி வைக்கின்றது என்பது இவரது கருத்து.

இக்கவிதையின் காதலைப்பற்றிய  கடைசி இரு வரிகள் முக்கியமானவை. அவை:

Where both deliberate, the love is slight:
Who ever loved, that loved not at first sight?

மேலும் படிக்க ...

மொழிபெயர்ப்புச் சிறுகதை - ஒரு வித்தியாசமான கதை! - ஆங்கிலத்தில் மூலம் - ஓ. ஹென்றி | தமிழில் - அகணி சுரேஸ் -

விவரங்கள்
- ஓ. ஹென்றி | தமிழில் - அகணி சுரேஸ் -
சிறுகதை
10 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இங்குள்ள சிறுகதை 'ஒரு வித்தியாசமான கதை'  ஆங்கில மூலத்தில் 400 சொற்களே உள்ள உலகப் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளரான ஓ. ஹென்றியின் புகழ்பெற்ற சிறுகதை. நம்மவர்களிடம் ஒரு குறைபாடுண்டு. குறிப்பாகப் புனைகதைகளைப்பற்றி விமர்சனம் எழுதுபவர்களிடத்தில். ஓரிரு பக்க அல்லது ஒரு பக்கச் சிறுகதைகளை அவர்களில் பலர் சிறுகதைகளாகவே நினைப்பதில்லை. மதிப்பதில்லை. அந்த அளவுகோலுடன் அவ்விதமான படைப்புகள் பற்றி கருத்துகளைக் கூறுவார்கள். இவர்கள் உலக இலக்கியத்தில் வெளியான சிறந்த சிறுகதைகளை அதிகம் தேடியெடுத்து வாசித்தால் ஒன்றைப்புரிந்துகொள்வார்கள் எழுத்தாளர்கள் பலரின் ஓரிரு பக்கச் சிறுகதைகள் பல முக்கிய சிறுகதைகளாக விளங்குவதை.  எழுத்தாளர் புதுமைப்பித்தனின் பொன்னகரம் நல்லதோர் உதாரணம்.
நல்லதொரு சிறுகதைக்கு அளவு முக்கியமில்லை. அது வெளிப்படுத்தும் உணர்வு அல்லது விடயம், வாசகர்களிடத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம்தான் முக்கியமானது. - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்.காம் -

ஆஸ்டினின் வடக்குப் பகுதியில் ஒரு காலத்தில் ஸ்மோதர்ஸ் என்ற பெயரில் ஒரு நேர்மையான குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பம்  ஜோன் ஸ்மோதர்ஸ், அவரது மனைவி, அவர், அவர்களின் சிறிய மகள், ஐந்து வயது, மற்றும் அவரது பெற்றோர்  ஆகியோரை உள்ளடக்கியது.  ஒரு சிறப்பு பதிவுக்காக நகரத்தின் மக்கள்தொகையை நோக்கி கணக்கிடப்பட்டபோது  ஆறு பேராக இருந்தது.  ஆனால் உண்மையான எண்ணிக்கையில் மூன்று பேர் மட்டுமே இருந்தனர்.

ஒரு நாள் இரவு உணவிற்குப் பிறகு சிறுமி கடுமையான வலியால் பாதிக்கப்பட்டாள்.  ஜோன் ஸ்மோதர்ஸ் சில மருந்துகளைப் பெற நகரத்திற்கு விரைந்தார். அவர் திரும்பி வரவே இல்லை. சிறுமி குணமடைந்து காலப்போக்கில் பெண்ணாக வளர்ந்தாள்.

அந்தச் சிறுமியும் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொண்டாள். காலம் விரைவாக ஓடியது. அவளுக்கும் ஐந்து வயதில்  சிறுமி இருந்தாள்.

அவள் தந்தை சென்றபோதும், திரும்பி வராதபோதும் அவர்கள் குடியிருந்த அதே வீட்டில்தான் அவள் இன்னும் வாழ்ந்து வந்தாள்.

ஜோன் ஸ்மோதர்ஸ் காணாமல் போய்  ஓராண்டு நிறைவு நாளில் சிறுமிக்கு  இரவு கடும் வலி ஏற்பட்டது. அவர் உயிருடன், ஒரு நிலையான வேலையில் இருந்திருந்தால், இப்போது அவளுடைய தாத்தாவாக இருந்திருப்பார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. 23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும் - ஜோதிகுமார் -
  2. படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி ! - முருகபூபதி -
  3. அரசியல், திரைப்பட ஆய்வாளார் ரதனின் 'கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா?" என்னும் 'தாய்வீடு'க் கட்டுரை பற்றி.... வ.ந.கி -
  4. மனிதர்கள் -துவாரகன் -
  5. ந.சுசீந்திரனின் நூல்கள் வெளியீடும் அறிமுக உரையும் - தகவல்: கிருபா கந்தையா -
  6. கம்பராமாயணத்தில் மாதரைக் கொல்லுதல் பாவம் என்பது குறித்த பதிவுகள் - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
  7. படித்தோம் சொல்கின்றோம் : ஜேகே. எழுதிய மாயப்புனைவு நாவல் வெள்ளி ! புதிய படைப்பு மொழியால் உருவான சங்க இலக்கியக்கதை ! - முருகபூபதி -
  8. எழுத்தாளரும், முன்னாள் தெல்லிப்பளை, யூனியன் கல்லூரி அதிபருமான கதிர் பாலசுந்தரம் அவர்கள் தனது தொண்ணூற்றாவது வயதில் காலமானார்!
  9. யாழ் பொது நூலக எரிப்பு நினைவாக : கௌதம இரத்தம் --- செ. சுதர்சன் ---
  10. கனடாவில் கோவிலூர் செல்வராஜனின் நூல் வெளியீடு - குரு அரவிந்தன் -
  11. சிவ. ஆரூரனின்'ஆதுரசாலை' நாவல் நயவுரை - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  12. கனடாவில் 'சமூகம் இயல்' பதிப்பக நூல்களின் அறிமுகமும் வெளியீடும்!
  13. சம்பந்தனின் நிலைப்பாடும், அண்மைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் ! - ஜோதிகுமார் -
  14. நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள் - பேராசிரியர் அ.ராமசாமி -
பக்கம் 25 / 107
  • முதல்
  • முந்தைய
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • அடுத்த
  • கடைசி